சோதிடம் அறிவியல் சார்ந்ததா?


நாம் வாழ்கின்ற பூமி, எல்லையில்லாப் பரந்த விண்வெளியில் வலம் வரும் லட்சக்கணக்கான பெரிய நட்சத்திரக் கூட்டங்களில் காணப்படும் சிறிய நட்சத்திரமான சூரியனின் சிறிய பகுதியே. இதில் மனித குலம் மூடநம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. பகுத்தறிவும், நம்பிக்கையும் சேர்ந்து அறிவுப்பாதையின் வழிச் செல்லத் தூண்டுகிறது. மூடநம்பிக்கையானது கற்றுணர்ந்தவர்களின் தன்னம்பிக்கையைக் கூட தகர்த்து தடுமாறச் செய்கிறது. தன்னம்பிக்கையில் வாழ முனைவோருக்கு எதிர்நீச்சல் வாழ்வு மிகமிக அவசியமாகிவிட்டது.

சோதிடம் என்பது ஜோதி என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருவது வான்வெளி ஒளி என்பதாகக் கொள்ள வேண்டும் என்று கூறுவதோடு சோதிட சாஸ்திர விதிமுறைகளை அறிந்தவராகவும்,. கடவுள் அருளால் தீர்க்க தரிசனம், இயற்கையின் இரகசியங்களை முன்னுணரும் திறன் இருப்பது அவசியம் என விளக்கம் தருவார்கள். இத்தகைய ஆற்றல் பெற்ற சோதிடர்கள் எத்தனை பேர்? ஆனால் வேதனைக்குரியது என்னவெனில் குழந்தை பிறந்து விட்டாலோ, திருமணப்பொருத்தம் என்றாலோ, வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டாலோ உடனே ஓடுவது சோதிடரிடம்தான். சோதிடர் சொல்வது போல் நடக்க வில்லையென்றால், சரியான ஜாதகம் கணிக்கப்பட முடியவில்லை யென்றால் நான் என்ன செய்ய முடியும், குறித்த நேரம், பிறந்த நேரம் சரியில்லை எனத் சோதிடர்கள் தப்பித்துக்கொள்கின்றனர்.

சோதிடமும் அறிவியல் சார்ந்ததே எனக்கூறி கற்றோரையும் கவரும் கவர்ச்சிகரமான கருத்துக்கள் கூறுவோர் உண்டு. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் குரு சுக்கிரன், சனி, ராகு, கேது என்ற ஒன்பது கிரகங்களை (கோள்களை) கொண்ட ஜாதகம் கணிக்கப்படுகிறது, சோதிடம் பார்க்கப்படுகிறது என்பர். இதில் ராகு, கேது என்பது கோள்களே அல்ல. சூரியனும், சந்திரனும் நேர்பாதையில் வரும் போது இரு பக்கங்களிலும் விழும் நிழல்களே ராகு, கேது என்பதை உணர வேண்டும். மேலும் சந்திரன் பூமியின் துணைக்கோளாகும்.

சோதிட முறைப்படியே ஒருவருக்கு துல்லியமாக ஜாதகம் கணிக்க வேண்டுமானால் அந்த ஜாதகக்காரரின் பிறந்த தேதி, சரியான நேரம் இடம் தேவை. சூரிய உதயத்தை கணக்கிட்டு ஜாதகத்தைக் கணிப்பதால் பிறந்த இடத்தின் தீர்க்க ரேகை (Longitude), , அட்ச ரேகை (Latitude) மிகமிக தேவை. எத்தனை சோதிடர்கள் இதை அறிவார்கள்? அதன்படி கணிக்கிறார்கள்? ஒரே நேரத்தில் மும்பையில் பிறக்கும் ஒரு குழந்தைக்கும், தமிழ் நாட்டில் பிறக்கும் குழந்தைக்கும் கூட ஜாதகத்தில் நிறைய வேறுபாடுகள் தோன்ற வாய்ப்புண்டு. காரணம் சூரிய உதய நேரம். செவ்வாய் தோஷம் எனக்கூறி எத்தனை பெண்களின் வாழ்வைப் பாழடிக்கிறார்கள்.

சூரியன் வடபாகத்தில் மகர ராசியிலிருந்து மிதுன ராசி வரை ( தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) வலம் வருவதை உத்திராயணம், இது தேவர்களுக்கு பகற் காலம் என்பதும் தென்பாகத்தில் கடக ராசி முதல் தனுசு ராசி வரை (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) தக்ஷ்ணாயணம். இது தேவர்களின் இரவு காலம் என்பதையும் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியும்? மனிதனுக்கு ஒரு நாளில் வந்து செல்லும் பகல் இரவு, மனிதனின் 365 நாள்கள் தேவர்களுக்கு ஒரு பகல் இரவு ஆகிறது. அந்த தேவர்கள் எங்கே? எனக் கேட்க துடிக்கிறது.

ஒரு ராசிக்கு 9 நட்சத்திரப் பாதங்கள் என்றும் 12 ராசிகளுக்கும் 27 நட்சத்திரங்களும் 108 பாதங்கள் 3600 க்குள் அடங்கும். அப்படியெனில் இந்தியாவில் வாழும் 100 கோடிக்கு மேலுள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் 3.7 கோடி பேர் ஒரே நட்சத்திரம். 8.3 கோடி பேர் ஒரே ராசி கொண்டவர்களாக அமைவர். இவர்களுக்கு ஒரே மாதிரியான பலன்கள் அமையவேண்டும். இது சாத்தியமா? அல்லது அது போன்று அமைந்துள்ளதா? சிந்திக்கவும்.

இந்தியாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ராசிகளும், ஆயிரக்கணக்கான உள்பிரிவுகளுக்கும் காரணமானவர்கள் கோள்களையும், நட்சத்திரங்களையும், விட்டு வைக்க வில்லை. 27 நட்சத்திரங்களுக்குள் ஆண் (11) பெண் (13), அலி (3) எனப் பிரித்தனர். கோள்களுக்குள் ஜாதிப் பாகுபாடுகள் கண்டனர். குரு சுக்கிரன் பிராமணராகவும், சூரியன், செவ்வாய் சத்திரியனாகவும், சந்திரன், புதன், வைசியனாகவும், சனி சூத்திரனாகவும், இவைகளுக்கு தனித்தனி மொழிகளையும் வகுத்தார்கள் சூழ்ச்சியாளர்கள்.

சூரியனைச் சுற்றிவரும் கோள்களும் அதன் தூரமும், அறிவியல் கூறும் ஆதாரங்களையும் காண்போம். சூரியனிலிருந்து பூமி 14.96 கோடி, புதன் 5.79 கோடி, வெள்ளி 10.82 கோடி செவ்வாய் 22.79 கோடி வியாழன் 77.83 கோடி, சனி 142.7 கோடி கிலோ மீட்டர் தொலைவும், சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

நட்சத்திரங்களின் தொலை குறைந்த பட்சம் 50 ஒளி ஆண்டுகளுக்கு(Light years) மேற்பட்டது. ஓர் ஒளி ஆண்டு தூரம் கிட்டத்தட்ட 9.5 லட்சம் கோடி கிலோ மீட்டர் தூரமாகும். எண்ணிப் பாருங்கள் இந்த நட்சத்திரக்கூட்டத்தை வைத்து தான் நமது வாழ்வு கணிக்கப்படுகிறது. அதுவும் யாரால் தனது வாழ்க்கையின் நிலை பற்றியே அறிந்து கொள்ள முடியாத ஒருவரால் என்பது தான் வேடிக்கை.

சோதிடர் சொல்வதில் உண்மையிருக்குமானால் தலைவர்களின் மரணம், தீவிரவாதத்தினால் ஏற்படும் அழிவுகளை பற்றியெல்லாம் முன்னரே ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை? சிந்திக்கவும்.

மூடநம்பிக்கைகள் மீண்டும் துளிர் விட வேண்டுமென அரசியல் நோக்கத்திற்காக அடிமை வாழ்வை மீண்டும் கொணர்ந்து ஆதிக்கம் செலுத்திட முனைவதை மக்கள் பகுத்தறிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

தூண்டி விடப்படும் மதவெறியால் பலியாகிப் போகாமல் வாழ்க்கையின் எதிர்காலத்தை அறிவியல் துணைகொண்டு வாழப் பழகிட வேண்டும். கல்வியால் தன்னம்பிக்கை மேற்கொள்வோம். மக்கள் தொண்டால் மனித நேயம் பூத்துக் குலுங்கி, ஒற்றுமையுடன் நாட்டை மலர்ச்சியடையச் செய்வோம். அறிவியலால் பயன் பெறுவோம். அறிவியல் சிந்தனை வளர்ப்போம். (தமிழர் நட்புறவு பேரவை, மும்பை தமிழ் டைம்ஸ் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றவை).

——————–மும்பை தமிழ் டைம்ஸ் 14-.12.2003.
நூல்: வாழ்வுரிமை விழிப்புணர்வு.

நன்றி: தமிழ் ஓவியா

சுனாமிக்குக் காரணம் சனிப் பெயர்ச்சியா?


மூட நம்பிக்கை வியாபாரிகள் இருக்கிறார்களே அவர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், அதுதான் வாய்ப்பு என்று தங்கள் கடையை விரித்துவிடுவார்கள்.

நியூசிலாந்து அருகே பசிபிக் பெருங்கடலில் செப்டம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட சுனாமி-யால் 144 பேர் மரணம் அடைந்தனர். இதேபோல், இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது ரத்தத்தை உறைய வைக்கக் கூடிய துயர நிகழ்வுகளாகும்.

இந்தத் திடீர்ப் பேரழிவுக்குக் காரணம் சனிப் பெயர்ச்சிதான் என்று கண்டுபிடித்திருக்கிறார் ஒரு நவீன கொலம்பஸ்.அவர்தான் ஜோதிடர் காழியூர் நாராயணன்.

இதற்கு ஏடுகளின் விளம்பரம் வேறு!

ஆமாம், இவர்தான் கரைகண்ட ஜோதிடர் ஆயிற்றே வந்ததற்குப்பின் காரணம் சொல்லுவதைவிட, வருவதற்குமுன் ஏன் சொல்லவில்லை அபாய எச்சரிக்கையைச் செய்யவில்லை?

இதுபோன்ற பேர்வழிகள் கடந்த முறை தேர்தலில் சொன்ன ஜோதிடங்கள் எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போனதற்குப் பின் தலைமறைவாகக் கிடந்தவர்கள் இப்பொழுது ஏதோ ஒரு சாக்கை பயன்படுத்திக்கொண்டும், மக்களின் மறதியில் நம்பிக்கையை வைத்துக்கொண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளனர் என்பதைப் பொதுமக்கள் சிந்திக்கத் தவறக்கூடாது.

இதுவரை சனிப்பெயர்ச்சி என்பதை மனிதர்களிடத்தில் வைத்துதான் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இப்பொழுது நாடுகளை வைத்தும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதன்மூலம் குறுக்கு வழியில் விளம்பரம் கிடைக்கும் அல்லவா!

நிலநடுக்கங்களும், சுனாமிகளும் இப்பொழுதுதான் ஏற்படுகின்றனவா? இதற்கு முன் எத்தனையோ தடவைகள் நடந்ததுண்டே! அதற்கெல்லாம் காரணம் இந்தச் சனிப் பெயர்ச்சிதானா? ஏன் அப்பொழுதெல்லாம் அவ்வாறு கூறவில்லை? அப்பொழுது இருந்த ஜோதிடர்களுக்குச் சாமர்த்தியம் போதாது என்று இந்த நாராயணன்கள் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள் (சொன்னால்தான் பிழைப்புப் போய்விடுமே!) ஆனாலும், உள்ளுக்குள் சிரித்து மகிழ்வார்கள்.

சனி பெயர்ந்தால் அதன் விளைவு பெரிய ஆபத்தாக அல்லவா முடியும்?

கிரகங்கள் ஒன்றையொன்று ஈர்த்திருக்கும் நிலையில், ஒரு கிரகம் பெயர்ந்தால் அதன் விளைவு வேறு கிரகங்களைப் பாதிக்காதா? 75 கோடி மைல் தூரத்தில் உள்ள 73,000 மைல் குறுக்களவு உள்ள சனிக்கிரகம் பெயர்ந்தால், விளைவு என்னவாகும்?

கிரகங்கள் என்ன கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து விளையாட்டுக்காரர்களா?

இந்த வாரம் ஜூனியர் விகடனில் (4.10.2009, பக்கம் 23) சேஷாத்திரி சாஸ்திரி என்பவர் இந்தச் சனிப் பெயர்ச்சிபற்றி கூறும் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

நவக்கிரக வழிபாடு என்பதே இந்த பத்து, இருபது வருடமாக பரவியிருக்கிற தேவையில்லாத கலாசாரம். காசியில் இருக்கும் லிங்கமானாலும், இங்கே ஒரு குளக்கரையில் இருக்கிற லிங்கமானாலும் ஒன்றுதான். இந்தக் கோயிலில் அந்தக் கடவுள் இருக்கிறார், அந்த இடத்தில்தான் அருள்பாலிக்கிறார் என்பதெல்லாம் சிறப்பு சேர்க்க சிலரால் எழுதி வைக்கப்பட்டவைதான். வேறு எந்த தனி முக்கியத்துவமும் இல்லை.

இந்த உலகம் தோன்றியபோதே இருப்பவைதான் சனியும், மற்ற கிரகங்களும். அதற்குப் பின்னால் உருவானவைதான் கோயில்கள். அப்படி இருக்கும்-போது சனீஸ்வரன் திடீரென்று புதுசாக இங்கு வந்தார், அங்கு வந்தார் என்பதெல்லாம் எப்படி சரியாக இருக்க முடியும்? அது ஒரு கோள். அந்தக் கோள், இந்த பிரபஞ்ச இயக்கம் நல்ல முறையில் தொடர்வதற்கு உதவி செய்கிறது. அதற்காக அதற்கு நாம் நன்றி சொல்லலாம், அவ்வளவுதான்! அதை அந்த கிரகத்தின் இடப்பெயர்ச்சி சமயத்தில்தான் சொல்லவேண்டும் என்பதோ… குறிப்பிட்ட கோயிலுக்குத் தேடிச் சென்று தான் சொல்லவேண்டும் என்பதோ கிடையாது. சனியைவிட சூரியனும், சந்திரனும் பூமியில் உள்ளோருக்கு ரொம்ப முக்கியமானவர்கள். அவர்களுக்கும் இடப்பெயர்ச்சி கொண்டாடலாம் என்று கிளம்பினால் என்ன ஆகும்?

இப்படி சொல்கிறவர் தந்தை பெரியாரின் சீடர் அல்ல கருஞ்சட்டைக்காரரும் அல்லர். விடுதலை வாசகரும் அல்லர். சாட்சாத் சாஸ்திரிதான்.

இந்தச் சனிப் பெயர்ச்சி விவரம் எல்லாம் அமெரிக்கர்களுக்கோ, ஜெர்மன்காரர்களுக்கோ தெரியுமா? பல நாடுகளில் எரிமலைகளின் சீற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றனவே காடுகள் பல மாதக் கணக்கில் பற்றி எரிகின்றனவே அவற்றிற்கும் இந்தச் சனிப் பெயர்ச்சிக்கும் தொடர்புண்டு என்று புது மூட்டையை அவிழ்த்துவிட்டாலும் அவிழ்த்து விடுவார்கள் யார் கண்டது?

சுனாமி வருவது, நிலநடுக்கம் ஏற்படுவது, புயல் வீசுவது, கடுமழை பெய்வது ஏன் என்பதற்கான அறிவியல் விளக்கங்களை உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவன்கூட ஒழுங்காகச் சொல்லுவான்.

தங்கள் பிள்ளைகளின் புத்தகங்களில் என்ன இருக்கிறது என்பதை குறைந்தபட்சம் பெற்றோர்கள் கருத்தூன்றிப் படித்தாலும் போதுமே, உண்மை விளங்கிவிடுமே!

நம்புங்கள் நாராயணன்களை நம்பினால், நடுவீதியில் நிற்கவேண்டியதுதான் _ எச்சரிக்கை!

———————–“விடுதலை” தலையங்கம் 2-10-2009

சனிக் கிரகமும், சோதிடமும்?


சனிக் கிரகம் பூமியைவிட 755 மடங்கு பெரியது! பூமியிலிருந்து 135 கோடி 49 இலட்சம் கி.மீ. தூரத்தில் உள்ளது! சூரியனை ஒரு முறை சுற்றிவர சுமார் 30 ஆண்டுகள் ஆகின்றன!

சனிக்கிரகம் திரவ நிலையில் நைட்ரஜனும் வளி மண்டலத்தில் ஹைட்ர ஜனும் கீலியமும் நிரம்பிய கிரகமாகும்! வியாழன் கிரகத்தைவிட சற்று சிறியது. 17 துணைக் கிரகங்கள் உண்டு.

சனிக்கிரகத்தின் துணைக் கிரகம் டைட்டானில் காசினி என்ற விண் ஆய்வுக்கலம் 2005-ஆம் ஆண்டு ஜனவரி 16-இல் ஆய்வு நடத்திட அதில் இறங்கியது. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி புதிய கண்டுபிடிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்!

சனியின் துணைக்கிரகம் டைட்டானின் மேற்குப் பகுதியில் எரிவாயு திரவ வடிவிலான ஹைட்ரோ கார்பன்கள் மீத்தேன் ஈத் தேன் உருவில் கிடைக்கின் றன. பூமியில் கிடைக்கும் எரிவாயுவைவிட 100 மடங்கு கூடுதலாக கிடைக்க வாய்ப் புள்ளது.

அமெரிக்கா அனுப்பிய காசினி விண்கலத்தின் ஆய்வின் மூலம் எரிவாயு இருப் பது தெரிய வந்துள்ளது. இது மாத்திரமல்ல – டைட்டானில் 20 சதவிகித பகுதியை காசினி விண்கலம் படம் பிடித்துள்ளது. பல நூறு ஏரிகளையும் கடல்களையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

சனிக்கிரகத்தில் 1981-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு சூறாவளிக் காற்று இன்னும் அதே தீவிரத்தோடு சுழன்று கொண்டிருக்கிறது. நூற்றாண்டுக்கு மேல் கொதித்துக் கொண்டிருக்கும் எரிமலையை காசினி படம் பிடித்து அனுப்பியிருக்கிறது. வாயேஜர் 2 என்ற செயற்கைக்கோளும் சனியைச் சுற்றி ஆய்வு செய்து படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருக்கிறது.

பூமியை நெருங்கிய சனி!

பூமியிலிருந்து 135 கோடி கி.மீ. தூரத்திலுள்ள சனிக் கிரகம் 2003-ஆம் ஆண்டு டிசம்பரில் பூமியை நெருங்கி 120 கோடி கி.மீ. தூரத்தில் வந்தது. பூமியில் உள்ளவர்களுக்கு சனி எந்தத் தொல்லையையும் தரவில்லை! கெடுதியும் ஏற்பட வில்லை.

கிழக்கு வானில் சிறு புள்ளியாகத் தெரியும் சனிக்கிரகத்தை வெறுங்கண்ணால் பார்க்கலாம். கெடுதியில்லை!

27.06.2005-ஆம் ஆண்டு மாலையில் புதன் வெள்ளி சனி மூன்று கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வந்தது. அதனால் எந்தக் கெடுதியும் ஏற்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இப்படி மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்!

28.1.2006-ல் சூரியன் – பூமி சனி மூன்றும் ஒரே நேர் கோட்டில் வந்தது. இவைகள் எல்லாமே விஞ்ஞானி களால் ஆராய்ந்து உலகுக்கு அறிவித்தவை. சோதிடர்கள் இத்தகைய அறிவியலைக் கண்டுபிடித்தார்களா? மக்களுக்கு அறிவித்தார்களா?

10.2.2007-ல் பூமிக்கு மிக அருகில் வந்த சனிக் கிரகத்தை சென்னை மக்கள் கோளரங்கு மூலம் பார்த்தனர். அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. சோதிடத்தின்படி சனிக் கிழமை பாவம் பிடித்தது. எருமையும் காக்கையும் அதற்கு வாகனம். சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சனிக்கிரகத்திற்குப் பகை!

இவ்வாறு சோதிட ஆராய்ச்சி சொல்லிக் கொண்டிருப்பதை நாம் நம்ப வேண்டுமாம்!

நாம் நம்ப வேண்டியது அறிவியலா – சோதிடமா?

—————நூல்:- “சோதிட மறுப்பும் வானவியல்

ஓட்டுப் பொறுக்கியாகிறார் சீமான்!


´தம்பி´ படத்தை சீமான் இயக்கிய போது அதில் ஒரு காட்சி. கதாநாயகன் வீட்டின் சுவற்றில் தேவர் படம். புரட்சி பேசும் சீமான் தேவர் படத்தை வைத்திருக்கிறாரே என்றொரு விவாதம் அப்போது எழுந்தது. பார்ப்பவர்களுக்கு இதில் என்ன இருக்கிறது என்றொரு கேள்வி எழக்கூடும். ஆனால், பெரியாரின் பேரன் என சொல்லிக் கொள்ளும் சீமான் தேவரை படத்தில் காட்டியதுதான் முக்கியத்துவமாகிறது. இவை குறித்து கீற்று இணையதளத்தின் பேட்டியின் போது சீமானிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.[1]

“முத்துராமலிங்கத் தேவரை கைது செய்தாத்தான் தமிழ்நாட்டில் சாதிப்பிரச்சனை ஒழியும்னு முதுகுளத்தூர் கலவர நேரத்தில் பெரியார் சொல்லியிருக்கார். ஆனால் உங்களோட படங்களில் முத்துராமலிங்கத் தேவரோட புகைப்படம் தொடர்ந்து இடம்பெறுகிறது..?”

அதற்கு சீமான் சொல்கிறார்:

“கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. ´தம்பி´ படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்.”

இராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த சீமான் கியூபாவில் இருந்த சேகுவாராவையும், இலண்டனில் இருந்த கார்ல் மார்க்சையும் அவர்களின் தத்துவங்களையும் கரைத்து குடித்த ´தம்பி´க்கு தன் மாவட்டத்தில் தன் கிராமத்தில் இருக்கும் தேவர்களின் ஆதிக்க வெறியையும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பற்றிய உண்மைகள் எதுவும் தெரியாமல் போனதைக் குறித்து சீமான் கூடிய போது…

ஓகோ! சீமான் ´தொலைநோக்கு பார்வை´ உடையவர் போலும்! என்று சமாதானம் கொண்டோம்.

சரி, அண்ணன்களெல்லாம் தேவர் பெருமையை பற்றி சொல்லி உண்மையை புரிய வைத்து விட்டார்கள். ´தம்பி´க்கு மீண்டும் வந்தது ஆவேசம். தமிழ் நாடு முழுவதும் ஓடி ஓடி ஆவேசப்பட்டார். நான் ´பெரியாரின் பேரன்´, ´நான் பெரியாரையும் பிரபாகரனையும் மட்டுமே தலைவர்களாக ஏற்றுக் கொண்டவன்´ என ஏகவசனம் பேச ஆரம்பித்தார்.

பெரியாரை தேசியப் போராட்டத் தியாகி என்றார்.[2]

அண்ணன்மார்கள் ´தம்பி சொல்வதை தெளிந்து சொல்!´ என்று விளக்கம் கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. பெரியார் தவறாக அடையாளப்படுத்தப்படுகிறார் என பதறிப்போய் நாம் விளக்கம் கொடுத்தோம்….

´தம்பி´ தலித்தியம் பேசி குழப்பிய போது அண்ணன்கள் உண்மையை எடுத்து சொன்னார்கள்….

´திராவிடம்´ என்பது வெத்துவாதம் என்ற போது மீண்டும் அண்ணன்மார்கள் பதறிப்போய் விளக்கம் கொடுத்தார்கள். ´தம்பி´ இப்போதைக்கு பெரியாரின் திராவிடம் பற்றி வாயை திறப்பதில்லை.

கவனியுங்கள் இப்போதைக்கு மட்டுமே!

சமீபத்தில் மும்பையில் 04.10.2009-இல் ´விழித்தெழு இளைஞர் இயக்கம்´ முப்பெரும் விழா ஏற்பாடு செய்திருந்தது. பெரியார், அம்பேத்கர், காமராசர் என்ற முப்பெரும் தலைவர்களை வாழ்த்தியும், தீண்டாமைக்கு எதிராகவும் வீர வசனம் பேசினார் தம்பி.[3]

நமக்குத் தெரிந்தது தானே ´தம்பியின் தலித்தியப் பார்வை´ எப்படிப்பட்டது என்று.

´புதிய தலைமுறை´ பத்திரிக்கையில் சீமானோடு கலந்துரையாடல் செய்த கல்லூரி மாணவர்களின் பேட்டி ஒன்று வெளியாகி இருந்தது.

“தமிழ்த் தேசியம் பேசும் நீங்கள் [சீமான்] ஏன் தலித்தியம் பேசுவதில்லை? அந்த மக்கள் உங்க கண்களுக்கு தெரியலையா? என்றார்கள் கல்லூரி மாணவர்கள்

சீமான் சொல்கிறார்:

“நீங்கள் ஏன் சேரியிலேயே கொண்டு போய் பிரச்சனையை நிறுத்துகிறீங்க? நாங்க ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் பேசுகிறோம். சாதியை மறந்து தமிழன் என்று ஒரு சாதியாய் இணைவது பற்றி பேசினால் நீங்க திரும்பத் திரும்ப கொண்டு போய் சேரியில் நிறுத்துறீங்க. சாதியை மறந்து வாங்க! பிறகு பாருங்க!”

சாதியை மறந்து வாங்க என்றவர், மும்பை முப்பெரும் விழாவில் சாதி குறித்து பேசுகிறார்.. பேசுகிறார்… பேசிக் கொண்டே இருக்கிறார்…!

சரி பேசியவர் பிறகு என்னவானார்?

சாதியை மறந்து வாங்க என்றவர் ´தேவர் ஜெயந்தி´யில் அரசியல் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு போட்டியாக கறுப்புச் சட்டையும் நெற்றியில் பட்டையுமாக தேவருக்கு மாலை போட்டு இளித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு அண்ணன்மார்கள் என்ன விளக்கம் கொடுக்கப்போகிறார்கள்? தம்பி எப்படி சமாளிக்கப் போகிறார்? நாம் எப்படி மீண்டும் கேணயன்களாக்கப்படப் போகிறோமோ! அது ஓட்டுக்பொறுக்கி சீமானின் சாமர்த்தியமான வார்த்தைகளில் கிடக்கிறது.

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா, காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த தினமும், நினைவு தினமும் தமிழ்சொற்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க, தேவர் பிறந்த தினமும், நினைவு தினமும் ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்த்தையால் சொல்லப்படுவதன் அரசியல் என்ன?

´ஜெயந்தி´ என்பது சமஸ்கிருத மொழியில் பிறந்தநாள் எனப் பொருள்படும். சாதாரண மனிதர்களின் பிறந்தநாட்களை போல் வழக்கு இருக்கக் கூடாது என்பதற்காக கடவுள் பிறந்த நாள்களும், மகான்களின் பிறந்த நாள்களும், ´ஜெயந்தி´ என்ற சமஸ்கிருத வார்ததையால் சொல்லும் போது மேன்மை நிலையில் இருப்பதால் கிருஷ்ண ஜெயந்தி, காந்தி ஜெயந்தி என கடவுள்களும், மகாத்மாக்களும் நினைவு கூறப்பட்டன. அதன்போக்கிலே தேவர் கடவுளும், மகானுமாக தேவர் சமூகத்தால் வாழும் போதே கடவுளாக்கப்பட்டார் முத்து இராமலிங்கத் தேவர்.

இன்றைய அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி தேவரை தூக்கி பிடித்து ஆடுகிறார்களே என்னவென்று சொல்லி. அவர்களுக்கு தேவரின் உண்மை நிலை தெரியாதா என்ன? இருப்பினும் இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகியாகவும், தேவர் இன மக்களின் கடவுள்களாகவும் கருதப்படும் பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரின் இந்திய தேசிய சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்புதான் என்ன?

அகிம்சை வழியில் போராடிய காந்தியின் சுதந்திரப்போராட்டத்தை விட ஆயுதம் தாங்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திர போசின் சுதந்திரப் போராட்டத்தில் ஈர்ப்பு கொண்டு நேதாஜி தலைமையில் ஆங்கிலேயர்களை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து தன் இனத்தைச் சேர்ந்த தேவர்களை பெரும் படையாக திரட்டி அனுப்பிய செயலை தவீர்த்து வேறென்ன செய்தார் சுதந்திரப் போராட்டத்திற்கு?

அதுதான் போகட்டும்?

ஆங்கிலேயர் இந்தியாவில் தனது கட்டளைக்கும், உயர்நிர்வாகம் என்ற பெயரால் அடக்கி ஆள்வதற்கும் அடியபணியாத இனக்குழுக்கள், நாடோடிகள், பாடித்திரியும் இனங்கள் போன்ற மக்களை அடக்குவதற்கு
1871-ஆம் ஆண்டு “குற்றப் பரம்பரைச் சட்டம்“ [Crimainal Tribes Act] என்ற அடக்குமுறைச் சட்டமொன்றைப் பிறப்பித்தது. 160-இனக் குழுக்கள் இந்தச் சட்டத்தின் கீழ் பிறப்பிலேயே குற்றவாளிகள் ஆக்கப்பட்டனர். முதலில் வடக்கிலும், 1876-ஆம் ஆண்டு வங்காளத்திலும் அமுல்படுத்தப்பட்டது.
1911-ஆம் ஆண்டு தமிழ்ப்பிரதேசத்தில் முதன்முதலாக “கீழக்குயில்குடி” என்ற ஊரில் நடைமுறைப்படுத்தப்பட்ட போது ´குற்றப் பரம்பரைச் சட்டம்´ நீக்கப்பட வேண்டும் என்றும், அம்மக்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளையும் முன்வைத்து தேவர் போராடினார். அதில் வெற்றியும் பெற்றார். ஆனால் நல்ல நோக்கத்திற்காக வென்றெடுத்த ´சமஉரிமைகள்´ சுயநலம் சார்ந்ததாக மாறிவிட்டது.

ஐனநாயக நோக்கத்தோடு செயல்பட வேண்டிய தேவர் தன் சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார். நேதாஜியின் கட்சியான ´பார்வர்டு பிளாக்´ மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் இடதுசாரி கட்சிக்களாக இருக்க தேவர் தமிழகத்தில் ஜாதி கட்சியாக நடத்திக் கொண்டிருந்தார். ஹரிஜனங்கள் ஓட்டுப் போடக்கூடாது, மேல் சட்டை போடக்கூடாது, கோவிலுக்குள் நுழைக்கூடாது என்று அதிகாரம் பேசும் யோக்கியதையை மட்டும் வளர்த்துக் கொண்டு சாதி வெறி உணர்வோடு இருந்த தேவர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறைகளை கையாண்டார்.

அவர் வாழ்ந்த காலங்களில் அவர் மீது எத்தனையெத்தனை கொலை வழக்கு இருந்தன என்பதை கவனிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு முதுகுளத்தூர் கலவரம். பெரியார் கேட்கிறார்:

“முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலு
பேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும்
வந்து விடுவானா? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார்.”

[03.11.1957-அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய முன்னுரையில் இருந்து சில வாக்கியங்கள். திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை குறித்து பெரியார் பாராட்டி பேசியதை சுட்டிக்காட்டுவதற்காக இங்கே குறிப்பிடுகிறோம்.]

1957-அக்டோபர் 26-ந் தேதி தமிழ்நாட்டு சட்டசபையில் உள்துறை அமைச்சர் திரு.எம்.பக்தவச்சலம் அறிக்கை சட்டசபையில் வாசிக்கப்படுகிறது. அதில் முதுகுளத்தூர் கலவரம் பற்றிய செய்தியும், பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் பாருங்கள். [4][5][6][7][8]

தேவரின் பிறந்தநாளும், நினைவுநாளும் மகாத்மாவுக்கு நிகரான ஒரு பிம்பத்தை தோற்றுவித்த அரசியலாக மாறியது எப்படி? அல்லது மாற்றப்பட்டது எப்படி?

பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவதாக வீராப்பு பேசும் கருணாநீதி ´தேவர் ஜெயந்தி´ அன்று குடும்பத்தோடு மாலை போட ஓடுகிறார். ஜெயலலிதா தேவர் சமுகத்தை சேர்ந்த சசிகலாவை இழுத்துக் கொண்டு ஒடுகிறார். வை.கோ தன் பங்குக்கு ஜால்ரா அடிக்கிறார். [9]

இவர்களுக்கு தெரியாதா தேவரின் யோக்கியதை? தேவரின் மறுபக்கம் இருண்ட பக்கமல்ல. தேவரின் ஒவ்வொரு வன்முறையும் அப்பட்டமான வெளிச்சத்தில் இருக்கின்றன. இருப்பினும் தேவர் குறித்து தமிழ்சமூகம் கருத்துச் சொல்ல அஞ்சுகிறது.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஓட்டுக்கள் தேவர் சமுகத்திடம் இருப்பதால் குழைந்து கூத்தாடி தேவர் சமுகத்தினரின் காலை நக்கும் அரசியல் செய்கிறார்கள்.

1995,1996-இல் தென்மாவட்டப் பகுதியில் பேருந்து நிலையத்திற்கு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ´தலித் தளபதி சுந்தரலிங்க´த்தின் பெயரை வைத்ததற்காக பேருந்துக்களில் ஏறமாட்டோம் என்றும், பள்ளரின் பெயரை நீக்கு என்றும் கலவரங்களில் ஈடுபட்ட போது முக்குலத்து சாதி வெறியர்களுக்கு பயந்து தமிழக அரசு தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரையே தூக்கிவிட்டு முக்குலத்தாருக்கு ஆதரவாக செயல்பட்டதும், அதே தமிழக அரசு மதுரை விமானநிலையத்திற்கு பசும்பொன் முத்து இராமலிங்க தேவரின் பெயரை வைத்து விசுவாசத்தை காட்டிக் கொண்டதும், தேவர் நூற்றாண்டு விழாவின் போது பசும்பொன் தேவரின் தபால்தலையை வெளியிட்டு தமிழக அரசு தன் ஒருபக்க சாதி ஆதரவை காட்டிக் கொண்டதும், எல்லாவற்றிற்கும் மேலாக தலித்திய தலைவன் திருமா தேவர் ஜெயந்தி நூற்றாண்டை முன்னிட்டு 3-நாட்கள் விடுமுறை விட வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொண்டதும்,

2008-இல் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட கலவரத்தில்[10][11] தலித் மாணவர்கள் பாதிக்கப்பட்ட போதும் எந்த விசாரணையும் தீவிரப்படுத்தாமல் கலவரத்தில் ஈடுபட்ட ஆதிக்க சாதியான தேவர் சமுகத்தின் பக்கம் தமிழக அரசு ஆதரவாக இருந்ததும்,

கடைசியாக காமெடியன் விவேக், நடிகை புவனேஸ்வரி பிரச்சனையில் ஊடகத்துறையைச் சார்ந்த குடும்பத்தினரைக் குறித்து கேவலமாக பேசியதால்[12][13] விவேக் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஊடகத்துறையினருக்கு பயந்துபோய் தனது சாதி [தேவர்] சங்கத்தில் இணைந்து கொண்டு பாதுகாப்பு கோரியதையும், இன்னமும் நீதிமன்றத்தில் விவேக் அவதூறாக பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்ததும் ஆதிக்க சாதியின் அட்டூழியங்கள் எந்தளவுக்கு ஒடுக்குமுறைகளுக்கு முன்னெடுக்கிறது என்பதையும், அதற்கு அரசாங்கம் அனுசரித்து போவதையும் நாம் அவதானித்துக் கொண்டுதானே இருக்கின்றோம்.

வெறும் ஓட்டுக்களுக்காக ´குலத்துக்கொரு நீதி´ கற்பித்த முக்குலத்தான் தேவரை தூக்கிப்பிடித்து ஆடுகிறார்கள்; அவர்கள் அரசியல்வாதிகள் போய்த் தொலையட்டும்.

´பெரியாரின் பேரன்´ என்று தன்னையே வர்ணித்துக் கொள்ளும் சீமானுக்கு என்ன கேடு வந்தது?

சீமான் நியாயமான உணர்வாளனாக பெரியாரின் பேரனாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

தேவர் சிலையை உடைத்துப் போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும்…!

செய்தாரா?

தேவர் சிலைக்கு மட்டுமா சீமான் மாலை போட்டார்? போராளி இமானுவேல் சேகரன் நினைவு இடத்திலும் சீமான் மலர் வளையம் வைத்தார் என்றொரு கேள்வி எழக்கூடும்.

“தமிழ்ச்செல்வன் வீரமரணத்திற்கு இரங்கல் கவிதை- அவரைக் கொலை செய்த ராஜபக்சேவுக்கும் பொன்னாடை என இரட்டை வேடம் போடும் கருணாநிதிக்கும், சீமானுக்கும் என்ன வேறுபாடு?”

“இமானுவேல் கேசரனுக்கும் மாலை; அவரைக் கொலை செய்த தேவருக்கும் மாலை”

அந்தோ பாவம்!

தம்பி சீமானை ஓட்டு அரசியல் எப்படியெல்லாம் ஆட்டம் போட வைக்கிறது?

வாசகர்களே! திரும்பவும் கீற்று கட்டுரைக்கு வருவோம்!

“கொஞ்சநாள் முன்பு வரைக்கும் எனக்கு முத்துராமலிங்கத் தேவர் பத்தின உண்மைகள் எதுவும் தெரியாது. தம்பி படம் வந்தபிறகு அண்ணன்களெல்லாம் சொன்னபிறகு தான் என்னோட பிழை தெரிஞ்சது. அவரை முன்னிறுத்தணுங்கிற உள்நோக்கம் எல்லாம் எதுவும் கிடையாது. படம் வந்த பிறகு தான் தேவரும், பெரியாரும் கொள்கை ரீதியா வேறானவங்கன்னு எனக்குத் தெரிய வந்தது. பெரியார் இறந்தபோது அரைக் கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட பார்வார்ட் பிளாக் கொடிதான் என்பதையும் தெரிஞ்சிக்கிட்டேன். நான் முழுக்க முழுக்க பெரியாரைப் பின்பற்றுகிறவன். முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான்” என்கிறார் சீமான்.

சரி, ´தம்பி´ படத்தில் தேவர் படத்தை தெரியாமல் தொங்கவிட்டு விட்டார். தேவர் ஜெயந்தியில் பெரியார் இறந்தபோது அரைக்கம்பத்தில் பறக்காத ஒரே கொடி, முத்துராமலிங்கத்தோட ´பார்வார்ட் பிளாக்´ கொடிதான் என்பதும் பெரியாரை கேவலப்படுத்தியவர் சாதிவெறி பிடித்த தேவர் என்பதும் தெரிந்து தானே மாலை போட்டார்.

பெரியார் மரணமடைந்தபோது – அதற்கு தமிழ்நாட்டில் இரங்கல் தெரிவிக்காத அமைப்புகள் இரண்டு. ஒன்று சங்கரமடம், மற்றொன்று ´அகில இந்திய பார்வர்டு பிளாக்´. பார்ப்பன அமைப்பு இரங்கள் தெரிவிக்காததன் காரணம் நமக்கு தெரிந்ததுதான். ´பார்வர்டு பிளாக்´ அமைப்பைச் சேர்ந்த கள்ளர், தேவர், மறவர் சமூகத்தினர் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதற்கு காரணம் 1957-இல் முதுகளத்தூரில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான சேரிகள் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் எரிக்கப்பட்டனர். சாதிப் போர் நடந்தது என்னும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்திய சம்பவம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளைக் கண்டு காந்தியார் அறிக்கை விட்டதோடு சரி. பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எந்த உதவியும் செய்யவில்லை. பெரியாரோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தார். “நூற்றுக்கணக்கான தலித் மக்கள் எரித்து கொல்லப்பட்டதற்கும், 19-தாழ்த்தப்பட்ட மக்களை தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதற்கும் காரணமாக பசும்பொன் முத்து இராமலிங்கத் தேவரை கைது செய்ய வேண்டும்” என அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு பெரியார் அழுத்தம் கொடுத்தார். அப்போதைய முதல்வராக இருந்த காமராசர் தேவரை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

இச்சம்பவம் தமிழக்ததில் பெரிய கலவரத்தை உருவாக்கிய போதும் பெரியாரின் உதவியோடு துணிந்து நின்று போராடினார் கமாராசர். அதனால் தான் காமராசர் இறந்த அன்று, ´கெடா வெட்டி தீபாவளி கொண்டாடுங்கள்´ என்று தேவர் சமுகம் அறிவித்தது. பெரியார் இறந்த போது அஞ்சலி செலுத்தாமல் அவமரியாதை செய்யும் பாவணையாக பார்வார்ட் பிளாக் கொடியை பறக்கவிட்டது.

இத்தனையும் மிகத் தெளிவாக சொல்கிறார் சீமான்.

இதே சீமான் பெ.தி.க தோழர்களிடம் அடிக்கடி சொல்வார்:

“பெரியார் சொல்லை காமராசர் செயல்படுத்தியதைப் போல, நான் காமராசர் போல் பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவேன்” என்று.

தம்பி ´புரட்சி செய்´, ´ரௌத்ரம் பழகு´, ´நையப்புடை´ என்று சொல்லிக் கொண்டிருப்பாரே பெரியாரின் தொண்டர்களுக்கு…

தம்பி மாலையும் கையுமாக காரியத்தை முடித்துவிட்டு வந்திருக்கிறார். இருக்கட்டும்…

ஆனால், இனி எந்தக் கூட்டத்திலாவது ´பெரியாரின் பேரன்´ என்று தம்பி சீமான் கூறுவாரேயானால், எங்கள் தோழர்கள் நையப்புடைக்கத் தயங்கமாட்டார்கள்.

“எந்த கூட்டத்திலாவது பெரியாரின் பேரனாகிய நான் என வீரவசனம் பேச ஆரம்பித்தால் நாம் மீண்டும் மீண்டும் எழுத்துக்களால் நையப்புடைப்போம்…”

இவ்வாக்கியங்களை நினைவில் நிறுத்திக் கொண்டு சீமான் ´வீர வசனம்´ பேசட்டும்!

துரோகிகளே,

´பெரியாரை பெரியாராக இருக்க விடுங்கள்´ என்றுதான் கோருகிறோம். இன்னும் எத்தனை காலத்திற்கு அரசியல் செய்ய உங்களுக்கு பெரியார் வேண்டும்?

சொல்லுங்கள் துரோகிகளே!
சொல்லுங்கள் புரட்டு கதை பேசும் புரட்டர்களே!!!

கனடாவில் கைதான சீமானுக்கு கையில் விலங்கு போடப்பட்டதா?


பெரியார் புராண இதிகாசங்கள் குறித்து விமர்சித்துக் கொண்டிருந்தபோது, ´பழைய குப்பை கூளங்களைக் கிண்டி கிளறாதேயுங்கள், அவை தானாகவே அழிந்துவிடும்´ என்று சூட்சகமாக பேசி பார்த்தார்கள் பிற்போக்குவாதிகள்.

பெரியார் சொன்னார்:

“குப்பை கூளங்களைச் சமயங் கிடைத்தபோது கிண்டியேயாக வேண்டியிருக்கிறது. நமது பழங்கல்வியும், நாகரிகமும் புதிய ஆசையால் அவஸ்தைப்படுகிறது. நவீனக் கல்விக்கும், நாகரிகத்திற்கும் தகுந்த வாகனமாக நாம் இல்லாததனால் அவை மூளையை விட்டு வெளியில் ஆண்மையோடு வருவதில்லை. அறிவு மனிதருக்கெல்லாம் பொதுவென்பதை எல்லா உலகமும் ஒத்துக்கொள்கிறது. எக்காரணம் பற்றியோ அவை நம் நாட்டில் அங்கீகாரம் பெறவில்லை. ராஜிய ஆதர்சங்களாகிய வானத்தில் ஏறிப்பறக்க நிச்சயித்திருக்கும் நாம் மற்றப்படி ஜன வாழ்க்கையில் பின்னே நடப்பதற்கு எத்தனை மடங்கள்? எத்தனை ஆசாமிகள்? எத்தனை சட்டசபை ஏறிச் சண்டைப் போட்டும் வக்கீல்களின் ஆண்மை எத்தனை? உலகத்திலுள்ள சர்வமகா நாட்டிற்கும் போகும் பயணத்தடபுடலென்ன? பகிஷ்கார வீரமென்ன? ´சீமைக்குப் போனாலும் அங்குள்ள உத்தியோகஸ்தரர்களைப் பார்க்கமாட்டோம் என்னும் பேப்பர் அலங்காரமென்ன?………. [17.06.1928- “குடிஅரசு” இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதியதில் இருந்து சில… ´பெரியார் களஞ்சியம், தொகுதி:5´ பக்கம்:27]

எதற்காக இங்கே இம்மேற்கோள் சுட்டிக்காட்டப்படுகிறதென்றால்….

மீண்டும் மீண்டும் சீமான் குறித்த விமர்சனங்களை நாம் தொடர்ந்து வைப்பதால் ஏதோ தனிப்பட்ட தாக்குதலாக சங்கதி போய்விடக்கூடாது என்பதற்காகவும், பெரியாரை வைத்து சீமான் அரசியல் செய்ய முற்படும் புரட்டுத்தனமும், அதை நாம் அம்பலப்படுத்த முயன்றபோதெல்லாம் தனிமனித பிரச்சனையாக ஜோடிக்க முற்பட்டதும் ஒரு காரணமாகும்.

நாம் அரசியல் ஊடாகவே எம் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கிறோம்.

தற்பொழுதும் அதையே செய்கிறோம்…

குப்பை கூளங்களை கிண்டிகிளறி உண்மைகளை வெளிக்கொணர முயல்கிறோம்…

சில வாரங்களுக்கு முன்புவரையில் தன்னை ´பெரியாரின் பேரன்´ என்று சமுகத்தில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த சீமான், தேவர் சிலைக்கு மாலை அணிவித்து[1] தன் இயக்கத்தில் இருந்த தலீத் தோழர்களையும், பெரியார் தொண்டர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு…

சில நாட்களிலேயே தன் அலுவலகத்தில் இருந்த பெரியார் புகைப்படத்தை நீக்கினார். சில நாட்களுக்கு முன்பாக நாம் தமிழர் இணையதளத்தில் இருந்தும் பெரியார் நீக்கப்பட்டார்.

இவை குறித்து நாம் தமிழர் இயக்கத்திலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதை நாம் அறிந்தாலும்…

பெ.தி.க தோழர்கள் சீமானை தங்கள் நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள கொடுத்திருந்த நிகழ்ச்சிகளை இரத்து செய்து கொண்டதும்,

இனி பெ.தி.க அமைப்பின் மூலம் சீமானை நிகழ்வுகளுக்கு அழைக்கக் கூடாதென முடிவு எடுத்திருப்பதை நாம் அறிந்தபோதும்…

எம்மிடம் இருக்கும் ஒரே கேள்வி இத்தனை நாள் தலையில் பெரியாரின் அறிவைச் சுமக்கும் ´பெரியாரின் பேரன்´ என்று சொல்லிக் கொண்டிருந்த சீமான் சடாரென பெரியாரை புறந்தள்ள என்ன காரணம் என்றும்…

பெரியாரை தூக்கியெறிந்த சீமான், ´தமிழகத்தில் இருந்து ஈழத்தை வென்றெடுப்போம்´ என்று முழங்கிய சீமான், தன் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி இருக்கிறார். நாளை தேர்தலில் நிற்கும் நிலைவந்தால் ´ஈழத்தை வென்றெடுப்போம்´ என்னும் கொள்கைக்காக தேர்தலில் நிற்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால் சீமான் என்ன செய்வார்?

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக பிரபாகரனையும் தூக்கியெறிய மாட்டாரா?

சீமானின் அரசியலில் இன்றைய நம்பகத் தன்மை எப்படி இருக்கிறது என்பதற்கு அவருடைய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று அதிர்ச்சியாகவே இருக்கிறது.

கருணாநீதிக்கும், ´ஜெ´வுக்கும் தமிழகத்தில் அரசியல் செய்ய இன்றும் பெரியார் தேவைப்படுகிறார். ஆனால், பெரியாரின் பேரனோ மிஞ்சி விட்டார். பெரியாரே இனி தேவையில்லையென புகைப்படங்களில் இருந்து நீக்கிவிட்டார்.

எதிர்காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த டுபாக்கூர் அரசியல்வாதி உருவாகிவிட்டார் என்பதை நாம் நன்கு அவதானிக்க முடிகிறது. எனவே குப்பைக் கூளங்களை கிண்டி கிளற மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

ஆம்….,

மாவீரர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கனடாவுக்கு போனார் சீமான். முதல் இருநாள் நடந்த கூட்டத்தில்[2] சட்டவிரோதமாக பேசியதாக கூறி கனடா போலீஸார் சீமானைக் கைது செய்தனர்.

இதை கனடா நாட்டு எல்லைச் சேவைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ´பாட்ரிசியா கிலோட்டி´ உறுதி செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கனடாவின் சட்ட திட்டங்களுக்கு எதிராக பேசியதால் குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் இந்தியாவைச் சேர்ந்த செபாஸ்டியன் சீமானைக் கைது செய்தனர். பாதுகாப்பு கருதி அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் ஒப்புக் கொண்டார் என்றார்.

சீமானின் வழக்கறிஞர் ´ஹதயாத் நஸாமி´ கூறுகையில், பாதுகாப்பு காரணத்திற்காக சீமானை நாட்டை விட்டு வெளியேற்ற குடியேற்றத் துறை தீர்மானித்தது. இருப்பினும் தானே செல்வதாக சீமான் கூறினார் என்றார்.

அதற்கு மேல் தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களை பாருங்கள்.

இந்த வார குமுதம் இதழில் தம்பி சீமானின் பேட்டி:

´கனடாவில் நீங்கள் கைது செய்யப்பட்டது ஏன்´ என்று குமுதம் நிருபர் கேட்கிறார். தம்பி சீமான் சொல்கிறார்:

கனடாவுக்குச் செல்லும்போதே உள்ளேயே நுழையவிடாமல் தடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்தோம். அங்கே சென்று தலைமறைவாகவே இருந்தேன். அவர்களும் என்னைத் தேடிக் கொண்டேதான் இருந்தார்கள். 26-ம் தேதி மாலை நிகழ்ச்சியில் பேசுவதாக இருந்தேன். தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி அன்று காலையே கைது செய்தனர். முதுகிற்குப் பின்னால் என் கைகளைக் கட்டி, விலங்கிட்டு இழுத்துச் சென்றனர். நான் பேசினால் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும் என்று அங்கிருந்த அதிகாரி கூறினார். இதே கனடாவில் 2007-ல் இதே மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன். அப்போது கெட்டுப் போகாத சட்டம் ஒழுங்கு இப்போது மட்டும் எப்படி கெட்டுப் போகும்?´ என்று கேட்டேன். அதற்கு அந்த அதிகாரி, ´தட் இஸ் பாலிடிக்ஸ்´ என்றார். கனடாவை விட்டு உடனே வெளியேறுங்கள்; மீறி இருந்தால் சிறையில் தள்ளுவோம்´ என்று எச்சரித்தனர். என்னை வழியனுப்ப வந்த தமிழர்களையும் சந்திக்கவிடாமல் தடுத்துவிட்டனர். இலங்கை அரசு சொல்லி, ஓர் இந்தியனை கனடா அரசு திருப்பி அனுப்பாது. அங்கே என்னை விசாரித்ததே ஒரு சீக்கிய அதிகாரிதான். ´ராஜிவ்காந்தி கொலையை நியாயப்படுத்துகிறீர்களா?´ என்ற அவரிடம், ´நீங்கள் இந்திரா காந்தி கொலையை நியாயப்படுத்துவீர்களா?´ என்றேன்.´ என்பதாக சீமான் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், சீமான் கனடாவில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவுடன் நிகழ்ச்சி பொறுப்பாளர்களில் ஒருவர் ஆடியோ மூலம் நடந்த சம்பவங்களை தெரிவிக்கிறார்.[3]

அதில் சீமான் கைது செய்தோ, அல்லது கையில் விலங்கு போட்டோ, அழைத்துச் செல்லப்படவில்லை. மிகுந்த மரியாதையோடு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிடுகிறார். 2:03 நொடியில் இவ்வாசகம் ஆடியோவில் வருகிறது.

உண்மையில் நடந்தது என்ன? இணையத்தில் கைது செய்யப்பட்ட போது கைவிலங்குடன் புகைப்படங்களோ, வீடியோ காட்சிகளோ காணப்படவில்லை. யார் சொல்வது உண்மை என்னும் குழப்பம் மட்டுமே மிஞ்சுகிறது…

கனடாவுக்குள் சென்றால் கனடா போலீஸ் தடுத்திருக்கக்கூடும் என எதிர்பார்த்தாராம். அதனால் கனடா போலீசுக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்தாராம்.

இங்கேதான் வார்த்தை ஜாலங்களால் அரசியல் செய்ய முற்படுகிறார் சீமான். சீமானை கனடாவிற்குள் அனுமதிக்க கூடாதென்றால் கனடா போலீஸ் நாட்டுற்குள் விடாமல் திருப்பி அனுப்பி இருக்கக்கூடும். ஆனால் கனடா போலீசுக்கு தெரியாமல் தலைமறைவாக இருந்ததாகவும், கையில் விலங்கு போட்டு இழுத்துச் சென்றதாகவும் ஹீரோ ஜோடனையுடன் ஆடியோவுக்கு எதிரான கருத்தை வைத்திருக்கிறார் சீமான்!

எது எப்படி இருப்பினும் பெரியாரின் அறிவு தம்பி சீமானுக்கு இனி தேவைப்படாது என்பதால் சூதுவாது அரசியலில் களம் புகுந்திருக்கிறார் என்பது மட்டும் உறுதியாக அறியமுடிகிறது.

பூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது


எந்தப் பார்ப்பான் தொழிலாளியாக இருக்கிறான்? விவசாயம் செய்யும் பார்ப்பனன் உண்டா? மில்லில் கூலி வேலை செய்யும் பார்ப்பனன் உண்டா? அத்தனைத் தொழிலாளர்களும் தமிழ் மக்கள் தானே?

எனவே, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்தின் மீது அவர்களிடம் ஆத்திரமூட்டி, தூண்டிவிட்டு முதலாளியிடம் இவ்விதம் வம்புக்குப் போகும்படி செய்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார்களே பார்ப்பனர்களும் அவர்களுக்குத் துணை புரியும் கம்யூனிஸ்ட்களும். இவர்கள் கம்யூனிஸ்ட்களாக இருப்பதனால், முதலில் ஜாதியை ஒழிக்கப் பாடுபட வேண்டும். ஜாதிப்பாகுபாடு நிலைநாட்டப்பட்டிருப்பதால்தானே, உழைக்கும் தொழிலாளியும், உழைக்காமல் சுகமாக வாழும் பார்ப்பனரும் இருக்கின்றார்கள்.
ஜாதிப் பிரிவு இல்லையானால், தொழிலாளி – முதலாளி என்ற பிரிவும் மறைந்துபோகும். எனவே, ஜாதியின் பெயரால் இருக்கும் சின்னங்களையும், உயர்வு தாழ்வு பாராட்டுவதற்கான எண்ணங்களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் முதலாவது தன் கையில் கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு பார்ப்பாரத் தெருவில் புகவேண்டும். அங்குள்ள பார்ப்பனர்களின் ஒரு உச்சிக் குடுமியோ, பூணூலோ இல்லாமல் அடியோடு கத்திரித்து விட வேண்டும். முதலில் இதில் ஈடுபட்டால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

ஆனால், இந்த முயற்சியில் புகுந்தீர்களானால் முதன் முதலில் தங்களுக்குத் தலைவர்களாக உள்ள பார்ப்பனர்களின் பூணூலைக் கத்தரித்துவிட்டுத்தான் மற்ற பார்ப்பனர்களிடம் போக நேரிடும். ஆனால், இவற்றால் ஜாதி ஒழியும் என்று கூறுவதற்கில்லை.
இன்னமும் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற யாருடைய முயற்சியாலும் ஜாதி ஒழிவதற்கு வழியே கிடையாது. இதுவரை கீழ்ஜாதி என்பவர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் மரியாதை இருந்திருக்குமானால், அவர்களுடைய முயற்சினால் தான் வந்திருக்கும்.

காந்தியார் கூட மேல் ஜாதிக்காரனுக்கு என்று தனியாக கோயிலும் குளமும் வேண்டும், கீழ் ஜாதிக்காரனுக்கென்று தனியாகக் கோவிலும் குளமும் வேண்டும் என்றார். நாங்கள் பிறகு கூப்பாடு போட்டு இரண்டு பேருக்கும் தனித்தனியே இருக்குமானால் அந்தக் கோவிலும் குளமும் பறையன் கோவில், பறையன் குளம் என்று பெயரிடப்பட்டு அவை உள்ளவரை அந்த ஜாதியும் மறைவதற்கு வழி இல்லை என்று சொன்னோம்.

அதன் பிறகுதான் ஒரே கோவிலில் எல்லோரும் சாமி கும்பிடலாம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னமும் பார்ப்பான் கோவிலில் அனுபவிக்கும் சுதந்திரம் சூத்திரனும் பறையனும் அனுபவிக்க முடியாது. பார்ப்பான் மட்டும்தான் சாமிக்கு பக்கத்தில் போகமுடியும். அந்த இடத்தில் நாம் போக முடியாது.

இப்படிக் கோவிலுக்குப் போக வேண்டிய அவசியம் தான் என்ன இருக்கிறது? இன்னமும் இந்த மூடங்கள் அவிழ்த்துக் கொடுக்கின்றன. பார்ப்பான் வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டே இருக்கிறான். 1956 ஆம் ஆண்டிலும் இந்த அக்கிரமம் நடக்கலாமா? இதையல்லவா கம்யூனிஸ்ட்கள் ஒழிக்க வேண்டும்?

எந்த நாட்டில் கம்யூனிஸ்ட்களுக்குப் பாதிரி தலைவனாக இருக்கிறான்? கம்யூனிஸ்ட் என்றாலே பாதிரிக்கு வேலை இல்லை. இந்தப் பாதிரியை விட மகாக் கொடுமையும், பித்தலாட்டமும் செய்யும் முதல்தரப் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்ட்க்குத் தலைவராக இருக்கின்றனர். ஏன்? நம்முடைய ஆளுக்கு யோக்கியதையும் திறமையும் இல்லையா? பார்ப்பனர் கம்யூனிஸ்ட்களின் தலைவராக இருக்க என்ன யோக்கியதை உடையவர்கள்? எப்படியாவது உண்மை கம்யூனிசம் நம் நாட்டில் பரவினால் பார்ப்பனர்களுக்குச் சீட்டுக் கொடுத்தனுப்பும் நிலையைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதற்காகப் போலி கம்யூனிசம் நாட்டில் பார்ப்பனர்களால் பரவச் செய்யப்படுகிறது.

உண்மைக் கம்யூனிசம் இந்த நாட்டில் பரவுமானால் இங்கே பார்ப்பனருக்கும், மதம் சாஸ்திரம் புராணங்களுக்கும், கடவுள்களுக்கும் வேலையே இருக்காது. எனவே, இந்த மதமும் ஜாதியும் ஒழிய வேண்டுமானால், எங்களைத் தவிர வேறு யாரும் கவலை கொள்பவர்கள் கிடையாது. நாங்கள் தான் முதன் முதலில் ஜாதி ஒழியவேண்டும் என்றும் கூறியவர்கள்.

காந்தியார் கூட செத்துப் போவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாகத்தான் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார். அதற்கு முன் ஜாதியைப் பற்றிய கவலை காந்திக்கு இருந்ததேயில்லை. ஜாதியைக் காப்பாற்றியதால்தான் அவர் “மகாத்மா” என்று போற்றப்பட்டார்.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவரும், புத்தரும் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இதைத் தவிர இப்போது முதன் முதலில் எங்களைத் தவிர வேறு யாரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினதுமில்லை. நாங்கள் சொன்ன பிறகு, டாக்டர் அம்பேத்கர், காந்தியின் தவறுகளை உணர்ந்தபின் தான் அவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினார். அதற்கு முன் அவரும் காந்தியுடன் சேர்ந்து ஏமாற்றப்பட்டவர்தான். காந்தியார் ஜாதியைக் காப்பாற்றத்தான் முயற்சிக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னர் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார்.

இப்போது தென்னாட்டில் நாங்களும், வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும் தான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறோம்.

முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்டமிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத்தனர். இவரும் ஒப்புக் கொண்டார். மாநாடு நடத்தும் தினம் நெருங்குவதற்கு ஆரம்பித்தது. அம்பேத்கரை, “நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும்” என்று கேட்டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவதாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். “நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுள்களின் மீதும் கையை வைக்காதே” என்று கூறினர்.

ஆனால், அம்பேத்பர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். “நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது. என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்! அதற்கு ஆட்சேபனை இல்லை” என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.

இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள். ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிரவேசிப்பதில்லை. நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று அடிக்கடியும் கூறுகிறார். ஆனால், முதலில் அவருடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அப்படியே வைத்துக் கொண்டு ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுகிறார். ஆகக்கூடிய காரியமா?

சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று உண்மையில் நினைப்பாராகில் அதற்கென்று சட்டமே இயற்றிவிடலாம். “இனிமேல் யாரும் ஜாதிச் சின்னம் அணியக்கூடாது பூணூலை அறுத்து எறியவேண்டும். இல்லையேல் இந்தச் சட்டப்படி போலீசார் கத்தரித்து விடுவார்கள். கோவில்களில் பார்ப்பனர் மட்டுமல்லாது பறையன், சக்கிலியன் யாவரும் மணி அடிக்கலாம்” என்று சட்டமியற்றி விட்டால் சீக்கிரமாகவே ஜாதியை ஒழிக்கலாம். அதன்றி வாயினால் சொன்னால் மட்டும் போதாது.

ஆனால், நேரு அப்படிக் கூறுவதற்கு அவருக்குப் பைத்தியம் பிடித்தால் ஒழியக் கூறமுடியாது. பச்சைப் பார்ப்பனராக இருந்து கொண்டு அப்படிக் கூறுவாரா? அவருடைய ஆட்சியே பார்ப்பனர்களின் நன்மைக்கென்று இருக்கையில் பார்ப்பனர்கள் விஷயத்தில் கை வைக்க மாட்டார்.

இப்போது கூட நான் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்ற காரணம் என்ன? அரசாங்கம் பார்ப்பனருடையது…. பார்ப்பனரை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். ஆகையால்தான் நான் அரசாங்கத்திற்கு எதிரானவன்.

நான் என் வேலையை விட்டு, “இனிமேல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். ஏதோ இதுவரை தெரியாமல் பார்ப்பனர்கள், சாஸ்திரம், கடவுள் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று கூறினேன். இப்போது பகவான் என்முன் தோன்றி இதுவெல்லாம் கூடாது என்று சொன்னார். ஆகவே பார்ப்பனர்கள் ‘பூலோகத் தேவர்கள்’ என்று காமராசருக்கு மட்டுமல்ல. நேருவுக்கும் தந்தி கொடுத்தேனாகில், உடனே மறு தந்தியில் உனக்கு ஒரு மந்திரி மட்டும் போதுமா? அல்லது இரண்டு மந்திரி உத்தியோகம் வேண்டுமா? சென்னை அரசாங்கத்தில் வேண்டாம். மத்திய அரசாங்க மந்திரியாகவே அமர்ந்துவிடலாம். எந்த இலாகாவுக்கு என்று கவலைப்பட வேண்டாம் இலாகா பொறுப்பு இல்லாத இலாக்கா என்று ஒன்று அமைத்து அந்த இலகாவுக்கு மந்திரியாக இருக்கலாம் என்று தெரிவிப்பாரே.”

ஏனெனில், என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலை நாட்டப் பாடுபட்டவர்கள் யாருமே இல்லை. முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு வாலன்டியராக இருந்தாராம். அவர் அப்போது இருந்த இடமே தெரியாது. விருதுநகர் மாநாடு ஒன்றுக்கு நான் தலைவராக இருந்தபோது எனக்கு வாலன்டியராக இவரை அமர்த்தினதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன். அதற்கு நான் அவரிடம் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறேன். எனக்கு வாலன்டியராக இருந்தவர் சென்னை முதன் மந்திரியாக இருக்க நான் இந்தியாவின் பிரதம மந்திரியாகக் கூட ஆகமுடியும்.

ஆனால், இப்போது என் முயற்சி எல்லாம் இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியின் கொடுமை அடியோடு ஒழிய வேண்டும். நான் மற்றவர்களைப் போல் சும்மா பணக்காரன் ஒழிய வேண்டும் என்று கூறுகிறவன் அல்ல. ஆனால் இதுவும் என்னால் ஆக முடியாத காரியம் என்று அல்ல. கடவுளையே ஒழிக்க முற்படுபவனாகிய எனக்கு இந்தப் பணக்காரர்களை ஒழிப்பதா பெரிய காரியம்?

மேலும் இப்போது கூறுகிறேன். மந்திரிகளைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை. சட்டத்தின் மூலம் ஜாதி ஒழியவேண்டும் சட்டத்தில் உள்ள ஜாதிப் பாகுபாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் நான் கொஞ்சம் அயர்வேன்.

பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல, வைப்பாட்டியாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும். ஆனால் பார்ப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கணவனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்தச் சட்டத்தைக் கொளுத்திவிட்டு பிறகு நேரு ‘ஜாதி ஒழிய வேண்டும்’ என்று சொன்னால், அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.

காமராசராவது ஓரளவு தம்மால் இயன்ற அளவு ஜாதியினால் ஏற்பட்ட கொடுமைகளையாவது உணர்ந்திருக்கிறார். வேறு யாருடைய ஆட்சியிலும் இல்லாத முறையில் நல்லவர்களுக்கு உதவி செய்கிறார். தேவஸ்தான இலாகா மந்திரியாக பஞ்சம ஜாதி என்று இகழப்படுபவரை (பரமேஸ்வரன்) அமர்த்தினார். அர்ச்சகப் பார்ப்பனர் எல்லாம் இவரைக் கண்டால் கை கட்ட வேண்டும். இந்த அளவுக்காவது பார்ப்பனத் திமிரை ஓரளவு அவரால் அடக்க முடிந்தது. மேலும் அவர் காலியாகிற உத்யோகங்களை எல்லாம் தமிழர்களுக்கே கொடுத்து வருகிறார். இதைவிட இன்னமும் அவர் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்?

மேலும் அவரும் வடநாட்டுப் பார்ப்பனத் தலைமை பீடத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவர். வடநாட்டினர் கிழித்த கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் ஆட்சியில் இருந்து கொண்டு நமக்கு இவ்வளவாவது நன்மை செய்கிறார் என்பதைக் கொண்டு நாம் சந்தோஷமடைய வேண்டும்.

அதைவிட அவருடைய ஆட்சிக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சிப்பது மிகவும் அறிவீனமாகும். அவரைப் பற்றி ஏதேதோ இல்லாதவைகளைச் சேர்த்துப் பேசி அவர் மேல் மக்களுக்கு வெறுப்பூட்ட நினைக்கிறார்கள். இதுவரை அவர் அந்த இடத்தில் இருக்கவில்லையானால் அந்த இடத்தில் நண்பர் ஆச்சாரியார் அவர் அவருடைய தொழிலாளியான ஜாதி வளர்ப்புத் தொழிலையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் இல்லையேல் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய சுப்ரமணியனோ அல்லது
பக்தவத்சலமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.

பூணூல் உள்ள பார்ப்பனர்களாவது கொஞ்சம் நம்பலாம். இந்த பூணூல் இல்லாத பார்ப்பனர்களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது. பார்ப்பனர்களாவது பதவியின் பேரால் கொஞ்சம் கோழைத்தன்மை உடையவர்கள். தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட தமிழர்கள் எந்தக் கொடுமையும் துணிந்து செய்வர்.

உங்கள் குல வேலையை நீங்கள் பார்த்த பிறகல்லவா பிறருக்குப் புத்தி சொல்ல வேண்டும்? என்றேன். இதைக் கேட்டு அவர் ராமசாமிக்கு ஜாதித் துவேஷம் ரொம்பவும் முத்திப் போச்சுது என்றாராம்.

பிறகு இந்த ஆள் ஒழுங்குபடமாட்டார் என்று தெரிந்து அதற்காக கத்தியும், பெட்ரோலும் தயாரா இருக்கும்படி செய்திருந்தேன். அதன் பிறகுதான் ஒரு வழிக்குச் சரியாக வந்தது. அவரும் ஆட்சியை விட்டுப் போனார். மறுபடியும் காமராசர் வர முடிந்தது.

இவருக்குத் தொல்லை கொடுப்பவர்கள் இப்போது மலிந்து போய்விட்டார்கள். அவர்கள் எல்லாம் பீர்மேடு, தேவிகுளம் என்று தாண்டிக் குதிக்கிறார்கள். தேவிகுளம், பீர்மேடு வேண்டாம் என்ற ஆட்களெல்லாம் இப்போது விளம்பரத்திற்காக மாற்றிக் கூறுகிறார்கள். தேவிகுளம், பீர்மேடு நம்முடையதாக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட போது, இதே கம்யூனிஸ்ட்கள் நடுநிலைமை வகித்தார்கள். சோஷலிஸ்ட்கள்தான் இதன் சம்பந்தமாக என்ன யோக்கியதை உடையவர்கள்? பட்டம் தாணுவின் சர்க்கார் நடக்கும் சமயத்தில் தேவிகுளம், பீர்மேடு வேண்டுமென்று கேட்ட தமிழர்களைச் சுட்டுக் கொன்றதைப் பார்த்து “இப்படித்தான் சுட்டுக்கொல்ல வேண்டும். தேவிகுளம், பீர்மேட்டைக் கேட்க தமிழர்கள் தகுதியற்றவர்கள்” என்றெல்லாம் இங்குள்ள சோஷலிஸ்டுகள் கூறினார்கள். அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட்டும், சோஷலிஸ்டும் இன்றைக்குத் தேவிகுளம், பீர்மேடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்கிறார்களாம்

மார்க்ஸீய தத்துவம்!


கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளும், தத்துவங்களையும் மார்க்ஸீசம் என்று சொல்லப்படுகின்றது. பொருள் முதல் வாதம் (Materialism) தர்க்கவியல் (Rialectics) சரித்திரம் பற்றிய பொருள் முதல் வாதக் கண்ணோட்டம் (The Materialist Conception History) வர்க்கப்போராட்டம் என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டவை மார்க்ஸீய தத்துவங்கள்.

பொருள் முதல் வாதத்தில் (Materialism) கார்ல் மார்க்ஸ் தனது ஆணித்தரமான கருத்துக்களை மதம் வரையில் சென்று அலசி ஆராய்ந்து பார்க்கிறார். உலகமும், மக்களும் ஆண்டவனால் படைக்கப்பட்டவை என்று உலகில் இருக்கும் மதங்கள் அனைத்தும் சொல்கின்றன. ஆனால், கார்ல் மார்க்ஸீசின் சிந்தனை விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. முதன் முதலாகச் சிந்திக்கின்ற ஒரு சக்தி தோன்றி உலகத்தை படைத்திருக்க முடியாதென்றும், பொருள்களே (ஜடங்கள்) முதலில் தோன்றி அவற்றின் பௌதிக ரசாயன மாற்றங்களின் காரணமாக உயிருள்ள செல்கள் தோன்றியிருக்க வேண்டும் என்கிறது.

பொருள்களை அடிப்படையாகக் கொண்டே எல்லாம் தோன்றியிருக்கக் கூடும் என்ற கருத்தையே பொருள் முதல் வாதம் (Materialism) என்ற கோட்பாட்டுக்குள் மார்க்ஸீயம் கொண்டு வருகிறது. பொருள் முதல்வாதம் என்பது சிந்தனை அல்லது எண்ணம் என்பது – உலகத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள பொருள்கள் மனித மூளையின் சிந்தனை உருவங்களாக பிரதிபலிக்கப்படுவது என்கின்றது.

இக்கோட்பாட்டின் அடிப்படையிலேயே மதம், அரசு முதலியவைகள் கடவுளால் சிந்தித்து படைக்கப்பட்டிருக்கக் கூடியவை என்ற கருத்து கற்பனாவாதம் (idealism) என்று மார்க்ஸீயம் சொல்கிறது.

இதில் கற்பனாவாதம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. பொருள் முதல் வாதம் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

அடுத்து தர்க்கவியல் (Rialectics) அறிவு பற்றிய கொள்கைகளையும், மனித அறிவு எவ்வாறு வளர்ச்சி அடைந்து வந்திருக்கின்றது, அறியாமையில் இருந்து அறிவுடைமையை நோக்கிச் சரித்திரப் பூர்வமாக எவ்வாறு முன்னோக்கி வந்திருக்கின்றது என்பதை மார்க்ஸீய சிந்தனைகள் சொல்கிறது.

தர்க்கவியல் மனித இனத்தில் முதன் முதலாக ஆரம்பித்தது கிரேக்கர்களிடம் இருந்து தான். சிந்திக்கத் தெரியாத மனிதனிடம் கேள்விகளை கேட்க வைத்து சிந்திக்க வைத்து தர்க்கவியல் செய்ய தூண்டுகோளாக இருந்தது மானிடவர்க்கத்தில் முதல் தர்க்கவாதி சாக்ரடீஸ். மார்க்ஸீயமும், தர்க்கவியலுக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கிறது.

தர்க்கவியல் என்பது என்ன? பொருள்களைப் பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பது அப்பொருள்களோ ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. உலகம் என்பது ஏற்கனவே செய்து வைக்கப்பட்ட பொருள்களின் ஒரு தொகுதி இல்லை. பலவகைகளில் உண்டான வளர்ச்சிகளின் தொகுதிகளாக அவை காணப்படுகின்றன. அப்பொருளிளுள்ள எத்தன்மையும் நிலையானதோ, புனிதமானதோ மாற்றம் அடையாததோ இல்லை. இதில் மனிதனின் எண்ண ஓட்டங்களும் அடங்குகிறது. எப்பொருளும் உள்ளும், புறமும் மாற்றம் அடைந்துக் கொண்டே இருக்கின்றது.

தர்க்கவியலுக்கு சோதனைக்களமாக இயற்கை பயன்படுகிறது என்பது
மார்க்ஸீயத்தின் கோட்பாட்டில் அடக்கம். இயற்கை வளர்ச்சி மனித மூளையில் எப்படி பிரதிபலிக்கப்படுகிறதோ அவைதான் தர்க்கவியல் தத்துவமாக மார்க்ஸீயம் கருதுகின்றது. வெளி உலகத்திலும், மனித மூளையிலும் உண்டாகிக் கொண்டே இருக்கும் இயக்கத்தின் பொது நியதிகளின் தர்க்கமே விஞ்ஞானமாகிறது.

ஒரு பொருளைப் பற்றி அல்லது ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைப்பற்றி தர்க்கித்து வாத பிரதிவாதத்தின் மூலமாக உண்மையைக் கண்டுபிடிக்கும் முறைக்குத் தர்க்கவியல் முறை என்று பெயர். அக்காலத்தில் கிரேக்கர்களின் உண்மையைக் கண்டறிய தர்கத்திற்காகவே நேரம் ஒதுக்கி விவாதித்து இருக்கின்றனர்.

சுருக்கமாக மார்க்ஸீயத்தின் தர்க்கவியல் குறித்து கூறவேண்டுமானால்
ஒரு குறிப்பிட்ட பொருளில் கொள்கையில் அல்லது சமூதாயத்தில் பலதரப்பட்ட பகுதிகள் ஒன்றையொன்று சார்ந்தும், தழுவியும் நின்ற போதிலும்; அவை எல்லாம் ஒரே ஒரு பொது நியதிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் உட்பட்டே தீரும் என்கிறது.

அடுத்து சரித்திரம் பற்றிய பொருள் முதல் வாதக் கண்ணோட்டம் (The Materialist Conception History) இதில் உறவுகள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல், சரித்திரம் போன்றவைகள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.
மனித சமூகம் தன் தேவைகளை உற்பத்தி செய்து கொள்ளும் சமூதாய உற்பத்தியில் மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஒருவித உறவுமுறைகளுக்காக உள்ளாக்கப்படுகிறார்கள். இவ்வுற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் ஒரு கட்டம் வரை பொருத்தமானதாக இருக்கின்றது. உற்பத்தி உறவுகளின் மொத்தமும் சேர்ந்து சமூதாயத்தின் பொருளாதார அமைப்பாக இருக்கிறது. உற்பத்தி உவுகளின் சமூதாய அமைப்பின் மீதே சட்டம் அரசியல் என்ற ஆதிக்கங்கள் நிறுவப்படுகின்றன. யதார்த்த வாழ்க்கையின் உற்பத்தி முறைகள் சமூதாய அரசியல் கலாச்சார வாழ்க்கை நியதியை பொதுவில் அமைக்கின்றது.

மக்கள் தான் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் மக்களின் எண்ணத்தை எவை உண்டாக்குகின்றன? முரண்பட்ட கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும், முயற்சிகளுக்கும் இடையே போராட்டத்தை உருவாக்கும் சக்தி எது? மனித சமூதாயத்திற்கு இப்போராட்டங்களினால் ஏற்படும் பலன் என்ன? போராட்ட நிலைமைகளின் மனித வளர்ச்சி நிலை – நியதி என்ன போன்ற வினாக்களுக்கு சரித்திரம் பற்றி விஞ்ஞான பூர்வமாக மார்க்ஸீயம் எடுத்துரைக்கின்றது.

மனிதர்களின் மனப்பான்மை அவர்களின் வாழ்க்கை அமைப்பை உருவாக்குவதில்லை. சமூதாய வாழ்க்கை அமைப்பே மனிதர்களின் மனப்பான்மையை உருவகப்படுத்துகிறது. உற்பத்தி சாதனங்களின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டம் சமூதாயத்தில் இருக்கம் பழைய உற்பத்தி உறவுகளோடு முரண்பாடடைகின்றது. (சொத்துடமை உறவுகளோடு) மாற்று உறவுகளின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உதவாமல் தடங்கலாக மாறும் போது சமூதாயப் புரட்சி ஆரம்பமாகின்றன.

இப்புரட்சி மாற்றங்கள் சமூதாயத்தில் சாதாரணமாக ஏற்பட்டுவிடுவதில்லை. சமூகத்தில் மனித உறவுகளின் ஆணிவேர் சமூதாய உற்பத்தி முறையிலேயே இருக்கின்றது என்பதை கண்டுப்பிடிக்கப்படாமல் இருக்கின்றது. மாற்றங்களில் ஏற்படும் பொருளாதார நிலைமைகளின் வெளிப்படை மாற்றங்கள் சட்டம், ஒழுங்கு, நீதி, மதம், தத்துவம், அரசியல் போன்ற சிந்தனை முறைகளின் மாற்றத்தையும் பகுத்துணர வேண்டும். பகுத்துணர்ந்த விழிப்புணர்வு சிந்தனைகளே சமூகத்தில் மாற்றங்களுக்கு அல்லது புரட்சிக்கு மையப் புள்ளியாக மாறுகிறது என்ற தத்துவத்தில் மார்க்ஸீயம் தன் வாதத்தை முன்வைத்திருக்கின்றது.

வர்க்கப் போராட்டம் (The class Struggle) பற்றி மார்க்ஸீய தத்துவங்கள் மனித இனத்தின் உயிரோட்ட உணர்வுகளாக எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அல்லது வர்க்கத்திற்குள் இருக்கும் உட்பிரிவுகளையும் விளக்கி ஒவ்வொரு வர்க்கப்போராட்டமும் எப்படி அரசியல் போராட்டமாக இருக்கிறது என்பதை விளக்குகிறார். இதில் மார்க்ஸீன் பொருளாதாரத் தத்துவம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

“கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் மார்க்ஸ் சொல்கிறார் :

“முதலாளித்துவத்தை எதிர்த்து இன்று நேருக்கு நேர் நிற்கும் வர்க்கங்களில் பாட்டாளி வர்க்கம் மட்டுமே புரட்சிகரமானது. மற்ற வர்க்கங்கள் நவீன தொழில் வளர்ச்சியின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் அழிந்துவிடுகின்றன. ஆனால், தொழில் வளர்ச்சி தன் விசேஷ உற்பத்தியாக பாட்டாளி வர்க்கத்தை உருவாக்குகிறது. மத்திய வர்க்கம் சிறு தொழில் வியாபாரி, கலைஞன், விவசாயி அனைவரும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுகின்றனர். மத்திய வர்க்கத்தினராக இருக்கும் தங்கள் நிலைமையில் இருந்து கீழ் இறங்கிவிடாமல் இருப்பதற்காகத் தான் இப்போராட்டமே தவீர, அவர்கள் புரட்சிகரமானவர்கள் இல்லை. பாட்டாளிகளுடன் போரட்டத்தில் மத்திய வர்க்கத்தினர் இணைகிறார்கள் என்றால் அவை அவர்களுடைய எதிர்கால நலன்களுக்காகவும், தங்களுடைய பாதுகாப்புகளுக்காகவும் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”

எப்படி வர்க்கப் போராட்டங்களை நுணுக்கமாக ஆராய்ந்திருக்கிறார் என்பதற்கு கம்யூனிஸ்ட் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இக்கோட்பாடு சிறு உதாரணம் மட்டுமே.

வர்க்கப் போராட்டம் பற்றி குறிப்பிடும் போது மார்க்ஸ், “இதுவரையில் எழுதப்பட்டுள்ள சரித்திரங்கள் அனைத்திலும் வர்க்கப்போராட்டங்களே சரித்திரங்களாக காணப்படுகின்றன” என்கிறார்.

“அடிமை எஜமானன் – அடிமைத் தொழிலாளி, எஜமானன் – பண்ணைக் குடியானவன், பண்ணை எஜமான் – பட்டணத் தொழிலாளி, முதலாளி, சுருக்கமாக அடக்கப்பட்டவன் – அடக்கி வைப்பவன் இவர்களுக்கிடையே நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ ஓர் இடையறாப் போராட்டம் நடந்து கொண்டே வந்திருக்கிறது. இந்தப் போராட்டங்களின் முடிவு இந்த வர்க்கங்கள் அடியோடு அழிந்து போவதிலோ அல்லது சமூதாய முழுவதுமே புரட்சிக்கரமாக மாற்றி அமைக்கப்படுவதிலோ கொண்டு விட்டிருக்கிறது!

பிரெஞ்ச் புரட்சிக்குப் பின்னால் ஐரோப்பிய சரித்திரத்தில் போராட்டத்தின் உண்மையான அடிப்படை வர்க்கங்களின் போராட்டமாகவே இருக்கின்றது. இன்றைய காலகட்டத்தின் நிலை முதலாளித்துவத்தின் வெற்றி பெற்றிருக்கும் சகாப்தமாகவே இருக்கிறது. எல்லா காலக்கட்டங்களிலும் மனித இனம் இருகூறுகளாக பிரிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது. ஒன்று ஆளும் வர்க்கம் மற்றொன்று பாட்டாளி வர்க்கம். இரண்டுக்கும் இடையே நாளுக்கு நாள் பெரிய இடைவெளி ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்றோ, ஒரு நாள் வர்க்கப்போராட்டங்கள் முடிவுக்கு வந்துவிடலாம் என்பதும் மார்க்ஸீன் வாதம்.

இந்துக்களுக்கு பகவத் கீதை வேத நூலாக இருப்பது போல், இஸ்லாமியர்களுக்கு குரான் தெய்வ வாக்காக இருப்பது போல், கிறிஸ்தவர்களுக்கு புனித நூலாக பைபிளைக் கருதுவது போல், மனிதர்களாக இருக்க நினைப்பவர்கள் மார்க்ஸீயத்தை அறிய வேண்டும். அத்தனையும் அறத்தை நோக்கி சமநிலையையும், பொதுவுடமையையும் நோக்கியதான ஒழுக்கநெறிகளின் அடிப்படையை நோக்கிய மார்க்ஸீயத்தின் சிந்தனையை உள்வாங்கும் மனித சமூகம் நிச்சயம் வர்க்கப்போராட்டாங்களுக்காக, உரிமைப் போராட்டங்களுக்காக கதறிக் கொண்டிருக்காது.

திராவிடத்தை திராவகமாக்கும் சீமான்!


“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என் மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள் சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும் மனக்குறையின்றி, நிறைமனதுடன் அனுபவிப்பேன் – சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகின்றேன். [பெரியார், ´தமிழர் தலைவர்´ என்னும் நூலில் இருந்து… பக்கம்:15] என்ற உறுதியோடு சமூகபோராளியாக வாழ்ந்து எழுத்தையும், சொல்லையும், செயலில் வெளிக்கொணர்ந்து 95-வயது வரை தமிழர்களுக்காக சளைக்காது போராடிய சமூகப் போராளி பெரியாரின் சொற்கள் என்றும் தமிழர்களை ஏமாற்றிய புரட்டு சொற்களாக இருந்ததில்லை. யாருக்கும் எதற்கும் அஞ்சாது சாகும்வரையில் உண்மையாய், கொண்ட கொள்கையின் மீது உறுதியாய் நின்று உரத்த சிம்மக் குரலாக இருந்த பெரியார் மீது, ´நான் பெரியாரின் பேரன்´ என்று சொல்லிக் கொண்டே அவதூறு சொற்களை கொட்ட ஆரம்பித்திருக்கிறார். சீமான்.[1]

“இல்லாத திராவிட இன உணர்வை நமக்குக்காட்டி அதற்காக அரசியல் செய்ய பல்வேறு இயக்கங்கள் இங்கே இருக்கின்றது. ஆனால் உண்மையிலேயே நீயும் நானும் திராவிடனா?” என்னும் கேள்வியை எழுப்புகிறார் சீமான்.

பெ.தி.க சமூக அமைப்பு சார்பாக நடைப்பெற்ற இருபதுக்கும் மேற்பட்ட கூட்டங்களில் ´நான் இனத்தால் திராவிடன்´[2][காண்க: 01:03 நொடியில்] என வீரமுழக்கம் செய்திருந்த சீமானுக்கு ´திராவிடன்´ குறித்து கேள்வி எழுப்பும் யோக்கியதை இருக்கிறதா? பெரியாரை விமர்சிக்கும் யோக்கியதை இருக்கிறதா?

நாளொரு தத்துவமும், பொழுதொரு உளறலுமாக ஓட்டு பொறுக்கியாகும் சீமானுடைய முன்னாள் திராவிடம் என்பது எது? இதற்கு என்ன விளக்கம் வைத்திருந்தார்/ வைத்திருக்கிறார்/ வைத்திருக்கப்போகிறார்?

சமீபத்தில் ´இந்தியன் ரிப்போர்ட்டர்´ செப்டம்பர், 2009-இதழில் கூட “திராவிடம் என்பது இப்போது திராவகம் ஆகிவிட்டது” என்ற கருத்தை வைத்திருந்தார்.

மொத்தத்தில் திராவிடம் பேசியே தமிழன் உருப்படாமல் போய்விட்டான் என்று புலம்பும் சீமானின் திராவிடம் குறித்த புரிதல் எந்த நிலையை கொண்டது?

´ஜனகணமன´ என வங்காள மொழியில் பாடப்படும் இந்திய தேசீயகீத பாடலை முழுவதுமாக பாடிப்பாருங்கள்.

சிந்துநதி பாயும் நாட்டைச் சிந்து என்றும், கங்கை நதி பாயும் நாட்டைக் கங்கா என்றும், யமுனை நதி பாயும் நாட்டை யமுனா என்றும், உத்திரபிரதேசத்தையும், பீகார் மற்றும் ஒரிசாவை உத்கல் என்றும், தான் பிறந்த தாயகமான வங்காளத்தை வங்கம் என்றும் எழுதிய உலகம் மதிக்கத்தக்க மேதையான ´இரவீந்திரநாத் தாகூர்´ தேசிய கீதத்தில் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் மாநிலங்களை தனித்தனியாக வைத்து ஏன் தேசீயகீதம் இயற்றவில்லை. நான்கு மாநிலத்தையும் சேர்த்து திராவிடம் என்றே ஏன் இரவீந்திரநாத் தாகூர் எழுதி வைத்தார் தேசீயகீதத்தில்….

1922-இல் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து 400-கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்து மாகாணத்தில், சிந்து ஆற்றின் அருகே தொல்லியலாளர்களால் ´மொகஞ்சதாரோ´ நகரம் கண்டிபிடிக்கப்பட்ட போது வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் மொத்த அளவு 53.000-மைல்கள். இதில் இராஜஸ்தானிலுள்ள ´கலிபங்கன்´ என்னும் இடத்திலும், குஜராத்திலுள்ள லோதால் என்னும் இடத்திலும் வாழ்ந்த பண்டைய மக்களை ஆராய்ச்சியாளர்கள் ´திராவிடர்கள்´ என்று குறிப்பிட்டிருக்கின்றனர். ´மொகஞ்சதாரோ´ கால மக்களை திராவிடர்கள் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட என்ன காரணம்?[3]

“ஆரியர்- திராவிடர் உண்மை” என்ற நூலில் திராவிடர்கள் என்பதற்கான ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியதை பெரியார் தொகுத்திருக்கிறார்.[4]

அம்பேத்கர் ´ஆரியர் திராவிடர்´ குறித்து பல நூல்களை ஆதாரங்களுடன் எழுதியிருக்கிறார்.

ஆனால் சீமானோ, “நான் தமிழனா? திராவிடனா? என்பதை நான்தான் தீர்மானிக்க வேண்டும்” என்கிறார்.

இதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது.

ஆனால், திராவிடன் என்ற இனத்தை இல்லாத திராவிடமாகவோ, திராவகமாகவோ அறிவிக்க என்ன ஆதாரம் இருக்கிறது சீமானிடம் என்கின்ற கேள்வியை எழுப்பும் கடமை எமக்கிருக்கிறது.

வரலாறு தெரியாமல் பேசும் சீமானின் குழப்பவாதங்களுக்கு திராவிடமும், பெரியாரியமும் கேலிக்குரியதாக ஆக எம்மால் அனுமதிக்க முடியாது.

எப்போது ஒரு கருத்து குறித்து விமர்சிக்க முற்படுகின்றோமோ அவை குறித்து விரிவான விளக்கங்களையும் கொடுப்பதுதான் பண்பாளனின் நடத்தைக்கு அழகு.

நினைத்தால் “நான் திராவிடன் என்பதும், மற்றொரு முறை எவன் திராவிடன்? எங்கே இருக்கிறது திராவிடம்?” என்பதும், “சாதி ஒழிய வேண்டும்” என்பதும், “சாதியை மறந்து தமிழர்களாய் ஒன்றுபடுங்கள்” என்பதுமாக சகிக்க முடியாத வசனங்களுடன் தொடர்ச்சியான கருத்துத் தடுமாற்றங்களுடன் நிதானம் இல்லாமல் உளற ஆரம்பித்திருக்கிறார் தம்பி சீமான்.

கடைசியாக கனடா நாட்டிற்கு மாவீரர் தினத்தில் கலந்து கொள்ள சென்றிருந்த போது பேசிய வசனங்களில் விசாரணைக்கு கனடா நாட்டு போலீசாரால் உட்படுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற…

“சனியன் தலைவார ஆரம்பித்தால் சடை போட்டு பொட்டும், பூவும் வைக்காமல் போகாது” என்பது போல….

தமிழ்நாட்டுக்கு வந்த கையோடு, “என்னை கனடாவில் விலங்கு போட்டு கைது செய்து நாடு கடத்தினர் என அடுக்கடுக்காக பொய்யுரை பரப்பி அரசியல் நடத்த முயலும் சீமானுக்கு…

பெரியாரை விமர்சிக்க யோக்கியதை இருக்கிறதா? ஏற்கனவோ நாம் கனடா கைது குறித்து சீமானின் மோசடியை ஆடியோ கேசட் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி இருந்தோம்.[5][காண்க: 2:03 நொடியில் இவ்வாசகம் ஆடியோவில் வருகிறது]

இனி ´திராவிடம்´ குறித்து தம்பி சீமான் பேசுவதற்கு முன் வரலாறு குறித்து யோசிப்பாரா?

2

அண்மையில் பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு சீமான் மாலை போட்டதும், அது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, “அந்த மக்களுக்காகப் போராடிய முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள்”” என அபத்தமான வாதத்தை முன்வைத்ததும் நாம் மறந்துவிட முடியாது. தற்போது மேலும் ஓர் அபத்தமான வாதத்தை வைத்திருக்கிறார்.

“குற்றப்பரம்பரைச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கப் போராடியவரை போராளி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?” என்னும் கேள்வியை சமீபத்தில் கீற்று இணையதளத்தில் வைத்திருக்கிறார் தம்பி சீமான்.

பிழைப்புவாத அரசியல்போக்கு இப்படித்தான் திமிரான போக்குடன் வெளிப்படும்.

இதே இணையத்தளத்தில் தான் [கீற்று] முன்பு பசும்பொன் முத்துராமலிங்கம் குறித்து விமர்சனம் வைத்தபோது சீமான்….

“தம்பி திரைப்படத்தில் முத்துராமலிங்கம் படத்தை நான் பயன்படுத்தியது முழுக்க முழுக்க அறியாமல் நடந்த பிழைதான் என்று கூழைக்கும்பிடு போட்டார்.[6]

இப்போதோ முத்துராமலிங்கத்தை ஏன் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்கிறார்.

இதற்காக மீண்டும் அறியாமல் செய்த பிழையென ´வசனம்´ பேசமாட்டார் என நம்புகிறோம்.

1957-சூலை, 10-அன்று திருப்புவனம் புதூரில் முத்துராமலிங்கம் பேசும்போது ‘காங்கிரசாரின் அராஜகம் எல்லை மீறிவிட்டது; காஷ்மீருக்குப் பதிலாக முதுகுளத்தூரில் இருந்துதான் மூன்றாம் உலகப் போரைத் தொடங்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்.

காரணம் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராசருடன் முரண்பாடுகள் இருந்தது.

முத்துராமலிங்கத்தின் வார்த்தைகள் எப்போதும் வன்முறையை தூண்டி சாதிச் சண்டையை உருவாக்கும் போக்காகவே இருந்திருக்கிறது என்பதற்கு இவை போன்ற வசனங்களே இன்றைய தலைமுறையினருக்கு சாட்சியாக இருக்கிறது.

இவைப்போன்ற ´சுயசாதி வன்முறையாளர்´கள் தான் போராளிகளா?

முதுகுளத்தூர் கலவரத்தின் வரலாறு தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும் முத்துராமலிங்கத்தை ஒரு மனிதராக கூட கருதமாட்டார்கள் என்பதே நிதர்சனமாக இருக்கும் போது ஏன் போராளியாக பார்க்க வேண்டும் என்கிறார் சீமான்.

தேவரை போராளியாக பார்க்க வேண்டிய அவசியம் நமக்கெதற்கு? நாம் என்ன ஓட்டுப்பொறுக்கிகளா? ஓட்டு போடுகிறவர்களா?

ஜே.ஜீவபாரதி என்பவர் பல ஆதாரங்களுடன் எழுதிய நூல்களான,

-தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர்,
-பசும்பொன் தேவரின் கட்டுரைகள்,
-சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர்,
-பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும்,
-பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்,
-சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு,

போன்ற நூல்களில் ஆதாரங்களுடன் முத்துராமலிங்கத்தின் ஜாதிவெறி உணர்வை அம்பலப்படுத்தி இருக்கிறார். அவற்றை படித்தால் முத்துராமலிங்கம் போராளியா? ஜாதி வெறியரா? என்பதை நாம் உணர முடியும்.

யார் இந்த தினகரன்?

முஷ்டக் குறிச்சி கிராமத்தில் தேவர் சமுகத்தைச் சேர்ந்த தினகரன் அன்னியத் துணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு அய்ந்து ஆண்டுகள் சிறை தண்டனை அடைந்தவர். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி இருக்கும் தினகரன் தன் பெயரில் ´தினகரன் நாளிதழை´ உருவாக்கி சமூக – அரசியல் விமர்சனங்களை எழுதியவர். அவர் சொல்கிறார்:

“கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும், நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்”

இந்த அறிவிப்பை 1957-இல் இமானுவேல் படுகொலை செய்யப்பட்ட பிறகும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சாதிப்போரில் ஏற்பட்ட பல உயிர் இழப்புக்களுக்கு பிறகு 1958-இல் ´முதுகுளத்தூர் கலவரம்´ என்னும் சிறு நூலை தினகரன் பல ஆதாரங்களுடன் எழுதினார்.

தம் சாதியைச் சேர்ந்தவர்களை முத்துராமலிங்கம் வன்முறையில் ஈடுபடுத்துவதும், ஆதிக்க உணர்வோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தினருடன் பகைமையோடு இருப்பதும், அவர்கள் மீது வன்முறையையும், அடக்குமுறையையும் கையாண்டதைக் கண்டு மனம் வெதும்பி கூறினார் தினகரன்.

´தினகரன் நாளிதழில்´ முதுகுளத்தூர் கலவரம் குறித்து தினகரன் எழுதிய தொடர்ச்சியான கட்டுரைகளுடன் முத்துராமலிங்கத்தை கிண்டல் செய்தும், கேலி சித்திரத்துடன் வந்துக் கொண்டிருந்த கட்டுரைகளைக் கண்டு தேவர் சமூகம் கொதிப்படைந்தது.

நம் சாதியைச் சேர்ந்த ஒருவன் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசுவதோடு அல்லாமல் தேவரை கேலி செய்வதா? என ஆத்திரங்கொண்டு, தினகரனை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தது.

இச்சம்பவம் 1958-இல் நடந்தது.

முதுகுளத்தூர் கலவரம் நூலில் தினகரன், முத்துராமலிங்கம் குறித்து கூறிய சம்பவங்களில் சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

*முஸ்லிம் வீடுகளை தேவர்கள் தாக்கிய வழக்கில் தீர்ப்பு நகல் தனக்கு தரப்படாததால், முதுகுளத்தூர் சப் மாஜிஸ்திரேட் பிரம்மநாயகம் (பிள்ளை)யை படுகொலை செய்தார்.

*1928-இல் இருந்து அரசுக்கு வரி செலுத்தாததால், தான் அபகரித்த நிலத்தை ஏலம் விட்டதற்காக கமுதி உதவி தாசில்தார் சிதம்பர (முதலியார்) காலை வெட்டினார்.

*1937-இல் நடந்த தேர்தலில் ராமநாதபுரம் ராஜாவுக்கு தேர்தல் வேலை செய்ததற்காக கமுதி உதவி தாசில்தார் நாகராஜய்யரை தாக்கினார்.

மேலும் முத்துராமலிங்கம் தன் சாதி மக்களை பகுத்தறிவு சிந்தனையை நோக்கி கொண்டு செல்லாமல் வெட்டு, குத்து, கொலை, வன்முறை கொண்டு அடக்கு. அதுவே நமக்கு தீர்வு என பெரும்பான்மையான கல்வி அறிவு அற்ற சமூகத்தை தன் தேவைக்கேற்றபடி ஆட்டுவிக்கும் போக்கைக்கண்டு முத்துராமலிங்கம் மீது கண்டங்களை வைக்கிறார் தினகரன்.

3

முதுகுளத்தூர் கலவரம் ஏற்படக் காரணம் என்ன?

தினகரன் எழுதிய நூலில் இருந்து ஆதாரங்களுடன் சில சம்பவங்களை பாருங்கள்:

´காடமங்குளம்´ என்னும் இடத்தைச் சேர்ந்த ஒன்பது தாழ்த்தப்பட்டவர்கள் ஒரே இரவில் காணவில்லை என்பதும், அவர்கள் தேவர் இனத்தை சேர்ந்தவர்களால் தூக்கிச் செல்லப்பட்டு பத்ரகாளிக்கு பலி கொடுக்கப்பட்டதாக தொடங்குகிறது சம்பவங்கள்.

1957-இல் தாழ்த்தப்பட்ட மக்கள் பலிகொடுக்கப்பட்ட சம்பவம் தமிழக சட்டமன்றத்தில் பரபரப்பாக பேசப்பட வைத்தவர் இமானுவேல்.

நாயைக் காணோம், ஆட்டைக் காணோம், மாட்டைக் காணோம் என்பது போல் முத்துராமலிங்கத்திற்க்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் பேசினால் காணாமல் போய் கொண்டிருந்தார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களும் என்ன செய்வதென்று தெரியாமல் முத்துராமலிங்கத்தின் அராஜகத்திற்கு பொறுத்துக் கொண்டும், அனுசரித்துக் கொண்டும் இருந்த காலம்.[7][8]

கிட்டத்தட்ட 1925-இல் இருந்து 30-வருடங்களாக முத்துராமலிங்கத்திற்க்கு எதிராக ஒரு குரல் கூட கொடுத்திராத காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இமானுவேல் 1953-ஆம் ஆண்டில், “ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின்” தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954-ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களை நடத்தியதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்குள் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது. நமக்கும் ஒரு தலைவன் இருக்கிறான் என்னும் போக்கு தங்கள் மீது அநீதி நடக்கும் போதெல்லாம் தட்டி கேட்க வைத்தது.

´காடமங்குளம்´ சம்பவமும் அப்படித்தான் இமானுவேலால் தட்டி கேட்கப்பட்டது. எம் இன மக்களில் ஒரே இரவில் 9-பேர்களை காணவில்லை. தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் தூக்கிச் சென்றார்கள் என்பதற்கு சாட்சிகள் உள்ளன. விசாரணை நடத்துங்கள்! என்று ராமநாதபுரம் ஆட்சித் தலைவரிடம் முறையிடு செய்கிறார்.

பஞ்சாயத்தில் பொதுமக்கள் முண்ணனியில் குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டு முத்துராமலிங்கம் விசாரிக்கப்பட்டு அவரிடம் கையெழுத்து வாங்கப்படுகிறது.

பலநூறு ஆண்டுகளாக தங்களுக்கு அடிமை வேலைகளை செய்துக் கொண்டு தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த சமூகம் இன்று தங்கள் சமூகத்திற்கு எதிராக விசாரணைக்கு கொண்டு சென்று முத்துராமலிங்கத்தை குற்றவாளியாக நிற்க வைத்திருக்கிறதே என தேவர் சமூகம் கொதிக்கிறது.

இச்சம்பவம் நடந்து மறுநாள் 1957-செப்டம்பர் 11-இரவு ஒன்பதரை மணிக்கு பரமக்குடி பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இமானுவேல் படுகொலை செய்யப்படுகிறார். அப்போது இமானுவேல் வயது 33.

இச்சம்பவம் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தேவர் சமூகத்திற்கும் பெரும் மோதலை உருவாக்க காரணமாகியது.

முதுகுளத்தூர் கலவரம் குறித்து விடுதலை நாளேட்டில் (8.10.1957) விரிவாக கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பெரியாரும் காங்கிரசும் இருந்தது. காமராசரிடம் முத்துராமலிங்கம் கைது செய்ய வேண்டும் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.[9][10][11][12][13]

இப்படி தாழ்த்தப்பட்டவர்களிடம் சர்வாதிகாரியாக இருந்தவர் எப்படி போராளியாக இருக்கக்கூடும்?

சீமான் சொல்கிறார், “குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கப் போராடிய முத்துராமலிங்கம் ஏன் போராளியாக இருக்கக்கூடாது” என்று.

குற்றப்பரம்பரை சட்டம் நீக்கப்பாடுபட்ட முத்துராமலிங்கம் தம் இன உயர்வுக்கு மட்டுமே அச்சட்டத்தை உபயோகப்படுத்த முற்பட்டார். தாழ்த்தப்பட்ட மக்களிடம் தொடர்சியான ஆதிக்க மனோபாவத்துடனே இருந்திருக்கிறார் என்பதற்கு முதுகுளத்தூர் கலவரம் சாட்சி. அவரை எதிர்ப்பவர்களுக்கெல்லாம் என்ன நடக்கும் என்பதற்கு தினகரன் படுகொலை சாட்சி!

இப்போது சொல்லச் சொல்லுங்கள் சீமானை….

குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்கிய முத்துராமலிங்கம் போராளி என்றால் 1953-ஆம் ஆண்டில் ஒடுக்கப்பட்டோர் இயக்கத்தின் தலைவராக இருந்து இராமநாதபுரத்தில் “ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு” நடத்தியதும், 1954- ஆம் ஆண்டில் முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறையை எதிர்த்து போராட்டங்களை நடத்தியதும் தம் இன மக்களின் விடுதலைக்கும், உரிமைக்கும் போராடிய இளைஞன் இமானுவேல் முழு நேர சமூகப் போராளியாக பாடுபட்ட போராளி இல்லையா?

சீமான், இமானுவேல் கல்லறைக்கும் மாலை போட்டு மரியாதை செய்கிறோம். முத்துராமலிங்கம் சிலைக்கும் மாலை போட்டு மரியாதை செய்கிறோம் என்கிறார். ஆனால் ஏன் முத்துராமலிங்கம் மட்டும் போராளி என்கிறார்? முத்துராமலிங்கம் போல் இமானுவேலும் போராளியே என்று சொல்ல வேண்டியது தானே!

சமீபத்தில் தோழர் கொளத்தூர் மணி இமானுவேல் சேகரனைக் கொன்ற “குற்றவாளிகளை கைது செய்து சிறையில் வைக்கவில்லையென்றால் நான் நேரடியாக போராட தெருவில் இறங்குவேன்” என்று அறிவிப்பு செய்திருக்கிறார்.[14]

இதை சீமான் ஆதரிப்பாரா?

அதேபோல் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தையும் பெ.தி.க நடத்த இருக்கிறது. தமிழின அமைப்புகள் ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத்தோடு இணைந்து போராடின. ஆனால் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளரை எதிர்த்து பெரியார் திக போராடியபோது தமிழின அமைப்புகள் ஒன்றுகூட ஆதரவு தரவில்லையே ஏன்?

அந்த நிலைப்பாட்டை தான் சீமானும் எடுப்பார் என்றால் சாட்சாத் சீமான் ஓட்டுப்பொறுக்கியே என்பதில் சந்தேகம் இல்லை.

“முற்போக்குவாதிகள் என்று சொல்பவர்கள் காலகாலத்திற்கும் சாதிரீதியிலான பகையை வளர்க்க விரும்பும் பிற்போக்குவாதிகளா என்று இப்போராட்டத்தைக் குறித்து கேள்வி எழுப்புவாரா சீமான்?

கடைசியாக ஒன்று….

சிறைக்கு செல்லும் முன் பெ.தி.க அமைப்பு மேடைகளில் தன்னை பகுத்தறிவாதியாகவும், பெரியாரின் பேரனாகவும், நான் இனத்தால் திராவிடன் என்ற அடையாளத்துடனும், அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும், சாதிகள் ஒழிய வேண்டும், சமத்துவம் பெருக வேண்டும் என்றும், வசனம் பேசிக் கொண்டிருந்த சீமான் சிறையில் இருந்து வெளிவந்த பின் ஞானம் வந்து தன்னுடைய அமைப்பை அரசியல் கட்சியாக அறிவிக்கிறார். தன்னை திராவிடன் இல்லை என்கிறார். சாதிகளை வைத்துக் கொண்டு இன்னும் மாரடிக்க வேண்டுமா? அதை பேசாமல் இருந்தால் தானாக ஒழிந்துவிடுமென்கிறார். ஜாதி அரசியலுக்குள் நுழைகிறார், பெரியாரை விமர்சிக்கிறார், திராவிடத்தால் என்ன கிழித்தோம் என்கிறார்.

சீமான் ஓர் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பெரியார் இறுதியாக நடத்திய நிகழ்வின் பெயர்

“தமிழர் சமூதாய இழிவு ஒழிப்பு மாநாடு” 08-12-1973-ல் சென்னை பெரியார் திடலில் நடத்தியது.

தமிழர் சமூதாய இழிவில் முக்கியமான சாதியை தவீர்த்து தமிழ் தேசியம் பேசுவது என்பது தமிழர் நலன் சார்புடையவை இல்லை. சந்தர்ப்பவாதிகளின் அரசியல் ஓட்டுபொறுக்கிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு களமாகத்தான் இருக்க முடியும்.

அதுவும் தேவர் ஜெயந்தி அன்று ஜெவில் இருந்து கருணாநிதி வரை தமிழக அரசியல்வாதிகள் மொத்தமும் தேவருக்கு மாலைப்போடுவது தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய தேவர் சாதிகளின் ஓட்டுக்களை பொறுக்க நடக்கும் போட்டியே என்பது அனுபவமுள்ளவர்கள் அறியும் செய்தியே.

இந்த ஓட்டுப் பொறுக்கிகளுக்கு தான் சமுகப்போராளியான பெரியாரை விமர்சிக்க யோக்கியதை இல்லை என்கிறோம்.

1945-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் நாள் ´குடிஅரசு´ இதழில் கருப்புச்சட்டைப் படை அமைப்பு என்பதற்காக ஓர் அறிவிப்பை பெரியார் வெளியிட்டார். அப்போது கருப்புச்சட்டைப் படையின் முதல் தொண்டராக கலைஞர் தன்னைப் பதிவு செய்து கொண்டார். ஆனால் கருப்புச்சட்டை இன்று மஞ்சள் துண்டாகி போனது வேறு சங்கதியாக இருந்தாலும் அந்த கலைஞருக்கே பெரியாரை விமர்சிக்கும் தகுதி இல்லையென்கிறோம்.

இன்றைக்கு வந்த பிஸ்கோத்து எல்லாம் பெரியாரை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்று நாம் கேட்கவில்லை. பெரியாரை விமர்சிக்கலாம். ஆனால் பெரியாரின் வரலாற்றை முழுவதுமாக தெரிந்துக் கொண்டு புரட்டுத்தனம் பண்ணாமல் விமர்சனம் செய்யுங்கள் என்றுதான் கோருகிறோம்.

திராவிடத்தை மட்டும் பேசிவிட்டு செல்லவில்லை பெரியார். தமிழர்களுக்காக நடத்திய போராட்டங்களை ஒருமுறை வாசித்துவிட்டு உங்கள் கேள்விகளை எழுப்புங்கள்.

சீமான் உள்ளிட்ட ‘முற்போக்கு’ நரிகளின் தேவர் சாதிவெறி


தமிழ்த் தேசியம், தமிழீழம், பெரியார் கொள்கை பற்றி எல்லாம் மேடைதோறும் முழங்குபவர்களும் சரி, தமிழகத்தில் “முற்போக்கு சக்திகள்’எனத் தம்மைக் கருதிக் கொள்வோரும் சரி, உள்ளூர சாதிவெறி புழுத்து நாறுபவர்களாகத்தான் இருக்கிறார்கள். அதிர்ச்சியூட்டும் இந்த உண்மைகள், அண்மைக்காலத்தில் ஒவ்வொன்றாக அம்பலமாகத் தொடங்கியுள்ளன.

மேடை தோறும் ஈழம், பிரபாகரன், தமிழ்த் தேசியம் பற்றி உணர்ச்சி பொங்கப் பேசியும், தன்னைப் பெரியாரின் பேரன் என்று முழங்கியும் வந்த திரைப்பட இயக்குநர் சீமான், பிரபாகரன் படம் பொறித்த சட்டையணிந்து வந்து தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு தன் சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். சீமானின் தேவர் சாதிப் பற்றை பெரியார் தி.க. ஆதரவு இணையதளம் மட்டும் விமர்சித்துள்ளது. இதுவரை “தம்பி’சீமானை சீராட்டிவந்த மற்ற ஈழ ஆதரவு சக்திகளோ, இப்போது அவரைக் கண்டுகொள்ளாது கைகழுவி விட்டுவிட்டன. இவர், ஏற்கெனவே தனது “தம்பி’ திரைப்படத்தில் தேவர் புகைப்படத்தை இடம்பெறச் செய்தபோதே விமர்சிக்கப்பட்டார். அதனைத் தவறென ஒத்துக் கொண்ட சீமான், இப்போது தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டதை, “இம்மானுவேல் சேகரனுக்கும் மாலை போட்டதை”க் குறிப்பிட்டு நியாயப்படுத்தியுள்ளார். அதாவது, சாதி ஒடுக்குமுறையாளருக்கும் ஒடுக்கப்பட்டவருக்கும் ஒரே மரியாதை. இதுதான், இந்தப் “பெரியாரின் பேரனது’சாதி ஒழிப்பு சமத்துவம்!

இதே பித்தலாட்டத்தைத்தான் புரட்சி பேசும் சி.பி.எம். கட்சியும் செய்திருக்கிறது. சி.பி.எம்-மின் “தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உத்தப்புரத்தில் போராடுகிறது. அதே கட்சியின் பொதுச் செயலர் என்.வரதராசன், அறுவை சிகிச்சை முடித்து கறுப்புக் கண்ணாடி அணிந்தவாறே, சாதி ஒடுக்குமுறையின் சின்னமான தேவர் சிலைக்கு ஓடோடிப் போய் மாலை போட்டு மரியாதை செய்தார்.

சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியை ஒட்டி, சாதிவெறியாட்டம் ஆடிய சட்டக் கல்லூரியின் ஆதிக்க சாதி மாணவர்கள், தாழ்த்தப்பட்டோரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை, சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், “ஒரு மாணவனைப் போய் இந்த அடி அடித்தார்களே’ என்று சுயசாதிவெறியோடு ஒரு வருடமாக பேசியும் எழுதியும் வந்த வலது கம்யூனிஸ்டு கட்சியின் தா.பாண்டியன், தன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான லிங்கத்தை பசும்பொன்னுக்கே அனுப்பிவைத்து தேவருக்கு மரியாதை செய்தார். முதலாளிகளின் சீட்டாட்டக் கிளப்பான “லயன்ஸ் கிளப்”பில் முத்துராமலிங்கம் என்ற சொந்த சாதிக்காரர் இருப்பதால், அந்த கிளப்பின் விழாவை தா.பாண்டியன் வாழ்த்தும் விளம்பரம் “ஜனசக்தி”யில் வெளிவந்துள்ளது. தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ஜனசக்தி ஆசிரியர் தா.பாண்டியனோ, முக்குலத்தோர் சாதிகளில் ஒன்றான அகமுடையார் சங்க கல்வி அறக்கட்டளை விழாவில் கலந்துகொண்டு “அதில் என்ன தவறு?”என நியாயப்படுத்துபவர்.

“முதுகுளத்தூர் சாதிக் கலவரத்தை நிறுத்தவேண்டுமானால், முத்துராமலிங்கத்தைப் பிடித்துச் சிறைக்குள் தள்ள வேண்டும்”எனக் கோரியவர் பெரியார். அவர் ஆரம்பித்த தி.க.வின் “விடுதலை’”பத்திரிக்கையோ, வழக்கம்போல இந்த ஆண்டும் “தேவர் ஜெயந்தி’விழாவிற்கு விளம்பரம் வாங்கிப் பிரசுரித்துக் கொண்டது. சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடும் வீரமணி கும்பலின் பித்தலாட்டம், தேவர் ஜெயந்தியோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. திராவிடர் கழகத்தின் தென்மாவட்டப் பிரச்சாரக் குழுத் தலைவராக இருக்கும் தே.எடிசன் ராஜா, நாடார் சங்கத்திலும் செயல்படுகிறார். மும்பையில் நாடார் சங்கம் நடத்தும் காமராசர் நினைவுப் பள்ளி விழாவில் எடிசன் ராஜாவுக்கு “நாடார்”வால் முளைத்து, “எடிசன் ராஜா நாடார்’ஆக மாறினார். பாரம்பரியமான திராவிட இயக்கக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தி.க.வின் தகவல் தொடர்பு செயலாளருமான வழக்கறிஞர் அருள்மொழியின் தாயார் சரசுவதி சென்ற ஆண்டு மறைந்தபோது, “இந்து” நாளேட்டில் தந்திருந்த அஞ்சலி விளம்பரத்திலும் தனது “உடையார்”சாதி அடையாளத்தைத் தெளிவாகவே காட்டியிருந்தார்.

தேவர் சாதியைச் சேர்ந்த திரைப்பட பிரபலங்கள், தங்கள் சாதி விழாக்களில் அண்மைக்காலமாகக் கலந்துகொண்டு சாதி வளர்க்கின்றனர். இவர்களில் செந்தில், மனோரமா, விவேக் வரிசையில் இப்போது தி.மு.க.வைச் சேர்ந்த திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்துவும் இணைந்துவிட்டார். நகைச்சுவை நடிகர் கருணாஸ், தேவரைப் புகழ்ந்து “முக்குலத்தின் முகவரி”எனும் பாடல்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். இதில் முகவரியை எழுதுவதற்கு வைரமுத்து “திருப்பாச்சி அறுவாளை’’த் தூக்கிக் கொண்டு குதித்திருக்கிறார்.

“ஒடுக்கப்பட்ட மக்களே ஒன்று சேருங்கள்”என்ற கொள்கை முழக்கத்தைக் கொண்டிருக்கும் வே.ஆனைமுத்துவின் மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியோ, “வன்னியர்களே ஒன்றுசேருங்கள்”என்று சொல்லவில்லையே தவிர, வன்னியகுல சத்திரிய “சமூகநீதி’யைத் தாண்டி வரவே இல்லை.

“அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொள்ள’ச் சொல்லி சி.பி.எம். கட்சிக்கு “பாடம் நடத்தும்”தலித் முரசில், “இந்து ஆதிதிராவிட மணமகனுக்கு அதே உள்பிரிவில் மணமகள் தேவை”என விளம்பரம் வருகிறது. சாதி காக்கும் இச்செயல் ஒவ்வோர் இதழிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“சாதியை மறந்து தமிழர்களாக நாம் ஒன்றுபட வேண்டும்”என கருணாநிதி பேசுகிறார். ஆனால், அவரின் மகள் கனிமொழியோ, திருப்பூர்-மல்லம்பாளையம் நாடார் சங்கக் கல்வி நிறுவன விழாவிற்கு நாடார் சாதி தி.மு.க. அரசியல்வாதிகளான சற்குணபாண்டியன், கீதாஜீவன், பூங்கோதை போன்றவர்களுடன் கலந்து கொண்டு “நாடார்களாக ஒன்றுபடுகிறார்’.

பெரியாரின் கொள்கைகளைத் தங்கள் கொள்கையாகக் கருதுவோரும், தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்கக் களம் கண்டிருப்பவர்களும், சாதி ஒழிப்பிற்குப் பிறகுதான் சோசலிசம் எனத் தலித்தியம் பேசுபவர்களும், தாங்கள் கொண்டிருக்கும் இலட்சியத்திற்குக் கூட விசுவாசமாக இல்லாமல் சாதி உணர்வாளர்களாகவோ, வெறியர்களாகவோதான் இருக்கிறார்கள். தங்களின் தோலைக் கீறி சாதி இரத்தம் ஓடுவதை அவர்களாகவே ஒவ்வோர் நிகழ்விலும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியும் விடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை சாதி எனும் நுகத்தடி அழுத்திக் கொண்டிருக்கிறது. மனிதநீதிக்கு எதிரான சாதி ஆதிக்கவெறியை அழிப்பதற்கு, மாபெரும் சமூகப் புரட்சியே தேவைப்படுகிறது. அப்புரட்சி, சாதி வெறியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, முற்போக்கு வேடம் போடும் இத்தகைய களைகளுக்கும் எதிரானதுதான். இத்தகைய சுயசாதி மோகம் கொண்டோர்களையும், சாதியத்தைப் பாதுகாத்துவரும் ஓட்டுப் பொறுக்கிகளையும் களைந்தெறியாமல் சாதிவெறிக்கெதிரான போராட்டத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது

இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பார்ப்பன – பனியா சக்திகள்!


இந்தியாவின் ஆட்சி அதிகாரம் – பார்ப்பன-பனியாகளிடமே இன்னும் தங்கியுள்ளது. இந்திய தேசியம் என்பது பார்ப்பன-பனியாக்களுக்கானதே என்று பெரியார் உரத்து முழங்கினார். அதன் காரணமாகவே 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நாட்டுக்கு ‘சுதந்திரம்’ வந்து விட்டது என்று அறிவித்தபோது, பெரியார் ஏற்க மறுத்தார். அதை துக்க நாள் என்றார். பார்ப்பனர் பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டாவிட்டால் எதிர்கால ஜனநாயகம் பார்ப்பனர் நாயகமாகவே இருக்கும் என்று இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தார். பெரியார் தந்த எச்சரிக்கை மறுக்கப்பட முடியாத உண்மை என்பதையே வரலாறுகள் உறுதிப்படுத்தி வருகின்றன.

நாட்டின் முக்கிய நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் முழுமையான அதிகாரம் படைத்த தலைவர்களாக, பார்ப்பனரும்-பனியாக்களுமே இருந்து வருகிறார்கள். அது பற்றிய சில தகவல்கள். நிறுவனங்களும், அதன் தலைவர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. பார்த்தி ஏர்டெல் நிறுவனம் – சுனில் மிட்டல் (தலைவர்-பனியா)
2. கிரேசியம் அண்டு ஹிண்டால் கோ – குமார் மங்கலம் பிர்லா (பனியா)
3. எச்.டி.எப்.சி. – தீபக் பரேக் (பனியா)
4. இந்துஸ்தான் யூனிலீவர் – நித்தின் பரான்ஜிபே (பார்ப்பனர்)
5. அய்.சி.அய்.சி.அய். வங்கி – கே.வி. காமத் (பார்ப்பனர்)
6. ஜெய் பிரகாஷ் அசோசியேட் – யோகேஷ் கவுர் (பார்ப்பனர்)
7. எல் அண்ட் டி – ஏ.எம்.நாய்க் (பார்ப்பனர்)
8. என்.டி.பி.சி. – ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
9. ஓ.என்.ஜி.சி. – மற்றொரு ஆர்.எஸ். சர்மா (பார்ப்பனர்)
10. ரிலையன்ஸ் குழுமங்கள் – முகேஷ் மற்றும் அனில் அம்பானி (பனியா)

11. ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா – ஓ.பி.பட் (பார்ப்பனர்)
12. ஸ்டெர்லைப் இன்டஸ்ட்ரிஸ் – அனில் அகர்வால் (பனியா)
13. சன்பார்மா – திலிப் சங்வி (பனியா)
14. டாட்டா ஸ்டீல் – பி.முத்துராமன் (பார்ப்பனர்)
15. பஞ்சாப் நேஷனல் பாங்க் – கே.சி. சக்ரபர்த்தி (பார்ப்பனர்)
16. பாங்க் ஆப் பரோடா – எம்.டி. மல்லியா (பார்ப்பனர்)
17. கனரா வங்கி – ஏ.சி. மகாஜன் (பார்ப்பனர்)

18. இன்ஃபோசிஸ் – கிரிஸ். கோபாலகிருஷ்ணன் (பார்ப்பனர்)
19. டி.சி.எஸ். – சுப்பிரமணியன் ராமதுரை (பார்ப்பனர்)

விமானத் துறை

20. கிங் பிஷர் ஏர்லைன்ஸ் – விஜய்மல்லய்யா (பார்ப்பனர்)
21. ஜெட் ஏர்லைன் – நரேஷ் கோயால் (பனியா)

தகவல் தொடர்பு

22. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் – அம்பானி (பனியா)
23. ஏர்டெல் – மிட்டல் (பனியா)
24. வோடாஃபோன் எஸ்சார் – டுயா (பனியா)
25. அய்டியா – பிர்லா (பனியா)
26. ஸ்பைஸ் – மோடி (பனியா)
27. பி.எஸ்.என்.எல். – குல்தீப் கோயால் (பனியா)
28. டாட்டாவின் டி.டி.எம்.எல். – கே.ஏ. சவுக்கார் (பார்ப்பனர்)
29. கிரிக்கெட் அமைப்பு – லலித் மோடி (பனியா)

நாளேடுகள்

30. டைம்ஸ் ஆப் இந்தியா – ஜெயின்
31. இந்துஸ்தான் டைம்ஸ் – பிர்லா (பனியா)
32. தி இந்து – கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் (பார்ப்பனர்)
33. இந்தியன் எக்ஸ்பிரஸ் – கோயங்கா (பனியா)
34. சீ (Zee) டி.வி. – சுபாஷ் சந்திரா கோயல் (பனியா)
35. தைனிச் ஜெக்ரான் (இந்தி நாளேடு) – குப்தா (பனியா)
36. திவ்யா பாஷ்கர் (இந்தி நாளேடு) – அகர்வால் (பனியா)
37. குஜராத் சமாச்சார் (குஜராத்தின் மிகப்பெரும் நாளேடு) – ஷா (ஜெயின்)
38. லோக்மத் – மராத்திய நாளேடு – தார்தா (ஜெயின்)
39. நவபாரத் டைம்ஸ் – கோத்தாரி (ஜெயின்)
40. ராஜஸ்தான் பத்ரிக்கா – கோத்தாரி (ஜெயின்)
41. அமர் உஜ்ஜாலா – மகேஷ்வரி (பனியா) எஃகு உற்பத்தி
42. இந்துஸ்தான் – பிர்லா (பனியா)
43. எஸ்ஸார் (ஸ்டீல் உற்பத்தி) – ரூயா (பனியா)
44. அர்சிலோர் மிட்டல் – லட்சுமி மிட்டல் (பனியா)
45. இஸ்பெட் – மிட்டல் (பனியா)
46. புஷன் ஸ்டீல் – சிங்கால் (பனியா)
47. விசா ஸ்டீல் – அகர்வால் (பனியா)
48. செய்ல் (அரசு நிறுவனம்) – தலைவர் எஸ்.கே. ரூன்த்தா (பனியா)
49. லியாட் ஸ்டீல் – குப்தா (பனியா)

சிமெண்ட் நிறுவனங்கள்

50. அம்புஜா – நியோட்டியா மற்றும் ஷெச்சாரியா (பனியா)
51. டால்மியா சிமெண்ட் – (பனியா)
52. உட்ட்ராடெக் மற்றும் விக்ரம் சிமெண்ட் – பிர்லா (பனியா)
53. ஜெ.கே. சிமெண்ட் – சிங்காரியா (பனியா)

54. இந்துஸ்தான் மோட்டார் – பிர்லா (பனியா)
55. பஜாஜ் ஆட்டோ – (பனியா)

நாட்டில் முதலமைச்சர்களாக பார்ப்பனரல்லாதார் வந்து விட்டார்கள். ஆனால், நாட்டின் பொருளாதாரத்தையும், அதிகாரத்தையும், தகவல் தொடர்பு சாதனங்களையும், பார்ப்பன-பனியாக்களே கட்டுப்படுத்துகிறார்கள். தீண்டப்படாத மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் மக்கள் எண்ணிக்கையில் பெரும் பகுதியாக இருக்கிறார்கள். ஆனால், நாட்டின் அதிகார மய்யத்தில் இவர்களைத் தேடிப் பார்த்தாலும் சிக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் பெரும் பகுதியை ராணுவத்துக்கு செலவழித்து, தேச ஒற்றுமை, தேச பக்தி என்றெல்லாம் பேசிக் கொண்டு, இந்திய தேசியத்தை இறுக்கிப் பிடிக்க நடக்கும் முயற்சிகள் எல்லாம் இந்த பார்ப்பனர் பனியாக்களின் சுரண்டலுக்கு தானா?

தமிழ்நாட்டின் உரிமைகளில் கருநாடகமும், கேரளாவும் குறுக்கிடுவதற்கு காரணம் இந்திய தேசியம் அல்லவா? இந்திய தேசியக் கட்டமைப்பு, தேசிய இனங்களை தங்களுக்குள் அடக்கி வைத்திருப்பதால் தானே ‘தடி எடுத்தவன் தண்டல்காரன்’ என்ற நிலை வந்துவிட்டது? நீதிமன்றத் தீர்ப்புகளையே மதிக்காத கேரளத்தையும், கருநாடகத்தையும், ‘இந்திய தேசியம்’ கண்டித்ததா? தண்டித்ததா? பார்வையாளராக மட்டும் வீற்றிருப்பது ஏன்? சக்தி வாய்ந்த ‘மலையாள அதிகார மய்யத்தை’ உருவாக்கி, ஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்கு திட்டங்களை வகுத்து செயல்பட்டது யார்? இந்திய தேசியப் பார்ப்பன ஆட்சி அல்லவா?

இந்திய தேசியத்தை எதிர்த்து குரல் கொடுக்காமல், பார்ப்பன பனியாக்களின் சுரண்டலுக்கு போர்க் கொடி உயர்த்தாமல், ‘திராவிட’ எதிர்ப்பு என்ற இல்லாத ஒரு கோட்பாட்டை தூக்கி போட்டுக் கொண்டு திராவிட எதிர்ப்பு வீரர்களாக அடையாளப்படுத்துவது உண்மை எதிரிகளான இந்திய தேசியத்தையும் அது வளர்த்துவிடும் சுரண்டல் சக்திகளான பார்ப்பன பனியாக்களைக் காப்பாற்றுவது ஆகி விடாதா? கேரளத்துக்காரனும் கன்னடத்துக்காரனும் இந்திய தேசியப் பாதுகாப்பு இருப்பதால் தானே தமிழர்கள் உரிமையைப் பறிக்கிறான் என்பதை புரிந்து கொள்ள வேண்டாமா? தமிழர்களே, சிந்தியுங்கள்