ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…


அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் “பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்” என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல – மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த “பிற்படுத்தப் பட்டோ ர்” என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் – குறிப்பாக மாண்டேகு – சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் – இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.

இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் – தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் – நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் – தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்… ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் – வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் “வன்னிய குல சத்திரியர்” என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

***************

ஆண்ட பரம்பரைகள்னு போகிற போக்கில் சொல்லி ரகசியமாய் மகிழ்ந்து கொள்ளும் அறியாமையில் கிடக்கும் ஜனங்களை நோக்கிக் கூறப்பட்டதல்ல ‘ஆண்ட பரம்பரையா! அடிமைப்பரம்பரையா?” என்பது.

நாங்கள் மூவேந்தரின் வாரிசுகள் என்றும், பல்லவனின் பரம்பரை என்றும் மேடை போட்டு முழங்கி முக்குலத்தோரின், வன்னியரின் உணர்வுகளை முறுக்கேற்றி, அவர்களின் போலி கவுரவத்தை வளர்த்தெடுத்து, பிற சாதியினரை (வேறு யாரை தலித்துகளைத்தான்) தங்களுக்கு அடிபணிந்து போகச்சொல்லி மிரட்டும் ‘ஆண்ட பரம்பரை’ப் பொறுக்கிகளுக்குத்தான்…இட ஒதுக்கீட்டை ரத்து செய்யச் சொல்லுகிறோம்.

பொன்.பரமகுருவில் இருந்து மலைச்சாமி வரை எத்தனையோ பேர்கள் இட ஒதுக்கீட்டால் படித்து முன்னேறினார்கள்தான். அவர்கள் தங்கள் பணிக்காலத்தில் செய்தது என்ன? தங்கள் சாதிக்காரனாகப் பார்த்து போலீசுதுறையில் ரொப்பிக்கொண்டார்கள். ஓய்வு பெற்றவுடன் ஓடிச்சென்று தேவர்பேரவை போன்ற சாதித்தீ மூட்டும் அமைப்பில் ஒட்டிக்கொண்டார்கள் என்பதில் இருந்தே இவர்களின் அரசுப்பணியின் லட்சணத்தை நல்லாவே யூகிக்கலாம். யூகம் என்ன எல்லாமே நெசந்தான். 70% பேர் போலீசுக்காரங்களா இருப்பது..ஆண்ட பரம்பரை ‘தேவர்’தான். தேவர் சாதிப்போலீசின் மிருகத்தனத்தை ஒவ்வொரு தலித் – தலித் அல்லாதோரின் மோதல்களிலும் பார்க்க முடியும்.. சமீபத்தில்–கடந்த 10 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டில் வந்த தேவர் சாதி போலீசுக்கும்பல் கொடியங்குளத்திலும் தாமிரபரணிக்கரையிலும் போட்ட வெறியாட்டம்…2 வயது சிறுவன் விக்னேசைக்கூட விட்டு வைக்கவில்லை.
…….
பறையர் பையனைக்காதலித்த குற்றத்துக்காக கண்ணகி-முருகேசனைக்கொன்ற சாதி வெறியர்களைக் காப்பாற்ற உள்வேலை செய்பவனோ, இட ஒதுக்கீட்டில் படித்து கலெக்டராக இருந்தவன்..இவன் திருநெல்வேலிக்கு கலெக்டராக இருக்கும்போதுதான் 17 தலித்கள் போலீசால் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. அன்று போலீசின் அத்துமீறலை ஆரம்பித்து வைத்து வன்கொடுமை சாதி வெறியந்தான் அந்த கலெக்டர்.. இவர்களுக்கு இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என்கிறோம்.

பிற்பட்டோ ர் பட்டியலுக்குள் ஆதிக்க சாதிகள் எல்லாம் உட்கார்ந்து கொண்டு உண்மையிலே பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடமில்லாமல் ஆக்குகிறார்கள் என்பதற்கு புள்ளிவிவரங்களைத்தேடி எல்லாம் செல்ல வேண்டாம்.

தென் மாவட்டக்கல்லூரிகள் எங்கும் நடக்கும் மாணவர் மன்றத் தேர்தல்களே இதற்கு சான்று. BC பட்டியலில் 80 சதவீத இடங்களை நாடார்களோ நாயுடுகளோ (அதாவது வடுகன் என்பவர்கள்) ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச் சங்கமே மாணவர்கள் மத்தியில் அமைத்து சாதி வெறி உண்டாக்கி தேர்தலில் நிற்கின்றனர். MBC ஒதுக்கீட்டில் பெருமிடங்களை தேவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டு சாதிச்சங்கம் கட்டி, உணவு விடுதிகளில் தலித் மாணாக்கரை ‘ஓசிச்சோறு’ என்றும், தலித் மாணவிகளை பாலியல்ரீதியாகக் கொச்சைப்படுத்திப்பேசி வக்கிரமாய் நடந்து கொள்வதும், சேவைத் தொழில் செய்யும் சாதியில் இருந்து வரும் ஒன்றிரண்டு மாணவர்களிடம் ‘எனக்கு சிரைத்து விடு’ என்றோ ‘என் செருப்பைத் தைடா’ என்றோ சாதித்திமிரோடு நடந்து கொண்டு வருவது வெளிப்படையான விசயம்.

