‘தல’யும் ‘தலி’வரும் தமிழனின் தலையெழுத்தும் !!!


காந்தி, நேரு, அண்ணா வரிசையில் சேர விரும்பி, கனவு கண்டு இப்போது சேர்ந்ததாக எண்ணும் கருணாநிதி சமீபகாலமாக என்ன செய்கிறார்? காலையில் வண்டியை அரசினர் தோட்டத்திற்கு விடுகிறார். 500 கோடியில் கட்டப்படும் புதிய சட்டப் பேரவையை காரிலிருந்தபடியே பார்க்க, அதிகாரிகள் வரைபடத்தின் மூலம் கர்ம சிரத்தையாக விளக்க, கலைஞரின் வரலாற்றுச் சாதனையை நிறைவேற்ற உயரத்தில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளிகள் தமிழினித்தின் தனிப்பெருமை கட்டிடத்தை புயல் வேகத்தில் கட்டுகின்றனர்.

அப்புறம் வண்டி கோட்டூர்புரத்தில் கட்டப்படும் அண்ணா நூலகத்திற்கு செல்கிறது. அங்கும் அதே அதே. பிறகு தலைமைச் செயலகத்தில் செம்மொழி மாநாட்டிற்கு வருபவர்களுக்கு என்ன தீனி போடுவது என்று அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வு. குடிமைப்பணி இப்படி முடிய வீடு செல்லும் தலைவர் அப்புறம் இருமனைவிமார்களின் வாரிசுப் பிரச்சினைகள் பற்றி பேசும் குடும்பப்பணி, பஞ்சாயத்துக்கள். இடையில் ஜெயாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அறிக்கை, கேள்விபதில்களை ரெடிமேடான வங்கியிலிருந்து எடுத்துக் கொடுக்கும் உதவியாளர்கள் மூலம் சரிபார்த்து விட்டு, கலைஞர் டி.வியின் அடுத்த வார மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு வந்த தீம்களை ஒகே செய்து முடித்தால் வருகிறது மாலை.

வள்ளுவர் கோட்டத்திலோ, ஜவஹர்லால் உள்ளரங்கு விளையாட்டு மைதானத்திலோ நடத்தபடும் பிரம்மாண்டமான ஜால்ராபிஷேகம். கோட்டத்தில் கவிதை மழை என்றால் மைதானத்தில் குத்தாட்ட மழை. கன்னத்தில் கை வைத்து முழுவதையும் இரசித்து உருகி மருகி தோய்ந்து நனைந்து இதற்குமேல் வார்த்தைகள் தேவைப்படுவோர் வைரமுத்துவிடம்தான் கேட்க வேண்டும். நடனம், நாடகம், நகைச்சுவை, சொற்பொழிவு எல்லாம் அந்தத் தங்கத் தலைவனை தமிழின் எல்லா வார்த்தை மற்றம் கலைகளைக் கொண்டு பாராட்டி, சீராட்டி, தாலாட்டித் தள்ள தலைவர் அடையும் மோன நிலை இருக்கிறதே அதோடு ஒப்பிடத்தகுந்தது இந்த உலகில் ஜெயமோகன் அடையும் படைப்பு மோன நிலை மட்டும்தான்.

ஜெயலலிதா கட்டவுட்டில் தன்னைக் கண்டு புளகாங்கிசத்திற்கு புதுமை படைத்திட்டதைப் போல கருணாநிதி வார்த்தைகளில் தன்னைக் கண்டு புல்லரிப்பிசத்திற்கு இலக்கணம் படைக்கிறார். இந்த இரண்டு இசங்களும் சேர்ந்தால் அது நார்சிசம். தன்னையே மோகமுறுதல். தலைவரின்றி வேறுயாருக்கும் கிட்டாத இந்த மோகம்தான் தள்ளாத வயதிலும் அந்த தங்கத் தலைவனை குடும்பத்திற்காக ஓயாது ஓடி ஓடி உழைக்க வைக்கிறது.

அதிலும் திரைப்பட ரசிகர்கள் விசிலடித்து, தமது மனைவிகளின் தாலியறுத்து பிளாக்கில் வாங்கி ஆராதிக்கும் நட்சத்திரங்களே தலைவனது முன்னால் நாணிக்கோணி வாழ்த்தும் போது அடையும் பரவசம் வார்த்தைகளில் பிடிபடாது. பெண் பெயரில் ஒரு ஆண் சும்மா கலாய்ப்பதற்காக சாருவை கண்டேன், வாசித்தேன், விழுந்தேன் என்று விட்டு விளையாடினால் சாருநிவேதிதாவிற்கு மூன்று நாள் தூக்கம் கெடும் போது கருணாநிதிக்கு அழைத்து வரப்படும் ஐஸ் கட்டிகள் அதுவும் பிரிட்ஜில் வைக்கப்படும் கோடம்பாக்கத்து கட்டிகள் என்றால் என்னவெல்லாம் கெடும்?

விலைவாசி உயர்வா, முல்லைப்பெரியாறு பிரச்சினையா, ரயில் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பா எல்லாம் பஞ்செனப் பறந்து போகும். கண்ணில் அந்த அலங்கார மனிதர்களைக் கண்டு, கேட்டு, இரவில் படுக்கும் போது அடையும் பிரம்மநிலையை யாரும் கனவில் கூட புரிந்து கொள்ள முடியாது. கட்டாயப் பாராட்டா, வெறுப்புப் பாராட்டா, பயந்து பாராட்டா, ஆளும் கட்சிக்கு ஜே போடும் சீசனல் பாராட்டா, எதுவாக இருந்தால் என்ன? பாராட்டுக்கு உருகும் அந்தப் ‘பச்சைப்பிள்ளை’க்கு எந்த பேதமும் இல்லை.

பாராட்டு தலைவனுக்கு என்றால் அதை வைத்து தலைவனது குடும்பம் பணமாக்குவதற்கு கலைஞர் டி.வி. ஒரே கல்லில் இரண்டு ஸ்டாராபெர்ரி. சூப்பர் ஸ்டார், உலக ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளையத தளபதி ஸ்டார், என எல்லா ஸ்டார்களும், ஸ்டார்ரினிகளும் வந்தால்தான் டி.விக்கு ஸ்பான்சர். ஸ்டார்களை வரவழைக்க என்ன செய்தார்கள்? பையனூர் அருகே 115 ஏக்கர் நிலத்தை சினிமாத் தொழிலாளிகளுக்கு என்று கலைஞர் தனது சட்டைப்பையிலிருந்த சொந்த சொத்திலிருந்து கொஞ்சம் கிள்ளிக் கொடுக்க முடிந்தது மேட்டர். இப்போ ஒரு கல்லில் மூணு ஸ்டாரபெரி. பாராட்டு, பணம், ஏழைப் பங்காளன்.

எல்லாம் கூடிப் பேசி திரைக்கதை எழுதி, செட்போட்டு, ரிகர்சல் பார்த்து மூகூர்த்த நாளும் வந்தது. திட்டமிட்டபடி ஐஸ் நிகழ்வு நல்லபடியாக செல்லும்போது அஜித் மட்டும்,” எங்கள மிரட்டுராங்கையா” என்று வரலாற்றில் இடம்பெற்று விட்ட வார்த்தையைப் பேச, ரஜினி ஆவேசமாய் எழுந்து கைதட்ட விழுந்தது கரும்புள்ளி.

தானைத் தலைவன் அப்செட்டாகி தொழிலாளிகளுக்கு கட்டிக்கொடுப்பதாக இருந்த வீட்டுத் திட்டத்தையும், முதலாளிகளுக்காக கட்டவிருந்த பிரம்மாண்டமான ஸ்டூடியோவைக் குறித்தும் தனது பேச்சில் டெலிட்டோ, எடிட்டோ செய்து விட்டதாக பெப்சி சங்கம் குமுற அப்புறம் ஜாகுவார் தங்கத்தின் பேட்டி, வீடு தாக்கப்படுதல், வி.சிறுத்தை ஆதரிப்பு, ரெட் கார்டு, நடிகர் சங்கம் – பெப்சி மோதல், தயாரப்பாளர் சங்கம் பஞ்சாயத்து எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போதைக்கு அஜித் வருத்தம் தெரிவிக்க வேண்டும், ரஜினிக்கு கண்டனம் என்ற வகையில் முடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஆனால் அஜித்தின் அடுத்த படம் அண்ணன் அழகிரியின் பையனது தயாரிப்பு என்பதால் அல்டிமேட் போங்கடா வெண்ணைகளா என்று போல்டாக இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதற்கு மேல் அந்தக் கரும்புள்ளியை அழிக்க சூப்பரும், அல்டிமேட்டும் கோபாலபுரத்திற்கு மலையேறி சாமியைக் குளிர்வித்திருக்கிறார்கள். தலைவரும் சூப்பரின் மகள் நிச்சயதார்த்ததிற்கு சென்று வாழ்த்தியிருக்கிறார்.

இத்தோடு இதை உண்மைத் தமிழன் முடித்திருந்தால் நாம் இந்த இடுகையை எழுதியிருக்க வேண்டியதில்லை.

இதற்குமேல் அல்டிமேட்டும், சூப்பரும் மாபெரும் கலகக்காரர்களாக, அவர் காட்டியதையும் அதற்கு கிடைத்த ஆதரவும்தான் நீங்கள் இதை வாசிக்க வேண்டிய தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள்.

இந்த உலகிலேயே பெரும் வித்தியாசமான அவலமான தொழிற்சங்கமென்றால் அது பெப்சி சங்கம்தான். பெரும் சினிமா முதலாளிகளின் சுரண்டல் கொடுமைக்கு எதிராக நிமாய் கோஷ் போன்ற மூதாதைகள் கம்பீரமாக ஆரம்பித்த அந்த சங்கம் இன்று அதே முதலாளிகளின் கைப்பாவையாய் பலவீனமாகிவிட்டது. ஒரு ஆட்டோ தொழிற்சங்க கிளைக்கு இருக்கும் குறைந்த பட்ச வர்க்க உணர்வு கூட இங்கு குறைந்து வருகிறது.

நிலையான வேலை, ஒழுங்கான வேலை நேரம் இல்லை. சங்கங்களில் சேர்ந்தால்தான் சினிமா வாய்ப்பு. அதற்கு கட்டணம். நடனம் போன்ற சங்கங்கங்களில் கட்டணமும் அதிகம். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு பெப்சி படைப்பாளிகள் பிரச்சினை வந்த போது இந்த சினிமா தொழிலாளர்களை அணிதிரட்டி பொதுக்கூட்டமெல்லாம் நடத்தினோம். துணை நடிகர்கள், லேட்மேன் போன்ற சாதாரண மக்களின் துன்பமும் அந்த துன்பத்தை உணர்ந்து அணிதிரளவிடாத சினிமா கலாச்சாரமும் அவர்களை என்றும் விடுவிக்கப் போவதில்லை.

வி.சி குகநாதன் இன்று பெப்சியின் தலைவராக இருக்கிறார். இவருக்கும் தொழிலாளிகளுக்கும் என்ன சம்பந்தம் என்பது அந்த முருகனுக்குத்தான் தெரியும். தி.மு.க ஆதரவினால் குகநாதன் ஏதோ கொஞ்சம் ஏக்கர் நிலங்களை கலைஞரின் சட்டைப்பையிலிருந்து தொழிலாளிகளுக்கு தானம் பெற்றார். இது உண்மையிலேயே தொழிலாளிகளுக்கு போகிறதா என்றால் அதிலும் தி.மு.க தொழிலாளிகள், கமிஷன் கொடுக்கும் தொழிலாளிகள் என்று ஏகப்பட்ட வில்லங்கங்கள் உள்ளன. சரி சில தி.மு.க ஆதரவு தொழிலாளிகளுக்கு கூட அந்த இடம் கிடைத்துவிட்டு போகட்டுமே. அடுத்து அம்மா வந்தால் அ.தி.மு.க தொழிலாளிகளுக்கு வாங்கிக்கொடுத்தால் போயிற்று. ஜவகர்லால் விளையாட்டரங்கமும், ஜெயா டி.வியும் ஓடவா போகிறது?

கலைஞரின் தானத்திற்கு நன்றி தெரிவிக்கும் ஐஸ் நிகழ்ச்சிக்கு, ஏதோ நம்ம நடிப்பிற்கு லைட் பிடித்து, டூப்பாக உயிரைக் கொடுத்து நடித்து பாடுபடும் தொழிலாளிகளை மனதில் நினைத்தாவது தலையைக் காட்டிவிட்டு, கொஞ்சம் வார்த்தைகளை பாராட்டாக கொட்டி விட்டு வந்திருக்கலாம். தொப்புளில் ஆம்லெட் போடுவது, டூயட்டிற்காக உலக அதிசயங்களை கேவலப்படுத்துவது, சண்டைக்காக காய்கனி வண்டிகளை உடைப்பது போன்ற லூசுத்தனங்களை ஒப்பிடும்போது இது ஒன்றும் அவ்வளவு இழிவானவையல்ல.

ஏற்கனவே ஈழத்திற்காக தமிழ் சினிமா நடிகர்கள் நடத்திய ஆறு மணி நேர உண்ணாவிரதத்தில் ஈழமும் ஈழத்தமிழ் மக்களும் என்னபாடு பட்டார்கள் என்பதை வினவில் எழுதியிருக்கிறோம். அந்த உலக மகா ஃபிராடு நிகழ்ச்சியைக் கூட நம்ம அல்டிமேட்டால் தாங்கமுடியவில்லை. மேடைக்கு போனவர் “சினிமா இன்டஸ்ட்ரியை சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள்” என்று முழங்கிவிட்டுத்தான் சென்றார். அய்யா அல்டிமேட் கூறியபடிதான் அந்த சினிமா மேக்கப் நிகழ்ச்சி படு செட்டப்பாக சீனைப் போட்டிருந்தது. சினிமா ஈழத்திற்காகப் போராடுகிறது என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்மில் படித்த முட்டாள் கூட நம்ப மாட்டானே? இது எல்லாருக்கும் தெரிந்ததுதானே?

அல்டிமேட் கூறுவிரும்புவது என்னவென்றால் நைட் ஒரு ஃபுல்லை போட்டுவிட்டு காலையில் லேட்டாக எழுந்து அல்லக்கைகளோடு ஷூட்டிங்கிற்கு போய் கையையும், காலையையும் சோம்பல் முறிப்பது போல நடித்துவிட்டு அதில் களைத்துப் போய் சொகுசு கேரவானில் ஓய்வு எடுத்துக் கொண்டு இப்படி ஒரு முப்பதோ, அறுபதோ நாட்களைக் கழித்தால் ஐயாவுக்கு ஊதியமாய் ஐந்தோ இல்லை பத்தோ கோடிகள் வரும். அந்தக் கோடியும் சினிமா ஓப்பனிங்கில் ஏலமிடப்பட்ட காட்சிகள் மூலம் ரசிகர்கள் அடகுவைத்து அழும் ரத்தப்பணம்தான். இதுதான் சினிமா இன்டஸ்ட்ரி இருக்க விரும்பும் இலட்சணம்.

“ஒரு லைட்மேன் வாங்கும் 250 அல்லது 350 ரூபாய் சம்பளத்தை நடிகனான எனக்கும் கொடுங்கள், இயக்குநருக்கும் கொடுங்கள், நாமெல்லாம் ஒரு இன்டஸ்டரியாக இருப்போம்” என்று சொன்னால் கூட ஒரு அர்த்தம் இருக்கிறது. இவரு கோடி கோடியாக வாங்குவாராம். அந்த கோல்மால்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் மேல் ஒரு தூசிகூட விழக்கூடாதாம். இதுதான் அல்டிமெட்டின் தன்மானக் கர்ஜனையின் பின்னணி.

நட்சத்திரப் பதவி, அதை முதலாளிகள் உருவாக்கும் விதம், இரசிகர்கள் கொடுக்கும் அங்கீகாரம், ஊடகங்களில் பில்டப்புக்கள் எல்லாம் இருந்தால்தான் கோடி சம்பளமும், சொர்க்க வாழ்வும் கிடைக்கும். அப்படிக் கிடைப்பதால் ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடுவதும் செய்யவேண்டும். எல்லா ஊழலும் ஒன்றோடு ஒன்று கலந்ததுதான். இதில் நான்மட்டும் யோக்கியம் என்று காட்டுவது அம்மணாண்டிகளின் ஊரில் கோவணம் கட்டியவனின் கதைதான்.

ஒப்பனிங் காட்சிகள் ஏலம் கிடையாது, பிளாக் டிக்கெட் கிடையாது, திரையரங்கின் வழக்கமான கட்டணம்தான் என்று நேர்மையாக இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் எப்படி மில்லியனராக மிளிர்ந்திருக்க முடியும்? இந்தப் பகல் கொள்ளைக்கு முதலாளிகள், அரசு, அதிகாரிகள், போலீசு, பத்திரிகைகள் எல்லாருடைய ஆதரவை வைத்துத்தானே ஜமாய்க்கிறீர்கள்? அது உண்மையெனில் நீங்கள் கருணாநிதி காலில் விழுந்து நாக்கால் நக்கினால் கூட தப்பில்லையே முண்டங்களா?

ஆபாசத்தையும், அண்டப் புளுகையும் வைத்து இரசிகனை உணர்ச்சியால் திறமையாக சுரண்டுவதினால்தானே நீங்கள் நட்சத்திரங்கள்? பதிலுக்கு அந்த இரசிகர்கள் ‘அண்ணன் வருங்கால முதலமைச்சரானால் நாமளும் பொறுக்கித் தின்னலாமே’ என்றுதானே உங்களுக்கு தோரணம் கட்டுகிறார்கள்? நடிகன் – இரசிகன் உறவே இப்படி ஊழல்மயமாக இருக்கும் போது வெள்ளித்திரையில் போடும் டூபாக்கூர் ஹீரோ வேடத்தை வெளியில் காட்டுவதை சகிக்க முடியவில்லை.

அஜித் உண்ணாவிரத்த்திற்கு வரவில்லை என்ற செய்தியினால் ஏகன் படத்திற்கு ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது அல்டிமேட் என்ன செய்திருக்கவேண்டும்? வெளிநாடு ரைட்ஸை என்ன ரேட்டுக்கு விற்றீர்களோ அதன் நட்டத்தை நான் தருகிறேன் என்று அப்போதே தன்மானஸ்தனாக காட்டியிருக்கலாமே? அதே போல குசேலன் படம் பெங்களூருவில் வெளியிட எதிர்ப்பு வந்த போது ரஜினியும் தயாரிப்பாளரிடம் கர்நாடகா ரைட்சுக்குரிய பணத்தை திருப்பியிருக்கலாமே? ஆனால் இரண்டு ஸ்டார்களும் என்ன செய்தார்கள்?

அஜித் கருப்பு சட்டையைப் போட்டுவிட்டு உண்ணாவிரத்த்தில் போஸ் கொடுத்தார். ரஜினி ஒகேனக்கல் பிரச்சினைக்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஏன்? தனது ஊதியம், வர்த்தகத்திற்கு பிரச்சினை என்றால் இவர்கள் அவுத்துப்போட்டு ஆடவும் செய்வார்கள். விட்டால் ஊர் ஊராக ஓடவும் செய்வார்கள்.

இத்தகைய மோசடிப் பேர்வழிகளைப் போய் தன்மானத்திற்காக குரல் கொடுத்த சிங்கங்கள் என்று புகழ்ந்தால் சுண்டெலிகள் கூட தற்கொலை செய்து கொள்ளும். எனில் ரஜனி மற்றும் அஜித்தின் தன்மான பின்னணியில் இருப்பது என்ன? பச்சையான சுயநலம். தனது நட்சத்திர அந்தஸ்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் திமிர். பொது நலன், அரசியல் போன்ற விசயங்களில் எங்களை இழுக்காதீர்கள் என்று ஒதுங்கிக் கொள்ளும் தந்திரம். இவர்களைப் போல சுயநலவெறியர்களாக இருந்திருந்தால் சார்லி சாப்ளின் என்ற அந்த மகத்தான கலைஞனின் இறுதி வாழ்க்கை பிரச்சினையில்லாமல் இருந்திருக்கும். ஆனால் மக்களுக்காகவும் நீதிக்காகவும் அந்தக் கலைஞன் தனது நட்சத்திர தகுதியை கைவிட்டான்.

இந்த விடயத்தை பலரும் கலைஞருக்கு ஜால்ரா போட மறுத்த விசயமாக மட்டும் பார்ப்பதில் பலனில்லை. கருணாநிதியை எதிர்ப்பது வேறு. அதற்காக இரண்டு அல்பைகளை தூக்கி வைத்துக் கொண்டாடுவது வேறு. ரஜினியை வைத்து முதலாளிகள் சம்பாதித்தது போல அந்த முதலாளிகளை வைத்து ரஜினியும் சம்பாதிக்கிறார். அதற்கு மாஸ் நடிகன் என்ற பம்மாத்து தேவைப்படுகிறது. ஆனால் ரஜினியின் மாஸ் பேஸ் என்ன என்பதை அவரது புகழ்பெற்ற பாபா படம் வரும்போது ரஜினி தலைமை ரசிகர் மன்றம் இருக்கும் திருச்சியிலேயே நேருக்கு நேர் சந்தித்து விரட்டியிருக்கிறோம்.

தமிழ்சினிமா உருவாக்கியிருக்கும் இரசனைதான் தமிழ்மக்களின் எல்லாப் பார்வைகளிலும் ஊடுருவியிருக்கிறது. அரசியல், சமூகப் பிரச்சினைகளின் பால் உள்ள அக்கறையற்ற நிலைக்கும் கூட இதுவே அடிப்படைக் காரணம். இந்த பலவீனத்தை வைத்தே தமிழ் சினிமாவின் பிரபலத்தை எல்லா அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக் கொள்ள முனைகின்றனர். இன்று கட்சிக் கூட்டங்கள் கூட குத்தாட்ட நடன கேளிக்கைகளாக மாறிவருகின்றன. இப்படி சினிமா என்பது நம்மை மேலும் மேலும் சமூகத்திடமிருந்து அன்னியப்படுத்துகிறது.

விலைவாசி உயர்வு, முல்லைப் பெரியாறு, பழங்குடி மக்களின் துயரம், வன்னி முகாம் அவலம் என்ற கண்ணை அறுக்கும் யதார்த்தத்தில் அஜித்தின் தன்மானப் பிரச்சினைதான் நமது பேசுபொருளாக என்றால், நம்மை அந்த பழனி பிக்கினி முருகனால் கூட காப்பாற்ற முடியாது.

அயோக்கியர்களுக்கும் காலிகளுக்கும் ஏற்ற அரசாங்கம்தான் இனி உருவாகும்…


சாதாரணமாக, நம் நாட்டில் கடவுளுக்கு உருவங்கள் ஏற்படுத்தி, வழிபாடு செய்யத் தொடங்கிய காலம் 2000, 3000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாகவே இருக்கலாம். அதாவது ஆரியர் நம் நாட்டிற்கு வந்து, அவர்களது (ஆரிய) மதத்தைப் புகுத்தி, அதன் மூலம் கடவுள்களைக் கற்பித்து, அவற்றிற்கு உருவங்கள் ஏற்படுத்தின காலத்தில் இருந்தே, நம் நாட்டில் உருவக் கடவுள்கள் காட்சியளித்து வருகின்றன எனலாம். அதற்கு ஆதாரம் என்னவெனில், எந்தக் கடவுளது உருவத்தை எடுத்துக் கொண்டாலும் ஆரிய மதக் கதை சம்பந்தமும், ஆரியத் தோற்ற சம்பந்தமும் இல்லாமல் காண்பது அரிதாகவே இருக்கிறது.

ஆகவே, இந்தப்படி 3000, 4000 ஆண்டுகளாகக் கடவுளை உருவமாக்கி, மக்களுக்குக் காட்டி, கடவுள் தன்மை ஊட்டி வந்தும், இன்றைக்கும் பாமர மூட ஜனங்கள் மாத்திரம் அல்லாமல் பண்டிதர்கள், ஞானிகள் என்பவர்கள் முதல், பெரும் மேதாவிகள் என்பவர்களுக்குக்கூட உண்மையான கடவுள் பக்தி, அவரவர் நடப்பில் கடவுள் தன்மை, பகுத்தறிவு ஆகியவை ஏற்படவில்லை என்றால் மூடர்களுக்குக் கடவுள் பக்தி ஏற்படுத்துவதற்காக உருவம் (விக்கிரகம்) கற்பிக்கப்பட்டது என்பதில்ஏதாவது உண்மையோ, பலனோ, அறிவுடைமையோ உண்டு என்று யாராவது கொள்ள முடியுமா?

மற்றும், நித்தியமான சர்வ சக்தியும், சர்வ வியாபகமும் உள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால், கடவுள் என்பதாக ஒன்று உண்டா இல்லையா என்பதாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்படுவானேன்? சிலருக்குக் கடவுள் இல்லை என்றும் இருக்க முடியாதென்றும் தோன்றுவானேன்? ஏதோ “அறிவிலி’களுக்கு இப்படித் தோன்றுகிறது என்று கொள்வதானாலும், “அறிவாளி’களுக்குக் கடவுளைக் காப்பாற்ற வேண்டும், கடவுள் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் தோன்றுவானேன்? கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று குழந்தைகளுக்கும், பள்ளிப் பிள்ளைகளுக்கும் கற்பிக்க முயற்சி செய்வானேன்?

அவைதாம் போகட்டும் என்றாலும், கடவுள் அவதாரம் என்றும், கடவுள் தன்மை அடையப்பெற்ற பெரியார்கள் என்றும், கடவுள் மனித ரூபமாய், பன்றி ரூபமாய் மற்றும் ஏதேதோ ஆபாச ரூபமாய் காணப்படுவானேன்? கடவுளுக்குக் குமாரரும், தூதுவரும், அசரீரியும், மக்கள் மீது மருளும் அதாவது சாமியாடுதலும் ஏன்?

இப்படிப்பட்ட நடவடிக்கைகள் மெய்யாய் இருந்தாலும், பொய்யாய் இருந்தாலும் இவை கடவுள் இருப்பதை ஊர்ஜிதம் செய்யவோ அல்லது மக்களுக்கு கடவுளால் பயன் ஏற்படவோ, அல்லது உலக நடப்புக்காவது, மனித சமுதாய நல்வாழ்வுக்காவது ஏதாவது பயன் ஏற்படுமா என்பது மிகவும் சிந்திக்க வேண்டியதாகும்.

இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும் இனிமேலாவது மனித சமுதாயம் பயமும் கவலையுமற்று, சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும் காலம்.

எப்படி எனில், மக்கள் இனி சுலபத்தில் சாகமாட்டார்கள். இதுவரை நம் மக்களுக்கு சராசரி ஆயுள் 25 என்றால், இனி மக்கள் சராசரி ஆயுள் வயது 50க்கும் மேற்பட்டுத்தான் இருக்க முடியும். சுகாதாரம் அதிகம்; வைத்திய வசதி அதிகம். மனிதன் நோய்களையும், துன்பங்களையும் கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு அற்பாயுளாகப் போய்க் கொண்டு இருந்தவன், தன் முயற்சியில் நம்பிக்கை வைத்துப் பரிகாரம் தேடி மீளுகிறான். மனிதனுக்குப் பல துறைகளில் அறிவு உணர்ச்சி ஏற்பட்டு, வாழ்வை நீட்டிக் கொள்ள வசதி பெற்றுவிட்டான்.

இது போலவே, மக்கள் பிறப்பும் அதிகமாகிவிட்டது. கர்ப்பச் சிதைவு, சிசு மரணம், பிரசவ மரணம் இனி சுலபத்தில் ஏற்படாத மாதிரி பாதுகாப்புகள், பரிகாரங்கள் ஏற்பட்டு விட்டன. இனி மலடும் இருப்பதற்கு இல்லாமல் நிவர்த்தி மார்க்கங்கள் ஏற்பட்டு விட்டன. இனி விதவைகளாகவும் எவரும் காலம் கழிக்க முடியாமல் விதவை மணம், சுதந்திர காதல் முதலியன செலவாக்குப் பெற்று, சாதாரணமாய் நடப்பில் வருவதின் மூலம் அவற்றாலும் பிறப்பு அதிகமாகின்றது.

பொதுவாக, பிறப்பு விகிதங்களும் பலவகை சவுகரியங்களால் நபர் 1–க்கு 2,3,4 என்பதாகக் குழந்தைகள் இருந்து வந்தது மாறி, இப்பொழுது நபர் 6,8,10,12 என்பதாகக் குழந்தைகள் பிறப்பதும், அவைகளும் நீண்ட நாள் வாழ்வதுமாக இருக்கின்றன. இவர்களுக்கு எல்லாம் உணவு, போக போக்கியப் பொருள், பிழைப்பு, நல்வாழ்வு ஆகியவை தேவைப்படுவதுடன் உணவுப் பஞ்சம் ஏற்பட்டே தீரும். இவைகளில் பெரும் போட்டியும் அதன் பயனாய் வெறுப்பு, வஞ்சகம், துரோகம், கொள்ளை, கொலை முதலியவைகள் மலிந்துவிடும். சாதுவும் யோக்கியமுமான மக்கள் மிகமிகத் துன்பமடைய நேரிடும். அயோக்கியர்களும் காலிகளுமே நல்வாழ்வு வாழ்வார்கள். அதற்கேற்ற அரசாங்கந்தான் ஏற்பட முடியும்.

ஆரியர் கற்பும் – திராவிடர் கற்பும்


கற்பு பெண்களுக்கே உரியது. ஆண்கள் கற்பாய் இருப்பதற்குத் தமிழில் வார்த்தைகளே கிடையாது. ஏன் ஆரியத்திலும் வார்த்தைகளே கிடையாது.

அதுமாத்திரமா? உலகில் வேறு எந்த மொழியிலும் வார்த்தைகள் இருப்பதாகக் காணப்படுவதில்லை. என்றாலும் இருக்குமோ என்னமோ தெரியாது. நம் நாட்டு ஆண்கள் கற்பாய் இருக்கவேண்டும் என்பதற்கு மதக் கட்டளை இருப்பதாகக்கூடத் தெரியவில்லை. கடவுள்களாவது கற்பாக இருந்தார்களா என்றால் அதையும் காணமுடியவில்லை.

ஆரியர் கற்பும் – தமிழர் கற்பும்

அது எப்படியோ போகட்டும். பெண்கற்பு தமிழர்களுக்குத்தான் தொல்லையாக முடிந்ததே தவிர ஆரியர்க்கு அதில் எவ்விதத் தொல்லையுமில்லை. ஆரியர் கற்புக்கும் தமிழர் கற்புக்கும் தத்துவத்திலேயே (டெபனிஷனிலேயே) அதிக வித்தியாசமிருக்கிறது.

ஆரியர் கற்புக் கு வியாக்கியானம் அதாவது யோக்கியதாம்சம் வெகு சுலபமானது.

எப்படி என்றால் கற்புக்கும் பிற புருஷரைக் கூடுவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாகவே தெரிகிறது. எடுத்துக்காட்டாகச் சொல்லப்போனால் அருந்ததி, திரவுபதை, சீதை, அகலியை, தாரை, பிருந்தை முதலியவர்கள் தலை சிறந்த கற்புக்கரசிகள். இவர்களை நினைத்தாலே சகல பாபமும் நாசமாகிவிடும் என்பதோடு இவர்கள் கடவுள்களாகவும் விளங்குகிறார்கள்.

அருந்ததியின் கற்பு

இவர்களுள், அருந்ததியானவள் பெண்களுக்கு விபசாரித்தனம் செய்ய லைசென்சு கொடுத்தவள். உலகத்தில் ஒழிந்த இடமும் ஆண்பிள்ளைகளும் இருக்கிறவரை பெண்கள் கற்பாக இருக்க முடியாது என்று சொன்னவள். அதாவது இயற்கையாக யாரும் கற்பாக இருக்க முடியாது என்பது ஆகச் சொன்னவள். அப்படி இருக்க விபசாரித்தனத்துக்குத் தண்டனை இருக்கவும் நியாயமிருக்காது. திரவுபதையின் கற்புநெறி திரவுபதை அதை நடத்தையில் காட்டினவள். அய்ந்து பேருடன் நான் கலவி செய்து வந்தும், ஆறாவது புருஷன் மீது எனக்குக் காதல் இருந்து வந்தது. என் இருதயம் இவைகளை விபசாரித்தனம் என்று கருதவே இல்லை. ஏனெனில் ஆண் பிள்ளைகள் உலகத்தில் இருக்கும்போது பெண்கள் எப்படிக் கற்பாயிருக்க முடியும் என்பதாகக் கூறிவிட்டாள்.

உடற்சம்பந்தத்தால் கற்பு கெடாது

சீதை என் மனம் ஒருவரிடமும் விருப்பம் கொள்ளவில்லை. என் உடலைப் பற்றி நான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஓங்கி அடித்து விட்டாள். ஆதலால் உடல் சம்பந்தத்தால் கற்பு கெடுவதில்லை என்று சீதை ஒரு விலக்கு விதி ஏற்படுத்திவிட்டாள்.

விபசாரித்தனத்துக்கு இலக்கியம்

தாரையின் கற்பு சங்கதி விபசாரித்தனத்துக்கு ஏற்படுத்தப்பட்ட ஓர் இலக்கியக் கலையாகும். விபசாரித்தனம்தான் பெண் ஜென்மத்துக்கு இன்பமளிக்கக் கூடிய சாதனம் என்பதாக விளக்கியவள் தாரையே.

அகலிகை கற்பு சங்கதி

நல்ல பெண்களைக் கண்டால் எப்படிப் பட்டவனானாலும் ஆசைப்படுவது இயற்கை யென்றும், கவுரவமும் பெருமையும் உள்ள மனிதன் ஆசைப்பட்டால் பெண்கள் மனம் இளகுவது இயற்கைதான் என்றும், இதனால் தப்பிதம் ஒன்றும் இல்லை யென்றும், புருஷனுக்குக் கோபம் வருவதும் அந்தச் சமயத்தில் இயற்கையென்றும், பிறகு அது மாறிப்போகும் என்றும், அனுபவித்த இன்பம் எந்நாளும் மனத்தில் நிலைத்திருக்கும் என்றும் எடுத்துக்காட்டினவள்.

ஆரியர்களில் இந்தத் தெய்வீகப் பெண்களின் கற்பு இப்படி இருக்குமானால் மற்றச் சாதாரணப் பெண்களின் கற்பைப் பற்றிப் பேசுவது நேரத்தைக் கொலை செய்வதாகும். ஆரியர்களின் கற்பு இந்த விதமான யோக்கியதாம்சங்கள் கொண்டிருப்பதால் அவர்கள் மேலோர்களாகவும் உண்மையான மேன்மையான வாழ்வு வாழ்கின்றவர்களாகவும் இருந்து வருகிறார்கள்.

தமிழர்களின் கற்பு தமிழன் கதியைப்பார்த்தால் பரிதாபகரமாய் இருக்கிறது. கண்ணகி கற்பு அவர்கள் வாழ்வையே கெடுத்துவிட்டது. அவ்வளவுதானா? அவர்கள் அரசர்களையும் கெடுத்தது; அவர்கள் நாட்டையும் கெடுத்தது; ஒரு முலையும் திருகி எடுக்கப்பட்டது. இவ்வளவோடு போகாமல் நிரபராதிகள் எல்லாம் வெந்து சாம்பலானார்கள். அது மாத்திரமா? நினைத்தாலே இரத்தம் கொதிக்கிறமாதிரி பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் வெந்து சாம்பலானார்கள்.

இது தமிழ்க் கற்புக்கரசியின் கண்ணகியின் கட்டளையாம். இப்படிக் கட்டளை இட்டவளுக்குக் கோவிலாம், கொண்டாட்டமாம். இவள் பாண்டிய நாடு பூராவையும் எரித்துச் சாம்பலாக்கி இருந்தால் இன்னும் பெரிய கடவுளாக ஆயிருப்பாள் போலும். ஆகவே ஆரியர்கள் கற்பு முறை அவர்களுக்கு எவ்வளவு இலாபத்தைக் கொடுக்கிறது என்பதும் அவர்களைப் பார்த்துக் காப்பி அடிக்கும் தமிழர்கள் கற்பு முறை நமக்கு எவ்வளவு தொல்லையையும் கேட்டையும் கொடுமையையும் கொடுக்கிறது என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

கற்பு மக்களுக்கு வேண்டும், கட்டாயம் வேண்டும் ஆனால் ஆண்களை அயோக்கியர்களாக ஆக்கும் கற்பு அயோக்கியர்களாக ஆவதற்கு வசதி அளிக்கும் கற்பு, தூண்டும் கற்பு, குடும்பத்தை, வாழ்க்கையை, பெண் உரிமையைக் கெடுக்கும் கற்பு, மனித சமுதாயத்து ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும், குழந்தை, குட்டி, பெற்றோர், உற்றார் ஆகியவர்களுக்காகிலும் எவ்விதப் பயனும் அளிக்காது. அளிக்காது என்பதோடு அதற்கு ஒரு மோக்ஷமுண்டு என்பது மகா அயோக்கியத்தனம் என்றே சொல்லுவேன்.

அய்ந்து பாதகங்கள்!


முதல் பாதகம் :- ஒன்று

பார்ப்பனன் ஓட்டலுக்குச் (உணவகத்துக்குச்) செல்வது.

நமது தன்மானத்திற்குக் கேடு. நாமே பார்ப்பனரை மேல் ஜாதி என்று கருதுகிறோம் என்பதாகும்.

நம்மவர்கள் ஓட்டல், சிற்றுண்டி சாலை, உணவு விடுதி முதலியவைகள் ஏற்படுத்துவதையும், நம்மவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதையும், நம்மவர்கள் பொருளாதார வசதி உயர்வதையும் தடுக்கிறது. உண்மையிலேயே “நாம் கீழ் ஜாதி என்று பார்ப்பனரால் ஆக்கப்பட்டிருக்கிறோம்” என்பதை நாமே நம்பவில்லை; உணரவில்லை என்பதைக் காட்டுகிறது.

ஜாதி ஒழிப்புக்கு ஆக இவ்வளவு பெரிய கிளர்ச்சி நடக்கிற போதும், “பார்ப்பான் ஓட்டலுக்குப் போவதில்லை; அங்குச் சென்று உணவருந்துவதில்லை; சிற்றுண்டி அருந்துவதில்லை என்று 10000 பேருக்கு மேல் தங்கள் உறுதிமொழி கையொப்பமிட்டு பெயர்கள் விளம்பரப்படுத்தி இருக்கிறபோதும், ஏறத்தாழ 700 பேர் வரை பார்ப்பனர் ஓட்டல் முன் நின்று மக்களை வேண்டிக் கொண்டு அதற்கு ஆக 5 வாரம், 4 வாரம், 3 வாரம், 2 வாரம், ஒரு வாரம் தண்டனை பெற்றுச் சிறை சென்றும், சுமார் 1,00,000 ரூபாய் (ஒரு இலட்சம் ரூபாய்) வரை அபராதம் செலுத்த வேண்டுமென்று தண்டிக்கப்பட்ட பின்பும் மற்றும் பல பெரும் உயிர் தியாகப் பெரும் கிளர்ச்சிகள் நடக்கும் போதும், தமிழன் – திராவிடன் ஒருவன் பார்ப்பான் ஓட்டலுக்குப் போவான், போகிறான் என்றால் அவன் குலத்தின் கண் அய்யப்பட வேண்டியதைத் தவிர அப்படிப்பட்டவனைப் பற்றி மக்கள் வேறு என்னதான் எண்ணுவார்கள்? வேறு என்னதான் எண்ண முடியும்? அப்படிச் செல்லுவதானது தன்குலம் இன்னது என்று காட்டிக் கொள்வதைத் தவிர வேறு என்ன காரியத்திற்காகவது பயன்படுமா?

பாதகம் :- இரண்டு – பார்ப்பனரைப்பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் வரும்போது அவர்களைப் பிராமணர்கள் என்கிற சொல்லால் குறிப்பிடுவதானது.

இது நம்மை நாமே சூத்திரன் என்று ஒப்புக்கொண்டதாகிறது அல்லவா? அவன் பிராமணன் என்றால் நாம் யார்? அந்த முறையில் நம்மைக் குறிப்பிடும் சொல் ‘சூத்திரன்’ என்பதைத் தவிர வேறு என்ன இருக்கிறது? “பிராமணன்” என்ற சொல்லால் ஒருவரைக் குறிப்பிடுவதைத் தவிர வேறு சொல் இல்லாவிட்டால், வேறு சொல்லால் சொன்னால் ஒருவரின் வகுப்பு, குறிப்பு, அடையாளம் தெரியாது என்ற நிர்பந்தம் (கட்டாய நிலை) இருந்தால் மாத்திரம் அப்படிக் குறிப்பிடலாம். ஆனால் அந்தப் பெயரைக் குறிப்பிடாமலேயே வேறு சொல்லால் குறிப்பிடலாம் என்பதற்குத் தக்க சொல்லாகப் ‘பார்ப்பனர்’ என்கிற தமிழ்ச் சொல்லே இருக்கும்போது, ஒருவரைப் ‘பிராமணன்’ என்கிற சொல்லால் குறிப்பிட்டால் நமக்கு மானம் இல்லை; அறிவு இல்லை; மனித உணர்ச்சி இல்லை.

நாட்டில் மற்றத் தமிழர்கள் நடத்துகிற கிளர்ச்சிகளுக்கு விரோதமாய் நடந்து, பார்ப்பனருக்கு அடிமையாகி, எப்படி எப்படி ஈனப் பிழைப்பையாவது நடத்தி வாழவேண்டுமென்கிற இழிநிலையில் இருப்பவர் நாம் என்பதல்லாமல், இதற்கு வேறு என்ன பெயர்க் கருத்து கொள்ள முடியும்.

பாதகம் : மூன்று – தீபாவளி கொண்டாடுவது

இது ஒரு பொய்க்கதையை, அதுவும் காட்டமிராண்டித்தனமான முட்டாள் தன்மை கொண்ட, ஒரு துவேஷ சூழ்ச்சித் தன்மையைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. திராவிடனை இழிவுபடுத்திய, கொலை செய்ததாகிய கருத்தைக் கொண்ட கதையை அடிப்படையாகக் கொண்டது. கதை அறிவுக்கோ, ஆராய்ச்சிக்கோ, உண்மைக்கோ, படிப்பினைக்கோ சிறிதும் ஏற்றமும் பொருத்தமும் அற்றது தீபாவளி.

பாதகம் : நான்கு – சினிமாவிற்குப் போகக் கூடாது.

இந்த நாட்டில் சினிமா நடப்பதை அனுமதித்துவிட்டு, அதில் பங்கு கொண்டு ஆதரித்து விட்டு, அரசாங்கத்தின் அய்ந்தாண்டுத் திட்டத்தையும் ஊதாரிச் செலவையும், (வீண் கொள்ளை) வரியையும் கண்டிப்பவர்கள் ஒன்று மடையர்களாக இருக்க வேண்டும் அல்லது மக்களை ஏய்க்கும் அயோக்கியர்களாக இருக்க வேண்டும்.

அய்ந்தாண்டு திட்டம் நல்ல எண்ணத்தின் மீது இருக்க வேண்டும். அல்லது நம்மால் இன்ன காரியம் ஆயிற்று என்கின்ற பெருமை தங்களுக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட வேண்டும். இதுவும் கட்டுப்பாடான ஒரு சர்க்கார் (ஆட்சி) கொள்கை திட்டம் என்கின்ற பெயரால் நடத்தப்படுவது. இதில் உள்ள சுயநலம் மறுபடியும் தாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதாக இருக்கலாம். நீண்ட நாளாய் சட்டப்படி ஏற்பட்ட வரும்படியும் ஆதிக்காரர்களுக்கு இருக்கலாம்.

வசூலிக்கப்படும் வரியும் கணக்குக் காட்டி, வரவு செலவு பட்ஜெட் திட்டம் காட்டி மெஜாரிட்டி (பெரும்பான்மை) மக்களால் ஓட்டு செய்யப்பட்ட மக்கள், மெஜாரிட்டி (பெரும்பான்மை) ஓட்டுப்பெற்று நிறைவேற்றி, பெரிதும் பணக்காரர்களிடம் வரும்படியில் பங்கு என்னும் பேராலும், தொழிலின் மூலம் சம்பாதித்துக் கொண்டு, “சம்பாதித்துக் கொள்” என்னும் உரிமை கொடுத்து வசூலிக்கப்படுகிறதுடன் வரவுக்கும் செலவுக்கும் கணக்குக் காட்டப்படுகிறது.

ஆனால் சினிமாவின் (திரைப்படத்தின்) பெயரால் கதை எழுதுகிறவன், வசனம் எழுதுகிறவன், சாயம் பூசுகிறவன், நடிக்கிறவன், பாடுபடுகிறவன், முதலியவர்கள் யாருடைய பிரதிநிதிகள்? யாரிடம் ஓட்டுப் பெற்றவர்கள்? எதற்காக வசூலிப்பவர்கள்? என்ன கணக்குக் காட்டுகிறவர்கள்? இவர்கள் தகுதிக்கு, தேவைக்கு எந்தவித முறையில் கணக்குப் பார்த்து, என்ன செலவுக்கு யாருக்குக் கணக்குக் காட்ட, என்ன பொதுநலத்திற்கு என்ற கொள்ளை கொள்ளையாக வசூலிக்க வேண்டியதாகிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

சினிமா (திரைப்பட) முதலாளிகளாவது மக்களின் முட்டாள் தனத்தையும் மிருகக் காட்டுமிராண்டி உணர்ச்சியையும் முதலாக வைத்துக் கொண்டு வசூலிக்கிறார்கள். 10 லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிவிட்டுப் பல கோடிக்கணக்கில் வசூல் செய்து பணம் சம்பாதிக்கிறார்கள் என்பது அல்லாமல் வேறு ஏதாவது சினிமா முதலாளிகள் கொள்ளைக்கு நியாயமோ சமாதானமோ சொல்ல முடியுமா?

அல்லது மேற்கண்ட இக்கூட்டத்தார் எல்லோரும் கொள்ளையடிக்கும் பணம் 100க்கு 99 பாகம், குடி, கூத்தி, விபசாரம், சூதுவாது ஆகிய காரியங்களுக்குப் பாழாகிறதல்லாமல் வேறு பலன் எதற்குப் பயன்படுகிறது? இதில் ஈடுபடுபவர்கள் ஆணோ, பெண்ணோ, செல்வவானோ, புலவனோ, அறிஞனோ, யாரானாலும் இந்த மேற்கண்ட கதிகளுக்கு ஆளாவதல்லாமல் கடுகளவு மனிதத் தன்மைக்கோ, நல்வாழ்வுக்கோ, மக்களுக்கு நன்மை ஏற்படவோ பயன்படுகிறார்களா? என்பதையும் சிந்தித்தால் அத்தனையும் கேடும் நாசமுமாகத்தான் இருக்கும்.

இதைப் பார்ப்பவர்கள் மிருக உணர்ச்சி என்பதன் பரிகாரத்திற்கு ஆகவே பெரும்பாலான ஏழை மக்கள், எளிய மக்கள் தங்கள் குடும்பவாழ்வுக்கு நியாயமாய்ச் செலவு செய்ய வேண்டிய இன்றியமையாப் பணத்தை நாசமாக்குகிறார்கள். இதன் மூலம் ஆணும், பெண்ணும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பதான 3-வயது முதல் 90 வயது வரை உள்ள பெண்களும், அதுபோலவே உள்ள ஆண்களும் ஒழுக்கத்தில் கேடு கெட்ட கடையர்கள், காமாதுர, தூர்த்தர்கள் ஆகிப் பொது ஒழுக்கம், நாணயம், நம்பிக்கை, நன்றியறிதல் ஆகிய காரியங்களில் கீழ்மக்களாகவே தங்களை அறியாமலேயே ஆகிவிடுகிறார்கள். இந்த வகையான மனித சமுதாய ஒழுக்கக்கேட்டிற்குக் காந்தியும், காங்கிரசும், தேர்தலும், அரசியலும் காரணங்களாக இருந்தாலும் இந்தச் சினிமா வந்த பிறகு இந்தத் துறை பணந்திரட்டவும் கலைஞானத்திற்குப் பொது நலத்திற்கு என்று உழைப்பவர்களுக்கு ஒரு சாதனமாகக் கொள்ளப்பட்ட பிறகு திடீர் வளர்ச்சிக்குக் காரணமாகிவிட்டது.

காந்தி, காங்கிரஸ் தேர்தல் முதலியவைகள் பற்றிச் சிலருக்கு அபிப்பிராயபேதம் இருந்தாலும் இக்கேடுகளுக்குச் சினிமாவே முக்கியக் காரணம் என்பதில் பாபு ராஜேந்திரர், ஜவகர்லால் நேரு முதல் ராஜாஜி வரை மாறுபட்ட கருத்தில்லாமல் காமராசர் முதல் காங்கிரசுக் கண்ணீர்த் துளி வரையில், சங்கராச்சாரி பண்டார சந்நிதிகள் முதல் வீரமுத்து சாமியார்கள் வரையில் மற்றும் பெரும் பெரும் புலவர் அறிஞர், பொது வாழ்வில் பெயர் பெற்ற உலக அறிஞர் முதல் காங்கிரசுக்காரர்கள், கம்யூனிஸ்ட்கள், சோஷயலிஸ்ட்கள் வரை எல்லாத் துறை மக்களும் சினிமாவை மனித சமுதாய நல்வாழ்வுககும் ஒழுக்கத்திற்கும் கேடானது என்றே சொல்லி விட்டார்கள். அதில் ஈடுபட்டவர்கள், அதனால் மனிதர்கள் மனுஷிகள் ஆனவர்கள், வாழ்வு நடத்துபவர்கள் தவிர எல்லோரும் சினிமா கேடானது, ஒழுக்கக் கேடானது, ஏழை மக்களைப் பிடுங்கித்தின்பது என்று சொல்லி விட்டார்கள். மற்றும் சொல்ல வேண்டுமானால் நகைச்சுவையரசு என்.எஸ். கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா முதற்கொண்டு சில கலைஞர்களும் சொல்லிவிட்டார்கள். இனி யார் சொல்ல வேண்டும்?

பாதகம்: அய்ந்து – இராட்டினம் சுற்றுவது, இராட்டினம் சுற்ற வேண்டாம்; கதர் கட்ட வேண்டாம் என்பது நம் கொள்கை.

இராட்டினம் அல்லது கைராட்டை என்பது அறிவுப்பெருக்கமில்லாமல், காட்டானாய் இருந்த காலத்தில் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு சாதனமாகும். எதுபோலவென்றால், மனிதன் நெருப்பு உண்டாக்குவதற்குச் சக்கி முக்கிக் கல்லைக் கண்டு பிடித்தது போலும், விளக்குக்கு மண் அகலை எண்ணெய் விளக்குக் கண்டுபிடித்தது போலும், மனிதன் போக்கு வரவுக்குக் கட்டை வண்டியைக் கண்டுபிடித்தது போலவும், உடைக்காக நூல் நூற்க இராட்டினமும், துணி நெய்ய கைத்தறியும் கண்டு பிடிக்கப்பட்டதாகும்.

அவைகளில் சக்கிமுக்கிக் கல்லுக்குப் பதில் நெருப்புக் குச்சியும் சிம்னி விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று மின்சார நெருப்பும் மின்சார (Electric) விளக்கும் கண்டுபிடிக்கப்பட்டு அமலுக்கு வந்துவிட்டதுடன் வராத இடங்களில் மக்களுக்கு அதிக வேட்கையும் ஏற்பட்டுவிட்டது. கட்டை வண்டிக்குப் பதில் சைக்கில் (மிதிவண்டி), மோட்டார், ஆகாய விமானம் ஏற்பட்டு விட்டன. இராட்டினத்திற்குப் பதில் நூற்பு யந்திரமும், கைத்தறிக்குப் பதில் நெசவு யந்திரமும் ஏற்பட்டு உலக முழுவதிலும் அமலுக்கு வந்திருப்பதோடு இந்த இரண்டு சாதனங்களினாலும்தான் மக்களுக்கு வேண்டிய அளவுக்கு ஆடை அளிக்க முடியும் என்கிற நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இராட்டினத்தைக் கொண்டு நூல் நூற்கச் செய்வதென்பது, நெருப்புக்கு சக்கிமுக்கிக் கல்லையும், வழிப்பயணப் போக்குவரத்துக்குக் கட்டை வண்டியையும் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறவன் புத்திக்கு எவ்வளவு மதிப்பு கொடுக்க முடியுமோ அந்த அளவு மதிப்புதான் கொடுக்கத் தக்கதாகுமே ஒழிய, வேறு எந்தவித்திலும் கைராட்டினம் புகுத்தியவர்களை இக்கால மனித வளர்ச்சித் தன்மைக்கு ஏற்றவர்கள் என்று சொல்ல முடியாது.

எப்படியிருந்தாலும் காந்தியாரால் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இராட்டினம் அநேகமாக ஒழிந்து போய்விட்டதென்றே சொல்லலாம். அதுவும் யாராலும் ஒழிக்கப்படாமல் தானாக ஒழிந்து போய்விட்டது! எப்படியெனில் பழையகால இராட்டினமாகிய (காந்திராட்டினம்) ஒரு கதிர் இராட்டினம் மறைந்துவிட்டது.

என்ன சொல்லிக் கொண்டு மறைந்தது என்றால், “மக்களின் வாழ்வுக்கு (இராட்டினம் சுற்றுகிறவர்களுக்குக் கஞ்சி வார்க்க) ஒரு கதிர் இராட்டினம் போதாது, உதவாது, ஆதலால் நான் போகிறேன் அடுப்புக்கு” என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது! இக்கருத்தை இராட்டினம் புகுத்தப்பட்ட காலத்தில் அறிவு சுதந்திரமுள்ள மக்கள் அத்தனை பேரும் எடுத்துக் கூறினார்கள் என்றாலும், காந்தி சர்வாதிகார காலத்தில் அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டதுடன், இராட்டினம் தானாகவே நான் சாகப்போகிறேன் என்று சொன்ன காலத்தில் காந்தியாரே ‘இது வேண்டாம், வேறு ஏதாவது நூல் யந்திரம் போல் பல கதிர் இராட்டினம் கண்டு பிடித்ததாக வேண்டும்’ என்கின்ற அவசியத்திற்கு (கட்டாயத் தேவைக்கு) வந்துவிட்டார்.

அதுபோலவே கைத்தறிக்காரர்களும் பட்டினியால் சாக ஆரம்பித்த பின்பு, விசை நாடா தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறி முதலிய பலரக கைத்தறி முதலிய பலரகத் தறிவந்து பழைய கைத்தறி அனேகமாய் அடுப்புக்குப் போய்விட்டது. இந்த நிலையில் ‘காந்திக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்’ என்கின்ற பெயரால் கல்வித்துறையில் கைராட்டினத்தையும், கைத்தறியையும் புகுத்திக் கூத்தடிக்கிறார்கள் காங்கிரஸ் ஆட்சியாளர்கள்.

கதர் (செலவு) துணி என்பது சுத்த காட்டுமிராண்டித்தனமானது. பொருளாதாரத்தையும், நாகரிகத்தையும் கொலை செய்யக் கூடியது என்று தெரிந்தும், பொதுமக்கள் வரிப்பணத்தை நாசமாக்கும் தன்மையில் ஆண்டு ஒன்றுக்குப் பல கோடி ரூபாய்களைக் கதர் வளர்ச்சிக்கு என்று உதவித் தொகையாகக் காங்கிரஸ் அரசாங்கம் கொடுத்துக் கதரைச் சாகாமல் காப்பாற்றி வருகிறது.

இது அதாவது இராட்டினம், கதர் என்கின்ற இரண்டு சாதனமும் அரசியல் விவகாரம் என்கின்ற தன்மையில் இன்று இந்த நாட்டில் உலவிக் கொண்டு இருக்கின்றன.

காந்தியையும், காங்கிரசையும் ஆதரிக்கிறவர்கள் என்பவர்களுக்கு இவை இரண்டும் சின்னங்களாக இருந்து வருகின்றன.

இவைபற்றி இன்னும் அநேகம் சொல்ல இருக்கின்றன என்றாலும் எடுத்துக் கொண்ட விஷயத்திற்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்.

ஆகவே தோழர்களே!

1. பார்ப்பான் ஓட்டலுக்குப் (உணவகத்துக்குப்) போகாதீர்கள்.
2. பார்ப்பானைப் பிராமணன் என்று சொல்லாதீர்கள்.
3. தீபாவளி கொண்டாடாதீர்கள்.
4. சினிமாவுக்குப் போகாதீர்கள்.
5. இராட்டினம் சுற்றுவதும், கதரை உடுத்துவதுமான காரியம் செய்யாதீர்கள்.

தோழர்களே! நான் வேண்டிக் கொள்வதை சிந்தித்து இந்த அய்ந்து காரியத்தையும், பஞ்சமாபாதகம் என்பதாகவே கருதி, செய்வதினின்று நீங்கி, மானத்தையும், அறிவையும், ஆராய்ச்சித் திறனையும், ஒழுக்கத்தையும், பொருளாதாரத்தையும் காப்பாற்றுங்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

பெரியார் கன்னடராகவே இருந்தால்தான் என்ன?


பெரியார் கன்னடர் (தமிழர் அல்லாதவர்) என்றும், அதனால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆண்டு காலமாக தொடர்ந்து ஒரு பிரிவினரால் கூறப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில கருத்துக்கள்.

பெரியார் தனது 95 வயது வரையிலும் சமூக சமத்துவத்திற்காகவே தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று பேசினார்; போராடினார். சமூகத்தில் நிலவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் நேரடியாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி சாடினார் பெரியார். பெரியாரின் 60 ஆண்டுகால சமூகப் பணியின் முக்கிய கூறுகளாக பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு ஆகியவற்றை வரையறுக்கலாம்.

