ஞாநியின் பேனாவை பூணூல் தடுக்கிறதோ ?


எழுத்தாளர் ஞாநி அவர்கள் தற்போது புதுக்குடித்தனம் போயிருக்கும் குமுதம் 9.4.2008 இதழில் சுபவீ அவர்களுக்கு ஒரு மடல் எழுதியிருக்கிறார். தமிழர்களை கொன்றுகுவிப்பதை அன்றாட வாழ்க்கை நடைமுறையாகக் கொண்டுள்ள சிங்கள அரசின் ஆதரவில் – ஆலோசனையில் பிரபாகரன் என்ற திரைப்படம் உருவாகி வருவதையும் அதன் தொழில் நுட்பப்பணிக்காக அப்படத்தின் இயக்குநர் துசாரா பெய்ரிஸ் சென்னை பிரசாத் கலைக்கூடத்தில் இருந்தபோது தோழர்கள் சுபவீ, சீமான், வன்னியரசு மற்றும் விடுதலை ச்சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புத்தோழர்களால் தாக்கப்பட்டதையும் அறிவீர்கள். அந்த சிங்களன் தாக்கப்பட்டதற்காகத் தான் இந்த முற்போக்கு ஞாநி அவர்கள் சுபவீ அவர்களுக்கு மடல் எழுதியிருக்கிறார்.

கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டுமாம், இந்த வன்முறைத் தாக்குதல் ஒரு மோசமானமுன்னுதாரணமாம். இந்த வன்முறை இருபுறமும் வெட்டக்கூடிய கூரிய ஆயுதமாம். சிங்களன் அடிபட்டதற்காக துடித்துப்போய் நமக்கு அறிவுரைகளை அள்ளி வீசியுள்ளார்.

கண்ணகி சிலை கடற்கரையில் இருந்து அகற்றப்பட்டபோது அது தொடர்பாக ஞாநி அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று அவரது தீம்தரிகிட இதழில் வெளியானது. அதை முதலில் பாருங்கள்.

…..அன்று இரவு திருவனந்தபுரம் மெயிலில் சென்னை திரும்புகையில், விடியற்காலை சுமார் இரண்டு மணிக்கு பெட்டிக்குள் இருந்த எதிர் வரிசை பெண்ணின் உரத்த குரல் என்னையும் பல சக பயணிகளயும் எழுப்பியது. அந்தப் பெண் பக்கத்து இருக்கையில் படுத்து இருந்த ஆணைக் கடுமையாக சாடிக் கொண்டிருந்தாள். அவன் தன்னை நோக்கிக் கையை நீட்டி சீண்டித் தொல்லை செய்ததை அவள் கண்டித்துக் கொண்டிருந்தாள். சக பயணிகளை தன் உதவிக்கு வரும்படி அந்தப் பெண் அழைக்கக் கூட இல்லை. வந்த உதவியை நிராகரிக்கவும் இல்லை.

முறைகேடாக நடந்து கொண்ட பயணிய நடுவழியில் இறக்கி விட்டுவிடலாம் என்று பெட்டியின் நடத்துநர் சொன்னதை அவள் ஏற்கவில்லை. அவனை உடனே போலீசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று வலியுறுத்தினாள். அப்போது சேலம் ரயிலடியில் வண்டி நின்றது. நடத்துநர் ஓடிச் சென்று ஒரு காவல் துறை துணை ஆய்வாளரை அழைத்து வந்தார். அந்தக் காவலரோ புகாரைப் பதிவு செய்ய வேண்டுமென்றால், இருவரும் அந்த ரயில் நிலைலயத்தில் இறங்க வேண்டும் என்றார். தன் முகவரி, முழு விவரங்களுடன் தான் எழுத்துப் பூர்வமாகப் புகார் கடிதம் தரும்போது, தானும் ஏன் பயணத்தை பாதியில் முறிக்கவேண்டும் என்று அந்தப் பெண் கேட்டதற்கு சரியான பதில் இல்லை. காவலர் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இறங்கிப் போய்விட்டார்.

அந்தப் பெண் நடத்துநரிடமிருந்து தவறு செய்த பயணியின் பெயர் விவரத்தைப் பெற்று புகார் கடிதம் எழுதி நடத்துநரிடம் அளித்தாள். குற்றவாளி 18 வருட சர்வீஸ் உள்ள ராணுவ ‘வீரர்’. (ரயிலில் ராணுவ சிப்பாய்கள் பெண்களிடம் அத்து மீறி இப்படி நடப்பது தனக்குத் தெரிந்தே நான்காவது முறை என்று அந்தப் பெண் தெரிவித்தாள்.) ரயில்வே நிர்வாகத்தின் மூலம் புகாரை ராணுவத் தலைமையகத்துக்கு அனுப்புவதாக நடத்துனர் உறுதியளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மௌனமாக இருந்த குற்றவாளி, வேறு சில பயணிகளின் யோசனையின்பேரில், சட்டென்று அந்தப் பெண்ணின் காலைத் தொட்டு வணங்கி தன்னை எதுவும் செய்துவிடவேண்டாம் என்றான். கோபமடந்த பெண், அருகிலிருந்த ஒரு செருப்பை எடுத்து அவன் தலையில் அடித்தாள். அவனிடம் எந்த சலனமும் இல்லை. கடைசி வர அந்தப் பெண் தன் புகாரைத் திரும்பப் பெறவில்லை. தமிழ்நாட்டில் கண்ணகியைக் காட்டிக் காட்டி நமது பெண்களை மூளைச் சலவை செய்து வந்ததன் விளைவாகத்தான், ரயில்களில், பஸ்களில், பொது இடங்களில் ஏன் வீட்டுக்குள்ளும்தான், எல்லா அவமானங்களையும் சீண்டல்களையும் மௌனமாக சகித்துக் கொள்கிற ‘கல்ச்சர்’ ஏற்பட்டிருக்றது. தனக்கு இழக்கப்படும் அநீதிகளைப் பொறுத்துக் கொண்டு மௌனமாக இருக்க வேண்டும். தன் வீட்டு ஆண்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கு மட்டும் தெருவில் வந்து போராடவேண்டும் என்று பெண்ணுக்கு போதிக்கிற கலாசாரம்தானே கண்ணகி கலாசாரம் ?

கண்ணகி மட்டுமல்ல, சீதையும், நளாயினியும், கண்ணகியின் கற்பு, பண்பாடு பற்றி உருகுகிற இன்றைய அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள் பலரின் முதல் மனைவிகளும் என் தந்தையின் முதல் மனைவியும் கூட அவரவர் செருப்புகளை தம் கணவன்களுக்கெதிராகப் பயன்படுத்தியிருந்தால் அது ஒன்றும் குற்றமாகிவிடாது என்பதுதான் பெரியார் எனக்குக் கற்றுத் தந்த பார்வை.

இப்படி ஒரு மடலை 5.1.2002 நாளிட்டு எழுதி அது தீம்தரிகிட இதழில் வந்துள்ளது.

