அவனுக்கு முன்னால் ஒரு பத்து, பதினைந்து பேர் அமர்ந்திருந்தார்கள், அனைவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் இருந்தது, சிலபேர் கையில் கேமரா, அவர்கள் அடையாள அட்டை அவர்கள் நிருபர்கள் என்று சொல்லியது.
பல கேமரா ப்ளாஷ்க்கு மத்தியில் அவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்,
அவர் போலி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?
எதையும் சந்தேக கண்ணோடு பார்ப்பது தான் எங்கள் வேலை.
அவரை கைது செய்ததால் பல அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதே அதை பற்றி?
உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும்.
எல்லோரும் கோரஸாக “அவரை போலி என்று எப்படி நிரூபித்தீர்கள்”.
சொல்கிறேன்.
வெகு சாமர்த்தியமாக எல்லோரையும் ஏமாற்றி வந்த கருப்பானந்தா என்ற சாமியார் ஒரு போலி என்று எங்களுக்கு ஆரம்ப்பதிலேயே புகார் வந்தது, ஆனால் சட்டத்தின் முன் சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் நிறுத்த முடியாது.
அதனால் நானும் எங்களது டிபார்மென்டை சேர்ந்த சிலரும் பொதுமக்கள் போல் வேடமனித்து கருப்பானந்தாவின் பூசைகளுக்கு சென்று வந்தோம்.
மோதிரம் கொடுப்பது, லிங்கம் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்த அகில உலக புகழ் சாய்பாபாவே டுபாக்கூர் என்று இங்கே நிருபித்ததால், அவன் அந்த வேலைகளையெல்லாம் விட்டு விட்டு வேறு ஒரு புது மாதிரியான மோசடி செய்தான்.
இதனால் மக்களுக்கு அவன் மேல் சந்தேகம் வரவில்லை.
அதாவது மக்களுடைய குறைகளை அவர்கள் கையாலேயே ஒரு துண்டு சீட்டில் எழுதி வாங்கி, அதை சுருட்டி அவன் முன் ஒரு குடுவையில் வைப்பார்கள்.
அதை ஒன்றை கையில் எடுக்கும் அவன், அதை பிரிக்காமலேயே எழுதியவரின் பெயர் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை சொல்லியதால் அவன் மேல் மக்களுக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டது.
வெகுநாட்கள் இதிலுள்ள சூட்சமம் தெரியாமல் நாங்களே விளித்து கொண்டிருந்தோம்.
தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த நான் ஒரு நாள் கவனித்தேன், முதலில் எழுந்திரிக்கும் ஆளின் நடவடிக்கையில் ஒரு நாடக தன்மை தெரிந்தது.
பக்தியில்லாமல் ஒரு கடமைக்கு வேலை செய்வது போல் இருந்தது அவன் செயல்.
மேலும் அவன் நடந்து போகையில் கருப்பானந்தா அந்த சீட்டை பிரித்து படிப்பதையும் நான் பார்த்து விட்டேன்.
அப்போதுதான் எனக்குள் ஒரு பொறி தோன்றியது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல மொழிகள் படித்து, மொழி மாற்றம் செய்து தரும் வேலை செய்துகொண்டிருந்தார், அவர் உதவியுடன் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை கற்று, அதையே பொதுமக்கள் போல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தேன், வரிசையாக படித்து கொண்டு வந்தவன் ஒரு சீட்டை எடுத்தவுடன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது என்னால் உணர முடிந்தது, அது கண்டிப்பாக என்னுடைய சீட்டு தான், ஆனால் அவன் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து இன்றைய கூட்டம் முடிந்தது என்று அறிவித்தார்கள்.
அதன் பின் இந்திய மொழிகளை தவிர ஆங்கிலத்தில் மட்டுமே குறைகளை எழுத வேண்டும் என்ற புதிதாக ஒரு சட்டம் போட்டார்கள்.
அந்த நேரத்தில் தான் பெங்களூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் கைபேசிகளுக்கு உபயோக படுத்தும் infrared என்ற தொழில் நுட்பத்தை பற்றி கூறினார்.
அவருடைய திட்டத்தின் படி குறைகளை எழுதும் காகிதத்தின் பின்னே infrared கதிர்களை பிரதிபலிக்கும் ரசாயனத்தை தடவினேன், மேலும் infrared கதிர்களை உள்வாங்கும் கேமராக்களையும் பொருத்தி வைத்தோம்,
எங்கள் திட்டபடியே அவன் மாட்டி கொண்டான்.
அதையும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்!
கருப்பானந்தா தொழில் ரீதியாக பல ஊர்களுக்கு திரிந்தவன், அதனால் இந்திய மொழியில் பல அவனுக்கு தெரிந்திருந்தது.
கருப்பானந்தாவின் ஏமாற்றுவேலை என்னவென்றால், மக்களின் குறைகளை எழுதி போடும் சீட்டில் முதல் சீட்டை எடுத்து பிரிக்காமல் அவன் படிக்கும் பொது எழுபவன் அவனுடைய ஆள்.
அதாவது நீண்ட நாள் வயிற்றுவலிக்காக வந்திருக்கும் கண்ணன் யார் என்று கேட்டால்
எழுந்திருப்பவன் அவனுடைய ஆள், அவனை அருகில் அழைத்து விபூதி கொடுக்கும் பொது அந்த சீட்டில் எழுதியிருப்பதை படித்து விடுவான் கருப்பானந்தா, அதையே அடுத்த சீட்டிற்கு வாசிப்பான், அப்படி தொடர்ச்சியாக வரும்போது மக்கள், சாமியார் அவருடைய சக்தியால் தான் இதை செய்கிறார் என்று நம்புகிறார்கள்.
அப்படியா கேட்பதற்கே பயங்கர சுவாரிஸ்யமாக இருக்கிறது. இப்போது எங்கே அந்த போலி சாமியார்,
விசாரணை நடக்கிறது, உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் இம்மாதிரியான போலிகளை ஆதரிக்காதிர்கள், விளைவுகள் உங்களுக்கும் பாதகமாக தான் இருக்கும்,
போலிகளுக்காக பிரச்சாரம் செய்யாதிர்கள்.
மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது