லீனா மணிமேகலை: COCKtail தேவதை!


பிறகொரு நாளின் நள்ளிரவில்
கோப்பை கவிழ்த்த ஆண்டனியின்
குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில்
தேவதையின் யோனியில்
வார்த்தைகள் வழிந்தன.

பரவசத்தின் உச்சத்தில்,
ஆயிரத்தி ஒன்றாம் முறையாய்
கட்டவிழ்த்தலின் சூட்சுமத்தை
காது மடல்களில் ஆண்டனி கிசுகிசுத்தான்.

“விந்து பீச்சட்டும்.
ஆங்கே கமிசார்களை கட்டவிழ்.
யோனி விரியட்டும்.
ஒருங்கே புரட்சியைப் புரட்டு.
மயக்கம் வரப் புணர்.
மார்க்சிய சொல்லாடல் மிக முக்கியம்.
COCKtail-ஆக கலந்து வை.
ஃபூக்கோவின் லேபிளை ஒட்டி விடு.
பிரதியின் சூட்டில்
இலக்கியம் விரைக்கும்.
மெக்கார்த்தி புன்னகைப்பான்.
மாலை விருந்திற்காக கண்ணடிப்பான்.
மீண்டும் வரலாறு முடிவுக்கு வந்திருக்கும்.

புருவத்தை சரி செய்.
புகைப்படமாக எடுத்து வை.
உன்னைச் சுற்றி
இயங்குகிறது உலகம்.
உன்னைச் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.
உன்னைத் தான் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.

உலகின்
அழகிய,
அழகில்லாத,
அழகாய் இருக்க முடியாத,
அழகாய் இருக்க வக்கில்லாத,
அழகாய்ப் பிறக்காத.
அழகாய்ப் பிறக்க முடியாத,
அனைத்துப் பெண்களின் விடுதலையும்,
நீ கட்டவிழ்க்கும் கவிதைகளுக்காகத்தான்
காத்துக் கிடக்கிறது என்பதை அறிவித்து விடு.
கிளாரா ஜெட்கினை விஞ்சிய
பெண் விடுதலைப் போராளியே!
என போஸ்டர் அடிக்க காசு கொடு.
மர்லின் மன்றோ பாவாடையில்
அதனை ஒட்டச் சொல்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கவலைப்படாதே,
மிஞ்சிப் போனால்
எழுதப்படும் ஒரு கட்டுரையையும்,
பூதக் கண்ணாடியால் சலிப்பதற்கு
நீதி தேவன்கள் காத்திருக்கிறார்கள்.
கேள்விகளால் துளைத்து விடுவார்கள்.

“இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”
“ஏன் கொச்சை வார்த்தைகள்?”
“நீங்களா இப்படி?”

சட்டம் சட்டம்தான்,
முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
கண்டபடி பேசக் கூடாது.
கண்ணியமாக துடைத்து விட்டு,
கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.

மார்க்சியம் அவர்களுக்கு முகம்.
தேவதைகளுக்கோ படுக்கை விரிப்பு.
வேண்டும் போது விரிக்கலாம்.
வேண்டாத போது சிறுநீர் கழிக்கலாம்.
தேவதைகளின் சிறுநீர்,
கவிதை.
கம்யூனிஸ்டுகளின் கோபம்,
கொலைக் குற்றம்.

எனவே,
மார்பைக் குலுக்கு.
மயிரை பிய்த்துப் போடு.
போதை கிறக்கத்தில்
COCKtail-ஐ மட்டும் மாற்றி விடாதே…
கட்டவிழ்த்தலுக்கும்
விதிமுறைகள் உண்டு.
பாரத மாதா,
இந்து ராஷ்டிரம்,
பாபர் மசூதி
என எதையும் சேர்த்து விடாதே.
சரஸ்வதியாக சந்தில் நிறுத்தி விடுவார்கள்.”

லெனின் ஃப்ராய்டைப் புணர வேண்டும் என எழுதுவது தனிமனிதத் தாக்குதல் அல்ல, மஞ்சள் எழுத்து இல்லை, மாறாக கட்டுடைத்தல். ஆனால்,ஜெரால்டுக்கு குறியில்லை என எழுதுவது, ஃபோர்ட் போலியோ எடுத்து தன் மூஞ்சியை தானே ரசிக்கும் அற்பத்தனத்தை குறிப்பது ஆகியன தனிமனிதத் தாக்குதல். இத்தகைய புரிதலைக் கொண்டிருக்கும் எல்லா ஆண், பெண் COCKtail தேவதைகள், மர்லின் மன்றோக்கள், கலகப் போராளிகளுக்கும்,அவர்களின் எழுத்துக்களில் பேரின்பமும், சிற்றின்பமும் பெற்று சிலாகிக்கும் ரசிகக் கண்மணிகளுக்கும் சமர்ப்பணம்.


(வினவில் நடந்த விவாதத்தையொட்டி எழுதப்பட்டது)

ஆண்மைக் குறைவும் மனோரமாவின் கவலையும் !!


குங்குமத்தில் ஆச்சி மனோரமா தான் முப்பது ஆண்டு காலமாக மனதில் அடக்கிவைத்து இருந்த மனக்குமுறலை கொட்டியிருக்கிறார். அதாகப்பட்டது, ஆண்மைக் குறைவுடைய ஆண்கள் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொள்வதாகவும், எனவே திருமணத்திற்கு முன் பரஸ்பரம் மருத்துவ சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் எனவும், ஆண்மைக் குறைவோடு பெண்களை ( ஏமாற்றி ) திருமணம் செய்யும் ஆண்களை தண்டிக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதற்காக ஒரு தனி அமைப்பை தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

இனியும் இந்த கருத்தை வெளியிடாமல் இருந்தால் தான் பெண்ணாக பிறந்தததே அர்த்தமற்றதாகிவிடும், எனவே இனி தன் வாழ்வில் மீதம் இருக்கும் நாட்களை இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வாழ்விழந்த பெண்களின் விடிவுக்காக செலவிடப்போவதாக கூறி உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். இதே கருத்தை வலியுறுத்தி அவர் முதல்வரிடமும் ஒரு மனு கொடுத்திருக்கிறார்.

ஆச்சி., வாலிப வயோதிக அன்பர்களே என்ற வார்த்தைகளை பயன்படுத்தாததாலும், அவருக்கு லேகியம் விற்பனை செய்யும் யோசனை ஏதும் இருப்பதற்கான அறிகுறி ஏதும் அந்த பேட்டியில் தெரியாததாலும், நாம் அவரது கருத்துக்களை பரிசீலிகத்தான் வேண்டும்.

ஒரு தனி இயக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆண்மைக்குறைவு என்ன சர்வதேச பிரச்சினையா ? ஆச்சி குறிப்பிடுவதைப்போல பெருகிவரும் விவாகரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு தான் காரணமா ?

சரி, மனோரமா மீதான தனிப்பட்ட அன்பினால் முதல்வரே இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவே வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வாலி தலைமையில் ” ஆண்மையை ஆராயச்சொல்லி சட்டம் போட்ட ஆதவனே ” என்கிற தலைப்பில் கவியரங்கம் நடக்கும், டாக்டர் நாராயண ரெட்டி, காமராஜ் ஆகியோர்களின் மருத்துவமனை டோக்கன்களை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அராஜகமான வழிகளில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுவார், மருத்துவப்பரிசோதனையின் முடிவுகள் திமுக வினருக்கு மட்டும் பாசிடிவ் என்று வரும்படி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டுவார்.

இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கும் ?

முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையறை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.

பெரும்பாலான விவாகரத்துக்களுக்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு ஒரு காரணமாக இருப்பது இல்லை. தம்பதிகளிடையேயான புரிதலில் உள்ள முரண்பாடும் தன் இல்லத்துணைக்கான குறைந்தபட்ச அன்பையும் மரியாதையையும் தரத் தவறுவதும்தான் மிகப்பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது.

கள்ளக்காதலின் கதை வேறு, முறையற்ற காதல் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான். பத்திரிக்கைகள் அதற்கு அளிக்கும் அதீத முக்கியத்துவம்தான் இதை ஒரு பெரிய சமூக சிக்கலாக காட்டுகிறது. ( சரியாக கவனியுங்கள்.. சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா பத்திரிக்கையும் எழுதுகிறது).

திருமணமாகும் பெண்கள் மட்டும் ஏமாற்றப்படுவதில்லை. காதலிலும் ஏமாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் நல்ல?! ஆண்மையுள்ள ஆண்களால்தான் கைவிடப்படுகிறார்கள்.

ஆண்மை இல்லாமல் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள், எனவே ஆண்மை உள்ளவன்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் (கட்டாய பரிசோதனை என்பதன் பொருள் இதுதான்)., ஆண்மை உள்ளவன் காதலித்து ஏமாற்றுகிறான் (பலர் தன் ஆண்மையை காதலியிடம் பரிசோதித்துவிட்டுத்தான் கைவிடுகிறார்கள்- ஒருவகையில் இவர்கள் ஆச்சியின் யோசனையை 50% கடைபிடிக்கிறார்கள்).

எனவே இதைத்தடுக்க காதலிப்பவனுக்கு ஆண்மையே இருக்கக்கூடாது என ஒரு சட்டம் போடலாமா ? இதற்கு நிகரான மடத்தனம்தான் ஆச்சி வைக்கும் கோரிக்கையும்.

பெண்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்கிற மனோரமாவின் நோக்கம் நியாயமானது. அதில் தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் அவர் பிரச்சினைக்கு சொல்லும் காரணமும் அதற்கான தீர்வும் நகைப்புக்குரியவை. தனி இயக்கம் காணவேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏராளம் உண்டு. அதற்கு ஆச்சி போராட முன்வந்தால் பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு… ஆச்சியை பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு.

-நன்றி வில்லவன்

இயக்குநர் எவரெஸ்ட் – ஆல்ப்ஸ் – தொட்டபெட்டா கே.பாலசந்தர் அய்யா அவர்களுக்கு…!


கும்புடறன் சாமி…

சின்ன வயசுல இருந்தே உங்க படம் பாக்குறதுக்குத் தவியா தவிச்சிருக்கேன். ஆனா…எங்க ஊட்லதான் உடமாட்டேன்னு 144 தடை உத்தரவு போட்ருவாங்க.

“அதெல்லாம் நீ பாக்கக் கூடாது. வேணும்ன்னா ‘பட்டணத்தில் பூதம்’ போ, பணம் தர்றேன்னு சொல்லீட்டு அவுங்க ‘அரங்கேத்தம்’ போயிடுவாங்க. எனக்கு எரிச்சல் எரிச்சலா வரும். ஊருக்குள்ள பலபேரு புதுமை புதுமைன்னு சொல்றாங்களே…அப்படி அதுல என்னதான் இருக்குன்னு ஒரே ஆசையா இருக்கும். அப்புறம் எட்டாங்கிளாசோ ஒன்பதாம் கிளாசோ படிக்கறப்போ உங்களோட ‘அபூர்வ ராகங்கள்’ பாத்து புல்லரிச்சுப் போயிட்டேன் எவ்ளோ பெரிய சிக்கலையும் நீங்க எவ்ளோ ஈஜியா தீக்கறீங்கன்னு பாத்து புளகாங்கிதம் அடைஞ்சேன். அப்பன் புள்ளைய லவ் பண்றான். மகன் அவளோட ஆத்தாள லவ் பண்றான்.

இல்லயில்ல…..

அந்தப் புள்ளதான் லவ் பண்ணுது…ஆனா அவளோட அம்மாக்காரிய இந்த அப்பனோட பையன் லவ் பண்றான்…பாத்தீங்களா….இதச் சொல்றதுக்குள்ளயே நாக்கு கொழறுது. ஆனா நீங்க ….எவ்ளோ பெரிய சிக்கலை இந்த மக்களுக்குக் குடுத்து அத எவ்வளவு ஈஜியாத் தீக்கறதுன்னும் ‘தீர்வு’ குடுக்கறீங்களே….
இதுதாங்க கே.பி.டச்சு….

இருந்தாலும் பாருங்க….இந்த எழவுகளுக்குப் புரியுதா…?

இந்தத் ‘தரை டிக்கட்டுக’ இருக்கானுகளே….அதுகளுக்கெல்லாம் உங்க படம்ன்னாலே ரொம்ப எளக்காரங்க….

“வித்தியாசமா இருக்கிறதுங்கிறது வேற, வித்தியாசமா இருந்தே தீரணும்கிறதுக்காக வித்தியாசமா காட்டிகறது வேற. உங்காளு இது ரெண்டாவது ரகம்….இந்தாளு புருசம் பொண்டாட்டி உறவத் தவிர ஊருல எத்தனை விதமான கேடு கெட்ட உறவெல்லாம் இருக்கோ….அத்தனையையும் படமா எடுக்கறதுதான் இந்தாளு வேல.
பாட்டி பேரனக் காதலிக்கறது, மருமகன் மாமியாரக் காதலிக்கறதுன்னு எடுக்கறதத் தவிர வேறெதாச்சும் தெரியுமா? இங்க அவனவன் சோத்துக்கே வக்கில்லாமச் சாகறப்போ சக்கரப் பொங்கல் சாப்புடுங்கற கதையா இந்தாளு படமெடுக்க அத இந்த வெவஸ்தை கெட்ட வெட்டிப் பசங்க கே.பி.டச்சு…. கே.பி.டச்சு….ன்னு வேற புலம்பிச் சுத்துதுக”ன்னு நொன நாயம் பேசறானுக.

ஏன் நம்ம பாலச்சந்தர் இத மட்டுமா எடுக்குறாரு? ‘தண்ணீர் தண்ணீர்’ எடுக்கலியா, அவ்வளவு அருமையான படம். அதுல சொல்லாத பிரச்சனையா மத்தவங்க சொல்லிட்டாங்க….அந்த மாதிரி ஒரு புரட்சிப் படம் இதுவரைக்கும் வந்திருக்கா…பாலச்சந்தர் படம் பாக்கரதுக்கெல்லாம் சாதாரண அறிவு பத்தாது. உங்கள மாதிரி ரசனை கெட்ட ஜென்மங்களுக்கெல்லாம் அது எங்க வெளங்கப் போகுது…ன்னு திருப்பி நானும் குடுத்தேன் ஒரு சூடு. ஒரு பய வாயத் தொறக்கல.

“அது சரி…’சிந்து பைரவி’ பாத்தியா?”ன்னாங்க. ஒருதடவையில்ல மூணு தடவ பாத்தேன் சாமி. நம்ம ரஜினிசாமி கூட பாம்ப கையிலெடுத்துட்டு சுத்துவாரே…அதுதானே சாமின்னேன். ” கருமம்… கருமம் அது பைரவிய்யா. நாங்க சொன்னது சிந்து பைரவி”ன்னாங்க நம்ம கே.பி.படமா சாமி….பாக்காம இருப்பனா? கே.ஜி.ல பிளாக்குல வாங்கிப் பார்த்தது சாமி….

“மொதல்ல பாக்கறவனையெல்லாம் சாமின்னு சொல்றத நிறுத்து….படம் எப்படி….?”

எப்படியா…? ஒரு இசை மேதை தன்னோட அறிவுக்கும், தெறமைக்கும் பொருத்தமா சம்சாரம் கெடைக்கலியேன்னு வருத்தப்பட்டு பாரம் சுமக்கறப்போ…நானும் கொஞ்சம் சொமக்கறேன்னு ஒரு பொண்ணு வர்றா….மேதையும் மேதையும் சேந்து இன்னொரு மேதைய இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்கறாங்க…ஏன் இதுல என்ன சிக்கல்…? இதுலயும் ஏதாவது நொன சொல்றதுக்கு இருக்கான்னேன்.

“கே.பி.ப்ப்ப்ரியா! நீ சொல்றதையே….இப்படிக் கொஞ்சம் மாத்தி யோசிச்சுப்பாரு…உங்க மேதைக்கு இன்னொரு மேதை கெடைக்கலியேங்கற கவலைல ‘குவாட்டர்’ அடிச்சுட்டுக் குப்புறக் கெடந்த மாதிரி….ஜே.கே.பொண்டாட்டி…அதான் அந்த சுலக்சணா…அந்தப் பேதையும் உலகம் புரியாத ஒரு அப்பவிப் புருசன் வேணும்ன்னு ‘முக்கால்’ அடிச்சுட்டு சுத்தறமாதிரி எடுத்திருக்கலாமில்ல. மேதைக்கு மேதை. போதைக்குப்….ச்சே பேதைக்குப் பேதை…அப்படி எடுத்திருக்கலாமில்ல. ஆம்பளேன்னா மட்டும் அறிவுக்குப் பொருத்தமா இல்லேன்னா எத்தனை வேணும்ன்னாலும் வெச்சுக்கலாம்…பெத்துக்கலாம்ன்னு சொல்றது கடைஞ்செடுத்த பைத்தியக்காரத்தனம்…இதுல வேற பெண்ணினத்த நான் தான் தூக்கி நிறுத்தறேன்னு பெனாத்தல் வேற….”
நான் மட்டும் அன்னைக்கு ‘மால’ போட்ருக்கலேன்னா…அந்த அய்யப்பனே வந்திருந்தாலும் தடுத்திருக்க முடியாது…மகனுகள கீசியிருப்பேன் கீசி. மனசுக்குள்ள கெட்ட கெட்ட வார்த்தையா வந்தாலும் வாயில வந்தா சாமி குத்தமாச்சேன்னு வாய மூடிக்கிட்டேன்.

இடைல நம்ம தலைவர் வேற…”இதோ வர்றேன்….அதோ வர்றேன்”னு சொல்லீட்டு இருந்ததால போஸ்டர் ஒட்டற வேலையும் இல்லாமப் போயிடுமோங்கற பயத்துல அந்தப் பண்ணாடைக(ஹி…ஹி…உங்க வஜனந்தாங்க) பக்கமே திரும்பிக்கூட பாக்கலே.

எனக்கு மனசே சரியில்லே. இதென்னடாது நம்ம சிகரத்தப் பத்தியே இவ்வளவு தரக்குறைவா பேசறானுகன்னு வெசனமாப் போச்சு.

அப்புறம் தேர்தல் களேபரத்துல சினிமாப் பாக்கவே சந்தர்ப்பம் இல்லாமப் போச்சுங்க. தேர்தல் சமயத்துல கூட உங்க ஞாபகம்தான். ‘கையில காசு…வாயுல தோசை’ன்னு தேர்தலப் பத்தி நீங்க எடுத்த ‘அச்சமில்லை அச்சமில்லை’ படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பழைய மந்திரிமாருக எல்லாம் வரிசையா ஒவ்வொருத்தரா ‘களி திங்கப்’ போறதைப் பாக்குறதே ஒரு சினிமா பாத்த மாதிரி இருக்குதுங்க.

சரி….சம்சாரம் நச்சறாளேன்னு எதாவது படத்துக்குப் போலாம்ன்னு பாத்தா..அட…உங்க படமே ரிலீசாயிடுச்சுன்னு சொன்னாங்க. இதுவும் பொம்பளங்க விடுதலையப் பத்திதான்னு சொன்னாங்க.

வழக்கம்போல ‘தரை டிக்கட்டுக’ எல்லாம் காலி. ரசனை கெட்ட ஜென்மங்க…படம் பாக்கப் பாக்க எனக்குக் கோபம் கோபமா வருது. இப்படி ஒரு புருசன் இருப்பானான்ன்னு…சொடுக்குப் போட்டு சித்ரவதை பண்றது….பொண்டாட்டி கையில துப்பறது….இப்படிப்பட்ட ஆம்பளைக உருப்படுவானுகளான்னு ஆத்தரமாயிடுச்சு.

இடை வேளைல ஒரு காப்பியும், தம்மும் அடிச்சிட்டு உள்ள போயி உக்காந்தா…என்னடாது தியேட்டர் என்னாவது மாறி கீறி வந்துட்டமான்னு சந்தேகம்…கதையே சுத்தமா மாறிப் போச்சு. அந்த வெறி புடுச்ச ரெண்டு பெண்டாட்டிக்காரன திருத்தறதுக்காக அந்த சின்னப் பொண்ணே அவ்ங்கூடப் போயி…அவன மயக்கி…திருத்தறதுக்காகவே ஒரு புள்ளையும் பெத்து…அட…அட…இப்படியெல்லாம் யோசிக்க உங்க ஒருத்தராலதான் முடியும். சிகரம்ன்னா சும்மாவா?

பெண் விடுதலைக்கு இப்படி ஒரு வழி உங்க ஒருத்தராலதான் சொல்ல முடியும்.

அதப் பாத்த உடனே எனக்கும் ஒரு யோசனை தோணுதுங்க…ஒவ்வொரு ஊர்லயும் உள்ள இந்தக் கோர்ட்டுக்கெல்லாம் போயி….எந்தெந்த ஆம்பளை ‘விவாகரத்து’ வாங்கீருக்கான்னு அட்ரஸு வாங்கீட்டு வந்து….

அதென்ன…அந்தக் குமுதமோ….கல்கியோ…அது மாதிரி பொண்ணுங்கள மாவட்டத்துக்குப் பத்து பேரோ…பதினைஞ்சு பேரோ தயார் பண்ணி….”நீங்களும் அந்தக் கல்கி மாதிரி புரட்சிப் பெண்ணா இந்திந்த அட்ரஸுக்குப் போங்க….போயி மயக்குங்க….
அப்புறம்….
சொடுக்கு போடற புருசன்னா நீங்களும் சொடுக்கு போடுங்க… கையில துப்பற புருசன்னா நீங்களும் துப்புங்க… நிதானமா ஒரு புள்ளையப் பெத்து மொதல் சம்சாரத்துக்கிட்ட குடுத்துட்டு அடுத்த ஊருக்குப் புறப்படுங்க…’ஒழிஞ்சது ஆணாதிக்கம்! அடைஞ்சாச்சு பெண்விடுதலை!’ன்னு ஏற்பாடு ப்ண்ணா எப்படி இருக்கும்…? எப்படி நம்ம ஐடியா…?

“பொம்பளைங்க வெறும் புள்ள பெக்கற மெஷின் இல்லய்யா… அவுளும் நம்மள மாதிரி மனுசிதான். முடிஞ்சளவுக்கு பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்ளும் தொல்லையிலிருந்து விடுபட்டாதான் அவுங்களுக்கு நிம்மதி”ன்னு நாப்பது அம்பது வருசத்துக்கு முன்னாடியே பெரியார் சொன்னா…நீங்க என்னடான்னா…இந்த நாட்டுல ஒரு ‘மேதை’க்குக் கவலைன்னா அவங்கூட சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறது….கொடுமைக்காரப் புருசன்னா அவங்கூடயும் சேர்ந்து ஒரு புள்ளய பெத்துக் குடுக்கறதுன்னு வழி காட்டுறீங்களே…உருப்பட்டாப்பலதான்.
மார்கெட்ல தகராறு பண்ற ஆசாமிய சரிகட்டீட்டு…உங்க ‘கல்கி’ பேசறாளே ஒரு டயலாக்…

“உனக்கெதுக்குய்யா மீசை…பேசாம போய் ஒரு பொடவையைக் கட்டிக்கோ’ன்னு…இது டயலாக். கை தட்டல் தியேட்டரே அதிருதுங்க. அதுசரி கே.பி….மீசைங்கறது ‘ஆண்மை’யின் சின்னம்னு எந்த ‘அறிவாளி’ சொன்னான் உங்களுக்கு?

மீசைக்கும், வீரத்துக்கும் சம்பந்தம் கிடையாது…அது பதினேழாம் நூற்றாண்டு சமாச்சாரம்னு பொறந்த குழந்தைகூட சொல்லுமே…”பொடவையைக் கட்டிக்கோ”ங்கிற மாதிரி கேணத்தனமான ‘புரட்சிகர’ வசனத்த உங்க கதாநாயகிதான் பேச முடியும்.

எல்லாப் படத்துலயும் ஒரு சங்கீதக்காரன் இல்லாட்டி ஒரு சங்கீதக்காரி. இருகோடுகள்ல இருந்து இப்பத்த எழவு வரைக்கும் ஒருத்தி கூட ஒரு பாட்ட முழுசாப் பாடுனதில்ல….
“பாடுவேனடி”ன்னு ஒருத்தி இழுக்க…இன்னொருத்தி முடிப்பா….”கேள்வியின் நாயகனே”ன்னு ஒருத்தி ஆரம்பிக்க…”பதிலேதய்யா”ன்னு இன்னொருத்தி முடிப்பா….

இந்தக் கல்கிலயும் “எழுதுகிறேன் ஒரு கடிதம்”னு முதல் சம்சாரம் ஆரம்பிக்க மூணாவது சம்சாரம் முடிச்சு வைப்பா….படத்துல வர்ற எல்லாப் பாத்திரமும் பக்கம் பக்கமா நாடகம் மாதிரி வசனம் பேசறதையும், அரைச்ச மாவையே அரைக்கறதையும் பாத்து பாத்து சலிச்சுப் போச்சு.

இந்த நாட்டுல எத எதத்தான் ‘புரட்சி’ங்கிறதுன்னே விவஸ்தையில்லாமப் போச்சு…..துணி விக்கறவன் கூட….”புரட்சிகர துணி விற்பனை”ங்கிறான். நாளைக்கு “புரட்சிகர சிரிப்பு நடிகர் லூஸ்மோகன்”
“புரட்சிகர கவர்ச்சி நடிகை ஜோதி மீனா”ன்னு சொல்ல ஆரம்பிச்சா எங்க கதி….?

உங்க மூளையை இனியாவது இந்தச் சமூகத்துக்குப் பயன்படுத்துற எண்ணம் இருந்தா….

ஒரே ஒரு கேள்வி….

கோபிக்க வேண்டாம்….

இதுவரைக்கும் நான் பேசுனது உங்க நாடகங்களைப் பத்திதான்.

அதுசரி….

‘சினிமா’ எடுக்கறதப்பத்தி எப்ப கத்துக்கப் போறீங்க….?

அதுவும்

வீடு….

உதிரிப்பூக்கள் மாதிரி.

கவலையுடன்,
பாமரன்

அச்சம் என்பது தமிழன் உடைமையடா


திரைகடலோடியும் தர்ம அடி வாங்கும் தமிழனுக்கு!
இந்தக் கடுதாசிய எழுதற இந்த நேரத்துல
நீ எந்த நாட்டுல…
எந்த ஊர்ல…
எந்த வீதில…
எவன்கிட்ட ஒதக்கு மேல ஒதை வாங்கீட்டு இருக்கியோன்னு ரொம்பக் கவலையா இருக்கு.

திரைகடலோடியும் திரவியம் தேடூன்னு உன்ன அனுப்புனா…
போன பக்கமெல்லாம் கண்ட கண்ட கழுதைககிட்டயெல்லாம்
தர்ம அடி வாங்கறதே உன் பொழப்பாய் போச்சு.

காலைல பேப்பர் படிச்சதுல இருந்து
மனசே சரியில்லேன்னு சத்தமில்லாம…
அப்படியே ஆனந்த் ஒயின்ஸ் பக்கம் நைசா ஒதுங்குனா…
அப்பப் பாத்து வர்றான் நம்ம அறிவொளி அப்பாசு.
அதுவும்… ‘அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா…’ன்னு பாடீட்டு.

என்ன அப்பாசு… நேரங்காலந்தெரியாம பாடீட்டு வர்றே..ன்னேன்.
‘ஏன்.. இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு
நீ இப்படி தண்ணீரும் தள்ளாட்டமுமா இருக்கே…?’ன்னான் அப்பாசு.

அட… சந்தன வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரக் கடத்தீட்டுப் போயிட்டாருப்பா…
அந்தாளக் கடத்துனதால பெங்ளூர்லயும் மைசூர்லயும்
நம்ம தமிழர்கள ஊடுகட்டி அடிக்கறாங்களாமா கன்னடர்க..
உனக்குத் தெரியாதா…?ன்னேன்.

‘அதுக்கெதுக்கு நம்மாளுகள அடிக்கறாங்க…
வீரப்பனென்ன ராஜ்குமாரக் கடத்தலாமா..
வேண்டாமான்னு தமிழ்நாட்டுல கருத்துக்கணிப்பு நடத்தீட்டு
கடத்துன மாதிரி இவுங்க நம்மாளுகள அடிக்கறதுல
என்ன நியாயம்?’ங்கறான் நம்ம அறிவொளி அப்பாசு.

அப்புறம் எதுக்கு..’அச்சம் என்பது மடமையடா’ன்னு பாடறே…
அந்தப் பாட்டையே இனிமே..
‘தமிழனுக்கு அச்சம் என்பது உடைமையடா…
அஞ்சாமை மத்தவன் கடமையடா…’ன்னு பாடு…ன்னேன்.

“என்ன இருந்தாலும் ஒரு இந்தியன் இன்னொரு சக இந்தியன குத்தம் சொல்றது நல்லாவா இருக்கு?”ன்னான்

“இதுக்கொண்ணும் கொறச்சலில்லை… இந்த இந்தியன்… செவ்விந்தியன்கறதெல்லாம் ஆகஸ்ட் 15க்கும், ஜனவரி 26க்கும் மட்டும்தான் செல்லுபடியாகும். மத்த நாளெல்லாம் நம்ம

தமிழனுக “பம்பாய் இந்தியன்” கிட்டயோ….”கர்நாடக இந்தியன்” கிட்டயோ…. தர்ம அடி வாங்க வேண்டீதுதான். “காவிரில 205 டி.எம்.சி. தண்ணி உடு”ன்னு உகாண்டாக்காரனா

சொன்னான்?.இந்தியர்களால்-இந்தியர்களுக்காக-இந்தியரே உருவாக்கிய நடுவர் மன்ற நீதிபதி
“உடு”ன்னு சொன்னப்பவே தேடித் தேடி ஒதைச்சான் தமிழர்கள.இதுல நீ வேற ஒடிஞ்சதுகளுக்கு ஒத்தாசையா வர்றே… இத எங்க போயி முட்டிக்க?. இங்க பாரு அப்பாசு…. உன்ன மாதிரி நம்மால யானைக்கெல்லாம் கோமணம் கட்ட முடியாது…..ஏதோ நம்மளால முடிஞ்சது….. எலிக்கோ…. பூனைக்கோ……கட்டலாம்.நீ வேணும்னா பீகார்ல கல்லொடைக்கறவனுக்காக கண்ணிர் உட்டுக் கவிதை எழுது. நான் வரல இந்த இந்தியன் வெளையாட்டுக்கு…. வா.. அப்படியே ஆளுக்கு நாலு இட்லிய உள்ல தள்ளீட்டு வருவோம்’ன்னு கடையப் பாத்து நடையக் கட்டுனோம்.

இட்லிக் கடைல செமக்கூட்டம்.
‘ஆளுக எந்திரிக்கற வரைக்கும் இதைப் படிச்சிட்டு இருங்க’ன்னு
பேப்பரத் தூக்கிப் போட்டாரு நாயரு.

அப்பாசு… அப்படியே அதுல ‘பெரியார்’ ரிசல்ட்
போட்டிருக்கா பாத்துச் சொல்றா…ன்னேன்.

‘பெரியாரப் பத்தி எந்தச் சமாச்சாரமும் இன்னைக்கு வர்லயே…’ன்னான்

அட நான் அந்தப் பெரியாரச் சொல்லலப்பா…
பெரியார் லாட்டரிச் சீட்டுல நம்ம நம்பர் வந்துருக்கான்னு
பாத்துச் சொல்லூன்னு சொன்னா…நீ வேற…

“அடப்பாவி… ‘ஒ€ழச்சுச் சாப்புடுங்கடா முட்டாப்பசங்களா’ன்னு
வாழ்நாள் பூராவும் தொண்ட கிழியக் கத்துன
பெரியார் பேராலயே லாட்டரிச் சீட்டா…
ஒலகம் உருப்பட்டாப்லதான்.
நாட்டுல பல பேரு கண்ணு தெரியலேயே…
நாலு நல்ல சமாச்சாரங்களப் பாக்க முடியலியே’ன்னு
மனசுக்குள்ள குமுறிக்கிட்டு இருக்கான்…
நீ என்னடான்னா இருட்டுல எரும மாட்டைத் தேடுன கதையா…நம்பரத் தடவுறியே…

இதப்பாத்தியா…
சிங்களன் குண்டுக்கு தப்பிச்சு படகேறி வந்த 21 தமிழ் அகதிகள
கடல்லயே தள்ளி கொன்னு போட்டாங்கய்யா…”ன்னு
பேப்பர நீட்டுறான் அறிவொளி அப்பாசு.

” ‘வந்தாரை வாழவைக்கும் தமிழகம்’ன்னு
நம்பி வந்தாங்க.
ஆனா… இங்க வந்தாரையும் வாழ வைக்கல…
வாழ்ந்தோரையும் நிம்மதியா விட்டு வைக்கல…”

ரொம்ப உணர்ச்சிவசப்படாதே அப்பாசு.
ஆயிரம் பிரச்சனைக எடைல வந்தாலும்
தொப்புள் கொடி உறவு உட்டா போகும்?
உனக்கு தான் தெரியுமில்ல…நம்மாளுக புத்தி…
புதுப்பிரச்சனை ஒண்ணு கெடச்சுதுன்னா
பழச அப்படியே அம்போன்னு உட்ருவாங்கன்னு…
இதுக்கு போயி வருத்தப்படறியே….
எனக்கு கொஞ்சம் வேல இருக்கு.
அப்படியே வீட்டு வரைக்கும் தலையக் காட்டீடு வந்தர்றேன்…னு நகர்ந்தேன்.

“ஊடெல்லாம் சுண்னாம்பு அடிக்கணும்…
ஊட்டை அடைச்சுக்கிட்டு இருக்குற ஒன்னோட புஸ்தகம்…
பேப்பரெல்லாம் ஓரங்கட்டிவையு”ன்னா பொண்டாட்டி.
மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்ததுங்கற பேர் வரவேண்டாமேன்னு…
மூல மூலைக்கு எறைஞ்சு கெடந்ததை
எல்லாம் தூசு தட்டி எடுத்துக் கட்டி வைக்க ஆரம்பிச்சேன்.

கால் வாசிப் புஸ்தகம் கரையான் அரிச்சு…
பாதி மழைல நனஞ்சுன்னு கெடந்ததச் சுத்தம்
பண்றதுக்குள்ள தும்மல் வேற…
பழைய பேப்பரக் கட்டிக் கடாசீறலாம்னு பார்த்தா…

அதுல…

‘பம்பாயில் தமிழர் மீது கொலை வெறித் தாக்குதல்!’
“சிவசேனா வெறியாட்டம்”
“துடிக்கத் துடிக்கக் கொன்றனர்.”
“இரண்டாயிரம் தமிழர்கள் ரயிலில் சென்னை வருகை…”ன்னு பக்கம் பக்கமா செய்திகள்.

அடச்சே…
யாதும் ஊரே யாவரும் கேளீர்ன்னு பாடுன
எங்க கவிஞர் இன்னேரம் இருந்திருந்தார்ன்னா…
மனசு நொந்தே செத்திருப்பாரு.
மத்தவங்களுக்கெல்லாம் தமிழ்நாடு தெறந்த வீடு…
ஆனா..நம்மாளுகளுக்கு மட்டும்தான்
நிம்மதியாகத் தங்க ஒரு கூரை கிடையாது.
இதையெல்லாம் படிச்சுகிட்டு இருந்தா
ஒரு மாதிரி ஆயிரும்னு கட்டி வெச்சுட்டு…
அப்பாசப் பார்க்க நடையக் கட்டினேன்.

அறிவொளி அப்பாசு குடுத்த டீயக் குடிச்சுகிட்டே….
ஏன் அப்பாஸ் தமிழனுக்கு மட்டும் இவ்வளவு சிக்கல்?ன்னேன்.

“அட நீ வேற இப்ப யார் தமிழன்கறதுலயே பலசிக்கல் இருக்கு.
எங்காளுகள எடுத்துக்கோ…
அதுல சில பேரு தமிழன்னு சொன்னா
அது வேற யாரோன்னு நெனச்சுகிட்டு இருக்கான்.
என்னவோ இவுங்கெல்லாம் அரேபிய ஷேக்கோட சித்தப்பா பசங்கன்னு
நெனச்சுக்கிட்டு இருக்கானுக…

மார்க்கம்தான் வேறயே தவிர
இனம்னா அவனும் தமிழந்தான்னு புரிய வைக்கறதுக்குள்ள
எங்க ஆத்தாகிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளீல வந்துடும் போலிருக்கு.

சுருக்கமாச் சொன்னா…

இஸ்லாம் எங்க வழி
தமிழ் எங்கள் மொழி.

ஆனா…
எங்காளுகள்லயே சிலருக்கு இன்னமும்
‘மதத்துக்கும்-இனத்துக்குமே வித்தியாசம் தெரியாமத்தான் இருக்கு.”

அட நீ ஒண்ணு… அப்பாசு…
நம்ம தமிழ்நாட்டோட முதல்வரே
செக்கோஸ்லேவியா பாணி விடுதலை பத்திப் பேசுனப்போ…
“ஈழத்துல தமிழ் மாணவர்கள் – முஸ்லிம் மாணவர்கள் பழிவாங்கப்பட்டனர்”ன்னு பேசுறாரு…
இத எங்கபோயி முட்டிக்க…?
வாஜ்பாயுக்குப் புரியணும்னா வேண்ணா…
‘இந்து மாணவர்கள்’ன்னு சொல்லீட்டுப் போயிருக்கலாம்.
ஆனா ‘தமிழ் மாணவர்கள்’ன்னு சொன்னது எந்த விதத்திலும் சரியில்லே

இஸ்லாமியர்களும் , கிறிஸ்தவர்களும்
தமிழர்கள் இல்லாம ஐரோப்பியர்களா…?
இதுனாலதான் அங்க உள்ளவர்கள் அனைவரையும்
‘தமிழ் பேசும் மக்கள்’ன்னு ஒரே வார்த்தைல சொல்றாங்க…புரிஞ்சுதா?
அதுசரி… தமிழன் இங்க மட்டும்தான் அடிபட்டானா…
இல்ல வேற எங்காவது உண்டா அப்பாசு?ன்னு கேட்டேன்.

“ஏன் இல்லாம…நாற்பது ஐம்பது வருசம் முன்னாடியே
பர்மாவுல ஒதை வாங்குனாங்க…
ரங்கூன்ல இருந்து கூட்டம் கூட்டமா வந்து சேர்ந்தாங்க நம்மாளுக.
ஜெர்மனிய எடுத்துக்க…
இப்பவும் நியோ நாஜிக்கள் தமிழனக் கண்டாலே
பொறட்டிப் பொறட்டி அடிக்கறானுக.

மொத்தத்துல…
உலகம் முழுக்க உதைபட்ட ஒரே இனம் எங்க இனம்தான்னு
நாம ‘நெஞ்ச நிமித்தி’ சொல்லலாம்?
சரி… வா… அப்படியே ஒரு தம்மடிச்சுட்டு வர்லாம்…”னு
பொட்டிக்கடையப் பாத்து நடக்க ஆரம்பிச்சிட்டான் நம்ம அப்பாசு.

சரி… இந்த சர்வதேசத் தமிழன் சமாச்சாரமெல்லாம் கிடக்கட்டும்…
நம்ம லோக்கல் தமிழன் எப்படி இருக்கான்…?
இந்த நிலமையே நீடிக்குமா…
இல்ல இங்கயும் உளுகுமா ஒதை…
தேச அளவுல கெடைக்கற அதே’மொதல் மரியாதை’ இங்கயும் கெடைக்குமா…
அதச் சொல்லு நீ மொதல்ல…

“விழுந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை.
ஏன்னா…’தமிழ்நாட்டுல தமிழனே மைனாரிட்டி…
அதுனால தமிழ் வழிபாடு கூடாது’ன்னு ஒரு ஆளு புள்ளி விவரமா
ஒரு இங்கிலீஷ் பத்திரிகைல எழுதீருந்தானே அத நீ பாக்குலியா?”ங்கறான் அப்பாசு.

அது கெடக்கட்டும்…நீ மத்த விசயங்களச் சொல்லூன்னேன்….

“அதையெல்லாம் நீ என்னக் கேக்கறத விட…
அந்த மறத்தமிழனையே கேளு…நம்மள ஆள உடு…”ன்னு கெளம்பீட்டான்.

தன்னிகரில்லாத் தமிழனே…!

என்னத்தச் சொல்லி என்னத்தப் பண்ண…
அந்த காலத்துல இந்த நாட்டோட சுதந்திரத்துக்கே
போராடுன வ.உ.சி.யப் பத்தி படம் எடுத்தாக்கூட
‘கப்பலோட்டிய தமிழன்’ன்னு எடுத்தாங்க…
ஆனா… இன்னைக்கு டிராபிக் போலீசைத் தட்டிக் கேக்கறவனைக்கூட
‘இந்தியன்’ன்னு படமெடுக்கறாங்க.

போனவாரம் நாரதகான சபாவுல
ஒரு கூட்டத்துக்குப் போயிருந்தப்போ…
பக்கத்துல இருந்த ஒரு கிழடுகிட்ட
‘ஐயா நிகழ்ச்சி எப்பத் துவங்கும்’னு கேட்டா…
‘தம்பி எனக்கு இங்கிலீஷ் அவ்வளவா வராது’ங்குது அது.
Programme எப்ப Start ஆகும்னு ‘சுத்தத் தமிழ்ல’
கேட்டாத்தான் புரியுமாம் அதுக்கு.
சரி ஆறுதலுக்கு ஏதாவது பாட்டாவது கேக்கலாம்னு பாத்தா…
‘கட்டிப்புடி கட்டிப்புடிடா கண்ணாளா கண்டபடி
கட்டிப்புடிடா’ன்கறான் ஒரு தமிழன்.

ஆதித் தமிழனா இருக்க வேண்டியவன்
சாதித் தமிழனா ஆயிட்டான் இன்னைக்கு.

வெளி மாநிலத்தான்… வெளி நாட்டான்…
நம்மாளுகள கொன்னு கொறைச்சது போக…
உள்ளூர்ல நம்மாளுக எண்ணிக்கைய நம்மாளுகளே
கொறைச்சிட்டு வர்றான்.

பாராளுமன்றத் தொகுதியே மூணு,நாலு கொறைஞ்சு போச்சு.
சாதாரணமாத் தமிழ் பேசுனாக்கூட
‘என்ன தமிழ்ப் பற்றா…?’ங்கறான் நம்மாளே.
‘இல்லப்பா எனக்கு அது மட்டும்தான் தெரியும்’னு
கையெடுத்துக் கும்புட்டாக்கூட விடமாட்டேங்கானுக
சில பிரிட்டிஷ்காரன் பேரனுக.

சாதித் தமிழன் போக மீதித் தமிழனுக
வாயப் பொளந்துகிட்டு ஆறு வித்தியாசத்துல அஞ்சுதான் தெரிஞ்சிருக்கு…
மீதி ஒண்ணு என்ன?ன்னு முடியப் பிச்சுக்கிட்டு சுத்தறானுக.

மொத்தத்துல…
தமிழனுக்கு குடும்பம் நடத்தறதுகூட எப்படீன்னு மறந்து போச்சு
‘அது’க்கும் மாத்ருபூதமோ… நாராயணரெட்டியோ வந்தாத்தான் ஆச்சுன்னு
அடம்புடிக்கறான் .

திரைகடலோடியும் திரவியம் தேடூன்னு
இவனுகள ஹார்டுவேர் – சாப்டுவேர் எல்லாம்
படிக்க வெச்சு அனுப்புனா…
இவனுக இருக்கற அண்டர்வேரையும் கிழிச்சுக்கிட்டு வந்து நிக்கறானுக.

இதுக்கெல்லாம் நம்மாளுகளுக்கு உள்ள ஒரேவழி…

எதிரிகளிடம்கூட காட்டுற இரக்கம் –
சகிக்கவே முடியாத அளவுக்கு கடைபிடிக்கிற சகிப்புத்தன்மை –
துரோகிககிட்டக்கூட காட்டுற பெருந்தன்மை –
இதையெல்லாம் அப்படியே மூட்டை கட்டி மூலைல வீசிட்டு…

தமிழனுக்கு ‘வாங்க’ மட்டுமில்ல.
‘குடுக்கவும்’ தெரியும்னு காட்டுனாப் போதும்.

அதுதான் பிரச்சனைகளுக்கான ஒரே முடிவு.

எதிர்ப்பார்ப்புகளுடன்,
பாமரன்
நன்றி: குமுதம்

ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்….


இதை விட தமிழுக்கும், தமிழருக்கும் யார் முதல் மரியாதை தந்துவிட முடியும்? நம் தமிழக அரசைத் தவிர?

முல்லைக்குத் தேர் தந்த பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் கொச்சைப் படுத்திய சிவாஜி சிறந்த படமாம். இதற்கு விருது வேறு. தொல்காப்பியத்திற்கு உரையும், குறளுக்கு ஓவியமும் தீட்டியவரின் அரசு அறிவித்திருக்கிறது.

பேத்தி வயதில் உள்ள சிறுமிகளைப் பார்த்து ரஜினி ”வாங்க பழகலாம்” எனப் பல்லிளிப்பதும்……

அழகுமிகு தமிழ்ப் பெயர்களைக் கொண்ட அச்சிறுமிகளை கேடுகெட்ட முறையில் விவேக் கிண்டல் செய்வதும்……..

அப்பா பொறுப்பில் இருக்க வேண்டிய பாப்பையா ”அத்தையின் கணவர்” வேலை பார்ப்பதும்….

கண்டு காறித் துப்பாத தமிழ் உணர்வாளர்களோ பெண்ணியவாதிகளோ இல்லை.(இயக்குநர் ஷங்கர்….. வசனகர்த்தா சுஜாதா போன்ற இத்யாதிகளை ஏற்கெனவே நான் பலமுறை திட்டித் தீர்த்தாயிற்று) பெண் இனத்தைக் கொச்சைப் படுத்தியது போதாதென்று அப்பெண்களுக்கு முகத்தில் கருப்புச் சாயம் பூசி கருப்பினத்தையும் கொச்சைப்படுத்தியது கண்டு குமுறியவர்கள் அநேகம் பேர்.

இந்த லட்சணத்தில்தான் இதற்குக் கிடைத்திருக்கிறது ”சிறந்த” படத்திற்கான விருது.

அருமையோ அருமைன்னேன்.

இவர்களைத் தவிர உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் தகுதி வேறு எவருக்கு இருக்க முடியும்ன்னேன்?

**********

காலையில் எழுந்ததில் இருந்தே அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. வந்த ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும் ஒவ்வொரு ரகம். அதிலும் சென்னையில் இருந்து அழைத்த ஒரு நண்பர் இதுவரையிலும் யாருமே கேள்விப்பட்டிராத “புதிய” ”புதிய” தகவல்களாகச் சொன்னார். நான் தலை சுற்றிக் கீழே விழாதது ஒன்றுதான் பாக்கி.

”வணக்கங்க தோழர்…. நலமா இருக்கீங்களா?”

ரொம்ப நல்லா இருக்கேன் தோழர். நீங்க எப்படி?

”நலம். அப்புறம் ஒரு மிக முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லலாம்ன்னுதான் கூப்பிட்டேன்.”

சொல்லுங்க தலைவா…. என்ன விஷயம்?

“தமிழக அரசியல்”ன்னு ஒரு பத்திரிக்கை வந்துகிட்டு இருக்கு தெரியுமா உங்களுக்கு?” (இதுல முப்பதாவது வாரமா எழுதும் எனக்கு இது தேவைதான்)

அடடே…… அப்படியா? தெரியாதே எனக்கு….. என்றேன்.

”அதுல என்னோட புத்தகம் பத்தி ஒரு செய்தி வந்திருக்கு. வாங்கிப் பாருங்க.” (அடப்பாவி மத்த பக்கங்களை புரட்டிக்கூட பார்க்கலியா….)

அவசியம் பார்க்கிறேன் தோழர்

”அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்…… நாங்க மறுபடியும் எங்க பத்திரிக்கையை அக்டோபர்ல இருந்து கொண்டு வர்றோம். அதுக்கு உங்க கட்டுரை வேணும்.”

கட்டாயம் குடுக்கிறேன் தலைவா…..

”இன்னொரு மிக முக்கியமான மேட்டர்…. ”

சொல்லுங்க தோழர்……..

”தமிழ்நாட்டுல “தினத்தந்தீ”ன்னு ஒரு பத்திரிக்கை வந்துகிட்டு இருக்கு……..”

அய்யய்யோ…….. என்னது காந்திய சுட்டுட்டாங்களா……..? எப்ப……?

**********

தமிழக அரசியலில் பதில் சொல்லும் சீனியர் உண்மையிலேயே சீனியர்தான் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார். அவர் வெறுமனே பதில் அளிப்பதில் மட்டுமல்ல, வயதிலும் அனுபவத்திலும் சீனியர்தான் என்பதை ஒரே ஒரு பதிலில் உணர்த்திவிட்டார்.

போன வாரம் “தமிழகத்தில் பெரியார் பிறந்திருக்காவிட்டால்….?” என்கிற கேள்விக்கு “ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது.” என்று பதிலளித்ததைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனேன்,

கடந்த தலைமுறையில் நடந்த பல சமாச்சாரங்கள் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியவில்லையே என்கிற ஆதங்கத்தை அவர் நாசூக்காக வெளிப்படுத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

நேற்று சிறு கூட்டத்தவர்களிடம் மட்டும் ஆலயங்கள் இருந்த நிலை மாறி, இன்று பெரும் கூட்டம் அங்கு கூடுகிறதே ஏன்? என்பதற்கான விடையை அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்தவர்களால் மட்டுமே சொல்ல இயலும். அந்த வகையில் என்ன சொன்னாலும் சீனியர் சீனியர்தான். ஜூனியர் ஜூனியர்தான்.

உண்மைதான்.

தந்தை பெரியார் இங்கு பிறந்திருக்காவிட்டால் ஆத்திகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்காதுதான்.

கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் கால் பட்டால் கூட தீட்டாகி விடுமென்று சொன்னதை நம்பி ஒரு பெரும் கூட்டம் ஊரைச் சுற்றி வலம் வர…..

”கோபுர தரிசனமே கோடி புண்ணியம்” என்று அளந்ததைக் கேட்டு இன்னொரு கூட்டம் கோயிலுக்கு வெளியே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க…….

”ஆகமத்துக்கு ஆகாது. அப்படியே நில்” என்றதை ஏற்று கருவறைக்கு வெளியே மற்றொரு கூட்டம் காத்துக் கிடந்த வேளையில்தான் அந்தக் குரல் ஒலித்தது……..

“ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்றால் இறைத் தலங்களில் மட்டும் ஏனடா இந்தப் பாகுபாடு?” என்று பெரியாரிடமிருந்து ஓங்கி ஒலித்தது அந்தக் குரல்.

”நட்ட கல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாற்றியேசுற்றிவந்து முணுமுணென்று சொல்லும் மந்திரம் ஏதடாநட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ”

என்று சிவவாக்கியர்கள் கரடியாய் கத்தியும் விழித்தெழாத இந்த சமுதாயம்…….

அந்த ஈரோட்டுக் கிழவன் போட்ட போட்டில்தான் விழித்துக் கொண்டது. அவன் ஆத்திகர்களுக்கும் சேர்த்துப் போராடினான். சமத்துவமற்ற சமயத் தலங்களை சனநாயகப் படுத்துவதில் முன்னணி வீரனாய் நின்றான்.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

வைக்கம் நகரத்து வீதிகளில் ஒடுக்கப்பட்ட ஆத்திகர்கள் நடமாடியிருக்கவே முடியாது.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

கோபுரத்தை மட்டுமே கும்பிட்டுச் சென்றவர்கள் கோயிலுக்குள் கால் வைத்திருக்க முடியாது.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

”ஆலயங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற குரல் உரக்க எழுந்திருக்க முடியாது.

ஆம் தந்தை பெரியார் மட்டும் இல்லாவிட்டால்……..

பெண்கள் வழிபடுவதற்கே பிரஸ்னம் பார்த்து குறி சொல்லிக் கொண்டிருக்கும் ”கேரள ஏட்டன்மார்களுக்கு” நடுவே வழிபடுவது மட்டுமல்ல….. பெண்கள் வழிபாடே நடத்தலாம் என்கிற நெத்தியடி மேல்மருவத்தூர் வழிமுறைகள் தோன்றியிருக்க முடியாது.

தெருநுழைவுப் போராட்டம்……

கோயில் நுழைவுப் போராட்டம்…..

கருவறை நுழைவுப் போராட்டம்……

சாதிபேதமற்ற வழிபாட்டு உரிமைக்கான போராட்டம்………

என எண்ணற்ற போராட்டங்களை இம்மண்ணில் அவர் நடத்தியிருக்காவிட்டால்

“போங்கப்பா நீங்களும்….. உங்க ஆத்திகமும்” என்று துண்டை உதறித் தோளில் போட்டு விட்டுப் போயிருப்பார்கள் பலர்.

எனது முப்பாட்டன் கோயிலுக்குள் நுழைய முடியாமல் இருந்த நிலை மா(ற்)றி

இன்று எனது தலைமுறை நுழைகிறதென்றால் அதற்குக் காரணம் அந்தப் பெரியார்தான்.

ஆம்.

பெரியார் நாத்திகர்களுக்கு மட்டுமில்லை

ஆத்திகர்களுக்கும் அவர்தான் தலைவர்.

பெரியாருக்கு எதிராக புழுதி வீசும் தமிழ் இந்து!


தமிழ் இந்து “தமிழர்களின் தாய் மதம்” என்ற அடைமொழியுடன் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்பபுறப்பட்டு இருக்கிறது பார்ப்பன கும்பல் ஒன்று. வழமையாக இவர்கள் பெரியாரை நோக்கி அவதூறு கிளப்புபவர்கள் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்தமுறை பெரியாரின் நூல்களில் இருந்து பல செய்திகளை எடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளை வெட்டி பெரியாரின் வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்க புறப்பட்டு இருக்கிறார்கள். பெரியாருக்கு எதிரான இந்துமத பூசாரிகளுக்கும், வலதுசாரி தமிழ்தேசியம் பேசும் சில போலிதமிழ்தேசியவாதிகளுக்கும் இவர்கள் பெரியார்வாதிகளுக்கு எதிராக ஆயுதம் தயாரித்துதரும் வேலைகளை செய்துகொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் பெரியார் குறித்து வைக்கும் குற்றசாட்டுகளுக்கு பெரியார்வாதிகள் யாரேனும் கண்டிப்பாக பதில் கூறுவார்கள் என்ற நம்பிக்கையில் இதுவரை காத்திருந்தேன். தமிழ் ஓவியா போன்ற பெரியார்வாதிகள் எதிர்வினை ஆற்றி வருவது ஆறுதல் அளிக்கிறது. மதிமாறன் இதுபற்றி எழுதினால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்தாக இருந்து வந்தது. சமீப காலமாக மதிமாறன் வேறுதிசையில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார் என்று தோன்றுகிறது. தமிழ் இந்துவில் ஆயுள்கால சந்தாதாரராக செயல்படும் திருச்சிக்காரன் மதிமாறன் வலைப்பூவை குத்தகைக்கு எடுத்து கொள்ள ஆரம்பித்து விட்டார்.பெரியாரும் அண்ணாவும் இணைந்து கொள்ளை அடித்துவிட்டு அதனை பகிர்ந்து கொள்ள சினிமா பாணியில் சண்டை பிடித்தனர் என்று கருத்து தெரிவித்த திரிச்சிகாரர் இப்பொழுதுதான் மதிமாறன் சரியான திசையில் பயணிப்பதாக பாராட்டு பத்திரம் வாசிக்கிறார். மதிமாறன் அளவிற்கு நான் ஒன்று பெரிய ஆய்வாளன் அல்ல நேற்று எழுத துவங்கிய சின்னப்பயலாக நான் இருந்தபொழுதும் பெரியாரை நேசிப்பவன் என்ற முறையில் தமிழ் இந்துவிற்கு பதில் சொல்லும் கடமை எனக்கும் உள்ளது என்பதால் எனது எதிர்வினையை பதிவு செய்கிறேன்.

தாழ்த்தப்பட்டோருக்குப் பாடுபட்டவரா ஈ.வே.ராமசாமி நாயக்கர்?

என்ற தலைப்பில் பெரியாரை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரானவர் என்று நிறுவ முயன்று இருக்கிறார்கள். காந்தி சூத்திரர்கள் போலவே பஞ்சமர்களும் கோவிலுக்குள் செல்லும் உரிமை உள்ளது என்று கூறியபொழுது பெரியார் இவ்வாறு கூறினார் “நடுநிலைசாதியான சூத்திரர்கள் கிழே இறங்கி கடைநிலைசாதியான பஞ்சமர்களோடு சேரலாம் என்று காந்தியாரின் கூற்று இருக்கிறது . சூத்திரர்கள் ஏற்கனவே இருந்தநிலையில் இருந்து ஒருபடி கிழே இறங்கலாம் ஆனால் பார்பனர்கள் அப்படியே இருக்க வேண்டும். இது பார்ப்பனர்களின் மனுதர்மத்தை காப்பதாக இருக்கிறது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டும். காந்தியாரின் பேச்சு வர்க்க வேறுபாடுகளை களைவதாக இல்லாமல். வர்க்க வேறுபாடுகளை காப்பதாகவே இருக்கிறது. “

காந்தியின் அறிவித்த கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களும் செல்லலாம் என்ற அறிவிப்பு பார்ப்பனர்களின் நிலையை காப்பதோடு வர்ணாசிரம சித்தாந்தங்களை காப்பதுமாக இருக்கிறது என்பதே பெரியாரின் கருத்து.

இதனை இவர்கள் இவ்வாறு திரித்து எழுதி இருக்கிறார்கள்.

தமிழ் இந்துவிலிருந்து:

காந்திஜி, ”கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்லமுடியுமோ அந்த அளவுவரையில்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்” என்று சொன்னபோது அதன் மீது ஆத்திரப்பட்டு ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியது என்ன தெரியுமா?

”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி)

தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று சொல்லுகின்ற ஈ.வே.ராமசாமி நாயக்கர்தான், பறையர்களை சூத்திரர்களோடு ஒன்றிணைக்கக்கூடாது என்று சொல்கின்றார். காரணம் சூத்திரர்களோடு சேர்த்தால் நடுசாதியாக இருந்த சூத்திரர் கீழ்ச்சாதியாக ஆக்கப்பட்டுவிடுவார்களாம். இதுதான் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் சாதிப்பற்று

/////////////////

இங்கே பார்பனர்கள் அப்படியே இருப்பார்கள் என்று பெரியார் கூறியதை வெட்டி வீசிவிட்டு பெரியார் சாதிய அபிமானி என்று போலி ஆவணம் தயாரித்து இருப்பது அம்பலமாகிறது.

பெரியார் தாழ்த்தப்பட்டோர் படித்து வருவதால்தான் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுகிறது என்று சொன்னதாகவும் தாழப்பட்ட பெண்கள் ரவிக்கை அணிவதால் பருத்தி பஞ்சம் ஏற்படுவதுவாக கூறினார் என்று கற்பனைக்கு எட்டாத புனைவுகளை எடுத்து வைக்கிறார்கள்.
தமிழ் இந்துவிலிருந்து:

அதே போல, துணி விலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவதுதான். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டதுதான் என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறியதாக தாழ்த்தப்பட்ட தலைவர்கள் இன்றும் கூறுகின்றனர். இது உண்மை இல்லை என்று இதுவரை திராவிடர்க் கழகம் தெளிவுப்படுத்தவில்லை

//////////////////////////////

திராவிடர் கழகம் தெளிவு படுத்தாவிட்டால் என்ன? இவர்களின் கற்பனைத்திறன் நமக்கு தெளிவாகிவிடுகிறது. வர்ணாசிரம கொள்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார் பெரியார் என்பது சிறுவர்களுக்கும் தெரியும் அப்படி இருக்க இந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்தான்

மனுதர்மத்தினை போதித்த பகவான் ஹரியையே செருப்பால் அடித்த பெரியார். அந்த மனுதர்மவாதிகளின் கூற்றை நம்பி தாழ்த்தப்பட்டவர் பத்தி அவதூறு செய்தார் என்பவர்களை செருப்பால் அடிப்பது போன்று பெரியார் பேசியதை கவனிக்கவும்.

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

———- தந்தைபெரியார்- நூல்: “சிந்தனையும் பகுத்தறிவும்”————-

அப்படியே போகும்போக்கில் பெரியார் பார்பனர்களை மட்டுமே எதிர்த்தார் ஆதிக்கசாதியினரை எதிர்த்தாரா? முதுகுளத்தூர் கலவரம் பத்தி பேசினாரா என்று சில போலி தலித்போராளிகளின் குரலை கடனுக்கு வாங்கி இந்த பார்ப்பன பகதர்கள் நமக்கு எதிராக கேள்வியினை முன்வைக்கிறார்கள்.

முதுகுளத்தூர் கலவரம் குறித்து பேசிய ஒரே தலைவன் பெரியார் என்பது அந்த அறிவாளிகளுக்கு தெரியாமல் போய்விட்டது போலும். . முதுகுளத்தூர் கலவரம் அடங்க ஒரேவழி முத்துராமலிங்கத்தை கைது செய்வதுதான் என்றும். பக்வத்சலத்தின் அறிக்கை மிகத்தெளிவாக இருக்கிறது அதன்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறிய தலைவன் பெரியார் என்பது பெரியவாள் பக்தர்களுக்கு தெரியவில்லை என்பது நம்பும்படியாக இல்லையே.

அப்படியே இந்த மனுதர்மவாதிகள் அம்பேத்காரை பெரியார் அவதூறு செய்தார் என்று அள்ளிவீசுகிறார்கள். இந்துமதத்தை அதன் வேதநூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்தியவர் அண்ணல் அம்பேத்கார் என்பதை இவர்கள் வசதிக்காம மறைக்க முயல்கிறார்கள். இந்துவாதிகளின் திடீர் அம்பேத்கார்பாசம் நமக்கு விந்தையாக இருக்கிறது. எனது தலைவர் என்று அம்பேத்காரை பெரியார் கொண்டாடியதை இவர்கள் எவ்வளவு முயன்றாலும் மறைக்க முடியுமா என்ன? அம்பேத்காரை இவர்கள் பெரியார் எதிர்ப்பிற்கு கருவியாக நிறுவமுயல்வது இங்கே அம்பலப்பட்டு போய்விடுகிறது.

தமிழ் இந்துவில் பெரியாருக்கு எதிராக ஒரு தொடரே எழுதி கொண்டிருக்கிறார்கள். விட்டால் பெரியார்தான் தமிழகத்தில் சாதியத்தை கொண்டுவந்தார் என்று வரலாறு எழுதினாலும் எழுதிவிடுவார்களோ என்ற ஐயம் எழாமல் இல்லை. எல்லோரும் வேதநூல் படிக்கலாம் என்றும் ஒரு தொடர் போனசாக போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் மனுதர்மம் வேறுமாதிரியாக சொல்லுகிறது.

மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

“வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.

இவர்கள் புதிதாக வேதம் எல்லோருக்கு பொது என்று கதைவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
மூட நம்பிக்கையில் ஒட்டுமொத்த குத்தகைதாரர்களாக தம்மை தமிழ் இந்து நம்பிக்கொண்டு இருக்கிறது போலும். சுயமரியாதை இயக்கத்தினரின் எழுதிய புத்தகங்களை பெருச்சாளி போல குடைந்து குடைந்து எங்காவது இவர்களுக்கு சாதகமாக ஏதாவது எழுதிவிடமாட்டர்களா? என்று ஏங்கிய ஏக்கம் நமக்கு புரிகிறது.

“சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!… யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
– பெரியார்

இன்னும் சந்திரகிரகணகாலங்களில் பாம்பு நிலவை விழுங்கிவிடுகிறது என்று நம்பிக்கொண்டு அலையும் இந்த மூடநம்பிக்கை கூட்டம் சுயமரியாதை இயக்கத்திற்கே பகுத்தறிவை போதிக்கிறது. உதாரணமாக சம்பூகனை ராமன் கொலைசெய்ததற்கு காரணம் வர்ணாசிரம கொள்கைகள்தானே? என்று சுயமரியாதை இயக்கத்தினர் கேட்டால் இவர்கள் பொங்கி விடுகிறார்கள்.
உங்களுக்குத்தான் ராமாயணத்தின் மீது நம்பிக்கை இல்லையே ராமன் மீது நம்பிக்கையில்லையே அப்புறம் எதுக்கு ராமாயணம் பத்தி எல்லாம் கேள்வி கேட்குறீங்க? என்று சுயமரியாதைக்காரர்கள் பகுத்தறிவுவாதிகளுக்கு பகுத்தறிவை போதிக்கிறார்கள். இவர்களிடம் கொஞ்சமாவது பகுத்தறிவு இருந்தால் இவர்கள் இப்படி எழுதுவதை நாம் கருத்தில் கொள்ளலாம் ஆனால் இவர்கள் மூடநம்பிக்கைகளின் காவலர்களாக இருந்துகொண்டு நமக்கே பகுத்தறிவினை போதிப்பது கிராமத்தில் நடைமுறையில் இருக்கும் ஒரு பழமொழிதான் நியாபகத்திற்கு வருகிறது.
இவர்களின் தயாரிப்புகள்தான் தேவநாதன் கருவறைக்குள் செய்தது குறித்து பகுத்தறிவாளர்கள் எழுதினால் “உங்களுத்தான் கோவில் பிடிக்காதே அப்புறம் எதற்கு கோவில் குறித்து கவலை படுகிறீர்கள் என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்கிறார்கள் போலும்.
எதனால் வேதத்தை எதிர்க்கிறோம் என்பதற்கான காரணங்களை நாம் சொல்ல கூடாதாம். உங்களுக்கு நம்பிக்கை இல்லையே பிறகு எதற்கு அதை பற்றி பேசுகிறீர்கள் என்கிறார்கள்.
மணியம்மை மனசோர்வு ஏற்படும் பொழுதெல்லாம் பெரியார் கூறிய வாசகங்கள் என் மனதில் தோன்றி என் சோர்வை நீக்கி விடுகிறது என்று எழுதியதை ஏதோ புராணக்கதைகளில் வானத்தில் இருந்து ஒலிக்கும் அசரிரீயோடு ஒப்பிட்டு மணியம்மை அவர்களை மூடநம்பிக்கைவாதி என்று முத்திரை குத்த முயல்கிறார்கள்.

பெரியார் தனது மனைவி நாகம்மையார் இறந்தபொழுது அங்கே வந்த பெண்களை அழவிடாமல் செய்தார் அதே பெரியார் ராஜாஜி இறந்தபொழுது கண்ணீர்விட்டு அழுதார் பார்த்தீர்களா ஊருக்கு ஒரு நியாயம் பெரியாருக்கு ஒரு நியாயம் என்று தப்பாக அர்த்தம் கற்பிக்கிறது தமிழ் இந்து.

பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் “ஒப்பாரி” என்ற பெயரில் இறந்தவரின் உடலைசுற்றி அமர்ந்து கொண்டு பெண்கள் ஒப்புக்காக அழுவார்கள். அது உண்மையில் அழுவதில்லை வெறும் ஒப்புக்கு அழுவதால்தான் அதன் பெயர் ஒப்பாரி அதனை தடை செய்யவேண்டும் என்று பெரியார் விரும்பினார் நடத்தி காட்டினார். ஒருவரின் பிரிவால் வருந்துவது வேறு பாசங்கிற்காக அழுவது வேறு. இறந்தவீட்டின் இறுக்கமான சூழலை மேலும் இறுக்கமாக்கும் ஒப்பாரியை தடை செய்தததை ஏதோ பெரியார் உறவினர் யார் இறந்தாலும் அழக்கூடாது என்று சொன்னது போல திரித்து எழுதி தனது வன்மத்தை தீர்த்து கொள்கிறது.

இறந்தவர்களின் உடலை சுற்றி மத சடங்குகள் என்ற பெயரில் நடக்கும் அவலங்களைத்தான் பெரியார் கண்டித்தார் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒருவரின் பிரிவினால் கண்ணீர் அரும்புவது இயற்கையான ஒன்று அதனை சுயமரியாதை என்றும் தவறு என்று சொல்லவில்லை.

அதாவது பெரியாரின் பிரிவால் மணியம்மை கண்ணீர் சிந்தினாலும் ராஜாஜி இறந்ததும் பெரியார் கண்ணீர் சிந்தினாலும் அது தவறு என்கிறது தமிழ் இந்து. சுயமரியாதைக்காரனுக்கு கண்ணீர் விடுவது கூட மூடநம்பிக்கை என்று புதிதாக நமக்கு பகுத்தறிவு போதிக்கிறது இந்த மூடநம்பிக்கை குழு.

பெரியார் நிகழ்விற்கு மொமரியல் ஹாலில் அனுமதி கிடைக்கவில்லை என்பதற்காக பெரியார்திடல் நிறுவப்பட்டது அந்த நிகழ்வில் பெரியார் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பளித்து இந்த அரங்கை யார் வேண்டுமானாலும் மாற்று கருத்து இருப்பினும் அவர்கள் நிகழ்வை நிகழ்த்த அனுமதிக்கும் படி இந்த திடல் திகழட்டும் என்று பேசினார்.

தமிழ் இந்துவிலிருந்து

ஈ. வே. ராமசாமி நாயக்கர் எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறார் என்பது புலனாகும். மற்றொன்றையும் யோசிக்கும்போது ஈ. வே. ராமசாமி நாயக்கரே, மூடநம்பிக்கை வளர ஏற்படுத்தித்தந்த இடம்தான் பெரியார் திடல் என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது.

ஈ. வே. ராமசாமி நாயக்கருடைய இந்த வழி எப்படி தவறானது என்பதை இப்போது பார்க்கலாம்.

மெமோரியல் ஹால் என்ற கிறிஸ்தவர் இடம் கொடுக்கவில்லை என்றால் யாருக்கு நஷ்டம்? இடம் கொடுக்காதவர்களுக்குத்தானே நஷ்டம்! அந்த இடம் இல்லையென்றால் வேறு இடத்தில் நடத்தலாம் அல்லவா? அதைவிட்டுவிட்டு அவர் இடம் தரவில்லை. அதனால் பொது மன்றம் ஒன்றை ஆரம்பித்தேன் என்று ஈ. வே. ராமசாமி நாயக்கர் சொன்னது பகுத்தறிவின் செயலா? அதுவும் கொண்ட கொள்கைக்கு ஆபத்து ஏற்படுவதென்றால் அது வீண்வேலை தானே!

உதாரணமாக ஒன்றை நினைத்துப்பாருங்கள்.

ஈ. வே. ராமசாமி நாயக்கரின் பேட்டியை ஒரு பத்திரிகை அவர்களின் கொள்கைக்கு முரணாக இருப்பதால் வெளியிடவில்லை என்பதற்காக எல்லோருடைய கொள்கைகளையும் சொல்லும் பத்திரிகை ஒன்றை ஆரம்பிக்கிறேன் என்று ஈ. வே. ராமசாமி சொல்வாரா?

###################################################

பெரியார் கருத்துகளை பார்பன ஊடகங்கள் இதுவரை வெளியிட்டத்தில்லை அவரது சிந்தனைகளை குடியரசு மூலம்தான் மக்களை அடைந்தது இவர்களுக்கு தெரியாது போலும். எங்களோடு மாற்று கருத்து இருந்தாலும் தைரியமாக எங்கள் திடலை தருகிறோம் நிகழ்வு நடத்தி கொள்ளுங்கள் என்ற தைரியம் பெரியார் தவிர்த்து வேறு யாரிடமும் இருந்ததாக தெரியவில்லை. பார்பன ஏடுகள் முதல் அரங்கங்கள் வரை அவர்கள கொள்கைகைகளோடு ஒத்து போகாதவர்களை புறக்கணிக்கும் சூழலில் மாற்று கருத்தை மதிக்கும் பெரியாரின் உயர்ந்த உள்ளம் இது போன்று பார்பனிய கும்பலிடம் நாம் எதிர்பார்க்க முடியாதுதான்.

பிறமாநிலங்களில் இன்னும் சாதிய பெயர்களை தாங்கிக்கொண்டு நாயர், நாயுடு, கவுடா என்று அலையும் வேளையில் பெயரில் இருக்கும் சாதிய பெயரை விட்டொழித்துள்ளது தமிழ்நாடு அதற்கு முழு காரணம் பெரியாரும் அவரது இயக்கமும். சாதி வெறிபிடித்த பார்பனிய கும்பல் இன்னும் பெரியாரை நாயக்கர் என்று அழைத்து தங்கள் அரிப்பை தீர்த்து கொள்கிறார்கள்.

தான் இறக்கும் பொழுது இந்துவாக இருக்கமாட்டேன் என்றும் இந்துமதத்தின் புராண குப்பைகளை அதன் வேத நூல்களின் வாயிலாகவே அம்பலப்படுத்திய அண்ணல் அம்பேத்காரை துணைக்கு அழைக்கிறார்கள் பெரியாரை எதிர்க்க. பெரியாரை எதிர்க்க இவர்கள் அண்ணலை நாடுகிறார்கள் என்றாலே அது பெரியாரை கண்டு இவர்கள் எவ்வளவு நடுங்கி போயிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

சில அறிவிலிகள் பெரியார் எங்களுக்காக உழைக்கவில்லை அவர்களுக்காக உழைக்கவில்லை என்று உளறி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கான பதிலை அடுத்த கட்டுரையில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். தமிழ் இந்துவின் முகத்திரை தொடர்ந்து கிழிப்போம்.

தமிழச்சியின் கண்ணீர் அல்லது தாமரையின் கருஞ்சாபம்!


நமக்கு பொதுவா இந்த ‘கவிதை’களையே பிடிப்பதில்லை. தூய தமிழிலி ஒரு வரிக்கு மூன்று அல்லது நான்கு வார்த்தைகளை வைத்து எதையாவது எழுதினால் அது கவிதை என்னும் நம்பிக்கையில் நம்மவர்கள் இருக்கிறார்கள். காதல் கவிதைகள் எழுத முன்னெல்லாம் தெருவுக்கு ஒருத்தர் இருப்பார் இப்பொழுது வீட்டுக்கு ஒருத்தர் இருப்பார் போல. புதுகவிதைன்னு நம்மாளுக எழுதுவதில் பெரும்பாலும் ஒருதலை காதலில் காதலன் காதலியை அபத்தமாக புகழ்வதாகவே இருக்கும். இதில் திரை கவிஞர்கள் பத்தி சொல்லவேண்டியதே இல்லை. வைரமுத்து திரைபாடல்கள் பற்றி சொல்வார் “கவிதை மொழிக்கு ஆடை கட்டி விடுகிறது இசை சிறகுகள் கட்டி விடுகிறது” (திருத்தி எழுதிய தீர்ப்புகள் ) என்று . ஆனால் இன்றைய சூழலில் திரைப்பாடல்கள் மொழியை ஆடைகள் அவிழ்த்து அம்மணம் ஆக்குகிறது. மெட்டுக்கு பாட்டு என்றநிலை மாறி துட்டுக்கு பாட்டு என்று கண்டதை எழுதி தள்ளுகிறார்கள் . திரைப்பட பாடலாசிரியர்களில் தாமரை கொஞ்சம் மனதுக்கு ஆறுதல் தரும் படைப்பாளி. நல்ல தமிழ் சொற்களோடு அவர் எழுதும் பாடல்களை இசைதின்றுவிடுகிறது என்பது வருத்தத்திற்குரியது.

வெறும் திரைப்பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் சமூக அக்கறை உள்ள படைப்பாளியாக இருக்கிறார் தாமரை. ஈழத்தில் போரை நிறுத்தகோரி பாரதிராசா தலைமையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தாமரை எரிமலையாக வெடித்தார். நேரடியாக “கலைஞர் அவர்களே ஜெயலலிதா அமாவாசை என்றால் நீங்கள் அதுக்கு அடுத்த நாள்!”] என்று துணிச்சலாக யாருக்கும் அஞ்சாமல் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் துரோகத்தை தோலுரித்தார்.

தமிழகத்தில் வாழும் பல கலைஞர்களுக்கு தாமரையின் நேர்மையோ துணிச்சலோ இல்லை. தமிழன் என்று இனமுண்டு இந்தியன் என்று ஒரு இனமே இல்லை என்று தைரியமாக சொல்பவர் தாமரை. ஈழத்தில் எண்ணற்ற அப்பாவி தமிழ் மக்கள் கொண்டழிக்கப்பட்ட பொழுது எரிமலையான தாமரை “கண்ணகி மண்ணிலிருந்து ஒரு கருஞ்சாபம்” என்ற கவிதையை வெளியிட்டார். சமீபத்தில் குமுதம் இணையதளம் நடத்திய நேர்காணலில் கவிதையை வாசித்து காண்பித்தார்

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

என்ற வரிகள் வாசிக்கும் பொழுது சகோதரியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. மேலும் வாசிக்க முடியாமல் அழுத தாமரை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொண்டு மீண்டும் வாசித்தார். குழந்தையை பறிகொடுத்த தாயின் துயரம் இன்னொரு தாயுக்குத்தானே தெரியும். நேர்காணலின் இறுதியில் “நான் இந்தியன் என்பதைவிட தமிழச்சி என்பதை பெருமையாக கருதுகிறேன்” என்றார்.

மார்க்சின் இலக்கிய தாதா கும்பலை சேர்ந்த சுகன் இந்தியாவில் இருந்து கொண்டு தாமரை எப்படி இந்தியாவை எதிர்த்து கவி படலாம்? என்று வியக்கனம் செய்துள்ளார்கள். கலைக்காக மக்களே மக்களுக்காக கலை இல்லை என்று கருதும் இலக்கியபோலிகள் மத்தியில். தாமரையின் “கருஞ்சாபம்” கடுப்பை கிளப்பி இருக்கிறது. சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளிலேயே மிக அருமையான கவிதையாக இதனை கருதுகிறேன். இன்றைய தமிழ் திரையுலகம் ஆசியாவின் பணக்கார குடும்பத்தினரால் சூழப்பட்டு இருக்கிறது. இனி திரையில் தாமரை பாடல் வராமல் தடுக்க முயற்சிகள் நடக்கலாம். இங்கு எத்தனையோ கவிஞர்கள் இருந்தாலும் “தமிழச்சி” தாமரையின் கவிதைக்கு முன்னால் மண்டியிட்டு தங்களது கையாகாததனத்தை நொந்து கொள்வார்கள்.

கவிஞர் தாமரையின் கண்ணீர் உங்களுக்காக!
கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
……….

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

(இந்த கவிதையை வாசிக்கும் பொழுது உங்கள் கண்ணில் கண்ணீர் துளிர்த்தால் நீங்கள் உணர்வுள்ள தமிழரே!)

இலக்கிய உலக சகுனி அல்லது ஞானி!


தமிழ்நாட்டில் சமூக அக்கறையுடனும் முற்போக்கு கருத்துக்களை திறம்பட எழுதுபவர் பலர் இருப்பினும். தமிழ்நாட்டிற்கு வந்த சோதனையாக முற்போக்கு எழுத்தாளர் என்ற போலியான முன்னுரைகளுடன் தமிழக ஊடகங்கள் கொண்டாடிய எழுத்தாளர் ஞானி. தன் எழுத்துக்கள் அதிகமான பின்விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற விளம்பரநோக்குடனே அவரது எழுத்துக்கள் இருப்பதை தொடர்ந்து வாசிப்பவர்கள் உணரலாம். தன் எழுத்துக்களும் எண்ணங்களும் பன்முகதன்மைகொண்டன என்ற நம்பிக்கையுடன் எழுதி தள்ளுபவர் ஞானி.

ஞானியின் எழுத்துக்களில் அதிகமாக விளம்பரத்திற்க்காளன ‘ஒ’ பக்கங்களில் இவர் தன்னை அரசியல், சினிமா, இசை, நூல் விமர்சகராகவும் ஓரின சேர்க்கை, லிவிங் டுகெதர், ஆதரவாளராகவும் பெரியார்வாதியாகவும் முன்னிறுத்த விரும்புகிறார். தொட்டுக்கொள்ள ஊறுகாய் போன்று அவ்வப்போது ‘ஈழம்’ பத்தியும் எழுதி கொண்டிருக்கிறார். இவரது எழுத்துக்களை முதன் முதலில் படிப்பவர்கள் கொஞ்சம் குழம்பி போவார்கள். என்னய்யா நம்மாளு சொல்லவராருன்னு. தொடர்ந்து படித்த பின்னாலதான் உணர்வாளர்கள் ஞானி எழுத்துலக சகுனி என்று.

அரசியல் விமர்சகராக ஞானியை ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரது அரசியல் ஆராய்சிகள் பெரும்பாலும் தனது முன்னாள் முதலாளி கருணாநிதியை சாடுவதாகவே இருக்கும். ஜெயலலிதா பத்தி எப்போதும் மேம்போக்காவே விமர்சனம் செய்வார். ஒருதலைபட்சமானது இவரது அரசியல் பார்வை என்று அனைவரும் அறிவார்கள். சினிமா விமர்சனம் செய்யும் அளவிற்கு தனக்கு சினிமா தெரியுமா என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். திரையுலகில் ஐம்பதாண்டுகாலம் நிறைவுசெய்த கமலைவிட விக்ரம் சிறந்த நடிகர் என்று சிண்டு முடிந்திருக்கிறார். ‘மொழி’ படத்தை குறைகள் இல்லாத படைப்பு என்றும் பருத்திவீரன் ‘கழிசடை ‘என்றும் கூறியிருக்கிறார். தனக்கு வேண்டியவர் என்றால் ஒருமாதிரியாகவும் தனக்கு வேண்டாதவர் என்றால் வேறுமாதிரியாகவும் மாதிரியும் விமர்சிப்பார் என்று இவரது முன்னாள் சகபத்திரிக்கையாளர் சுசிகனேசு அம்பலப்படுத்தி இருக்கிறார்.

தேர்ந்த இசைவிமர்ச்சகர் போன்று அஸ்கர் வென்ற ‘ரகுமானை’ வாழ்த்துகிறேன் என்று அவரது மூத்த தலைமுறையினர்களான இளையராசா விசுவநாதனுக்கு ரகுமானிடமிருந்து கற்று கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கி கடுமையான கண்டனத்திற்கு ஆளானார். இவரது ஓரினசேர்க்கை ஆதரவு மணமாகாமல் சேர்ந்து வாழ்தல் பற்றி பெரிதாக எதிர்ப்போ ஆதரவோ இல்லாததால் இவரது ஈழம் பற்றிய படைப்புகள் பத்தி பார்ப்போம்.

ஈழத்தில் கொத்து கொத்தாக தமிழர்கள் குண்டுவிழுந்து செத்து கொண்டிருந்த பொழுது கொதிக்காத ஞானி சிங்கள இயக்குனர் சென்னையில் தாக்கப்பட்ட பொழுது பொங்கி எழுந்தார். சுபவி, திருமா, சீமான் போன்றோர்களுக்கு அறத்தை போதிக்கும் செயலை செவ்வனே செய்தார். திடீரென ஈழ ஆதவாளர்களோடு சொற்போரை துவங்கி பிரபாகரன் பத்தி உளறிவைத்தார். காவேரி பத்தி கவலைபட்டாரா? கூவம் பத்தி கவலைபட்டாரா? வன்னி மக்களை பத்திமட்டுமே கவலைபடுகிறார் பிரபாகரன் என்று தனது பேரறிவை உலகிற்கு உணர்த்தினார். தொடர்ந்து ஈழ உணர்வாளர்களுடன் வார்த்தை யுத்தத்தை துவங்கி பெரியார் திராவிடகழக கொளத்தூர்மணி அவர்களை காட்டிகொடுக்கும் ‘எட்டப்பன்’ வேலைகளை செய்பவராகவும் அடுத்த பரிமாணத்தை அடைந்தார்.

ஈழ ஆதரவாளர்களை விட்டேனா பார் என்று தன்னுடைய தன்தோன்றித்தனமான விமர்சனங்களை அள்ளிவிட்டு ஈழத்திற்காக வேலைநிறுத்தம் செய்துவந்த வழக்கறிஞர்களை கிண்டலும் கேலியும் செய்து எழுதிவந்தார். ஈழ ஆதரவாளர்களையும் ஈழப்போராளிகளையும் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்தார் ஞானி. எப்போதும் கருணாநிதிக்கு ‘கொட்டு’ வைக்கும் ஞானி இலங்கையில் சிங்களர்கள் கோவப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கருணாநிதி முத்துக்களை உதிர்த்தும் உடனே பூங்கொத்துக்களை நீட்டுகிறார். விமர்சிப்பது தமிழர்களை மட்டுமே மறந்தும் சிங்களவர்களையோ ராசபக்சேவையோ விமர்சித்து விடக்கூடாது என்று கண்ணும் கருத்துமாக இருந்து வந்தார்.

கருணைகொலைகள் பத்தி இந்தவாரம் எழுதியுள்ள ஞானி சேனல் 4 வெளியிட்ட கண்கட்டி நிர்வாணநிலையில் நடந்த படுகொலைகள் பற்றி ஒருவரியும் எழுதவில்லை. அல்ஜசீரா வெளியிட்ட அகதிமுகாம் பத்திய செய்திகளையும் தனது எழுத்துக்களில் பதிவு செய்யவில்லை இந்த முற்போக்குவாதி. வழக்கறிஞர்கள் தங்கள் போராட்டத்தின் பொழுது நகல்களை எரித்தார்கள் ஒரிஜினலை எரிக்கவில்லையே? என்று காட்டி கொடுக்கவும் நம்மாளு தயங்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நிகழ்த்தியபொழுது வழக்கறிஞர்கள் இப்படி சீரழிந்து போனார்களே? என்று ஒருதலைபட்சமாக வருந்திய ஞானி பெண்வழக்கறிஞர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை என்று ஆறுதல் தேடிக்கொண்டார்.

இவ்வளவு தெள்ளத்தெளிவாக விமர்சனம் செய்யும் ஞானி இலங்கையில் சிங்களவன் அமைத்த அகதிமுகாம்கள் பத்தி மாபெரும் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்ட சிங்கள ரத்னா இந்து ‘ராம்’ பத்தி வாய்திறக்கவில்லை. சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு கையகப்படுத்தும் வழக்கில் தன்னை இணைத்து கொள்ளவேண்டும் என்று நீதிமன்றம் சென்று நீதிமன்றத்தில் பின்னாளில் நடைபெற்ற காவல்துறையின் அத்துமீறலுக்கு வித்திட்ட சுப்பிரமணியசாமி பத்தியும் அவர் அடிக்கடி அவிழ்த்துவிடும் கட்டுகதைகள் பத்தியும் நம்மாளு எழுதியதில்லை. இதற்க்கு காரணம் தொழில் தர்மமா? அல்லது பார்ப்பன தர்மமா? என்று ஞானிதான் விளக்க வேண்டும். சுப்பிரமணியசாமி வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதும் ஞானிக்கு தானாடாவிட்டாலும் தன்தசை ஆடிவிட்டது போலும்.

குமுதம் இணையதளத்தில் நம்மாளு நடத்திய “ஞானி பேசுகிறேன்” அரங்கம் முழுக்கமுழுக்க பார்பனர்களால் நிரம்பி வழிந்தது அவ்வப்பொழுது சீமான், அமீர் போன்றவர்களுக்கு நேரம் ஒதுக்கினார். அந்த அரங்கில் எஸ்.வி சேகர் பார்பனர்களுக்கு இங்கேதான்(தமிழ் நாட்டில் ) பிரச்சனை மும்பையில் நல்ல மரியாதை இருக்கிறது என்றும். தான் பார்ப்பானாக பிறக்க போனஜென்மத்தில் புண்ணியம் செய்த புண்ணிய ஆத்மா! என்றும் ஊரையே சுத்தும் செய்பவன் தன் வீட்டையும் சுத்தமாக வைத்துகொள்வான் அல்லவா? ஆகவே பிறப்பின் மூலம்தான் எல்லாம் என்றவர். பிறமதங்கள் தங்கள் அடையாளத்தை சினிமாவில் காட்டலாம் இந்து பூணுலை வெளியே தெரியும்படி நடித்தால் பிரச்சனை என்று ரெம்பவே வருத்தப்பட. எஸ்வி நிறைய ரத்ததானம் செய்யும் புண்ணிய ஆத்மா என்று சர்டிபிகேட் கொடுத்து அனுப்பினார். சீமானை அவரது கொள்கை சார்ந்து பேசவிடாமல் “எப்போ கல்யாணம்?” வாழ்த்துக்கள் ஏன் தோற்றது? அடுத்தபடம் என்ன? உதவி இயக்குனர்களுக்கு சம்பளம் கொடுக்குறீங்களா? என்று மொக்கை போட்டு அனுப்பி வைத்தார்.

தன்னை பெரியார்வாதி என்று காட்டி கொண்டு இவர் செய்யும்வேலைகள் எல்லாம் பெரியார் தொண்டர்களை காட்டி கொடுப்பதுதான். பெரியார் குடும்பத்தில் புகுந்த உளவாளி என்று அறிவுமதி அண்ணன் ஏற்கனவே ஞானி பத்தி எழுதி இருக்கிறார். தனது பார்ப்பனமுகம் தெரியாமலிருக்க அவ்வப்பொழுது பெரியார் முகமூடி மாட்டிக்கொண்டு திரிபவர்தான் இந்த ஞானி. ஜான்மகேந்திரன் இயக்கிய ஈழம்பத்திய திரைப்படம் (“ஆணிவேர் “) குறுந்தகடு தன்னிடம் கொடுக்கப்பட்டது ஆனால் அதை பார்க்க நேரமில்லை என்று ‘ஒ’ பக்கங்களில் எழுதி தனது திரைப்படம் சார்ந்த அறிவையும் ஈழம் பத்திய எரிச்சலையும் ஒருங்கே காட்டி இருக்கிறார். இன்னும் ‘ஆணிவேர்’ பார்க்க ஞானிக்கு நேரம் கிட்டவில்லை போலும்.

ஈழத்திற்காக தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றபொழுது மட்டுமே ஞானிக்கு தமிழக பிரச்சனைகள் ஞாபகத்திற்கு வரும். ஈழத்திற்காக போராடிய வழக்கறிஞர்களை அவதூறு செய்வதும் ஈழ ஆதரவு இயக்கங்களை கிண்டலும் கேலியும் செய்வதும். ஈழப்போராட்டத்தை மழுங்கடிக்க ஆளும் வர்க்கம் செய்யும் அடக்குமுறைகளுக்கு தோள்கொடுப்பதுமே ஞானியின் முழுநேர எழுத்து பணியாக இருந்து இருக்கிறது. எப்படியாவது தனக்கு விளம்பரம் வேண்டும் என்றும் தனது பார்ப்பன முகம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்றும் பல்துறைகள் சார்ந்து இவர் எழுதும் ‘ஒ’ பக்கங்கள் எதனையும் முழுமையாக சொல்லாமல் பிச்சைக்காரன் எடுத்த வாந்திபோல செரிமானமாகாத இவரது அபத்த கருத்துக்களின் நாற்றத்தோடு இருக்கிறது.

அரசியல் விமர்சகர், சினிமா விமர்சகர், இசை விமர்சகர், முற்போக்குவாதி என்று எடுத்த அவரது அவதாரங்களும் தோல்வியில்தான் முடிந்து இருக்கின்றன. உள்ளே ஒன்றை வைத்து விசமத்தனத்துடன் வேறொன்றை வெளியில் எழுதுபவர்தான் ஞானி. பார்பனர்களுக்கு எங்கெல்லாம் பிரச்சனை தோன்றுகிறதோ அங்கெல்லாம் பெரியார்வாதியாக அவதாரம் எடுப்பார் பெரியாரின் உண்மை தொண்டர்களை காட்டிகொடுக்கும் வேலையும் செய்வார்.

கடைசியாக ஞானி அவர்களிடம் ஒரு கேள்வி அம்சாவிடமிருந்து ‘கவர்’ மாதாமாதம் சரியாக வந்து சேர்ந்து விடுகிறதா? இந்து ‘ராம்’ சுப்பிரமணியசாமியிடமிருந்து பங்கு சரியாக கிடைக்கிறதா?

(புலிகளிடமிருந்து தமிழக ஈழ ஆதரவாளர்கள் பணம் பெறுகிறார்கள் என்று பரப்புரை செய்யும் தமிழக ஊடகங்கள் சிங்கள தூதுவர் அம்சாவிடம் கவர் பெற்ற ஊடகவியலாளர்கள் பத்திய செய்தியை அமுக்க பார்ப்பது அழகோ அழகு ! இதுதான் தொழில் தர்மம் போலும் )

ஓடினான்.. ஓடினான்.. வாழ்க்கையின் ஓரத்திற்கு


தன் வாழ்க்கையை தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட கலைஞர் கருணாநிதியை நடிகைகள் ரம்பாவும், குஷ்புவும் நினைத்த மாத்திரத்தில் சந்தித்துப் பூங்கொத்துக் கொடுக்க முடிகிறது. ஆனால், வேலை கேட்டு மனுக் கொடுக்கச் செல்லும் பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர்களோ, கல்விக் கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்களோ கருணாநிதியால் அடித்து விரட்டப்படுவார்கள். திரைப்பட விழாக்களில் அரைகுறை ஆடைகளுடன் நடிகைகளை ஆடவிட்டு முதுகுவலி வரும் வரை பலமணிநேரம் அமர்ந்து ரசிப்பார். சிறந்த நடிகர் விருதை ரஜினிக்குக் கொடுத்தும், பெண் வேடத்தில் தன் வீட்டுக்கு வந்த கமலஹாசனுக்கு முத்தம் கொடுத்தும் மகிழ்வார். பின்னர் இவர்கள் இருவரை விட்டே தனக்கே ஓர் அரசு விருதைக் கொடுத்துக் கொள்வார்.

ஒரு முதல்வருக்கே (‘உளியின் ஓசை’க்கு) சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான மாநில அரசின் விருது! இது இந்திய, தமிழக அரசியல், திரைப்பட வரலாறு கண்டறியாதது. அரசு விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய நடிகை குஷ்பு வள்ளுவரை, “வலுவர்” என்றார். பெரியாரின் கொள்கைகளை, “பெரியாரின் கொள்ளைகள்” என்றார். (இந்த விழாவில்தான், ‘பெரியார்’ படத்துக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டன). உளியின் ஓசையை “ஒலியின் ஓசை” என்றார், குஷ்பு. அப்போது குஷ்புவின் தமிழால் அரங்கில் ஏற்பட்ட சலசலப்பை தன்னுடைய பேச்சுத் துடுக்கால் திசைமாற்றி, “குஷ்பு இப்படியெல்லாம் பேசினாலும் தமிழை யாரும் அழிக்க முடியாது” என்று, சப்பைக் கட்டுக் கட்டினார், கருணாநிதி. (முன்னதாக பேசிய கமல், குஷ்புவின் தமிழை கலைஞர் ரசித்தார். குஷ்புவுக்கு என் வாழ்த்துகள் என்று சிலாகித்தார்).

குஷ்பு நல்ல நடிகையாக இருக்கலாம். ஆனால், அரசு விழாவைத் தொகுத்து வழங்க, குஷ்வுவைவிட நன்றாகத் தமிழ்ப் பேசும் நடிகை ஒருவர் கூடவா கிடைக்க வில்லை? இதில் கவனக்குறைவாக இருந்துவிட்ட விழா ஏற்பாட்டாளர்களை கலைஞர் மருந்துக்குக்கூட கடிந்து கொள்ளவில்லையே ஏன்? இந்த விருது வழங்கும் விழாவுக்குப் பின்தான் திரைப்படத் துறையினருக்கான நல வாரிய உறுப்பினராக குஷ்புவை கருணாநிதி நியமித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவை, ‘கவர்ச்சி உடைகளில் திரைப்படங்களில் ஆடியவர்தானே’ என்று எழுதும் போக்கு முரசொலியில் இன்றுவரை தொடர்கிறதே! கலைஞர் தொலைக்காட்சியின் ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் குஷ்பு உள்ளிட்ட நடிகைகளின் கவர்ச்சியை நாடறியும். “அந்த நிகழ்ச்சியின் தீவிர ரசிகன் நான்’’ என்று திருவாய் மலர்ந்தவர்தானே, கலைஞர். இவர் சிலாகிக்கும் குஷ்புவுக்கு இருக்கும் எல்லா நியாயங்களும் ஜெயலலிதாவுக்கும் உண்டுதானே?

திரைப்படங்கள் மீதான கருணாநிதியின் எல்லை கடந்த பேராசைக்கு மற்றொரும் சாட்சி, தமிழை வளர்க்க தமிழ்த் திரைப்படங்களுக்கு வழங்கப்படுவதாகச் சொல்லப்படும் கேளிக்கை வரி விலக்கு என்ற கேலிக்கூத்து. ரஜினியின் ‘சிவாஜி’ கருணாநிதியால் வரிவிலக்குப் பெற்ற தூயத் தமிழ்ப் பெயர் கொண்ட திரைப்படம் என்பதை மனதில் கொள்க. கலைஞரின் காலைப் பிடித்து, முதுகைச் சொறிந்து வரி விலக்குப் பெற்று அந்தப் பணத்தில் நடிகைகளுடன் வெளிநாட்டில் கூத்தாடி அதைப் படம் பிடித்து பணம் பார்ப்பவர்களால் இந்தச் சமூகத்துக்கு என்ன ஆதாயம்?