அக்கல்லூரிகளில் உட்கார்ந்திருக்கும் ஆசிரியர்களும் தங்களைஆதிக்க சாதி சங்கங்களுக்குள் இணைத்துக் கொண்டு அதே சாதி மாணவர்களைக் கொம்பு சீவி விடுகின்றனர்.. இதை எல்லாம் சொல்லி இந்தக் கேடு கெட்ட சாதிவெறியன் களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்.. பிற்பட்டோ ர் பட்டியலை சீர் செய் என்றால்…மறைமுகப் பார்ப்பனீயம் என்கிறார்கள்..

ஆதிக்க சாதிகள் என நாம் சொல்லிடும் நாயுடு,கவுண்டர்,தேவர்,நாடார்,வன்னியர் எனப்படும் சாதியினரிடம் நூற்றுக்கணக்கிலும்,ஆயிரக்கணக்கிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் கல்லூரிகளும் குவிந்து கிடக்கின்றன. அங்கு இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றதாக வரலாறு உண்டா? எப்படி நாடார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பியூனில் இருந்து தலைமை ஆசிரியர் வரை நாடார்களாகவே இருக்க முடிகிறது? நாயுடு கல்லூரியும் அப்படித்தான்..கவுண்டன் கல்லூரியும் அப்படித்தான். ஆனால் பட்டியலில் இருக்கும் பல நூறு சாதிகளால் ஒரு நர்சரி பள்ளி ஆரம்பிக்கக் கூட தெம்பு கிடையாது என்பதுதான் உண்மை. எங்காவது வண்ணார் சங்கப் பள்ளியையோ மருத்துவ சாதி சங்க கலைக்கல்லூரியையோ காட்ட முடியுமா?

இதே மாதிரி எண்ணற்ற உதாரணங்கள் தமிழகம் எங்கும் பெருத்துக் கிடக்கும்போது சமூக நீதிப் புடுங்கிகள் இதற்கு எதிராக என்ன புடுங்கினார்கள்?

கல்லூரிக்கு அடுத்து வேலை செய்யும் இடங்களைப் பார்த்தால் பொதுத்துறை நிறுவனங்களுக்குள் ஆதிக்க சாதிக்கும்பல்தான் வேலை வாய்ப்பில் பெரும் இடங்களைப் பிடித்துக் கொண்டு சாதி ரீதியாய் தொழிற்சங்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். தொழிற்சங்கம் என்றால் ஏதோ தொழிலிடப் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்பு என்றெல்லாம் எண்ண வேண்டாம். யார் யார் வீட்டில் கல்யாண வயசில் பொண்ணு இருக்கு? என்பதை விசாரித்து தங்களுக்குள் திருமணம் மூலம் மேலும் சாதியாய் இறுகிக்கொள்ளவும், மறக்காமல் ஆண்டுதோறும் தங்கள் குலதெய்வத்தின் விழா எடுக்கவும்தான் இச்சங்கங்கள்.. திருச்சி பெல்லில் பார்க்கலாம்..பெல்-சேனைத்தலைவர் சங்கம்..பெல்-வன்னியர் சங்கம்..லொட்டு லொசுக்கு எல்லாம்.

விப்ரோ டெக்னாலஜியில் பார்ப்பனர் சங்கம் கட்டி இருக்கிறார்கள்.. சவுராஸ்டிரா சங்கம் வைத்திருக்கிறார்கள்.. நவீன தொழில்நுட்பவாதிகள் இல்லையா? மெயிலிங் லிஸ்ட்டில் – ஈ-சாதிச்சங்கமாய் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு சங்கமாய்த் திரண்டு சாதியைக் காப்பாற்றும்/ சாதி வன்முறையை (கல்லூரி அளவிலேயே) வளர்க்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும். அல்லது BC ஐ இரண்டாகப்பிரித்து இந்த மாதிரி ஆதிக்க சாதிகளை BC1ல் வைத்து 3 சதவீதம் அவர்களுக்கும்… இதர 200 BCகளை 27% கொடுத்து BC 2லிலும் வைப்பதுதான் உண்மையான சமூக நீதி.

சமூகநீதிப் புடுங்கிகள் என்றைக்காவது சாதிமறுப்புத் திருமணங்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று கோரி இருக்கிறார்களா? சாதி ஒழிப்புதானே – சமூக நீதியாகும்! சாதி ஒழிப்பை சாதிமறுப்பு திருமணம் தானே சாதிக்கும்!

சாதி மறுப்புத் திருமணம் மூலம் பிறந்தவர்களுக்கு பெயரளவில் இருந்த சிறு வீத ஒதுக்கீட்டையும் ‘சமூக நீதியை’ காத்த வீராங்கனை ஒழித்துக்கட்டியது.. ஆனாலும் அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ‘சமத்துவப் பெரியாரும்’ இதைக் கண்டு கொள்ளவே இல்லை.

***********

சாதி ஒழிப்பைத் தவிர்த்து விட்டு, இட ஒதுக்கீட்டில் மட்டும் அழுத்தம் கொடுக்கும் திராவிட,தமிழ்தேசிய,வன்னியவிய,தேவர்வெறியியக் கட்சி/குழுக்களால் ஏற்பட்ட சமூகவியல் மாற்றங்களைப் புரிந்து கொள்ள சில சான்றுகள்.

1) திண்ணியம் ஊரில் சக்கிலியர் வாயில் மலத்தைத் திணித்த சாதிவெறியர்களில் ஒருவர் – அரசுப்பணியில்-ஆசிரியராகப் பணியாற்றியவர். பெயர் என்ன தெரியுமா? குடியரசு.

2) சமதாக் கட்சியின் தமிழ் நாடு பிரிவுக்கு ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பெயர் குடியரசுத் தேவர். (1929இலேயே வாலை நறுக்கிய இயக்கப்பின்னணி கொண்ட பெயருடையவருக்கு வால் முளைக்கிறது)

3) பெரியார் திராவிடர் கழகத்தினர் பழனி ஒன்றியத்தில் கவுண்டர் சாதிவெறியர்கள் நிறைந்த பகுதியில் ‘தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரப் பயணம்’ மேற்கொண்டிருந்தபோது ‘இரட்டைக்குவளைகள் முறை பற்றி’கண்டித்துப் பேசி வந்தனர். ஆத்திரமுற்ற கவுண்ட சாதி வெறியர்கள் பெ.தி.க. தொண்டர்களைத் தாக்க முயன்றனர். அப்போது அவர்கள் சொன்னது “தி.க.ங்கிற..சாமியப் பத்திப் பேசு..இட ஒதுக்கீடு பத்திப் பேசு..ஆனால் ரெட்டக்கிளாஸ் அது இதுன்ன..கொளுத்திப்புடுவோம்..”

****************

ராமதாசின் குடும்பத்தில் நடைபெற்ற சாதி மறுப்பு திருமணங்கள் எத்தனை?

ஆனைமுத்துவின் கட்சி ஏன் வன்னியர் சங்கம் மாதிரியே இருக்குது?

தமிழரசனின் தனித்தமிழ் நாடு படை ஏன் வன்னியர் படையாக மட்டுமே இருக்குது?

தமிழ் தேசியம் என்பது வன்னியர் தேசியமா?

ஆண்ட பரம்பரன்னு சொல்லுர ராமதாசு ரிலயன்சு போன்ற சேட்டுகிட்ட போய் நாய் மாதிரி வாலாட்டுறப்ப ஆண்ட பரம்பரையின் குலப்பெரும கெட்டுடாதா?

இதற்கெல்லாம் குழலி எனும் ஆண்டபரம்பரைகள் பதில் சொல்ல வேண்டும்..

*************

கம்யுனிஸ பூச்சாண்டி சொல்வதை பார்த்தால் படித்தவன் எல்லாம் சாதி வெறயில்லாம இருப்பதாக இருக்க வேண்டும். அப்ப்டி இல்லை என்பதைத்தான் கனேசு, அன்பரசன், குரல்கள், புல்டோ சர் உள்ளிட்டவர்களின் எ-கா சொல்கிறது. இன்னும் சொன்னால் கல்வி நிலையங்க்ளில் சாதி ரீதியாக திரண்டு பிற சாதியினரை இழிவுபடுத்தும் போக்கு உங்களது வாதத்திற்க்கு முரனாகவே இருக்கிறது.

கல்வியறிவினால் சாதி ஒழியும் என்பதே ஒரு அப்பட்டமான மோசடி.

எப்படி பொருளாதார விடுதலை மட்டுமே சாதியை ஒழித்துவிடும் என்று கம்யுனிஸ்டுகள் சொன்னது அடிப்படையற்றதோ அதே போல வெறுமே பண்பாட்டு சீர்திருத்தங்களால் மட்டும் சாதி ஒழிந்து விடும் என்பதும் அடிப்படையற்றதே.

தத்துவம், பொருளாதாரம், அரசியல் என்று மூன்று முனைகளிலும் சம்ரசமற்ற போராட்டமே சாதியை ஒழிக்கும்.

இடஓதுக்கீட்டை சர்வரோக நிவாரணியாக காட்டும் உங்களது சித்தாந்த ஓட்டாண்டித்தனத்தையே படித்தவன் முதல் பலரும் தமது சாதி வெறியை விடாமல் இருப்பதும், இன்றைக்கு திராவிட அரசியலுக்கு உரிமை கொண்டாடும் பாமக உள்ளிட்டவர்கள் சாதி ரீதியாக அணி திரண்டு உரிமை பெறுங்கள் என்று அப்பட்டமாக பிழைப்புவாதம் பெசுவதும், குஜ்ஜார் பிரச்சனைகளும் காட்டுகின்றன. இடஓதுக்கீடு ஒரு சீர்த்திருத்தம் என்பதை புரிந்து கொள்ளாத நண்பர்கள் அதனது யாதர்த்த விளைவுகளை கண் கொண்டு நோக்கும் வலுவின்றி இருப்பது பரிதாபமே.

****************

Gopalan Ramasubbu said…

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

“There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920’s to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society”

***********

முருகேசன் கண்ணகியை எரித்துக்கொன்ற வன்னிய சாதி வெறியர்களைக் காப்பாற்றத் துடிக்கும் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவரும் இட ஒதுக்கீட்டில்தானே படித்து முன்னேறி வந்திருக்கிறார்? இப்பேர்ப்பட்ட சாதி வெறி நாய்களுக்கு இட ஒதுக்கீட்டை இரத்து செய்யச் சொல்வதுதானே சரியாகும்?

கண்டதேவியில் தேர் இழுக்கப்படாது..வன்னியன் தெருவழியே பறையன்பிணம் வரப்பிடாது…கட்டினால் வன்னியகுல சத்திரியகுலத்திலேதான் செவப்பா அழகா கட்டுவோம் (இருப்பது இங்கிலாந்தில்) எனும் சாதி வெறியுடனும், பஞ்சாயத்து தலைவரா தலித் வந்தா ஆத்தாவுக்கு ஆகாது…ரெட்டை டம்ளர் டீ க்கடை… எல்லாவும் செஞ்சுப்புட்டு இட ஒதுக்கீடு வேணும்…நாங்கள்ளாம் மிகவும் பிற்பட்டவங்க என்பதும், சாதிக்கூட்டங்களிலே போய் நாங்க பல்லவர்களின் வழித்தோன்றல்…பாண்டிய மன்னர்கள்தான் எங்களோட 56 வது கொடிவழி பாட்டனாரு…ன்னு மீசையை முறுக்கறதும்… ஆண்ட பரம்பரைதானடா…உனக்கு எதுக்கு இட ஒதுக்கீடு…

என்னக் கேட்டால், எவன் சாதி மறுப்பு திருமணம் செய்கிறானோ, ஆதிக்க சாதி சங்கத்திலே ஒட்டாம இருக்கிறானோ அவனுக்க மட்டுமே இட ஒதுக்கீடு தரணும்…ம.க.இ.க.வும் இதத்தான் சொல்லுதுன்னு நினய்க்கேன்.

அது கிடக்கட்டும்… பெரியாரின் கொள்கையில் இட ஒதுக்கீட மட்டுமே முன்னிறுத்தி வரும் ராமதாசும், ஆனமுத்துவும் ஏன் சாதி ஒழிப்பு பத்தி பேச மாட்டக்காக?

உள்ஒதுக்கீடு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும் …


ஒன்றின் கீழ் ஒன்றாக அல்லது ஒன்றின் மேல் ஒன்றாகப் பல படி வரிசை சாதிய அடுக்குகளை கொண்ட இந்திய சமூக அமைப்பில், ஒரு குறிப்பிட்ட சாதி சில சாதிகளுக்குக் கீழான சாதியாக இருந்தாலும், வேறு சில சாதிகளுக்கு மேலான சாதியாகவும் இருக்கிறது. அதாவது, பல சாதிகள் கீழ் சாதிகள் என்று வரையறுத்து வைக்கப்பட்டிருந்தபோதும், அவற்றிற்கு கீழாகப் பல சாதிகள் வைக்கப்பட்டிருப்பதால் அச்சாதிகள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்திய சமூகத்தில் சாதிய அமைப்பு இன்னமும் நீடித்திருப்பதற்கும் கட்டிக் காக்கப்படுவதற்குமான காரணங்களில் இது முக்கியமானதாகும். ஆனால், இங்கே ஒவ்வொரு சாதியும் தனது நிலை குறித்துப் பெருமைப்படுவதற்கு வாய்ப்பு இருக்கும் பொழுது, தற்போது தலித்துகள் என்றழைத்துக் கொள்ளும் தாழ்த்தப்பட்ட பட்டியலின சாதிகளிலேயும் கூட அருந்ததியர்கள் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய சாதிகள் மட்டும் அத்தகைய வாய்ப்பு இல்லாத அடிமட்டத்தில் இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

மொத்த சாதிய அமைப்பில் தாழ்த்தப்பட்ட சாதிகள் (ஒட்டு மொத்த பட்டியலின சாதிகள்) எப்படி மிகக் கீழான சாதிக் கொடுமைகளை அனுபவிக்கிறார்களோ, அதேபோல அவர்களிலும் மிக மிகக் கொடூரமான அவலங்களையும் அடக்குஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்பவர்களாக அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதிகள் உள்ளன. சமூகப் புரட்சியை ஏற்படுத்திவிடும் என்று சொல்லப்பட்ட இடஒதுக்கீடு ஏற்பாடு கிட்டத்தட்ட ஒரு நூறாண்டுகாலம் அமலில் இருந்தும், அது உண்மையான சமூக நீதியை வழங்கவில்லை என்பதற்கு உயிருள்ள வரலாற்றுச் சாட்சியமாக விளங்குபவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

கல்வி மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கிய நிலையில் உள்ள சாதிகளுக்கு முன்னுரிமை வழங்கி தக்க வாய்ப்பளிப்பதற்கானதே இடஒதுக்கீடு என்பது “”சமூகநீதி”க்காரர்களின் நியாயவாதம், கல்வி மற்றும் சமூக ரீதியில் பின்தங்கியவர்களை விட, அந்த வகைகளில் முற்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயினும் பொருளாதார ரீதியில் மிகமிகப் பின்தங்கியவர்களுக்கும் தக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பது முற்பட்ட சாதியினர் முன்வைக்கும் எதிர்வாதம். ஆனால், கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மட்டுமல்ல, வேறு எந்த ரீதியாகவும் உரிமைகள் மறுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் மிகமிக அடிமட்டத்தில் வாழ்பவர்கள் அருந்ததிய மக்களும் புதிரை வண்ணார் மக்களும் ஆவர்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கின்படி அல்லாமல், ஒடுக்கப்பட்ட சாதிகள் அனுபவிக்கும் சாதியக் கொடுமைகளின் அளவுகளின் அடிப்படையில் சமூகநீதி வழங்கப்படுமேயானால், இந்த அருந்ததிய மக்களுக்கும் புதிரை வண்ணார்களுக்கும்தான் முதன்மை முன்னுரிமை அடிப்படையில் மிகக் கூடுதலான இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இடஒதுக்கீடு வகுக்கப்பட்டிருக்கும் முறையோ, இம்மக்களை முற்றாகப் புறக்கணித்ததோடு, இம்மக்களின் முதுகிலேறி இச்சாதிகளுக்கு மேலுள்ள சாதிகள் இடஒதுக்கீட்டின் பலன்களை அறுவடை செய்து கொள்ளும் வகையிலேயே வகுக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது, தமிழ்நாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டால், அருந்ததியர் மற்றும் புதிரை வண்ணார் ஆகிய 15 அடிமட்டச் சாதிகளை உள்ளடக்கி மொத்தம் 76 சாதிகளை பட்டியல் சாதிகள் என்று ஒரே வகையாகப் பிரித்து, இந்த அனைத்து சாதிகளுக்குமாகச் சேர்த்து 18 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த 76 சாதிகளும் தாழ்த்தப்பட்ட தலித் சாதிகள் என்று அறியப்பட்டாலும், இச்சாதிகள் எல்லாம் ஒரே அளவிலான சாதிய சமூகக் கொடுமைகளை அனுபவிப்பவைகள் கிடையாது. கல்வி மற்றும் சமூக ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் ஒரே அளவில் தன்மையில் பின்தள்ளப்பட்டவர்கள் கிடையாது. 76 பட்டியல் சாதிகளிலேயே தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் போன்ற சாதிகளில் கணிசமானவர்கள் நடுத்தர மற்றும் குத்தகை விவசாய குடும்பத்தினர். ஆனால், அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் போன்ற அடிமட்ட சாதிகளில் இத்தகைய பொருளாதார நிலையில் அதுவும் விதிவிலக்காகவே ஒரு சிலர் உள்ளனர் எனலாம்.

கிட்டத்தட்ட ஒரு நூறாண்டு காலமாக இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டதன் பலனாக தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதி திராவிட சாதிகளைச் சேர்ந்தவர்களில் பலர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகவும் பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்பேராசிரியர்களாகவும், உயர்நீதி மன்ற நீதிப திகளாகவும், அமைச்சர்களாகவும் ஆகியிருக்கின்றனர். ஆனால், அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்தவர்களில் பட்டதாரி படிப்பை எட்டியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இதற்குக் காரணம், இவர்கள் மக்கள் தொகையில் மிகமிகக் குறைந்தவர்கள் என்பதில்லை. மாறாக, அடுக்குமுறை சாதிய அமைப்பில் மிகவும் அடிமட்டத்திற்குத் தள்ளப்பட்ட இவர்கள் கல்வி, சமூக, பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டு, மிக மிகப் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

சமூகத்தின் ஆதிக்க சாதியினருக்கு அடிமைத் தொழில் செய்பவர்களாக இருத்தி வைக்கப்பட்டவர்கள்தாம் பள்ளர், பறையர் மற்றும் அருந்ததிய சாதியினர் என்பதால், பட்டியல் அட்டவணை சாதிகள் என்று இவை வரையறுக்கப்பட்டன. இந்த தாழ்த்தப்பட்ட தலித்துக்களுக்கு அந்த அத்தனை அடிமை வேலைகளையும் செய்வதே புதிரை வண்ணார்களின் வேலை. பிற தாழ்த்தப்பட்ட தலித் சாதியினருக்கு அழுக்குத் துணி துவைத்துக் கொடுப்பது முதல் சவரம் செய்வது, அவர்களின் பிணத்தைக் குளிப்பாட்டுவது வரை அடிமைச் சேவகம் செய்வது புதிரை வண்ணார்களின் சமூகக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. “”பள்ளப்பய”, “”பறப்பய”, “”சக்கிலியப்பய” எனச் சாதிப் பெயர்களால் பிற தலித்துக்கள் தாழ்த்தப்படுவது போல “”புதிரப் பய” என்று இவர்களாலேயே இழிவாக அழைக்கப்படுபவர்கள் புதிரை வண்ணார்கள்.

இவர்களுக்கு அடுத்த மேல் மட்டத்தில் வைக்கப்பட்டிருக்கும் அருந்ததிய மக்களின் நிலையோ ஒப்பீடு ரீதியில்தான் மேலானது; ஆனால் சாதிய அடுக்குகளில் மிக மிகக் கீழானதுதான்.

“”ஒரு மனிதன் தன் வயிற்றை சுத்தப்படுத்த மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்ப வேண்டிய கொடுமை இந்த ஜனநாயக நாட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது” என்று துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள் மாநாட்டில் அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு.ஜக்கையன் குறிப்பிட்டார். அது உண்மையில் மனசாட்சியுடைய ஒவ்வொரு மனினின் நெஞ்சை அறுக்கும் செய்தியாக உள்ளது. மனித மலத்தைக் கையால் அள்ளி, தலையால் சுமந்து, மலக்குழிக்குள் மூழ்கி உடைப்பு எடுக்கும் துப்புரவுத் தொழிலில் நாடு முழுவதும் பெரும்பான்மையின அருந்ததிய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

1993ஆம் ஆண்டு “”கையால் மலம் அள்ளும் முறை மற்றும் உலர் கழிப்பறை கட்ட தடைச்சட்டம்” மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அதன்படி வீடுகளிலோ, வேறு நிறுவனங்களிலோ எடுப்புக் கழிப்பறை வைத்திருப்பதும் கையால் மலம் அள்ளுவதும் குற்றமாகிறது. மீறினால் 2000 ரூபாய் அபராதமும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று அச்சட்டம் கூறுகிறது. நாடு முழுவதும் 92 இலட்சம் உலர் கழிப்பறைகளும் 6.76 இலட்சம் பேர் கையால் மலம் அள்ளுவதாகவும் மத்திய அரசே 2005ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் கூறுகிறது. உண்மையில் 13 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள கையால் மலம் அள்ளும் வேலை செய்து வருவதாக சுகாதாரப் பணியாளர் விடுதலை இயக்கம் கூறுகி றது. ஆனாலும், இன்று வரை ஒரு தனிநபர் கூட இச்சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படவில்லை.

மனித மலம் அள்ளுவது மட்டுமே அருந்ததியரின் தாழ்ந்த நிலையைக் குறிக்கவில்லை. தூய்மையற்றவை, தீட்டுக்குறியவை என்று சமூகத்தால் கருதப்பட்ட பிற வேலைகளையும் அருந்ததியர்கள் தாம் செய்ய வேண்டும். ஊருக்கு வெளியே, தனிச் சேரிகளில் பிற தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும்படி நிர்பந்திக்கப்பட்டார்கள் என்றால், அதற்கும் வெளியே மேலும் ஒதுக்குப்புறமாக தனிச்சேரிகளில் வாழும்படி அருந்ததியர் உட்பட சில சாதியினர் தள்ளப்பட்டனர். பிற தாழ்த்தப்பட்ட தலித்து சாதிகள் கூட இவர்களை கொள்வினை கொடுப்பினை மண உறவுக ளுக்குத் தகுதியற்றவர்கள் என்று தள்ளி வைத்தõர்கள். செத்த மாடுகள்எருமைகளைப் புதைப்பது, தோல் வேலைகளைச் செய்வது போன்ற தூய்மையற்றவை என்று கருதப்பட்ட வேலைகள் இவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் பெரும்பான்மையான அருந்ததிய மக்கள் துப்புரவுப் பணியாளர்களாகவும் கிராமப்புறங்களில் பண்ணை அடிமைகளாகவும், கூலித் தொழிலாளிகளாகவும், எஞ்சியவர்கள் செருப்புத் தைக்கும் தொழிலாளிகளாகவும் வாழ்கின்றனர்.

அருந்ததிய மக்களில் தெலுங்கு பேசும் ஒரு பிரிவினர் நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் குடியேறியவர்கள். கன்னடம் பேசும் மற்றொரு பிரிவினர் திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்தில் இங்கு குடியேறியவர்கள்; தெலுங்கு பேசும் மற்றும் ஒரு பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரில் குடியேறி துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள ஆதி ஆந்திரர்கள். இவர்கள் அனைவரும் மாதாரி அல்லது சக்கிலியர் என்று இழிவாக அழைக்கப்படுபவர்கள்.

செருப்புத் தைப்பது, செத்த எருமை மாட்டு மாமிசங்களை உண்பது, மலம் அள்ளுவது போன்ற துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவது, ஆதிக்க சாதிகளின் பிணங்களுக்குப் போடும் துணிமணிகள், பாத்திரங்களை எடுத்துப் பயன்படுத்துவது, ஆதிக்க சாதிகளின் பண்டிகைகள் மற்றும் மணவிழா விருந்துகளில் எஞ்சிய உணவை வாங்கி உண்பது போன்ற ஏழ்மை நிலைமையிலேயே இன்னும் பல அருந்ததியக் குடும்பங்கள் உள்ளன.

இவ்வளவு கீழ்நிலையில் உள்ள அருந்ததிய மக்களுக்கு சமூக நீதி வழங்குவதாகக் கூறப்படும் இடஒதுக்கீடு ஏற்பாடு, கடந்த ஒரு நூறாண்டில் எந்த அளவு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும்? “”தமிழ்நாட்டில் நத்தம் தாலுகாவைச் சேர்ந்தவர் குப்புசாமி என்ற அருந்ததியர் (சக்கிலியர்) சமூகத்தைச் சேர்ந்தவர். 1989இல் பி.ஏ. படித்து, 1994இல் பி.எட். படித்து, 1998இல் எம்.ஏ. படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் 13 ஆண்டுகளாக வேலை கிடைக்கவில்லை. எம்.ஏ., பி.எட். படித்த குப்புசாமி செருப்பு தைத்துப் பிழைப்பு நடத்துகிறார். ஆக, அருந்ததியர் மக்களில் ஒரு சிலர் மிகச் சிரமப்பட்டு, போராடி கல்வி கற்றால் கூட இடஒதுக்கீட்டின்படி இன்றைய சூழலில் வேலை வாய்ப்பு கிடைப்பது கடினம் எனத் தெரிகிறது.” (பி.சம்பத் எழுதிய “”நாங்கள் வருகிறோம்… அருந்ததியர் வாழ்வும் விடுதலையும்”, பக்: 1718)

அருந்ததிய மக்களுக்கு இடஒதுக்கீடு ஏற்பாடு வழங்கியுள்ள சமூக நீதி இதுதான்! கல்வி, சமூகம் மற்றும் பொருளாதார உரிமைகள் மறுக்கப்பட்டு, மிகமிக மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள அருந்ததிய சாதிகளைச் சேர்ந்தவர்களில் குப்புசாமி அளவு கல்வியில் உயர்நிலைக்கு வருவது விதிவிலக்காகவே நிகழ்கிறது. இந்த நிலைக்கு வந்த பிறகும் கூட தற்போதுள்ள இடஒதுக்கீடு ஏற்பாடு அம்மக்களுக்கு சமூக நீதி வழங்காது என்பதுதான் விதியாக உள்ளது.

