இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல்…


அவனுக்கு முன்னால் ஒரு பத்து, பதினைந்து பேர் அமர்ந்திருந்தார்கள், அனைவர் கையிலும் ஒரு நோட்டும் பேனாவும் இருந்தது, சிலபேர் கையில் கேமரா, அவர்கள் அடையாள அட்டை அவர்கள் நிருபர்கள் என்று சொல்லியது.

பல கேமரா ப்ளாஷ்க்கு மத்தியில் அவர்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்,

அவர் போலி என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது?

எதையும் சந்தேக கண்ணோடு பார்ப்பது தான் எங்கள் வேலை.

அவரை கைது செய்ததால் பல அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதே அதை பற்றி?

உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும்.

எல்லோரும் கோரஸாக “அவரை போலி என்று எப்படி நிரூபித்தீர்கள்”.

சொல்கிறேன்.
வெகு சாமர்த்தியமாக எல்லோரையும் ஏமாற்றி வந்த கருப்பானந்தா என்ற சாமியார் ஒரு போலி என்று எங்களுக்கு ஆரம்ப்பதிலேயே புகார் வந்தது, ஆனால் சட்டத்தின் முன் சரியான ஆதாரம் இல்லாமல் யாரையும் நிறுத்த முடியாது.

அதனால் நானும் எங்களது டிபார்மென்டை சேர்ந்த சிலரும் பொதுமக்கள் போல் வேடமனித்து கருப்பானந்தாவின் பூசைகளுக்கு சென்று வந்தோம்.

மோதிரம் கொடுப்பது, லிங்கம் கொடுப்பது போன்ற வேலைகளை செய்து வந்த அகில உலக புகழ் சாய்பாபாவே டுபாக்கூர் என்று இங்கே நிருபித்ததால், அவன் அந்த வேலைகளையெல்லாம் விட்டு விட்டு வேறு ஒரு புது மாதிரியான மோசடி செய்தான்.
இதனால் மக்களுக்கு அவன் மேல் சந்தேகம் வரவில்லை.

அதாவது மக்களுடைய குறைகளை அவர்கள் கையாலேயே ஒரு துண்டு சீட்டில் எழுதி வாங்கி, அதை சுருட்டி அவன் முன் ஒரு குடுவையில் வைப்பார்கள்.
அதை ஒன்றை கையில் எடுக்கும் அவன், அதை பிரிக்காமலேயே எழுதியவரின் பெயர் மற்றும் அவர்களின் பிரச்சனைகளை சொல்லியதால் அவன் மேல் மக்களுக்கு அபார நம்பிக்கை ஏற்பட்டது.

வெகுநாட்கள் இதிலுள்ள சூட்சமம் தெரியாமல் நாங்களே விளித்து கொண்டிருந்தோம்.
தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்த நான் ஒரு நாள் கவனித்தேன், முதலில் எழுந்திரிக்கும் ஆளின் நடவடிக்கையில் ஒரு நாடக தன்மை தெரிந்தது.
பக்தியில்லாமல் ஒரு கடமைக்கு வேலை செய்வது போல் இருந்தது அவன் செயல்.
மேலும் அவன் நடந்து போகையில் கருப்பானந்தா அந்த சீட்டை பிரித்து படிப்பதையும் நான் பார்த்து விட்டேன்.

அப்போதுதான் எனக்குள் ஒரு பொறி தோன்றியது.
எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல மொழிகள் படித்து, மொழி மாற்றம் செய்து தரும் வேலை செய்துகொண்டிருந்தார், அவர் உதவியுடன் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை கற்று, அதையே பொதுமக்கள் போல் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தேன், வரிசையாக படித்து கொண்டு வந்தவன் ஒரு சீட்டை எடுத்தவுடன் முகம் அதிர்ச்சியில் உறைந்தது என்னால் உணர முடிந்தது, அது கண்டிப்பாக என்னுடைய சீட்டு தான், ஆனால் அவன் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து இன்றைய கூட்டம் முடிந்தது என்று அறிவித்தார்கள்.

அதன் பின் இந்திய மொழிகளை தவிர ஆங்கிலத்தில் மட்டுமே குறைகளை எழுத வேண்டும் என்ற புதிதாக ஒரு சட்டம் போட்டார்கள்.
அந்த நேரத்தில் தான் பெங்களூரில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் கைபேசிகளுக்கு உபயோக படுத்தும் infrared என்ற தொழில் நுட்பத்தை பற்றி கூறினார்.
அவருடைய திட்டத்தின் படி குறைகளை எழுதும் காகிதத்தின் பின்னே infrared கதிர்களை பிரதிபலிக்கும் ரசாயனத்தை தடவினேன், மேலும் infrared கதிர்களை உள்வாங்கும் கேமராக்களையும் பொருத்தி வைத்தோம்,

எங்கள் திட்டபடியே அவன் மாட்டி கொண்டான்.

அதையும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்!

கருப்பானந்தா தொழில் ரீதியாக பல ஊர்களுக்கு திரிந்தவன், அதனால் இந்திய மொழியில் பல அவனுக்கு தெரிந்திருந்தது.
கருப்பானந்தாவின் ஏமாற்றுவேலை என்னவென்றால், மக்களின் குறைகளை எழுதி போடும் சீட்டில் முதல் சீட்டை எடுத்து பிரிக்காமல் அவன் படிக்கும் பொது எழுபவன் அவனுடைய ஆள்.

அதாவது நீண்ட நாள் வயிற்றுவலிக்காக வந்திருக்கும் கண்ணன் யார் என்று கேட்டால்
எழுந்திருப்பவன் அவனுடைய ஆள், அவனை அருகில் அழைத்து விபூதி கொடுக்கும் பொது அந்த சீட்டில் எழுதியிருப்பதை படித்து விடுவான் கருப்பானந்தா, அதையே அடுத்த சீட்டிற்கு வாசிப்பான், அப்படி தொடர்ச்சியாக வரும்போது மக்கள், சாமியார் அவருடைய சக்தியால் தான் இதை செய்கிறார் என்று நம்புகிறார்கள்.

அப்படியா கேட்பதற்கே பயங்கர சுவாரிஸ்யமாக இருக்கிறது. இப்போது எங்கே அந்த போலி சாமியார்,

விசாரணை நடக்கிறது, உங்களுக்கும் ஒரு வேண்டுகோள் இம்மாதிரியான போலிகளை ஆதரிக்காதிர்கள், விளைவுகள் உங்களுக்கும் பாதகமாக தான் இருக்கும்,
போலிகளுக்காக பிரச்சாரம் செய்யாதிர்கள்.

மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிக்க ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை இருக்கிறது

இருட்டுக்கு டார்ச் அடித்தல் அல்லது உங்கள் நம்பிக்கைக்கு ஆப்பு வைத்தல் பாகம் …


நான் பார்த்தவரை ஜோதிடர்கள் தம்மை ஜோதிட ஆராச்சியாளன் என்றே சொல்கிறார்கள், எது ஆராய்ச்சி என்று புரியாமல் சொல்கிறார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே எழுதி வைத்துள்ளதை மீண்டும் எடுத்து படிப்பதற்கு பெயர் ஆராய்ச்சியா, ரிசிகள் எழுதி வைத்துள்ளார்கள் சரி, எந்த எந்த கோள்கள் நம் மீது கதிரை பாய்ச்சும் சரி, தம்மாதூண்டு புதன் கிரகம் நம் மீது பார்வையை ஓட்டும் பொது வியாழன் மற்றும் சனிக்கு எத்தனையே பெரிய துணை கிரங்கங்கள் உள்ளன, அவை ஏன் நம் மீது தன் பார்வையை காட்டுவதில்லை.

சந்திரன் ஒரு துணை கிரகம், அதையும் ஒரு கோளாக பார்க்கிறீர்கள், ஆனால் பூமியையே விட்டுவிட்டீர்களே, சூரியனையும் ஒரு கோளாக கொண்டால் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் எதற்கு? சனி,ராகு,கேது பாவ கிரகங்கள் என்கிறீர்களே அது என்ன பாவம் செய்தது? யாருக்கு செய்தது?

ஜோதிடம் என்பது மன உளவியல் ரீதியாக உருவாக்கப்பட்டது,
எந்த ஜோதிடரும் அடுத்த வினாடியிலிருந்து உனக்கு நேரம் நல்லாருக்கு என்று சொல்வதில்லை, மூன்று மாதம், ஆறு மாதம் கெடு மட்டுமே கொடுக்க படுகிறது.
அதன் பிறகு அது வரை கண்ணை மூடி கொண்டிருந்த ஏதாவது ஒரு கிரகம் ஒண்ணரை கண்ணில் பார்க்க மீண்டும் மூன்று மாதமோ,ஆறு மாதமோ கெடு.