ஒரு பெண் இரயில் பயணத்தில் தன்னிடம்தவறாக சைகை செய்த ஒரு ஆணை செருப்பால் அடிக்கிறார். அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டபின்பும் செருப்பால் அடிக்கிறார். தன்னிடம் அடிவாங்கியவன் மீது காவல்துறையில் புகாரும் கொடுக்கிறார். ஞாநி அந்தப் பெண்ணைப் பாராட்டுகிறார். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். அந்தப் பெண்ணுக்காக சாட்சிக்கையெழுத்தும் போட்டுள்ளார். நாம் அந்தப் பெண்ணை மனமாரப் பாராட்டுகிறோம். அந்த சம்பவத்தில் ஞானியையும் பாராட்டுகிறோம்.

ஒரு பெண்ணிடம் தவறாக சைகை செய்தவன் அதே பெண்ணிடம் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டபின்னும் செருப்பால் அடிக்கப்படுகிறார். அது ஞானிக்கு நியாயமாம்.

ஆயிரக்கணக்கான தமிழச்சிகளை அவர்களது சகோதரன் முன்னிலையிலேயே, பெற்றோரின் முன்னிலையிலேயே, கணவனின் எதிரிலேயே காட்டுமிருகங்காக மாறி குதறிவிட்டு, மார்பகங்களை அறித் தெறிந்துவிடுவதும், மார்பில் சிறீ என்று குறி பதிவதும், கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவையும் உருத்தெறியாமல் சிதைப்தையும் ஒருவன் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கவேண்டுமாம். இந்த காட்டு மிராண்டிகளைத் திருப்பித்தாக்க, தன் இனத்தைத் தற்காத்துக்கொள்ள மானமுள்ளவன் ஆயுதம் எடுத்தால் அது தவறாம். வன்முறையாம். இந்தத் தற்காப்பு தாக்குதலை வன்முறையாக சித்தரிப்பானாம். நாளை உயிரோடு இருப்போம் என யாருக்கும் உத்திரவாதமில்லாத நாட்டில், அந்த உறுதியை, உத்திரவாதத்தை தமிழனுக்குக் கொடுப்பதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை வன்முறையாளர்களாகச் சித்தரித்து ஒருவன் படம் எடுப்பானாம். அதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க வேண்டுமாம். அந்தப் படத்தை ஓடவிட்டு அதற்கு பதில் கொடுக்கும் விதமாக நாமும் ஒரு படம் எடுத்துத் தான் பதில் சொல்ல வேண்டுமாம்.

ஞாநி அவர்களே தமிழனின் மான உணர்வைக் கேள்விக்குள்ளாக்கி யிருக்கிறீர்கள். உமது குலத்தினர் மாட்டுமூத்திரத்துக்கு தரும் மரியாதையின் அளவுக்காவது நீங்கள் எம் போன்ற தோழர்களின் உணர்வுகளுக்கு, நியாயங்களுக்கு மரியாதை கொடுப்பது அடிப்படை அவசியம். எந்த துணிச்சலில் இப்படி ஒரு கடிதத்தை எழுதுகிறீர்கள்? சுபவீ அவர்களுக்கு ஏன் மடல் எழுதுகிறீர்கள்? சுபவீ என்ற தனிப்பட்ட நபரா அடிக்கச்சென்றார்? கட்சிகளைக் கடந்து, இயக்கங்களைக் கடந்து தமிழர்கள் ஒன்றாகச் சென்று தாக்கியுள்ளனர்.

2006 டிசம்பரில் பெரியார் சிலைக்கு செருப்புமாலை போட்டஉடனே தமிழ்நாடெங்கும் பூணூல் அறுக்கப்பட்டது. பார்ப்பனர் தாக்கப்பட்டனர். அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்ச்செல்வன் வீரமரணமடைந்த சமயத்தில் வாலாட்டிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கோபியில் விரட்டியடிக்கப்பட்டார். இப்போது சிங்களன் தாக்கப்பட்டுள்ளான். ஓகேனக்கல் குடிநீர் திட்ட எதிர்ப்புக்கு கன்னடர்கள் தமிழ்நாட்டு உடைமை களைத் தாக்கியபோது சென்னையில் கன்னடர்களின் உடுப்பிஓட்டல்களும், சங்கீதா ஓட்டல்களும் தாக்கப்படுகின்றன. எந்த இயக்கத்தலைவரும் அறிவிக் காமல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து இயக்கத் தோழர்களும் பதிலடியில் இறங்கியுள்ளனர். தமிழ் நாட்டில் இப்பதானய்யா அடிக்க ஆரம்பிச்சு இருக் கோம். இவ்வளவு நாளா வாங்கிக்கிட்டுத் தான இருந்தோம்.

எமது எதிர்த்தாக்குதல் உங்களுக்கு மோசமான முன்னுதாரணமா? இருந்து விட்டுப் போகட்டும். இந்த நிலை வரவேண்டும் என்பதுதானே எமது நோக்கம். நீங்கள் வேண்டுமானால் ஐ.நா அவையின் அமைதிக்கான விருதையும், உலக அமைத்திக்கான நோபல் விருதையும் வாங்கிக்கொள்ளுங்கள். எமக்கு ரவுடிப் பட்டம் தான் தேவை. காலங்காலமாக அடிவாங்கிய எங்களுக்கு ஏதாவது ஒரு சிறு நியாயமாவது கிடைக்கவேண்டுமென்றால் முதலில் அடி – பதிலடி அப்புறம்தான் பேச்சுவார்த்தை, விவாதம், கருத்துரிமை, கழுதையுரிமை எல்லாம்.

கருத்தைக் கருத்தால் சந்திக்கவும் நாங்கள் தயார்தான். நீங்கள்தான் கருத்துரிமைக் காவலர் ஆச்சே, நீங்கள் நிறுவனராக உள்ள ஒற்றைரீல் இயக்கத்தில் எமக்கு, எமது கருத்துக்களைச் சொல்வதற்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள். நாங்கள் சிங்கள இயக்குநர் பெய்ரீசை அடித்தது சரிதான் என நிரூபிக்கும் வண்ணம் ஒரு ரீலை எடுத்துத் தருகிறோம். நாடெங்கும் ஒளிபரப்புங்கள். செய்வீர்களா? எனது நிறுவனத்தில் அதெல்லாம் செய்யமாட்டேன் என்கிறீர்களா? சரி, உங்களது இணை நிறுவனரான பிரமிட் சாய்மீராவில் பேசிச் சொல்லுங்கள். நீங்கள் விரும்பியபடியே இயக்குநர் சீமான் அவர்களை வைத்து பெய்ரிசை அடித்தது நியாயம் என்பதை விளக்கி திரைப்படம் எடுக்கிறோம். பதிலுக்குக் காத்திருக்கிறோம்.

மேலும், சிங்களனைக் கொல்ல விரும்பினால் வன்னியிலே போய் ஆயுதப் பயிற்சி எடுத்து புலிப்படையில் சேர்ந்து போராடுங்கள், அப்பாவி சிங்களனை அடிக்காதீர்கள் என்கிறார் ஞானி

நிதானமாகத் தான் எழுதுகிறாரா எனத் தெரியவில்லை. ஓரிசாவில் மருத்துவப்பணி செய்து வந்த ஸ்டேன்ஸை உயிரோடு எரித்தார்களே, 1990 இல் ரத யாத்திரை நடத்தி 100க்கும் மேற்பட்ட முஸ்லீம்களைக் கொலை செய்தார்களே, பாபர் மசூதி இடிப்பு கலவத்தில், குஜராத்தில் மோடி நடத்திய கலவரத்தில் முஸ்லீம்களைக் கொன்று குவித்தார்களே, மும்பையில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில் இரயில் குண்டு வைத்தர்களே, அந்த காலிக்கும்பலிடம் – காவிக்கும்பலிடம் போய் இது போன்ற வாதத்தை வைப்பீர்களா? திண்டுக்கல்லில் கஞ்சிக்கு வழியில்லாமல் சாலையில் படுத்துக்கிடந்த முஸ்லீம் பெரியவரை கொலை செய்கிறார்கள், தாராபுரத்தில் மசூதியில் பன்றி வாலைத் தூக்கி எறிகிறார்கள், அந்த அரைடவுசர் கும்பலிடம் போய், இங்கிருக்கும் மதம்மாறியவனை – இந்த நாட்டுக்குச் சொந்த மானவனை ஏன் அடிக்கிறாய்? துணிவிருந்தால் சுதர்ஸன்ஜி தலைமையில் எல்லோரும் பின்லேடனிடம் போய் சண்டை போடுங்கள். அல்கொய்தாவிடம் சண்டை போடுங்கள், ஆப்கானுக்குப் படைஎடுங்கள், குறைந்த பட்சம் இராமகோபாலன் தலைமையில் காஷ்மீருக்குப் போய் சண்டையைத் தொடங்குங்கள் என்று சொல்ல வேண்டியது தானே?

திண்டுக்கல் மாவட்டம் வெள்ளோட்டில், பஞ்சம்பட்டி,கொசவபட்டியில், பெருமாள்கோவில் பட்டியில் பாஸ்கு திருவிழாக்களில் சப்பரம் (தேர்) இழுத்துவரும் கிறிஸ்தவர் களிடம் வெட்டு, குத்துக்குச் செல்லும் ஆஃப் டிராயர் சண்டியர்களிடம் போய், ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னால் மதம் மாறிய உள்ளூர்க்காரனை ஏன் அடிக்கிறீர்கள்। புறப்படுங்கள் ரோம் நகருக்கு, போட்டுத்தள்ளுங்கள் மதம் மாற்றுபவர்களை என கீதாஉபதேசம் செய்யவேண்டியதுதானே? இதுவரை அப்படி எழுதாவிட்டாலும் பரவாயில்லை। இனிமேலாவது அப்படி எழுது வீர்களா? பூணூல் பேனாவைத் தடுக்குமோ?

கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிங்களக் கடற்படை தமிழர்களை, மீனவர்களைத் தாக்குகிறதே, உங்களது ஓ…பக்கங்களில் அந்த சிங்களப் படைகளைக் கண்டித்து, ஏன் அப்பாவி மீனவர்களைக் கொல்கிறீர்கள்? துணிவிருந்தால் இந்திய இராணுவத்துடன் நேரடியாக மோதுங்கள், குறைந்தபட்சம் எங்கள் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமாரிடம் மோதிப்பாருங்கள் என சிங்கள இராணுவத்துக்கு பகிரங்கக் கடிதம் எழுத வேண்டியது தானே? ஏன் எழுதவில்லை?

மலேசியாவில் இரண்டு தமிழர்கள் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட போது அவர்களுக்கு, அந்த ஏழைத் தமிழர்களுக்கு தமிழக அரசு உதவவில்லை என மாவோயிஸ்ட்கள் ரேஞ்சுக்கு தீம்தரிகிட இதழில் எழுதினீர்கள். கார்கில் போர் நடந்தபோது களத்திற்கே சென்று ஆனந்தவிகடனில் கட்டுரை எழுதினீர்கள். இங்கே பக்கத்திலே இராமேஸ்வரத்திலே 25 ஆண்டுகளாக மீனவர்களை கொன்று, சொத்துக்களைக் கொள்ளையடித்துச் செல்கிறதே சிங்களக் கடற்படை. அந்தச் சிங்களக்கடற்படைக் கொலைவெறிக் கூட்டத் தைக் கண்டித்து என்றாவது ஒருநாள் எழுதியது உண்டா? கடலுக்குச் சென்று நிலைமையைப் பார்த்ததுண்டா? காஷ்மீரில் அடிபடுபவன் பண்டிட் பார்ப்பான் – இங்கே அடிபடுபவன் தமிழன்.

சிங்களப்படை ஈழத்திலே தமிழனை அழிப்பதோடு, தமிழ்நாட்டுக் கடல் எல்லைக்குள் தமிழர்களையும் தாக்குகிறது. இலங்கைத் துணைத் தூதர் ஹம்சா தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தமிழ்நாட்டு முன்னாள் அமைச்சர்களைப் பிடித்து தமிழ்நாடு முழுவதும் நாற்பது ஊர்களில் புத்தர்கோவில் என்ற போர்வையில் சிங்களனுக்குக் களம் அமைக்கிறார். பெய்ரிசுகளைப் பிடித்து சிங்கள அரசின் கொள்கை விளக்கத்தை திரைப்படமாக எடுக்கிறார். உங்களைப் போன்ற ஊடகத்துறையில் உள்ள ஞாநிகள் மூலமாக அந்தத் திரைப்படத்திற்கு ஆதரவு திரட்டப்படுகிறது. இதற்கு இந்திய உளவுநிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கிறது. இவ்வளவும் நடக்கும். நாங்கள் வெறும் கருத்துப்போர் நடத்திக்கொண்டிருக்க வேண்டும்! அந்த அக்கப்போரை என்னைப்போன்ற வேலைவெட்டி இல்லாத வன் பார்த்துக்கொள்வான். அதுவும் எங்களுக்குள் உள்ள மாறுபாடுகளுக்குத் தான் கருத்துப் போரெல்லாம். பார்ப்பானிடமும், சிங்களனிடமும் பதிலடிதான் முதலில்.

எங்களுக்குத் தெரியும். யார் பத்திரிக்கையில் எழுதிக்கொண்டிருக்க வேண்டும், யார் வன்னிக்குப் போகவேண்டும், யார் அயோத்தியா மண்டபத்துக்குப் போக வேண்டும், யார் இங்கே இருக்க வேண்டும், யார் இரட்டைக் குவளையை உடைக்க வேண்டும், யார் உடுப்பி ஓட்டலை நொறுக்க வேண்டும், யார் பெய்ரீசை உதைக்க வேண்டும் என்றெல்லாம். எந்தப் பார்ப்பன ஆலோசனை களும் எமக்குத் தேவையில்லை.

ஈழப்பிரச்சனை மட்டுமல்ல, ஒகேனக்கல் சிக்கலில் திரைத்துறையினர் உண்ணா விரதத்தில் இனமுரசு சத்தியராஜ் அவர்கள் பேசியதைக் கூட இமயம் தொலைக்காட்சியில் விமர்சனம் செய்தீர்கள்.

உணர்ச்சியைத் தூண்டும் வகையில், உணர்ச்சிவசப்பட்டு சிலர் பேசினார் கள். கமலஹாசன் தான் பக்குவமாகப் பேசினார்.

என்றீர்கள். பெங்களூரில் பார்ப்பனர்கள் அதிகம் வாழும் மல்லேஸ்வரம் பகுதியில் பார்ப்பனர்களுக்கு அடி விழுந்து மாமிகள் அடித்து விரட்டப்பட்டு தமிழக எல்லை நோக்கி ஓடிவந்திருந்தால் – பம்பாயில் மாதுங்கா பகுதியில் வாழும் பார்ப்பனர்கள் அடித்து விரட்டப்பட்டு தமிழ்நாடு நோக்கி வரவேண்டிய நிலை வந்திருந்தால் கமலஹாசனோ, நீங்களோ பக்குவமாகத் தான் பேசியிருப்பீர்களா? இல்லை இந்திய அரசாங்கம்தான் இப்படி அமைதியாக இருக்குமா? சத்தியராஜ் அப்படி பேசாவிட்டால்தான் அவர்மீது எங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும்.

திண்ணியத்தில், எறையூரில் தலித்துகள் இழிவுபடுத்தப்பட்ட போது சுபவீ அவர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை எனக் கேட்கிறார் ஞானி. ஓரே ஒரு இரட்டை டம்ளர் கடையையாவது சுபவீ தலைமையில் போய் உடைக்க முடியுமா எனவும் கேட்டுள்ளார்.

எதற் கெடுத்தாலும் இரட்டைக்குவளைகள் ஒழிப்பு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி பிரச்னைகளில் என்ன செய்தீர்கள் என்று அனைவரைப் பார்த்தும் கேட்கிறீர்களே? அப்படி இரட்டைக்குவளை ஒழிப்பிற்காக நீங்கள் என்னதான் செய்துவிட்டீர்கள்? ஆனந்த விகடனில் ஓரிரு வரிகள் எழுதினீர்கள். பாராட்டுகிறோம். நீங்கள் அடிக்கடி அனைவருக்கும் செக் வைப்பதாக நினைத்து கேள்விகேட்கும் பிரச்சனைகளான இரட்டைக்குவளை உடைப்பு, கண்டதேவி தேரோட்டம், பாப்பாபட்டி – கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தல் போன்ற தீண்டாமைக் கொடுமைகள் பெரும்பாலானவற்றிலும் அவை தொடர்பான போராட்டங்களில் பங்கேற்ற – போராடிய இயக்கங்களில் பெரியார் திராவிடர் கழகமும் ஒன்று. அரசுக்கும் ஆறுமாத அவகாசம் கொடுத்து ஊர்வலமாகச் சென்று 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டைக் குவளைகளை உடைத்த தோழர்களில் நானும் ஒருவன். அந்தப்போராட்டங் களில் எதிலுமே உங்களை நாங்கள் பார்த்ததில்லையே! பல்வேறு இயக்கங் கள், ஒரே ஒருவர் மட்டுமே இருக்கும் இயக்கங்கள் கூடப் பங்கேற்று இருக் கின்றன. எங்கேயும் உங்களைப் பார்த்ததில்லை. ஆனால் கொரலு மட்டும் அதிகமா இருக்கிறதே! அடுத்தவர்களைப் பார்த்து தீண்டாமை பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பாக முதலில் கண்ணாடி முன் நின்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.

எங்களுக்குத் தெரியும் சுபவீயின் பங்கு என்ன என்று. உங்களை விட அதிகமாக இரட்டைக்குவளை ஒழிப்பிற்கு உளமார்ந்த, மனமார்ந்த கவனம் செலுத்தி உழைப்பைக் கொடுத்தவர்களில் சுபவீரபாண்டியனும் ஒருவர். அவருடன் இணைந்து தொடர்ந்து அவ்வகைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். இரட்டைக்குவளைகளை உடைக்க சுபவீ அவர்கள் தயாரா எனக் கேட்பதிலிருந்தே உங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்பதும் இரட்டைக்குவளை ஒழிப்பு பற்றிப் பேசுவதில் வேறு நோக்கம் இருக்கிறது என்பதும் தெரிகிறது.

தீண்டாமை என்பது இரட்டை டம்ளரில் மட்டுமல்ல. கோவிலிலும் இருக்கிற தல்லவா? இந்து மதத்தில், சாஸ்திரங்களில், பார்ப்பனர்களிடத்தில் ஒட்டு மொத்தமாக இருக்கிறதல்லவா? இவற்றை எல்லாம் ஒழிக்கச் சொல்ல வேண்டியதுதானே?

ஞானி அவர்களே நீங்கள் எப்படிக் கேட்டிருக்க வேண்டுமென்றால், துசாரா பெய்ரீசை தாக்கிய சுபவீ, சாதிவெறிக்கு அடையாளமான பார்ப்பனர்களின் பூணூலை அறுப்பாரா? சங்கர மடத்திற்கு வெடிகுண்டு வைப்பாரா? சங்கராச் சாரியை வெட்டிக் கூறுபோடுவாரா? மனு நீதி நூலை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரிப்பாரா? இராமயணத்தைச் வீட்டு வீட்டுக்குச் கொடுத்து செருப்பால் அடிக்கச் செய்வாரா?

இப்படி எல்லாம் ஒரு நாளும் ஞாநி யாரைப் பார்த்தும் கேட்டதில்லையே ஏன்? இரட்டைக்குவளை உடைப்பு என்ற தீண்டாமையோடு மட்டும் மோதத் சொல்கிறீர்களே, தீண்டாமைகளுக்கு அடிப்படையான சாதியோடும், மதத் தோடும், மதத் தலைர்களோடும், கடவுளோடும் போராடச் சொல்லாதது ஏன்?

எங்களுக்கு இரட்டைக்குவளைகளை உடைக்கவும் தெரியும், கண்டதேவியில் நாட்டார்களை எதிர்த்து தேரிழுக்கவும் தெரியும், எறையூரில் வன்னியர்களுக்கு எதிராக போராடவும் தெரியும், சிதம்பரத்தில் தீட்சிதர்களை எதிர்க்கவும் தெரியும், அனைவரும் ஒன்று சேர்ந்து பெய்ரீசுகளை உதைக்கவும் தெரியும். எல்லா இழிவுகளும் வன்னிக்காட்டுக்குப் போய் போராடினால் தீர்ந்துவிடும் என்ற நிலை வந்தால் அங்கு போய் போராடவும் தெரியும்.

அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் ஏன்?


