இதுவும் இந்து மதம்தானா?


‘இந்து மதத்திற்கு வாருங்கள்’ என்று இனிய இஸ்லாமிய சகோதரர்களை அழைத்த சகோதரர் எழில் அவர்களுக்கு எனது இன்னொரு கேள்வி:

இதுவும் இந்து மதம்தானா?

இந்து மதம் எங்கே போகிறது, இருபத்தொராம் நூற்றாண்டில் இப்படியுமொரு கொடுமை, பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு சாமிகூடத் தப்பவில்லை.

சிங்கப்பூர் அரசின் Hindu Endowment Board இன் கீழ் வரும் நான்கு இந்துக் கோயில்களில் மாரியம்மன் கோயிலும் ஒன்றாகும், சிங்கப்பூரின் மிகவும் பழைமையான இந்துக் கோயிலாகிய இந்த மாரியம்மன கோயில் 1819 இல் சேர் ஸ்ரான்போட் றாபிள்ஸ் சிங்கப்பூரை உருவாக்க முன்பே இருந்து வந்துள்ளது.

இந்தக் கோயிலின் பிரதான பூசகராகிய பிராமணர், இந்தக் கோயிலின் முதன்மையான கடவுளாகிய, கருவறையிலுள்ள மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்து விட்டார். அதனால் மாரியம்மனுக்கு பூசை செய்வது பிராமணரல்லாத, பண்டாரங்கள் என அழைக்கப்படும் தமிழர்கள்.

பிரதம பூசகராகிய பிராமணர் மாரியம்மனுக்குப் பூசை செய்ய மறுத்ததன் காரணம் என்னவென்றால், மாரியம்மன் தீண்டப்படாத தமிழர்களாகக் கருதப்படும் பறையர்களின் கடவுள் என்பது தான் அவரது கருத்தாம்.

பிராமணர்களால் உருவாக்கப்பட்ட புராணக் கதைகளின் படி மாரியம்மன் கூடத் தீண்டத்தகாதவராம் எப்படியிருக்கிறது கதை. மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கி, அவருக்குப் பண்டாரங்கள், அதாவது தமிழர்களைக் கொண்டு பூசையைச் செய்வித்துக் கொண்டு, பிராமணர்களால் உயர்சாதிக் கடவுளாகக் கருதப்படும் விக்கிரகங்களுக்கு மட்டும் தான் பிரதம பிராமண அர்ச்சகர் அர்ச்சனை, பூசைகளைச் செய்வாராம்.

இந்தச் செயல் மாரியம்மனை இழிவு படுத்தி, தமிழர்களின் கடவுள் என்ற காரணத்துக்காக அவமதிப்பது மட்டுமல்ல, தமிழர்களை அதாவது சிங்கப்பூர் தமிழர்களை மட்டுமல்ல உலகத் தமிழர்களனைவரும் அவமதிக்கும் செயலாகும் என்பது தான் பிராமணருக்கெதிராக வழக்குத் தொடர்ந்திருக்கும் சிங்கப்பூர்த் தமிழர் M. RAVI, அவர்களின் கருத்தாகும்.

எந்தவொரு உண்மையான இந்துவாவது, இந்துக்கள் பெருமளவில் வேறுமதங்களை நாடி ஒடுகிறார்களே, என்ன காரணமாக இருக்குமென காரணத்தைத் தேடினால், வேறெங்கும் பார்க்க வேண்டாம், இப்படியான பார்ப்பனர்கள் தான் இந்துக்கள், இந்துமதத்தை விட்டு ஓடுவதற்குக் காரணம்

இந்த பிராமண அர்ச்சகர் சிங்கப்பூர் தமிழர்களை அவமதித்தது மட்டுமல்ல, அவருக்குச் சோறு போடும் மாரியம்மனைத் தீண்டத்தகாதவராக்கியது மட்டுமல்ல, சிங்கப்பூர் அரசமைப்பின் படி , அரசாங்க மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தமிழ் கோயிலில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதையும் எதிர்த்து, சிங்கப்பூர் Hindu Endowment Board க்கும் மாரியம்மன் கோயில் சபைக்கும் எதிராக M. RAVI, C/O Messrs L. F. Violet Netto 101 Upper Cross Street #05-45 People’s Park Centre Singapore 058357 அவர்களால் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.