உங்களின் கூற்றுப்படி எல்லா மனிதர்களும் நீங்கள் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள பண்ணிரண்டு லக்னத்திர்க்குள் தான் பிறக்க வேண்டும் அதற்கு ஒரு பலன்,
வானில் இருப்பத்தேழு நட்சத்திரங்கள் மட்டுமே உள்ளன உங்களுக்கு!? அதற்கு ஒரு பலன்,
அந்த நட்சத்திரம் ஒவ்வொன்றிற்கும் நான்கு பாகம் அதற்கு ஒரு பலன், அந்த நட்சத்திரம் எங்கே இருக்கிறதோ அது தான் ராசி அதற்கு ஒரு பலன், இந்த பலன்கள் யாவும் ஒரு போல் இருப்பதில்லை, ஆனால் ஒரு மனிதனின் மொத்த சராசரி குணங்களும் இந்த நான்கிர்க்குள் அடங்கி விடுகிறது, அப்படியானால் இது உளவியல் ரீதியான டுபாக்கூரா இல்லையா.

ஒருவனின் குணத்தை வைத்து அவன் எவ்வாறு வாழ்வில் இருப்பான் என்று சொல்ல முடியும், இப்படி மொத்த குணங்களையும் ஒருவனுக்கே சொல்லும் போது, காலண்டரில் வரும் ராசி பலன் போல எல்லாம் எல்லோருக்கும் தானே பொருந்துகிறது.
ஒருவன் வெளிநாட்டு போக ஜாதகத்தில் யோகம் வேண்டுமென்றால், எல்லா விமானிகளுக்கும், விமான பணி பெண்களுக்கும் அந்த யோகம் இருக்கிறதா.

ஒரு ஆணின் பிரச்சனைக்கு அவனது தந்தையின் ஜாதகம்,சகோதரர்களின் ஜாதகமும் பார்க்கபடுகிறது, ஆனால் பெண்ணிற்கு என்ன செய்கிறார்கள். அவளது மாதவிடாய் தொடங்கும் நாளை ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுகிறார்கள், ஆண்கள் வயசுக்கு வருவதில்லையா, இல்லை அவன் பிறக்கும் போதே பெருத்த ஆண்மையுடன் பிறக்கிறானா, ஒரு ஆணுக்கு இருதார யோகம்!? இருந்தால் அதற்கு பரிகாரம் சொல்கிறார்கள், அதற்கு பதில் விதவைக்கோ, வாழ்விழந்த பொண்ணுக்கோ வாழ்வளித்தால் புரட்சிகரமான பரிகாரமாக இருக்குமே.

ஒருவனுக்கே ஜாதகம் கணிக்கும் போது அவனது பிறந்த இடம் முக்கியமாக படுகிறது,
அப்படியானால் அவன் அங்கேயே வாழ்வதானால் மட்டுமே அது சரியாக இருக்கமுடியும். ஆனாலும் பிறந்த இடத்தை விட அவன் உருவான இடம் தானே முக்கியம். முக்கால் வாசி பேர் அவர்கள் வீட்டு படுக்கை அறையில் தானே உருவாக்கி இருப்பார்கள், ஒரு ஊரில் உருவாகி வேறொரு ஊரில் பிறக்கும் குழந்தைகள் இல்லையா. மீண்டும் வேறு ஊரில் வாழப்போகும் அவனுக்கு அந்த ஜாதகம் எப்படி சரியாக இருக்கும்.

ஜாதகத்தில் ராகு,கேது மாற்று திசையில் சுற்றுகிறது, அதே போல் சூரிய குடும்பத்தில் இரண்டு கோள்கள் மாற்று திசையில் சுற்றுகிறது என்கிறார்கள், பெரிய ஆராய்ச்சி என மார்தட்டி கொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது. நான் சொல்கிறேன் வெகு சமீபத்தில் தான் அவ்வாறு மாற்றப்பட்டது, இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா?

ஜோதிட நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து தானே இருக்கிறது,உங்களை கடவுள் படைத்தான், என்னை ஏன் இப்படி படைத்தாய் என்று அவனுடன் மல்லுக்கு நிற்கிறீர்கள் அப்படியானால் உங்களுக்கே கடவுள் மேல் அவநம்பிக்கை வந்துள்ளது என்று தானே அர்த்தம்,

மேலும் ஆப்பு வைத்தல் தொடரலாம்!

இது எந்த தனி நபருக்கும் எழுதப்பட்ட பதிவல்ல
மொத்தமாக ஜோதிட நம்பிக்கையாளருக்கு எழுதப்பட்டது
தெரிந்தவர்கள் பதிலளிக்கலாம்
தெரியாதவர்கள் பல்லிளிக்கலாம்