3.11.1957 அன்று தஞ்சை தனி மாநாட்டில் தலைமை வகித்து பெரியார் அவர்கள் பேசிய முன்னுரை

அன்புமிக்க தோழர்களே! தாய்மார்களே! சென்ற தடவை திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தில் அரசியல் சட்டத்தை எரிப்பது, காந்தி படத்தை எரிப்பது என்பதான பிரச்சனைகள் வந்த போது பெரும்பாலான அங்கத்தினர்கள் இந்த தீர்மானம் மத்திய நிர்வாக கமிட்டியில் செய்வதைவிட இதற்காக ஒரு தனி மாநாடு கூட்டி அதில் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவைப் பெற்று அதன் பின்பு சிறிது நாள் தவணை கொடுத்து பிரசாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவித்தார்கள். அந்த தீர்மானத்தின் கருத்துப்படி எப்போது கூட்டுவது என்று முயற்சி செய்துவந்தோம். டிசம்பரில் வைத்துக் கொள்ளலாம் என்று இரண்டொரு தடவை சொன்னேன். இந்த நிலையில் எனது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் நாட்டில் பல இடங்களில் பலவிதமாக நடத்தினார்கள். தஞ்சையில் எனது பிறந்த நாள் விழாவை சிறிது விசேஷமாக நடத்த வேண்டும் என்று கருதி எனது எடைக்கு எடை வெள்ளி கொடுப்பது என்று முடிவு செய்து அதன்படி விழா நடத்த முயற்சி செய்தார்கள். இந்த விழாவுக்கு பெரும்பாலான மக்கள் வருவார்கள், வருவதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதாக எண்ணிப் பார்க்கிறபோது எல்லா மாவட்டங்களிலிருந்தும் தமிழ்மக்கள் பெருவாரியாக வருவார்கள் என்று தோன்றியது. முன் குறிப்பிட்டு வைத்திருந்த தனிமாநாட்டை இப்போதே வைத்துக் கொண்டால் இரண்டு வித நன்மை அதாவது செலவும் தொந்தரவும் இருக்காது; எல்லோரும் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் ஒருவாய்ப்பு இருக்கும் என்று கருதி விழாவை யொட்டியே தனிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. ரொம்ப நெருக்கத்தில் அதாவது (20.10.57ல் நினைத்து) பத்து நாட்களில் துவக்கப்பட்டது. இருந்தபோதிலும் நாட்டில் உண்டான கிளர்ச்சி உணர்ச்சி இங்கு மக்களை கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இது மிக மிகப் பாராட்டத்தக்கதாகும்.

தஞ்சை முன்னணியில் உள்ளது

எங்கும் இயக்கத் தோழர்கள் இருந்தாலும் என்னுடைய முயற்சிக்கும் போக்குக்கும் தஞ்சை முதன்மையானதாக உள்ளது. திராவிடர்கழகமாக ஆன பிறகு மாத்திரமல்ல; நான் காங்கிரசில் இருந்த காலத்திலும் தஞ்சை பெருமளவில் ஆதரவளித்துள்ளது. சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்திலும் நடத்திய காலத்திலும் தஞ்சை தான் ஆதரவு அளித்து வந்தது. ஜஸ்டிஸ் கட்சிக்கு என்னை தலைவனாக்க பெரும் ஆதரவளித்ததுக் கூட தஞ்சைதான் என்றால் மிகையாகாது. எதைச் சொல்கிறேனோ எதை எதிர்பார்க்கிறேனோ அதை தமிழ்நாடு பூராவும் பகுதி செய்கிறது. என்றால் தஞ்சை மாத்திரம் பகுதிக்குக் குறையாமல் செய்யும் திராவிடர் கழகம் ஆரம்பித்து 10,15 ஆண்டுகளில் ஆதரவளித்து பல கட்சிகள் நாட்டில் இருந்த போதிலும் திராவிடர் கழகத்தினர் தலைசிறந்த கட்டுப்பாடான நாணயமான எந்தவிதமான சுயநலமில்லாத வயிற்றுப் பிழைப்புக்காக அல்லாமல் எந்தவித தியாகத்திற்கும் முன்வந்து பாடுபடுகிறவர்கள் என்று சொல்லும்படியான நல்ல பெயரை, புகழை தஞ்சை வாங்கிக் கொடுத்துள்ளது.

இது தனிச் சிறப்புக் கொண்ட மாநாடு

உள்ளபடியே சொல்லுகிறேன் பகுதி மக்கள் வெளியில் இருக்கிறார்கள் உள்ளே இடமில்லாததால் டிக்கெட் கொடுப்பதை நிறுத்தியிருப்பார்கள் நானும் அப்படித் தான் சொல்லிவிட்டு வந்தேன். எனது 40 ஆண்டு பொதுவாழ்க்கையில் எந்தனையோ மாநாடுகள் நடந்திருக்கின்றன. தலைமை வகித்திருக்கிறேன் சுயமரி யாதை இயக்க காலமுதல் சிறப்பாக முதல் மாநாடு செங்கற்பட்டில் நடந்தது. அதுதான் ரிக்கார்டு மாநாடு. ஜமீன்தார்கள் 60-65 பேர் வந்திருந் தார்கள் எல்லா சட்டசபை மெம்பர்களும் எல்லா மந்திரிகளும் வந்திருந் தார்கள் நல்ல கூட்டம் இருந்தாலும் இதில் 1/2 பங்குக்குக் குறைவான அளவுதான் இருக்கும். அதற்குப் பிறகு பல மாநாடுகள் நடந்திருந்தா லும் இந்த மாநாட்டைத் தொடும்படியான அளவுக்குக்கூட நடந்த தில்லை. இன்று திராவிடர் கழக தனிமாநாடு என்பதாக கூட்டியுள் ளோம். என் கணக்குத் தவறாக இருந்தாலும் இருக்கலாம். இது சிறப்பான மாநாடு ஆதரவான மாநாடு எல்லாவற்றையும்விட சிறப்பு! கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்து அந்தந்த நகரங்கள் கிராமங் களிலிருந்தெல்லாம் என்னை தங்கள் குடும்பத்தில் சேர்ந்த ஒருவனா கவே கருதி உணர்ச்சியுள்ள மக்கள் கூடியுள்ள மாநாடு தனிமாநாடு என்பது ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு எடைக்கு எடை வெள்ளி அளிக்கும் விழா பகுதிக்குமேல் காரணம், மதிப்புள்ள தங்கள் தலைவ னுக்கு, வழிகாட்டிக்கு இதுவரை நடந்திராத மரியாதை நடக்கிற போது அதை நாம் காண வேண்டாமா? நம் பங்கும் இருக்கவேண்டாமா என்று இவ்வளவு அதிகமான மக்கள் கூடியிருக்கிறார்கள். நான் பெருமைக்காகச் சொல்ல வில்லை எங்கும் கூட்டம் குறைவாக இருந்தால் கூட்டம் இல்லை என்று சொல்லுவதுதான் எனது வழக்கம். நானும் நண்பர்களும் தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தோம். காலை ஊர்வலம் எல்லோரையும் மயக்கிவிட்டது ஒருவர் நாலு லட்சம் என்கிறார் ஒருவர் மூன்று லட்சம் இருக்கும் என்கிறார். உள்ளபடியே கணக்குப் பார்த்தால் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது. எல்லோருடைய கணக்கும் குறைவாகத்தான் இருக்கும். மழை அருமையான உதவி செய்தது. காலையில் மழையில்லை. எல்லோரும் மழை போய்விட்டது போய்விட்டது என்றார்கள்.
ஊர்வலம் முடியும்வரை மரியாதையாகக் காத்துக் கொண்டிருந்தது. இவ்வளவுதான் தாங்குவேன் இனிமேல் தாங்கமாட்டேன் என்று சிறு தூறல் போட ஆரம்பித்துவிட்டது. நான் எப்படியோ ஆகட்டும் மாநாடு காலையிலேயே நடந்துவிட்டது போங்கள் என்று கூறி விட்டேன். இனிமேல் வசூலித்த பணத்தை திருப்பியா கொடுத்து விடப்போகிறார்கள்? எங்காவது தாழ்வாரத்தில் வைத்தாவது கொடுத்துவிடுவார்கள்; நானும் அவ்வளவு சல்லீசாக விட்டுவிட்டுபோய் விடமாட்டேன். நடக்கிறது நடக்கட்டும் என்று கூறிவிட்டேன் எப்படியோ அதோடு மழை நின்று விட்டது. மாநாட்டு பந்தல் ஈரமாக இருக்குமேஎப்படி உட்காருவார்கள் என்று கவலைப்பட்டேன் இப்போது என்னடா என்றால் எள் விழக்கூட இடமில்லாதபடி அவ்ளவு வசதி (!) யாக உட்கார்ந்திருக்கிறீர்கள்.