சென்னையை அடுத்த பையனூரரில் 75 ஏக்கர் நிலத்தை இலவசமாக சினிமாக்காரர்களுக்கு கருணாநிதி வழங்கியுள்ளார். அந்த இடத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் ஃபெப்சி உறுப்பினர்கள் (தொழிலாளிகளாம்!) 50 ஏக்கரில் வீடு கட்டிக் கொள்வார்களாம். கூடுதலாக 15 ஏக்கர் திரைப்படத் துறையினரின் பொதுவான பயன்பாட்டிற்காம். இந்த நிலத்துக்கு குத்தகையாக ஆண்டுக்கு ரூ.1.000 மட்டும் செலுத்தினால் போதும் (இது எப்படி இருக்கு?). இந்தச் சலுகைகள் எல்லாம் நூறு ரூபாய் தினக் கூலிக்கு லைட் மேன்களாக வேலை பார்க்கும் திரைப்படத் தொழிலாளர்களுக்குப் போய் சேருமா என்பதை உங்களின் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.

இதைவிட கொடுமை, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் 10 ஏக்கர் நிலம் ஒதுக்கியிருக்கிறார், கருணாநிதி. நிலத்தின் வழிகாட்டு மதிப்பில் 3.5 சதவிகிதம் மட்டும் இதற்கு ஆண்டு குத்தகையாம். பட பூஜைக்கே சில கோடி ரூபாய்களை செலவு செய்யும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இலவசமாக வீட்டுமனையாம். பண்ணை வீடுகளில் ஓய்வெடுக்கும் நடிகர்களும், நடிகைகளை நட்சத்திர விடுதிகளில் தங்கவைத்து அழகு பார்க்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் மனது வைத்தால் திரைப்படத் தொழிலாளர்களுக்கு எத்தனை ஆயிரம் வீடுகள் வேண்டுமானாலும் இலவசமாகக் கட்டித் தரமுடியும்.

தமிழ்நாட்டில் முதல் முதலாக உருவான கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம், நரிக்குறவர் நலவாரியம், பனைத் தொழிலாளர் நலவாரியம், விவசாயத் தொழிலாளர் நலவாரியம் என இருக்கும் நலவாரியங்கள் எல்லாம் நலிந்து, நசிந்து போய்க் கொண்டிருக்க, நேற்று உருவான திரைப்படத் துறை நலவாரியத்திற்கு மட்டும் பணத்தை வாரி இரைக்க என்னக் காரணம்?

இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் இருந்த கருணாநிதியை உணர்ச்சி உள்ள ஒருசில திரைப்படக் கலைஞர்கள் எதிர்த்தனர்; நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராகத் தேர்தல் பிரசாரம் செய்தனர். இனிமேலும் திரைப்படத் துறையிலிருந்து தனக்கும், தன் வாரிசுகளுக்கும் எவ்வித எதிர்ப்பும் வந்துவிடக் கூடாது என்ற தொலை நோக்கோடு(!) திரைப்படத் துறையினருக்கு இப்படி வாரி இரைக்கிறார்.

உழைக்கும் மக்கள் செலுத்திய வரிப் பணத்தில் கோடி, கோடியாய் செலவு செய்து நடத்தப்படும் திரைப்பட விழாக்களை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி காசு பார்க்கும் கருணாநிதி குடும்பத்தாரின் சதித் திட்டங்களைத் திரைப்படங்களில் மட்டும் அநியாயத்தைக் கண்டு பொங்கும் கதாநாயகர்கள் மௌனமே சாட்சியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். “ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான், தமிழன்!”

செம்மொழி மாநாடு நடத்தும் செம்மறியாட்டுக் கூட்டங்கள்


மொழி ஒரு மனிதனின் அடையாளம். அதுவும் குறிப்பாக தமிழனுக்கு அது அடையாளத்தையும் தாண்டிய ஒரு விடயம். ஆம்.! அதனால்தான் இந்தியாவின் எந்தவொரு மாநிலமும் செய்யத் துணியாத வகையில் ஹிந்தியைத் தூக்கி எரிந்தோம். இன்று வரையில் இந்தியை முற்றிலும் புறக்கணிக்கும் ஒரே இந்திய மாநிலம் “தமிழ்நாடு” தான்.

மெல்லத் தமிழினிச் சாகும் என்று சொன்னானே பாரதி….. அதைப் பொய்பித்த பெருமைக்குச் சொந்தக்காரர் அறிஞர் அண்ணா. வான் புகழ் வள்ளுவம் உலகெலாம் மொழிபெயர்த்து உணர்வூட்டித் திளைத்தது திராவிட இயக்கம். உண்டு களித்து உறங்கித் திரிவதா உன் வாழ்க்கை? உழையடா தமிழுக்கு… என்று அனுதினமும் பேசிப்பேசியே வளர்ந்த இயக்கம் தி.மு.க.

அறிஞர் அண்ணா நாடாளுமன்றில் ஒரு முறை சொன்னார்.

ஒரே நாய்க்கூண்டில் பெரிய நாய் போகவும், சின்ன நாய் போகவும் எவனாவது வாசல் வைப்பானா? பெரிய நாய் போகும் வழியிலேயே சின்ன நாயும் போகாதா? என்று உலகோடு பேச ஆங்கிலமும் வேண்டும், ஊருக்குள் பேச ஹிந்தியும் வேண்டும் என்று சொன்ன வடநாட்டு மேதாவிகளின் வாயை அடைத்தார்……

தமிழ் வளர்ந்தது. தமிழ்நாட்டு அளவிலாவது தனியிடம் பிடித்தது… அவ்வளவு ஏன் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயரும் கிடைத்தது…. பிறகு வந்த ஆட்சியாளர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள்….?? என்ன தான் செய்து கிழித்தார்கள்??? தமிழை வாழவைத்தார்களா?

மலேயாக்காரர்கள் ஊரெங்கும் தமிழ்ப்பள்ளி தொடங்கி தம் சந்ததிக்கும் தமிழ் சொல்லிக்கொடுத்தார்கள். ஈழத்துக்க்காரர்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கி இன்றளவும் குன்றாத சிறப்பினைத் தமிழுக்குச் சேர்ப்பித்து வருகிறார்கள்…. தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்ன செய்தோம்? ஆறு கோடித் தமிழர்கள் என்ன செய்து கிழித்தோம்? ஊரெங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைத் திறந்தோம்… ஆங்கிலம் என்பது அறிவல்ல வெறும் மொழியென்பதையே மறந்தோம்……. மழையே பெய்யாத வறட்டுக் கழனிகளில் கூட “ரெயின் ரெயின் கோ அவே” என்று பாடித் திரிகின்ற வரலாறு படைத்தோம்.

அட உலகம் முழுமையும் ஒப்புமையற்ற நாடுகளாகத் தெரியும் அனைத்து நாடுகளும் தாய் மொழி வழிக் கல்வியையே நாடுகின்றன என்ற அடிப்படை கூட தெரியாத செம்மறியாடுகளோனோம். எவனோ ஒருசிலர் ஆங்கிலம் பேசித் திரிவதால் போகும் வழி தெரியாமல் முன் செல்லும் ஆட்டைத் தொடரும் செம்மறிக்கூட்டங்களானோம்… படிப்பில் மட்டுமா நாம் செம்மறியாடுகள்?

சீனாவில் தொழில் தொடங்கப் போக சீனத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் வெளியார்கள்…….. ஆனால் வெளிநாட்டுக்காரன் நம்மூரில் தொழில் தொடங்க ஆங்கிலம் கற்றுக்கொண்டிருக்கிறோம் நாம்…

உலகின் எத்துனை மொழிகளை எவன் கற்றறிந்திருந்தாலும், தத்தமது தாய்மொழியிலேயே சிந்திப்பான் என்பதையே மனவியலாளர்கள் எடுத்துரைக்கிறார்கள்……. ஆனால் நாமோ ” பாப்பா…மாமாக்கு ரைம் சொல்லு…பாக்கலாம் ” என்று ஆங்கிலப்பாடலை ஒப்பிவிக்கச் சொல்லி குழந்தையின் திறமையை கூர்தீட்டிப் பார்க்கிறோம்….

இப்படி, தமிழையே நாம் கொண்டாடுவதில்லை……… தமிழையே நாம் மதிப்பதில்லை…… தமிழ்பேசுபவனை இனத்தானாக மதிப்பதுவும் இல்லை…. மதித்திருந்தால், இந்திய நடுவண் அரசு இராஜபக்சேவுக்கு சாமரம் வீசிய போது இந்திய தேசியத்தை மிதித்திருப்போம் அல்லவா? செய்யவில்லையே………அப்படித் தமிழ் பேசுபவனுக்காக குரலேதும் கொடுப்பதுவுமில்லை…

தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை….. பெயரில் மட்டும் தானே தமிழ் இருக்கிறது…

“இன்னாமே…??? நாஸ்டா துன்னுக்கினியா?” இதையெல்லாம் எந்த மொழிக் கணக்கில் சேர்த்துவது?

இப்படித் தமிழைத் தமிழாகவும் பேசுவோமில்லை நாம்….. ஆனாலும், ஐந்தாம் வகுப்பில் அடிக்கடி படித்த ” கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே” என்ற பழைய ரெக்கார்டைப் போட்டுப் பார்த்து பரவசப் பட்டுக்கொள்வோம் நாம்….! அட……. வெறும் ஏழே சத தமிழர்கள் இருக்கிறார்கள் சிங்கப்பூரில்… அங்கே விமான நிலையம் முதற்கொண்டு தமிழ் இருக்கிறது…..!

இங்கோ தமிழ்நாட்டுப் பரப்பில் நாம் தான் பெரும்பான்மை…. ஆனால் தமிழோ சிறுபான்மை…. இந்தக் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது??? இது போன்ற செம்மறியாட்டுக் கூட்டங்களுக்கு தமிழ் மாநாடு என்று ஒன்று நடந்தால் அங்கு போகவே தகுதியில்லை……… ஆனால் இச்செம்மறியாடுகள் செம்மொழி மாநாடு நடத்துகின்றனவாம்…! அதுவும் எப்போது? வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் வன்னிப் பெருநிலத்தில் தமிழ் பேசும் சொந்தங்கள் நடைப்பிணங்களாய்த் திரியும்போது…!

முகாம்களிலிருந்து வெளிவந்து நடுத் தெருவில் நாதியற்ற பிறவிகளாய் தமிழர்கள் திகைத்திருக்கும்போது…..!

தமிழ் பேசுகின்ற ஒரே காரணத்திற்காக இளைஞர்களின் பட்டாளம் அணியணியாய்க் காணாமல் போகின்ற போது…..!

ஊருக்குள்ளே இழவு வீடு ஒன்று இருப்பது இயல்புதான்….. ஈழத்தில் இழவு விழாத வீடாக ஏதேனும் இருக்குமா? அப்படி இழவு விழுந்த ஒரு இனத்தின் பங்காளிகளாகிய நாம் பல கோடி செலவில் மேடை போட்டு தமிழை வளர்க்கப் போகிறோமாம்……….

இழவுக்கும் மரியாதையில்லை…இழப்புக்கும் மரியாதையில்லை….அட தமிழன்னைக்குமா?

இனிமேலும் இலங்கைத் தீவில் வாழவியலாது என்று ஆஸ்திரேலியா போன அகதிகள் இந்தோனேசியாவில் நூறு நாட்களுக்கும் மேலாக படகினில் வாழ்ந்து தவிக்கின்ற கதை தெரியுமா உங்களுக்கு? செம்மொழி மாநாட்டுப் பெருந்தகைகளே அவர்களும் தமிழ் பேசுபவர்கள் தான் என்ற உண்மை தெரியுமா உங்களுக்கு?

தமிழ் பேசுவதால் தான் நாடின்றி, நிலமின்றி, போக்கிடமின்றி, பிழைப்பின்றி, உணவின்றி சாகக் கிடக்கிறார்கள் அவர்கள் என்ற உண்மையாவது தெரியுமா உங்களுக்கு? இப்படி தமிழைப் பேசுபவன் பரதேசியாய்ப் பஞ்சம் பிழைக்க உலகெங்கும் சுற்றித் திரிகையில் தமிழுக்கு விழா எடுக்கும் செம்மொழி மாநாட்டுச் செம்மறியாடுகளே நீங்களும் நீரோ மன்னனும் ஒன்றுதானே?

தான் அரசாண்ட ரோம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்துக்கொண்டிருந்த நீரோ மன்னன் என்ற கதையினை வெகு பலரும் சொல்வதுண்டு…அதை நேரில் பார்க்கும்படியான துர்ப்பாக்கியமொன்று எமக்கு வாய்த்ததை என்ன சொல்லி நொந்து கொள்ள?

தமிழ், தமிழ், தமிழ், என்று சொல்லி வயிறு வளர்த்த கூட்டமொன்று, இன்று தமிழினம் அழிகையிலும், தமிழின் பெயரால் அதைச் சரிக்கட்ட பார்க்கிறதே…… இந்த விதியை நாம் எங்கு போய் சொல்லி அழ? செம்மொழி மாநாட்டினைக் கொண்டாடத் துடித்திடும் செம்மறியாட்டுக்கூட்டங்களே….

எங்களின் உணர்வு நெருப்பில் நீங்கள் பொசுங்கப் போவது உண்மையெனினும், உங்களின் நாடகத்தீயில் வெந்து தணிவது எங்கள் சொந்தங்களின் இதயமல்லவா? அதனால் கொஞ்சம் கருணை காட்டுங்கள்..!

நீங்கள் தான் அரசியல் தேர்தலில் பிழைத்துப் போயாற்றே……. இனியேனும் கொஞ்சமாவது தமிழர்கள் மேல் இரக்கம் காட்டுங்கள்…. எரிந்து கொண்டிருக்கும் இதயப் புண்களை குத்திக்கிளறாதீர்கள்………..

பிழைத்துப் போகிறோம் எங்கள் சொந்தங்கள்…!

-மதிபாலா