அவர் ஓர் ஆணாக இருந்தபோதும், அக்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் சிந்திக்காத, பேசாத அளவிற்கு அதிகமாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். அவரது ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் இன்றளவிலும் பெண்ணிய சிந்தனைகளுக்கு ஓர் அடிப்படை ஆவணமாக திகழ்கிறது. அக்காலத்தில் பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களான கணவனை இழந்தவர்கள், ‘தாசிகள் என்று தங்களை கருதிக் கொள்பவர்கள்’ போன்றவர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கவும் அவர்களும் சமூகத்தில் இயல்பாக வாழவுமான தன்னம்பிக்கையை அளிப்பதற்காக அவர் தொடர்ந்து பரப்புரைகள் மேற்கொண்டார். இன்று இந்தியச் சூழலில் பேசப்படுகிற பெண்ணிய கருத்துக்களுக்கு முன்னோடி பெரியார் என்பது மறுக்க முடியாத உண்மை. பெண் விடுதலைக்காக அவர் ஆற்றி வந்த பணிகளுக்காக பெண்கள் திரண்டு அவருக்கு சூட்டிய பெயர்தான் ‘பெரியார்’. பெண் விடுதலைக்கான கருத்துக்களை பெண்கள்தான் பேச வேண்டும், பேச முடியும் என்பது உண்மையே. ஆனால் நேர்மையாக பெண்களின் சிக்கல்களைப் புரிந்து அவர்கள் விடுதலை பெறத் தேவையான கருத்துக்களை முன் வைத்த பெரியார் ஒரு ஆண் என்ற ஒரே காரணத்திற்காக பெரியாரின் கருத்துக்களை பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பார்களாயின் அதனால் இழப்பு பெண்களுக்கே.

சாதியின் பெயரால் சமூகத்தில் இழிநிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் இழிவைப் போக்கி, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்க சாதி ஒழிப்பே முதன்மையான வழி என வரையறுத்தவர் பெரியார். இந்து மத ஒழிப்பு என்பது, அது கட்டமைத்திருக்கும் சாதியை ஒழிப்பதும், அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள படிநிலை சமூகத்தைத் தகர்த்து சமத்துவ சமூகத்தை உருவாக்குவதுமே. இந்து மதமும் சாதியும் ஒழிந்தால் மட்டுமே தமிழ்ச் சமூகம் சமத்துவ சமூகமாக மலரும் என்பதை அவர் உறுதிபடக் கூறினார். அதற்காகவே தனது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார். அவர் வலியுறுத்திய கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு போன்ற அனைத்தும் அடிப்படையில் சாதி ஒழிப்பையும் மதத்தின் பிடியில் சிக்குண்டுள்ள மக்களின் விடிவையும் கருத்தில் கொண்டதாகவே இருந்தது. மூட நம்பிக்கைகளிலேயே பெரும் மூட நம்பிக்கையாக அவர் சாதியைப் பார்த்தார்.

சமூகத்தின் வளங்களைச் சுரண்டி கொழிக்கும் ஆதிக்க சாதியினரிடமிருந்து தங்களுக்குரிய பங்கை ஒடுக்கப்பட்ட மக்கள் பெற சாதி ஒழிப்பே சரியான வழி எனக் கூறினார். ஆதிக்க சாதியினர் ஒரு போதும் சாதி ஒழிப்பை விரும்பியதில்லை. இந்து மதம் காப்பாற்றப் படுவது என்பது ஆதிக்க சாதியினரின் சமூக ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும் வலுப்படுத்துவதும் ஆகும். ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படும் ஒரு சமூகத்தில் ஆதிக்க நிலையிலிருந்தவர்களுக்கு இழப்பும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடிவும் ஏற்படும் என்பது நியதி. ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்திருந்த போதும் பெரியார் சாதி ஒழிப்பையே முதன்மைப்படுத்தினார். அவர் ஆதிக்க சாதியில் பிறந்தவர் என்ற காரணத்தைக் கூறி அவரது சாதி ஒழிப்புக் கருத்துக்களை புறந்தள்ளுவது சமூக இழப்பையே ஏற்படுத்தும்.

அதைப் போலவே, பெரியாரின் தாய் மொழி, சரியாகச் சொல்வதென்றால் அவரது முன்னோர்களின் தாய்மொழி தமிழாக இல்லாதபோதும், அவர் தனது வாழ்நாள் எல்லாம் தமிழர்களுக்காகவே உழைத்ததோடு, தமிழராகவே வாழ்ந்தார். தனது செயற்களமாக தமிழ்ப் பேசும் பகுதிகளையே கொண்டும் இருந்தார். பார்ப்பன பனியா ஆதிக்கத்திலிருந்த இந்திய தேசியத்தின் கீழ் தமிழர்களுக்கு விடிவில்லை என்பதோடு, சாதி ஒழிப்பிற்கும் சமத்துவ சமூகத்திற்கும் அது தடையும் கூட என்பதை உணர்ந்திருந்த அவர், அதிலிருந்து தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும் என வலியுறுத்தினார். தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை குறித்து முதன் முதலில் பேசியவர் பெரியாரே. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தை முதன் முதலில் முன் வைத்தவரும் அதற்காக போராட்டங்கள் நடத்தியவரும் பெரியாரே. அக்காலத்தில் தமிழ்த் தேசியம் பேசிய பல தலைவர்களும் சாதிக்குள்ளோ அல்லது இந்திய தேசியத்தைத் தாண்டாமலோ பேசியபோது இந்திய தேசியத்திலிருந்து வேறான, சாதி ஒழிந்த, சமூகத்தின் அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்குமான சமத்துவமான தமிழ்த் தேசியத்தை பேசியவர் பெரியார் மட்டுமே.

எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் மீண்டும் ஓர் ஆதிக்கத்தை நோக்கியதாக இருக்குமாயின் அந்த விடுதலைப் போராட்டத்தில் பொருளே இல்லை. அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஆதிக்கங்களையும் களைந்ததான விடுதலை மட்டுமே நீடித்து நிலைக்க முடியும். அதனால்தான் சாதிய ஒடுக்குமுறைகள் நீடிக்கும் நிலையில் இந்திய விடுதலை வெறுமனே ஓர் அதிகார மாற்றமே என்று கூறினார் பெரியார். அதைப் போலவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது, சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம், வர்க்க ஆதிக்கம் ஆகியவற்றையும் நீக்கக் கூடியதாக இருந்தால் மட்டுமே தமிழ்த் தேசிய விடுதலை நிலைத்திருக்க முடியும் என்பதை வலியுறுத்தியவர் பெரியார்.

பெரியாரின் இந்த பணிகள் அனைத்தும் சமூக மேம்பாட்டிற்கானதே அன்றி அவரது சொந்த நலன்களுக்கானது அல்ல. அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால்: “ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு ‘யோக்கியதை’ இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாய் கொண்டு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.” – நான் யார் – 1973

நாம் அவரை ‘தமிழர் தலைவராக’ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் போராடவில்லை. மக்கள் மீது, மானுடத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு மானுடத்தின் மேம்பாட்டிற்காக தனக்கு சரியெனப் பட்டவற்றிற்காக போராடினாரே ஒழிய யாருடைய பாராட்டையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து அல்ல. எங்கோ மாடு மேய்த்துக் கொண்டும், களைப் பறித்துக் கொண்டும், கல்லை வணங்கிக் கொண்டும் இருந்திருக்க வேண்டிய நாம் இன்று மானமும் அறிவும் உள்ள மக்களாக, கற்றறிந்தவர்களாக இப்படி வாதிட்டுக் கொண்டு இருப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் அவர்.

ஓடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களுக்குமான அவரது கருத்துக்களையும் பணிகளையும் அவரையும் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இழப்பு நமக்கே. ஏற்றுக் கொண்டவர்கள் பயனடைவார்கள். ஏற்றுக் கொள்ளாதவர்கள் நட்டமடைவார்கள். உண்மையில் – பெரியார் ஒரு ஆண், ஆதிக்க சாதியாளர், கன்னடர் – இப்படியான தரமற்ற அடிப்படையற்ற வாதங்களை முன் வைப்பவர்கள் தங்கள் அறியாமையையே வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

சொல்லப் போனால், இப்படியான பொருத்தமற்றக் காரணங்களைக் கூறி பெரியாரை ஏற்றுக் கொள்ள மறுக்கும் இவர்களின் வறட்டு கெளரவத்திற்கும், வீம்பிற்கும் பலியாகப் போவது தமிழர்களின் நலனே அன்றி பெரியாரின் பெருமை அல்ல.

தமிழர்களால் ஒடுக்கப்படும் தமிழர்கள்…


தமிழினத்திலே மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கும் ஆதித்தமிழர்களான அருந்ததிய மக்களின் முன்னேற்றத்தினை தடுக்க தலித் தலைவர்களே செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும் அருந்ததிய மக்களின் உரிமைகளுக்காகவும் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள் மீனகம் தளத்துக்கு அளித்த செவ்வி.
ஒடுக்கப்பட்டவனுக்கே ஒடுக்கப்பட்டவனின் வலியானது முழுமையாக தெரியும் என்பதற்கினங்க தமிழீழ மக்களுக்காக தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தியவர்கள் தமிழக சாதிவெறியர்களால் ஒடுக்கப்பட்ட மக்களான ஆதித்தமிழர்கள்.

தமிழினத்தில் இருக்கும் சாதிக்கொடுமைகளுக்கு எதிராக போராடிவரும் அம்மக்கள் அதே வேளையில் தமிழீழ மக்களுக்காகவும் எவ்வித அரசியல் சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் போராடிவருகின்றனர்.

தலித் மக்களை ஓட்டு இயந்திரமாகவும் , வெளிநாட்டில் பணம் பெற உதவும் பொருளாகவும் தலித் மக்களை சில தலித்திய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் வைத்திருக்கும் நிலையில் பல்வேறு கொடுமைகளுக்கு இடையிலும் இலங்கைக்கு கொண்டு செல்லவிருந்த இந்திய ராணுவத்தளவாட சென்ற வாகனத்தினை தாக்கிச் சிறை சென்றவர்களில் அருந்ததிய மக்களும் அதிகம், பெரியார் திராவிடர் கழகம் அமைப்பினரோடு ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் நீலவேந்தன் உட்பட பல அருந்ததிய இன மக்களும் அடங்குவர்.

இவ்வாறு தமிழகத்தில் ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் அருந்ததிய மக்களுக்காக போராடி வரும் அமைப்புகளில் ஒன்றான ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்கள் நமது மீனகம் தளத்துக்கு வழங்கிய செவ்வியினை இங்கே இணைத்துள்ளோம்.

மீனகம் வாசகர்களுக்காக செவ்வியின் வரி வடிவம்:

அருந்ததியினருக்கான இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலித் அமைப்புகள் மனு கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

இது உண்மையிலேயே சம நீதிக்கு சமூக நீதிக்கு எதிரான இந்துத்துவ கருத்தை உள்வாங்கிய தலைவர்களின் ஒரு போக்கு. உண்மையான தலித் தலைவர்கள் என்ற அவர்களின் முகத்திரை இன்று கிழிபட்டிருக்கிறது. தலித்துகள் என்று சொன்னாலே செருப்பு தைப்போர், மலம் அள்ளுவோர் என்ற நிலையே தமிழ் நாட்டில் இருக்கிறது. ஆனால், இதில் அதிகமானோர் அருந்ததியினர்.

இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தலித் தலைவர்களாக முன்வந்த அந்த தலைவர்கள் இன்றைக்கு இதற்கு எதிராக நிற்கிறார்கள், தமிழ் நாட்டில் 1/3 பங்கினர் அருந்ததியினர் இருக்கின்றார்கள். ஆனால், இவர்களின் பங்கு அரசியலிலும், பொருளாதாரத்திலும், தரத்திலும் பின் தங்கிய நிலை தான் காணப்படுகிறது.