சிறைக்கு வழிகூட்டும் மாநாடு

இந்த மாநாடு மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப்படத்தக்கதுமான மாநாடாகும். என்னைக் கேட்டால் நான் சொல்லுகிறேன். திராவிடர் கழகத் தனிமாநாடு என்று சொல்லப்பட்டாலும் உங்கள் தலைவனுக்கு முக்கிய தொண்டர்களுக்கு ஜெயிலுக்கு செல்ல வழியனுப்பு மாநாடுதான் இந்த மாநாடு. அரசியல் சுற்றுச்சார்பு சூழ்நிலை அப்படித்தான் உள்ளது. இந்த மாநாட்டின் பலன் வெற்றி அதுவாகத்தான் இருக்கும்.

கூடிய விரைவில் அரசாங்க விருந்து இருக்கிறது. அது லேசில் கிடைக்கக் கூடியதல்ல, முன்பெல்லாம் சாதாரணம், ஆனால் அது இப்போது லேசில் கிடைப்பதாக இல்லை. பிள்ளையாரை உடைத்தோம்; ராமனைக் கொளுத்தினோம் இன்னும் பல காரியங்கள் செய்தோம்; ஏன் என்று கேட்க ஆளில்லை! ராஜாஜி காலத்திலும் எதுவும் செய்யவில்லை. இல்லாவிட்டால் இப்போது காமராசர் தான் விட்டு விட்டார் என்று அவரை சுட்டுத் தள்ளி விடுவார்கள். இப்போது அவருக்கும் பதில் சொல்ல சுலபமாகிவிட்டது. புராஜாஜி காலத்திலேயே ஒன்றுமில்லை நான் என்ன அதிசயம்பூ என்று கூறிவிடுகிறார். பார்ப்பனர்கள் தூண்டுதல் என்ன ஆனாலும் சரி! இப்போது அரசாங்கத்தை மிகவும் நெருக்குகிறார்கள்.
மேலிடத்திலிருந்தும் பத்திரிகைக்காரர்களும், பார்ப்பனர்களும் இன எதிரிகளும், ஏன் விட்டு வைத்திருக்கிறாய்? என்று நெருக்குகிறார்கள். எதனால்? குற்றம் கண்டு பிடித்தா? எல்லோருக்கும் பொறாமை! நாம் நினைக்க முடியாததை சொல்லமுடியாததை இந்த கூட்டம் செய்கிறதே; நம் யோக்கியதை வெளியாகிவிடுகிறதே; இந்த கூட்டம் இருப்பதால் நாம் பிள்ளைப் பூச்சியாக இருக்க வேண்டியுள்ளதே; இவர்களை அடக்கினால்தான் நமக்கு மரியாதை இருக்கும் என்று அரசாங்கத்தை நெருக்குகிறார்கள்; பல முயற்சிகள் நடக்கின்றன.

ஆகவே இன்றைய சர்க்கார் அடக்குமுறை செய்து தீரவேண்டிய சந்தர்ப்பம் இது. தங்களுக்கு இஷ்டமில்லாவிட்டாலும் கூட ஊரார் வாயை அடைக்கவாவது பிடித்துத் தீருவார்கள். ஆகவேதான் தோழர்களே! முன்பே இது என்னை சிறை செல்ல வழியனுப்பு மாநாடாக இருக்கும் என்றேன்.
இன்றைய லட்சியம் முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்குமேல் எவனும் இல்லை எல்லோரும் சமம் என்ற இந்த நிலை நமக்குதான் அவசியமாகத் தோன்றுகிறது.

ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும் ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிட வேண்டும்பூ என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?

இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லா சாதியும் ஒரு சாதி தான் என்கிறோம் நாம். இந்த ஒரு காரியம் தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக் கிவிட்டது.

மற்ற நாடுகளில் எள்ளி நகையாடுவர்!

இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இது போல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான். சாதாரணமாக அரசாங்கமே யோக்கியமான, பொது மக்களுக் கான, மேல்சாதிக்காரர்கள் ஆதிக்கத்தில் இல்லாத அரசாங்கமாக இருக்குமானால் ஒரு வரியில் செய்து விடலாம்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்று போட்டிருக்கிறார்களே! தீண்டாமை ஒழிய வேண்டுமென்பது சாஸ்திரத்திற்கு ஆகமத்திற்கு விரோதம்தான். ஆனால் தீண்டாமை ஒழிக்க வேண்டுமென்பது அரசாங்கத்திற்கு அரசியல் சூதாட்டத்திற்கு ஆக அவசியமாக இருந்தது; செய்தார்கள். அதுபோல இதற்கு ஏன் பரிகாரம் செய்யக்கூடாது?

சாதி ஒழிய பரிகாரம் ஏன் பண்ணக்கூடாது என்று கேட்டால் இப்படி பேசுகிறேன் அப்படி பேசுகிறேன் என்று எழுதுகிறார்களே தவிர பேசுவதில் என்ன தப்பு? சாதி ஒழிய வேண்டும் என்பதால் என்ன கெட்டுப் போகும்? சர்க்கார்தான் ஏன் ஆதரவு தரக்கூடாது என்று கேட்பவர்களைக் காணோமே!
இது என்ன சுயராஜ்யம்?

ஒரு மனிதன் நான் ஏன் பிறவியில் தாழ்ந்தவன் என்று கேட்கக் கூடாது; கேட்க உரிமையில்லை யென்றால் இது என்ன சுயராஜ்யம்? நீங்கள் சிந்திக்க வேண்டும். எனது 40 ஆண்டு பொது வாழ்க்கையில் ஒருவனைக்கூட உதைத்ததில்லை. குத்தியதில்லை. ஒருவனுக்குக்கூட ஒரு சிறு காயம் கூட பட்டதில்லை.கலவரமில்லாமல் நாசமில்லாமல் எவ்வளவு தூரம் நடக்கலாமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது என்று விரும்பி அதன்படி நடப்பவன்.

