மும்பை யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போது பெரும் பரபரப்பான விவாதமாக
உள்ளது. மராத்தியர்களுக்கா அல்லது இந்தியர்கள் அனைவருக்குமா எனபது தான்
தற்போதைய விவாதம்.
மும்பை சட்டசபையில் மராத்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுக்க அபுஆஸ்மி
மறுத்தார். இதனால் மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சியினரால் கடுமையாக
தாக்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
தேசிய மொழியான இந்தியை அவமானப்படுத்தி விட்டதாக அனைவரும் குற்றம்
சாட்டினர்.
ஏன்? நமது தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் கூட கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மட்டும் இந்தி படிக்ககூடாது. ஆனால் அடுத்த மாநிலத்தில்
மட்டும் இந்திக்கு ஆதரவு தெரிவிக்கலாம்.
ஒரு மாநிலத்திற்கு பிழைப்பு தேடிச்செல்பவர்கள் அந்த மாநில மொழியை
படிப்பது தான் மரபு. மாறாக அந்த மாநில மொழியை அவமதிக்கும் விதமாக
மராத்தியில் பதவிப்பிரமாணம் எடுக்க மறுத்துள்ளார் ஆஸ்மி.
இவர் பல வருடங்களாக மும்பையில் வசித்து வருகிறார். ஆனால் மராத்தியை
மட்டும் படிக்கவில்லை. பேச்சு வழக்கில் கூட மராத்தியை உச்சரிக்க
மறுத்துள்ளார். இவருக்கு அவர் தாய்மொழி மீது உள்ள அதே பற்றும், பாசமும்
மராத்தியர்களுக்கு இருக்கத் தானே செய்யும். குறிப்பாக, மொழியை வைத்து
ஆட்சி செய்யும் சேனாவினருக்கு அதிகமான பற்று இருப்பதில் என்ன தவறு
இருக்கிறது.
பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் நன்றாக மராத்தி பேசுகிறான். அவன் ஒரு
வருடத்திலேயே மராத்தியை நன்றாக படித்து விட்டான்.
ஒரு வெளிநாட்டு தீவிரவாதிக்கு உள்ள அக்கறை, பல வருடங்களாக அந்த
மாநிலத்தில் தொழில் நடத்தி வரும் அபு ஆஸ்மிக்கு இல்லாமல் போய் விட்டது.
தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ராகுல்
ராஜீவும் மும்பைக்கு சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்.
அவர் அளித்த பேட்டியில், மும்பை தாக்குதல் நடைபெற்ற போது, தீவிரவாதிகளை
எதிர்த்து தாக்குதல் நடத்தி அவர்களை கொன்ற கமாண்டோ படையிளனர் பீகார்
மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களே என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே, மும்பை
தாக்குதலில் ஈடுபட்ட மராட்டிய போலீஸ் அதிகாரிகளான கர்காரே, காம்தே,
சலாஸ்கர், ஓம்ப்ளே ஆகியோரை ராகுல் எப்படி மறந்தார் என்று கேட்டுள்ளார்.
வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதும் மராட்டிய எதிர்ப்பு போக்கையே
கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் மராத்திய மக்களின் நலனுக்காக
ஒருபோதும், பாடுபடமாட்டார்கள்.
மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தமானதாக இருக்கலாம். ஆனால் அவரது
இத்தாலி அன்னைக்கும் இது எப்படி சொந்தமாகும்?
இந்த நாடு ஒரே நாடு. அது தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று
ராகுல் எங்களுக்கு சொல்ல தேவையில்லை.
இந்தியாவை பிரித்தது காங்கிரசார் நாட்டுக்கு செய்த மிகப்பெரிய பாவம்.
அதன் விளைவுகளை தேசம் இதுநாள்வரை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்தியாவை பிரித்து பாகிஸ்தானை உருவாக்கிய காங்கிரசார் தேசிய ஒருமைப்பாடு
பற்றி பாடிக்கொண்டிருப்பது என்பதை விட வேடிக்கையானது எதுவும் இருக்க
முடியாது என்றும் பால்தாக்கரே கூறி உள்ளார்.
மேலும் ராகுல் கருத்து குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், மும்பை
கலவரம் நடந்த போது, சிவசேனா கட்சியினர்தான் மும்பை மக்கள் அனைவரையும்
காப்பாற்றினர். அப்போது வட இந்தியர்கள் என்று எவரையும் பார்க்கவில்லை.
ஒட்டுமொத்த இந்துக்கள் அனைவரையும் தான் காப்பாற்றினர்.
மாநிலங்கள் மொழிகள் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளன. எல்லா
மொழிகளுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும். ஆனால் மராட்டிய மொழிக்கு
உரிய மரியாதை கிடைக்கவில்லை. நாங்கள் அதைக் தான் எதிர்க்கிறோம்.
ராகுல் ராஜிவ் மும்பையை இந்தியாவின் ஒரு பகுதி என்ற கூறுகிறார். இதை
யாரும் மறுக்கவில்லை. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் குடியரசுத் தினத்தன்று
கொடி ஏற்ற முடியவில்லை. அப்படியானால், காஷ்மீர் மாநிலம் இந்தியாவில்
இல்லையா? இது பற்றி யாரும் வாய் திறப்பது இல்லை.
காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பண்டிட் ஜாதியினர் அகதிகளாக
விரட்டப்படுகின்றனர். இது குறித்து யாரும் எதுவும் சொல்வது இல்லை என்று
கேட்டுள்ளார்.
மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது என்று காங்கிரஸ் அரசு
சொல்கிறது.
அப்படியானால், காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் தனி அந்தஸ்து கொடுத்து
வைத்திருப்பது ஏன்? காஷ்மீர் மாநிலம் இந்தியாவில் தானே இருக்கிறது. அங்கு
அனைத்து இந்தியர்களுக்கும் உரிமை உண்டு என்று ராகுல் ராஜிவ் ஏன்
சொல்லவில்லை.
காஷ்மீர் மாநிலத்திற்கு புனிதப்பயணம் செல்லும் இந்துக்கள் ஓய்வெடுத்துக்
கொள்ள அந்த மாநில அரசு நிலம் ஒதுக்கியது. இதையடுத்து, நடந்த போராட்டத்தை
தொடர்ந்து அந்த நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால்
அப்படிப்பட்டவர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு அரசு மானியம்
வழங்குகின்றது. மும்பைக்கு சொந்தம் கொண்டாடும் காங்கிரசார் இதற்கு என்ன
செய்தார்கள்.
இந்து கோவில்கள் அனைத்திலும் வரும் உண்டியல் பணம் அனைத்தையும் அரசுதான்
நிர்வகிக்கிறது. அப்படிப்பட்ட சாமானிய இந்து பக்தர்கள் தங்குவதற்கு இடம்
ஒதுக்கி கொடுக்க முடியவில்லை.
இந்தியாவில் பட்ஜெட் தயாரிக்கும் போது, பாதுகாப்பிற்கு தான் அதிக அளவில்
நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு அனைத்தும் எங்கு
செயல்படுத்தப்படுகிறது. அதிகமாக காஷ்மீரில் தான் பாதுகாப்பு படையினர்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அப்படி இருந்தும் அந்த மாநிலத்தில் குடியரசு தினத்தன்று தேசிய கொடியை
அரசால் ஏற்ற முடியவில்லை. அந்த மாநில மக்கள் தேசிய கொடி ஏற்றுவதை
அவமானமாக கருதுகின்றனர். இதற்கு ராகுல் என்ன சொல்கிறார்.
வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக உலமாக்கள் மாநாட்டில் பத்வா
பிறப்பிக்கப்பட்டது. அப்போது, உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அங்கு தானே
இருந்தார். அவரால் ஏதாவது பேச முடிந்ததா?
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, நான் அங்கு இருந்த போது அவர்கள் எந்த
தீர்மானமும் நிறைவேற்றவில்லை என்று தானே சொன்னார். அவர்கள் நிறைவேற்றிய
தீர்மானத்திற்கு எதிராக எந்த கருத்தும் சொல்ல முன்வரவில்லை.
மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தமானது என்ற கருத்தை சொல்லும்
காங்கிரசார், இந்தியா முழுவதற்கும் ஒரே நிலைப்பாட்டில் தானே இருக்க
வேண்டும்.
மும்பை மட்டும் அனைவருக்கும் சொந்தமாகும் போது, இந்தியாவில் உள்ள அனைத்து
நதிகளும், இந்தியர்கள் அனைவருக்கும் என்றுதானே இருக்க முடியும்.
அப்படியானால், தமிழகத்திற்கு எதிராக கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில
அரசுகள் தண்ணீர் தர மறுக்கிறார்களே, அதற்கு காங்கிரசாரின் நிலைப்பாடு
என்ன? இதற்கு ராகுல் என்ன சொல்கிறார்.
மொழி அடிப்படையில் தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. எனவே மொழிகளுக்கு
உள்ள மரியாதை அனைத்து மாநிலங்களிலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். மராத்தி
மொழியை அடிப்படையாக வைத்து தான் மராட்டிய மாநிலம் உருவாக்கப்பட்டது.
எனவே, மராட்டிய மாநிலம் மாத்தியர்களுக்கு மட்டுமே சொந்தம்.
தமிழ் நாடு கூட தற்போது சேட்டுகளாலும், மலையாளிகளாலும் ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டு வருகிறது.
வரும் காலங்களில், பால் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்று போராட்டம்
நடத்தினால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். உண்மையான ஒரு
மொழிப்பற்றோடு போராடும் மராத்தியனைக் பார்த்து நாம் நிறைய கற்க வேண்டும்.
ஆனால் அது தெரியாத தமிழக அறிவு ஜீவிகள் பலர் பால் தாக்கரேவுக்கு எதிராக
போராட்டம் நடத்த புறப்பட்டு விட்டனர். இவர்கள் அனைவரும் இலங்கையில்
லட்சம், லட்சமாக தமிழர்கள் கொல்லப்பட்ட பொது என்ன செய்து கொண்டு
இருந்தனர். சோனியா ராஜீவின் புடவையை துவைக்கவா
சென்றிருந்தனர்.
ஆகவே, மும்பை மராத்தியர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற சேனா கட்சிகளின்
நிலைப்பாடு மட்டுமே சரியானது. இதில் இந்தியாவைப் பிரித்து தேசிய
ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவித்த காங்கிரசாருக்கு கருத்து சொல்ல எந்த
வித தகுதியும் கிடையாது.