இவர்களின் நிலையை அறிந்த தமிழக முதலைமைச்சர் இவர்களை கைதூக்கி விடுவதற்காக தான் இந்த உள்ளிட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கிறார். இந்த உள்ளிட ஒதுக்கீடு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கூடி ஓய்வு பெற்ற நீதிபதி அவர்களின் ஆலோசனையில் அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் முறையாக இன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் வழங்கப்பட்டிருக்கிற ஒதுக்கீடுகள் அனைத்துமே உள்ளிட ஒதுக்கீடுகள் தான். பார்ப்பனர்கள் முழுமையாக அனுபவித்துக் கொண்டிருந்ததை மாற்றி சூத்திரர்கள் என்று சொல்லப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வாங்கியதும் உள்ளிட ஒதுக்கீடு தான். அதற்கு பின் பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களிற்கு கொடுக்கப்பட்டதும் உள்ளிட ஒதுக்கீடு தான். மீண்டும் அதிலிருந்து வன்னியர்கள் போராடி ஒரு ஒதுக்கீட்டை பெற்றார்கள் அதுவும் உள்ளிட ஒதுக்கீடு தான்.

அதே போல முஸ்லீம்களிற்கும் இன்று கொடுக்கப்பட்டிருக்கிறது அதுவும் உள்ளிட ஒதுக்கீடு தான். இதை எல்லாம் எதிர்க்காத இந்துத்துவம் உருவாக்கிய இந்த போலி தலித் தலைவர்கள் இன்றைக்கு அருந்ததியினர் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது மிகவும் வேடிக்கையானது மட்டுமல்ல இவர்களெல்லாம் அம்பேத்கார் அவர்களின் கீழ் இல்லை என்பதை தெளிவாக காட்டிவிட்டார்கள். இதை ஆதித்தமிழர் பேரவை கடுமையாக எதிர்க்கும். அதே நேரத்தில் அவர்கள் சட்டப்படி சென்றால் நாமும் சட்டப்படி சென்று அதற்கு என்ன வாய்ப்புக்கள் இருக்கோ நாடுவோம். இந்த விடயத்தில் கலைஞர் அவர்களின் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

உள்ளிட ஒதுக்கீடு திட்டம் அமூலில் இருக்கிறதா?

ஒரு வருடமாக நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் அதை அனுபவிக்கிறார்கள்.

“உள்ளிட ஒதுக்கீடு தலித் மக்களை பிரிக்கும் செயல்” இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

தலித் மக்கள் என்று பொதுவாக பேசுகிறார்களே தவிர கிராமங்களிலே சங்கிலியர் சேரி, பறையர் சேரி, பள்ளர் சேரி என்று தனித்தனியாகத்தான் இருக்கிறார்களே தவிர ஒன்று படவில்லை. இந்த மூன்று சமூகத்தினருக்கும் இயல்பாக திருமண உறவு கிடையாது. அப்படி இருக்கும்போது எப்படி வந்தது ஒற்றுமை.

இப்போது தான் அவர்களின் உண்மையான உரிமையை பெறும்போது எங்களின் உரிமையையும் சேர்த்து அனுபவித்துக்கொண்டிருந்த இவர்கள் தற்போது எதிர்க்க வந்துவிட்டார்கள். அது தான் உண்மை.

மத்தியரசின் 18% இட ஒதுக்கீட்டில் 3% வீதத்தை ஒதுக்கியதற்காக எதிர்ப்பதாக கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். இது பற்றிய உங்கள் கருத்து என்ன?

மத்தியரசு 18% இட ஒதுக்கீட்டை கொடுத்து அதில் 76 உப சாதிகளை வைத்திருக்கிறார்கள். மத்தியரசின் சட்டப்படி புதிதாக உபசாதிகளை சேர்க்க கூடாது. அல்லது இருக்கிற சாதியை எடுக்க கூடாது. அது தான் சட்டம். அதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களிற்கு தரலாம் தரக்கூடாது என்று எந்த சட்டமும் கிடையாது. இதில் கலைஞர் அதிகம் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவி செய்திருக்கிறார்.

ஈழத்தில் ஒடுக்கப்பட்ட எமக்கு அதிகளவு உண்மையாக ஆதரவளித்து போராடுகின்றவர்கள் ஆதி தமிழர்களான அருந்ததியின மக்கள். அந்த மக்களின் சார்பாக ஈழத்தமிழ் மக்களிற்கும் தமிழக மக்களிற்கு நீங்கள் சொல்லும் கருத்து என்ன?

ஈழத்தில் இருப்பினும் தமிழ்நாட்டில் இருப்பினும் யார் ஒதுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக ஆதித்தமிழர் பேரவை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஈழத்தமிழர்களுக்கான அத்தனை போராட்டங்களிலும் ஆதித்தமிழர் பேரவை தம்மை கலந்து கொண்டிருக்கிறது. எங்களின் சக்திக்கேற்ப நாம் அனைத்து பணிகளையும் செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு உதவவேண்டும் என்பதை கட்டாயம் செய்ய வேண்டும். ஈழத்தமிழர்களிற்கு மிகுந்த துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை மிகுந்த வருத்தத்துடன் நாம் ஏற்கத்தான் வேண்டும்.

மீண்டும் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்பு நிச்சயமாக இருக்கிறது. எங்கிருந்தாலும் இந்த விதை முளைக்கத்தான் போகின்றது. அது வளர்ந்து மரமாகின்ற வரை நாம் காத்திருப்பது மட்டுமல்ல அதற்கு உரம், அதற்கான தண்ணீர் அனைத்தையும் கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்.

நிச்சயமாக பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் எமது விடுதலைக்காக ஒன்றிணைந்து போராடவேண்டும் என்று மீனகம் ஊடாக மக்களையும் அரசியல் தலைவர்களையும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழா! நீ பேசுவது தமிழா…


அன்னையைத் தமிழ்வாயால் மம்மி என்றழைத்தாய்…
அழகுக் குழந்தையை பேபி என்றழைத்தாய்…
என்னடா தந்தையை டாடி என்றழைத்தாய்…
இன்னுயிர்த் தமிழை கொன்று தொலைத்தாய்….

உறவை லவ் என்றாய் உதவாத சேர்க்கை…
ஒய்ப் என்றாய் மனைவியை பார் உன்றன் போக்கை…
இரவை நைட் என்றாய் விடியாதுன் வாழ்க்கை…
இனிப்பை ஸ்வீட் என்றாய் அறுத்தெறி நாக்கை…

வண்டிக்காரன் கேட்டான் லெப்ட்டா? ரைட்டா?
வழக்கறிஞன் கேட்டான் என்ன தம்பி பைட்டா?
துண்டுக்காரன் கேட்டான் கூட்டம் லேட்டா?
தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?

கொண்ட நண்பனை பிரண்டு என்பதா?
கோலத் தமிழ்மொழியை ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம் சார் என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி சாவது நல்லதா?

பாட்டன் கையில வாக்கிங் ஸ்டிக்கா
பாட்டி உதட்டுல என்ன லிப்ஸ்டிக்கா?
வீட்டில பெண்ணின் தலையில் ரிப்பனா?
வெள்ளைக் காரன்தான் நமக்கு அப்பனா?

புலால் உண்பவனுக்கு இல்லை வாய்ப்பெனில் புலியிம் சிங்கமும் பாவம் என்ன செய்யும்…


சடை முடி
தவத்திற்க்கே
தரிசனமெனில்
ஆலமரத்திற்க்கே
அமையும்

பழங்களும்
திணைகளுமே
உணவெனில்
பறவைகளுக்கே
பாக்கியம்

புலால் உண்பவனுக்கு
இல்லை வாய்ப்பெனில்
புலியிம் சிங்கமும்
பாவம்
என்ன செய்யும்

எங்கு நீ
இருந்தாலும்
எதனை நீ
உண்டாலும்
யாராக நீ
வாழ்ந்தாலும்

ஊணுக்குள் உயிராக
உயிருக்குள் ஒளியாக
ஒருவனை வைத்தால்
இறைவன் என்று

அர்ச்சனைத்தட்டுடன்
அவன் நாமம் சொல்லி
அன்பினை வேண்டி
அடியேனாய் நிற்ப்பான்
நீ வாழும்
கருவரை வாசலில்

இந்திய நிதிநிலை அறிக்கை 2010 – கேள்வி கேக்காதே வாயை பொத்து…


என்ன தான் பட்ஜெட் போட்டாலும் ஏழை மக்களோட வயத்துல அடிக்க இந்த பட்ஜெட் ரொம்ப உதவும். இன்னும் நாலு வருசத்துக்கு மக்கள் நிலைமை தான் பாவம்.கொள்ளை அடிக்கும் பணக்காரனுக்கு வரி சலுகை பணக்காரர்கள் அப்படியே தான் இருக்காங்க. இதுல கூச்ச படாம இதை பட்ஜெட்னு வெளியில் வேறே சொல்லிட்டு திரிகிறார்கள்.

இப்படி ஐந்து லட்சம் எட்டு லட்சம் வாங்குறவன் எல்லாம் இருபது முப்பது சதவிகதம் என்று வரி கட்டனும். கோடியில் கொள்ளை அடிக்கறவன் எல்லாத்தையும் அமுக்கிட்டு போயிடுவான். நாங்க கட்டுற வரிக்கு ஒழுங்கான குடிநீர், சாலை, மருத்துவம், கல்வி, போக்குவரத்து வசதிகள் எங்களுக்கு செய்து தரப்படுகிறா என்றால், இல்லை. இன்னும் அதே பிரிட்டிஷ் காலத்து பாலங்கள், ரயில்கள், அரசு கட்டிடங்கள் தான் இருக்கின்றது. இவ்வளவு பட்ஜெட் போட்டு பாமர ஜனங்கள் எதனை கண்டார்கள்.

பெட்ரோல் பங்க்ல பெட்ரோல் விலையை அரசு குறைக்கும் போது மட்டும் அதே விலையில் பெட்ரோலை விற்பார்கள்.கேட்டால் உத்தரவு இன்னும் வரலன்னு சொல்லுவார்கள் .அதே அரசு பெட்ரோல் விலையை உயர்த்தும் என்றால் அடுத்த நொடியில் நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பேங்க்ல் சர்ரென்று விலை உயரும்,அப்பொழுது மட்டும் எப்படி உத்தரவு வருது.

விலைவாசி உயர்வை பார்க்கும் போது காங்கரஸ் அரசின் இயலாமையை காட்டுகிறது.வெகுஜன மற்றும் தேசவிரோதச் செயல்களைப் புரிவதில் தனக்கு நிகர் எவருமில்லை என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் அழுத்தம், திருத்தமாக நிரூபித்துள்ளது.

விலைவாசியை குறைப்பதற்கு வழி காண்பதற்கு பதில், அது மேலும் உயர்வதற்கான அனைத்து வழிவகைகளையும் இந்த நிதி-நிலை அறிக்கை செய்துள்ளது. எரிபொருளுக்கு அதிக வரி, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை மறுப்பு என்று மக்களை மரணவாயிலுக்கே அழைத்துச் சென்றுவிட்டது காங்கிரஸ் பட்ஜெட். இந்த விளங்காத பட்ஜெட்டுக்கு, இனிமுதல் காங்கிரஸ் அறிவுஜீவிகள் விளக்கம் தரத் தொடங்குவதே பாக்கி.