வெட்டாமல் குத்தாமல் காரியம் சாதிக்க முடியாது என்ற நிலைமை வருமானால் சும்மா இருந்தால் நான் மடையன்தானே?
ஒரு ஆயிரம் பார்ப்பானையாவது கொன்று ஒரு இரண்டாயிரம் வீடுகளையாவது கொளுத்தி ஒரு நூறு பார்ப்பானர்களையாவது அதில் தூக்கிப்போட்டாலொழிய சாதி போகாது என்ற நிலைமை வந்தால் என்ன செய்வீர்கள்? (கொல்லுவோம்! கொளுத்துவோம்! என்று லட்சக்கணக் கானவர்கள் முழக்கமிட்டனர்) எவனாக இருந்தாலும் இந்த முடிவுக்குத்தானே வர வேண்டும்?
அட! பைத்தியக்காரா! நான்தானா சொல்லுகிறேன்? (நாங்கள் செய்வோம் என முழக்கம்) இன்றே செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. நாளைக்கே செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அதைத்தவிர வேறு வழியில்லை யென்றால் என்ன செய்வது?

நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்கு பரிகாரம் வேண்டும் என்றால் புகுத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?

முதுகுளத்தூர் சம்பவம்

முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப்போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடும் செத்தவனும் வந்து விடுவானா? சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? அந்த மாதிரி சொன்னான் அந்த யோக்கிய பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். புராமசாமி குத்துகிறேன் என்றான் வெட்டுகிறேன் என்றான் என்று சொன்னபோது எப்போது சொன்னான்? எங்கு சொன்னான் கடுதாசியைக் காட்டுபூ என்றதும் ஒருவனையும் காணோம் ஓடிவிட்டார்கள், புபேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள் சி.அய்.டி.ரிப்போர்ட்டில் அதுபோலக் காணவில்லையே என்றார் ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால் வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன்தான் சும்மா இருப்பான்?
ஆண்மையாக புஇருக்க வேண்டியதுதான் எடுக்க முடியாதுபூ என்றாவது சொல்லேன்.

வீண்மிரட்டல் பலனளிக்குமா?

ஆறுமாதமாக கிளர்ச்சி நடக்கிறது 750 பேரை கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.
குத்துகிறேன் வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கிவிடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்கு பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி, விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை. சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கரையில்லை புகுத்துகிறேன்பூ என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?

இரண்டிலொன்று முடியவேண்டும்

இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற லட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும் வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்ற லட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது, பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக் கொள்ள வேண்டியது தானா?

பார்ப்பானுக்கு மட்டும் தான் அரசாங்கமா?

அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கு தானா? தந்திரமாக பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்கு போக முடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லையென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம் இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.
சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை. நம்மை அடக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம்

நம் அரசாங்க மந்திரிகளை இழுத்துப்போட்டு இவர்கள் தான் இடம் கொடுக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இதோ படம் போட்டுக் காட்டுகிறார்கள். மந்திரிகள் உட்கார்ந்து கொண்டு சிங்கத்தைவிட்டு பார்ப்பனர்களை கடிக்க விடுகிறார்கள். பார்ப்பனர்கள் பயந்து கொண்டு ஓடுகிறார்கள். நான்தான் சிங்கமாம். இப்படி படம் போடுகிறார்கள். காமராசர் ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்கிறார்கள் பதினாயிரக்கணக்கில் போகிற பத்திரிகை இந்தியா பூராவும் போகிற பத்திரிகை இவ்வளவு அயோக்கியத்தனமாக எழுதுகிறான்? பத்திரிகைக்காரர்களுக்கு மானம் மரியாதை இருந்தால் நான் சொல்வதற்கு பரிகாரம் சொல்ல வேண்டாமா? நீங்கள்தான் மக்கள்; நாங்கள் மக்கள் அல்ல, ராஜ்யம் அவர்களுடையதுதானா?

துரோகிகளால் வந்த ஆபத்து

நம் பிரகலாதன்கள் அவர்களுக்கு அடிமையாகப் போவ தால்தானே இவர்களுக்கு இவ்வளவு அகந்தை வருகிறது? வேறுநாட்டில் இதுபோல் இருந்தால் ஒரு ராத்திரியில் வெடிகுண்டு வைத்து கட்டிடத்தை இடித்து நொறுக்கிவிடமாட்டானா? துருக்கியில், பாகிஸ்தானில், இங்கிலாந்தில், ஜெர்மனியில் இது போல ஒரு நிலைமை இருந்தால் என்ன ஆகியிருக்கும்? இந்த மானங்கெட்ட நாட்டில் தானே இவ்வளவு கொட்டம் அடிக்கும் போதும் கட்டிடம் இருக்கிறது? அவன் வாழ்கிறான்.

வீண்மிரட்டலுக்குப் பணிவதா? ஏண்டா அடிக்கிறாய் என்றாலே
கொல்கிறான் கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை எப்படி எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்று தான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சக்கணக்கான குரல்) நாலு பேர் சாவது ஜெயிலுக்குப் போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி அதுதான் சாஸ்திரம் அதுதான் வேதம் அதைத்தான் ஒத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால் 100க்கு 97பேராக உள்ள நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும் பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டுவிடப் போவதில்லை. அந்தமாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

இந்த இரண்டு வருடத்தில் எனக்கு இருபது இடங்களில் கத்தி கொடுத்துள்ளார்கள் எதற்கு கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை, முத்தம் கொடுக்கவா இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும் வரை பார் முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன். உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள்;
இவ்வளவு மக்கள் ஆதரவு, நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் காத்திருப்பதா?
செல்வாக்கை தப்பாக உபயோகிக்கமாட்டேன்
நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்லமாட்டேன் வேறு மார்க்கம் இல்லை யென்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியை புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும் 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான். தப்பான காரியத்திற்கு உபயோகப்படுத்தமாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்து கொள்ள வேண்டும்; பொது வேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேணடும்.

இன்றா ஏற்பட்டது இந்த உணர்ச்சி?

பார்ப்பானைக் கொல்லுவதும் பார்ப்பானைக் குத்துவதும் இன்று நேற்றல்ல. அந்த காலத்திலேயே நடந்துள்ளதே! பார்ப்பான் எழுதி வைத்துள்ள புராணங்களைப் பார்த்தாலே தெரியுமே? இரணியன் சொல்லியிருக்கிறான்; இது பாகவதம் 7வது ஸ்கந்தம் 2வது அத்தியாயம் இஞ்சிக்கொல்லை பண்டிட் ஆர். சிவராம சாஸ்திரி மொழி பெயர்ப்பு புரோகரசிங் அச்சுக்கூடப் பதிப்பு 715-716வது பக்கங்களில் உள்ளது.

இரண்யன் சொன்னது

இரண்யன் சொல்கிறான் புஓ! தானவர்களே நான் சொல்வதைக் கேளுங்கள் ; தாமசியாமல் அப்படி செய்யுங்கள்! நீங்கள் எல்லோரும் பிராமணர்கள் நிறைந்திருக்கும் பூமிக்குச் சென்று தபசு, யாகம், அத்யாயனம், விரதம் ஆகியவைகளைச் செய்கின்றவர்களைக் கொல்லுங்கள். பிராமணர்களால் செய்யப்படும் அனுஷ்டானமே விஷ்ணுவுக்கு ஆதாரமாகிறது. ஆனதால் எந்த தேசத்தில் பிராமணர்கள் இருக்கிறார்களோ, எந்த தேசத்தில் வர்ணாசிரமங்களுக்குரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றதோ அந்த தேசத்திற்குச் சென்று அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள், நாசம் செய்யுங்கள்பூ என்றான். அதைக்கேட்ட தானவர்கள் உடனே சிலர் அக்கினியை வைத்துக் கொளுத்தினார்கள். சிலர் மண் வெட்டியை எடுத்து கோவில்களையும் பிரகாரங்களையும் கோபுரங்களையும் பிளந்தார்கள். சிலர் ஜுவலிக்கும் கொள்ளிகளைக் கொண்டு அவர்களுடைய வீடுகளைக் கொளுத்தினார்கள். இப்படி இவர்கள் செய்யும்பொழுது தேவர்கள் பூமியில் மறைந்து சஞ்சரித் தார்கள்! எதில் இது – பாகவதத்தில் !

கொளுத்துவது வெட்டுவது 2000 வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது. அந்த காலத்தில் பித்தலாட்டம் செய்து எப்படியோ பார்ப்பனர்கள் ஜெயித்துவிட்டார்கள். இந்த காலத்தில் என்ன பித்தலாட்டம் செய்தாலும் அவர்கள் ஜெயிப்பது என்பது நடக்காது.

பார்ப்பான் புத்திசாலியாக இருந்தால் பார்ப்பானைச் சேர்ந்தவன் புத்திசாலியாக இருந்தால் புஇந்து மதத்தில் சாதிகிடையாது. சாதியை உண்டாகும் சாஸ்திர புராணங்கள் இந்து மதத்திற்கு சம்பந்தப்பட்டவை அல்லபூ என்று சொல்ல வேண்டும்.

இந்த 1957லும் இதற்கு பரிகாரம் இல்லையென்றால் என்ன அர்த்தம்? ஆதனால்தான் மிகமிக வருத்தத்தோடு வேறு பரிகாரம் இல்லாததால் இந்த மாதிரி எண்ணங்கள் எண்ண வேண்டியுள்ளது. இந்த காரியத்திற்கு பரிகாரம் செய்யப்பட வேண்டாமா?

சாதியில்லை என்று கூட எவனும் சொல்வதில்லையே? கொடி கொளுத்துகிறேன் என்றதும் 8 நாளில் துடிதுடித்துக்கொண்டு பதில் சொன்னாயே! இதற்கு அதே போல பரிகாரம் சொல்லாத காரணம் பார்பபானுக்கு பயந்து கொண்டுதானே! தவறாக நினைத்தால் சர்க்கார் தான் ஏமாந்துபோகும் பார்ப்பான் தான் ஏமாந்து போவான் நாம் ஏமாறமாட்டோம். இன்னும் செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கின்றன அதெல்லாம் செய்த பார்த்து ஒன்றும் நடக்கவில்லை யென்றால் கண்டிப்பாக இந்த முடிவுக்கு வருவோம்.

இப்போது முதுகுளத்தூரில் ஆகவில்லையா? நூற்றுக்கணக்கான உயிர் போயிற்று. இரண்டாயிரம் வீடுகளுக்கு நெருப்பு வைத்துக் கொளுத்தினான். பரிதாபமான காரியம். சாதி எவ்வளவு கெடுதி என்பதற்குச் சரியான உதாரணம். ஆகவே பல முக்கியமான காரியங்கள் நடக்க வேண்டியிருக்கிறது என்பதாகப் பேசி முடித்தார்.

“அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு”


மீண்டும் ‘சத்தியமூர்த்தி’ காலத்துக்கு திரும்புகிறது, தமிழக காங்கிரஸ்

தமிழ்நாட்டில் மக்கள் விரோத அமைப்பாக பார்ப்பனர்களுக்கான கட்சியாகவே காங்கிரஸ் இருந்தது. சுயமரியாதை இயக்கம் காங்கிரசின் தமிழின விரோதப் போக்கை மக்கள் மன்றத்தில் தோலுரித்தது. காங்கிரஸ் கட்சியில் சுயமரியாதை இயக்கத்தை ‘தரம் தாழ்ந்த’ மொழி களில் பேசி வந்தவர் சத்தியமூர்த்தி எனும், காங்கிரசுப் பார்ப்பனர்; அவரது பெயர் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. வர்ணாஸ்ரம வெறியில் ஊறிப் போன சத்திய மூர்த்தி கோயில்களில் பெண்களை தேவதாசிகளாக்கும் கொடுமையை ஒழிக்க சட்டம் வந்த போது அதைக் கடுமையாக எதிர்த்தவர். இது ஒரு உதாரணம் தான். அவ்வளவு மோசமான வைதீக வெறியர். இந்தப் பார்ப்பனரைப் பற்றி குத்தூசி குருசாமி ஒரு முறை ‘குடிஅரசு’ ஏட்டில் ஒரு நையாண்டி கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு “அழுகிய முட்டை அரை அணாவுக்கு ஆறு” என்பதாகும். அதில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

“முட்டையால் அடிப்பதால் மனிதன் செத்துவிட மாட்டான். அதற்காக இயக்கத்தவர்கள் எவரையும் முட்டையால் அடித்துப் பார்க்க வேண்டாம். நல்ல முட்டைகளை வீணாக்கக் கூடாது. அப்படியானால் அழுகிய முட்டையால் அடிக்க லாம் என்று எண்ணி அடித்து விடாதீர்கள். நான் சொன்னால் நீங்கள் கேட்கவா செய்வீர்கள்? நீங்கள் செயல் வீரர்களாச்சே? எப்படி இருந்த போதிலும் சத்தியமூர்த்தியை அடித்து விடா தீர்கள். இயக்க வளர்ச்சியைக் கண்டு பயத்தில் ஏதோ உளறுகிறார்”.

– என்று எழுதினார், அடுத்த இரண்டு நாட்களிலேயே புதுக் கோட்டையில் சத்தியமூர்த்தி பேசியபோது இயக்கத்தவர்கள் அழுகிய முட்டையால் அடித்தே விட்டார்கள் அய்யரை. செய்தி அறிந்த இளங் குத்தூசி, “அண்ணா முதுகு எப்படி இருக்கிறது” என்று மீண்டும் கிண்டலாக எழுதினார்.

குத்தூசி குருசாமியின் வரலாற்று ஆசிரியர் குருவிக்கரம்பை வேலு தனது நூலில் – இதைப் பதிவு செய்துள்ளார்.

சத்திய மூர்த்தியின் காலத்துக்கு மீண்டும் தமிழக காங்கிரசார் திரும்பியுள்ளனர். அதே பார்ப்பனக் குரல், காங்கிரஸ் முகாமிலிருந்து ஒலிக்கத் தொடங்கியுள்ளது.