அத்திவசிய உணவு பொருள்கள் மீதான ஆன்லைன் பேர வர்த்தக தடை பற்றி யாரும் விவதிகாதது, யாரும் கவலை படாதது ஏமாற்றம்.
பிரதமர் இது பற்றி உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் பாமர மக்களை பற்றி சிந்திக்கவேண்டும். பதுக்கல்காரர்களை தண்டிக்கவேண்டும் உணவு தானியம் போதுமான அளவுக்கு இருந்தும் விலைவாசி உயர்வுக்கு காரணமான பதுக்கலையும் ஆன்லைன் வர்த்தகத்தையும் ஒழிக்கவேண்டும்

பணக்காரங்க கிட்ட உங்க பருப்பு ஒன்னும் வேவாது. கருப்பு பணம் வெச்சி இருக்குறவங்க கிட்ட போய் உங்க வேலைய காட்டவேண்டியதுதானே. எதுக்கு மிடில் கிளாஸ் கிட்ட உங்க வீரத்த காட்றீங்க.

சுவிஸ் பாங்கில் கருப்பு பணம் போட்டவன் எல்லாம் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள். இந்த பண முதலைகளுக்கு ஆப்பு வைக்க உங்க பட்ஜெட்டில் ஏதாவது வழி வகை உண்டா? யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏழையை காப்பாத்த மாட்டாங்க. இது சத்தியம்.

புத்திசாலிதனம் என்று நினைத்து ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கி அழகு பார்க்கிறார் தமிழகத்தின் பாச தலைவர்.விவசாயம் பார்க்க வேலை ஆள் கிடைக்கவில்லை, இதை பற்றியெல்லாம் கவலைப்படாத அரசு விவசாயத்திற்கு என்று ஒரு மண்ணையும் அறிவிக்கவில்லை.தமிழகத்தில் விவசாயம் குறைய யார் காரணம்?

யாரும் ஒரு ரூபா அரிசி பயன் படுத்துறது இல்ல என்பது நிச்சயம் ஆனால் ரோட்டோர கடைகள் மற்றும் ஓட்டல்கலில் பயன்படுத்தி முப்பது நாற்பது ரூபாய் மக்களிடம் வசூலிக்கிறார்கள்.

நெசவுத்தொழிலை ஒரு காலத்தில் வீட்டில் இருந்தே வெற்றிகரமாக செய்து வந்த கூட்டுறவு சிறு முதலாளிகளாக இருந்த உழைப்பாளிகளை கஞ்சி தொட்டிக்கு கையேந்த விட்டு இன்று அவர்களின் சுய நெசவுத் தொழில்களை முடக்கி பெரு முதலாளிகளின் தொழிற்சாலைக்கு கூலி ஆட்களாக செல்லுமாறு மாற்றிய பெருமை இவர்களின் பட்ஜெட்டையே சேரும்

என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், இன்னும் பத்து ஆண்டுகளில் விவசாயம் என்பது கனவில் தான் நடக்க போகிறது.விவசாயம் என்றிருந்த நாட்டை சரியான வழி நடத்துதல் இல்லாமல் நாம் நமது உணவுக்காக இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.இன்னொரு பசுமை புரட்சியை ஏன் இன்னும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியவில்லை.நதி நீர் இணைப்பை செயல்படுத்த ஏன் இன்னும் இந்த புண்ணியவான்களுக்கு புத்தி வரவில்லை.தமிழகத்துக்கு பாலாற்றையும் முல்லைப்பெரியாறையும் முறையாக பெற்று தந்தாலே பல மாவட்டங்களில் விவசாயம் செழிக்கும். சோனியா மோசடி கும்பல் நமக்கு பட்டை நாமம் போடாமல் விட மாட்டார்கள்.

மறுபடியும் விலைவாசி அதிகரிக்க இந்த பட்ஜெட் ரொம்ப உதவும். இன்னும் நாலு வருசத்துக்கு மக்கள் நிலைமை தான் பாவம்.ஒன்று மட்டும் உண்மை நீங்கள் கூட்டம் கூட்டி நாட்டுக்கு என்ற பெயரில் உங்கள் குடும்பத்துக்காக போடும் பட்ஜெட்டினால் நாட்டில் கோடான கோடி குடும்பங்களின் பட்ஜெட் அடகு கடை நோக்கியே பயணிக்கிறது.

வறுமை தலையெழுத்துமல்ல, கருப்புப்பணம் தனியுரிமையுமல்ல….


இந்திய அரங்கில் சுவிஸ் வங்கி பற்றியும், கருப்புப்பணம் பற்றியும் அவ்வப்போது பேசப்படுவதுண்டு, அந்த வேகத்திலேயே மறக்கப்படுவதுமுண்டு. இந்த முறை தேர்தலோடு இணைந்து வந்திருப்பதால் கொஞ்சம் பரபரப்பு ஏறிவிட்டிருக்கிறது. போலிகள் (மார்க்சிஸ்டுகள்) தங்கள் தேர்தல் அறிக்கையில் சுவிஸ் வங்கிகளில் குவிக்கப்பட்டிருக்கும் இந்திய கருப்புப்பணத்தை மீட்டுக்கொண்டுவருவோம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து அத்வானியும் ந நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீட்டுக்கொண்டுவருவோம் என அருளியிருக்கிறார். பெருமுதலாளிகளின் பணம் சொத்துகள் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்யப்படும் என கம்யூனிசம் கூறும் போது அநியாயம், உழைத்து சேர்த்த சொத்து, தனிமனித உறிமை மீறல் என்றெல்லாம் பேசுபவர்கள் இன்று சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டிருக்கும் பணத்தை இந்தியா கொண்டுவரவேண்டும் என்கிறார்கள். இது சுதந்திர வர்த்தக காலம், இங்கு அரசின் தலையீடு கூடாது என வேதம் ஓதிய‌வர்கள், நிறுவனங்கள் திவாலாகும் நிலை வந்ததும் அரசு பணத்தை கொண்டு எங்களை மீட்கவேண்டும் என்றதைப்போல. எல்லாவற்றையும் மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள், தெருவோர வித்தையை பார்க்கும் பார்வையாளனைப்போல.

நாட்டின் மொத்த மக்கட்தொகையில் சற்றேறக்குறைய பாதி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள ஒரு நாட்டின் (வறுமைக்கோடு என்பதே ஒரு ஏமாற்றுப்புள்ளிவிபரம் என்பது வேறு விசயம்), கடந்த பத்து வருடங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட ஒரு நாட்டின், எழுபது கோடி பேர் ஒரு நாளை இருபது ரூபாய் வருமானத்தைக்கொண்டு கழித்துக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அயோக்கிய அதிகாரவர்க்கமும், ஓட்டுப்பொருக்கி அரசியல் வாதிகளும், இரக்கமற்ற முதலாளிகளும் திரையுலக கழிசடைகளும், விளையாட்டிற்கு தேசியச்சாயம் பூசும் கிரிக்கெட்டவர்களும் பதுக்கிவைத்திருக்கும் கணக்கில் வராத கள்ளப்பணம் மட்டுமே 64 லட்சம் கோடி என்றால் வறுமையில் உழலும் மக்கள் தங்களின் வறுமைக்கு காரணம் தலை எழுத்து, கடவுள் விதித்தது என நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவு பரிதாபகரமானது.

மக்களை வதைத்துக்கொண்டிருக்கும் உலக வங்கி, உலக வர்த்தகக்கழக சட்டங்கலெல்லாம் கடனின் வழியாகத்தான் இந்தியாவுக்குள் நுழைந்தன. நலத்திட்டங்களின் பெயரில் வாங்கப்பட்ட அல்லது திணிக்கப்பட்ட இந்தியாவின் மொத்தக்கடன் 4.87 லட்சம் கோடிதான். ஆனால் சுவிஸ் வங்கிகளில் சிலர் மறைத்துவைத்திருக்கும் பணம் மொத்தககடனை விட 13 மடங்கு அதிகம். இப்படி இந்தியாவின் பணம் மட்டுமல்ல உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள முறைகேடான பனம் சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ளது. சற்றேறக்குறைய முந்நூறு ஆன்டுகளாக முறைகேடாக வரிஏய்ப்பு செய்த பணத்தை காப்பாற்றிக்கொடுக்கும் வேலையை செய்துவருகிறது. தெளிவாகச்சொன்னால் முதலாளியம் அரும்பத்தொடங்கிய காலகட்டத்தில் அந்த இலக்கணத்தின்படி உருவானது தான் இந்த சேவை. இந்த வங்கியில் போடப்படும் பணம் யாருடையது என்பதை இவ்வங்கிகள் வெளியிடாமல் ரகசியம் காக்கின்றன. இடையில் ஹிட்லர் யூதர்களை வேட்டையாடியபோது அவர்களின் பணம் ஹிட்லரின் கைகளில் சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த வங்கிகளின் சட்டவிதிகள் மேலும் கடுமையாக்கப்பட்டன. ஆனால் இப்போதோ நிலமைகள் மாறுகின்றன. முதலாளித்துவ நெருக்கடிகளால் உள்ளுக்குள் நொருங்கிக்கொண்டிருக்கும் வளர்ந்த நாடுகளின் பார்வை இந்த சுவிஸ் வங்கிகளின் மேல் திரும்பியிருக்கிறது. இந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களால் சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் விபரங்களை வெளியிட முன்வந்திருக்கின்றன, ஒரு நிபந்தனையுடன். அந்தந்த நாடுகளின் அரசுகள் தான் இதனை கேட்டுப்பெற முடியும். அப்படி வெளியில் கசிந்த விபரங்களின் படிதான் உலகின் வேறெந்த நாடும் நெருங்க முடியாதபடி இந்தியர்கள் குவித்துவைத்திருக்கும் பணம் உச்சத்தில் இருக்கிறது.

அரசு இந்திய வாடிக்கையாளர்களைப்பற்றிய விபரங்களை கேட்டுப்பெற முடியும் என்றான பின்னும் இந்திய அரசு இந்த கள்ளப்பணத்தைப்பற்றி கள்ள மௌனம் சாதிக்கிறது. பிஜேபி இதைப்பற்றி பேசுகிறது என்பதால் அது ஆட்சிக்கு வந்தால் இந்தப்பணத்தை கொண்டுவந்துவிடும் என்றோ விபரங்களை வெளியிடும் என்றோ எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் எல்லா ஓட்டுக்கட்சிகளும் விதிவிலக்கின்றி இந்தப்பட்டியலில் வரும் என்பதில் ஐயமொன்றுமில்லை. 2003,2007 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மோடி ரகசியமாக சுவிஸ் சென்று வந்திருக்கிறார்.

இந்தியாவுக்கான சுவிஸ் தூதர் பிலிப், “இந்தியாவிடமிருந்து இதுவரை எந்தக்கோரிக்கையும் வரவில்லை. வந்தால் சுவிஸ் வங்கிச்சட்டங்களின்படி நடவடிக்கைகள் தொடங்கும்” என்று கூறியிருக்கிறார். ஓட்டுக்கட்சிகள் அந்த விபரங்களை கேட்டுப்பெறக்கூடும், பெற்ற விபரங்களைக்கொண்டு பேரங்கள் நடைபெறும். பல்வேறு விதமாக ஏற்கனவே ஏமாற்றப்பட்ட நாம் இந்த விசயத்திலும் ஏமாற்றப்படுவோம். முறைகேடாக பணம்சேர்த்தவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அதைக்கொண்டு அரசியல் பேரங்களை நடத்திமுடித்து தங்களின் கரையான வரலாற்றை மறைத்துக்கொண்டு உங்களிடம் வாக்குக்கேட்டு வருவார்கள், ஜனநாயகக்கடமையை நமக்கு நினைவூட்டிக்கொண்டு. என்ன செய்வதாய் உத்தேசம்?

இப்போதெல்லம் எருமைச்சாணம் கிடைப்பதில்லை என்றாலும் தேடி சேர்த்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அவசியமிருக்கிறது.