இது எப்படி நடந்தது? இதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டிலுள்ள அருந்ததியர், புதிரை வண்ணார் ஆகிய 15 அடி மட்ட சாதிகளையும் உள்ளடக்கிய மொத்தம் 76 பட்டியல் சாதிகளுக்கு 18 சதவிகித அளவுக்கு இவ்வளவு காலமும் இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்திலேயே ஏழை மற்றும் நடுத்தர, குத்தகை விவசாயிகளாகவும் கல்வி கற்று இராணுவம், போலீசு மற்றும் பிற அரசு ஊழியர்களாகவும், தேயிலைகாபி தோட்டத் தொழிலாளர்களாகவும், சற்று முன்னேறிய, நிரந்தர ஊதியம் பெற்ற வர்க்கத்தினராக கணிசமான பேர்களைக் கொண்ட தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் போன்ற சாதிகளும் இந்த 76 பட்டியல் சாதிகளில் அடங்குகின்றன. இப்படிப்பட்ட ஒப்பீட்டு ரீதியில் முன்னேறிய சில சாதிகள்தாம் பட்டியல் அட்டவணை சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை அடைந்து வந்தன. இந்த 76 பட்டியல் சாதிகள் என்றும் வகைப்படுத்தலுக்குள் அடங்கிய அருந்ததிய மற்றும் புதிரை வண்ணார் ஆகிய 15 அடிமட்ட சாதிகளுக்கு அந்த 18 சதவிகித இடஒதுக்கீட்டின் பலன்கள் போய் சேரவே இல்லை.

தமிழகத்திலுள்ள பிற்பட்ட சாதிகளுக்கான 27 சதவிகித இடஒதுக்கீடு எந்த அளவு அச்சாதிகளுக்குப் போய்ச் சேர்ந்துள்ளது என்பதைக் கண்டறிய 1970களில் சட்டநாதன் கமிசன் என்ற குழு அமைக்கப்பட்டது. அதன் ஆய்வுப்படி, பிற்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீடு ஏற்பாட்டின் 49 சதவிகித பலன்களை 13 சாதிகள் மட்டுமே அடைந்துள்ளன என்று கண்டறியப்பட்டது. இதனால் பிற்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் பலன்கள் சென்றடையாமல் போன சாதிகளை மிகவும் பிற்பட்ட சாதிகள் என்று தனியாக வகைப்படுத்தப்பட்டு, 1980களின் ஆரம்பத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சட்டநாதன் கமிசனைப் போன்று ஒரு குழு அமைக்கப்பட்டு, பட்டியல் சாதிகளுக்கான 18 சதவிகித இடஒதுக்கீட்டின் பலன்கள் எந்தெந்த சாதிகளுக்கு எந்தெந்த அளவு போய்ச் சேர்ந்தன, எந்தெந்த சாதிகள் அதிகபட்ச ஆதாயங்களை அடைந்தன, எந்தெந்த சாதிகள் மிகமிகக் குறைந்த ஆதாயங்கூட அடையாமல் இன்னமும் கல்வி, சமூகம், பொருளாதாரம், அரசியலில் மிகமிகப் பின்தங்கிப் போயுள்ளன என்று ஆய்வு செய்யப்பட்டிருந்தால், அருந்ததியர் நந்தம் குப்புசாமியின் நிலை போன்ற அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியிருக்கும்.

ஆனால், இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, அருந்ததிய சாதிகளைச் சேர்ந்தவர்களில் சிலர் பல்வேறு அமைப்புகளில் அணிதிரண்டு, பட்டியல் சாதிகளுக்கான இடஒதுக்கீட்டில் மக்கள் விகிதாச்சாரம் அடிப்படையில் தங்கள் சாதிக்கு உள்ஒதுக்கீடு கோரி பல்வேறு வகையில் மன்றாடி வருகின்றனர்.

17 ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகள் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தியபோது, அதை இடது தீவிரவாதம் என்று கண்டித்த போலி மார்க்சிஸ்டுக் கட்சியினர்; வர்க்கப் போராட்டங்கள் நடத்தினாலே போதும் சாதிகள் ஒழிந்து விடும் என்று பார்ப்பனிய மார்க்சியம் பேசிவந்த அக்கட்சியினர் இப்போது தாழ்த்தப்பட்ட மக்களின், ஓட்டுகளைப் பொறுக்கவே இடஒதுக்கீடு ஆதரவு, ஆலய நுழைவு, இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீடு ஆதரவு முதலிய இயக்கங்களை எடுக்கின்றனர். தி.மு.க தலைமையிலான ஆளும் கூட்டணியில் இக்கட்சி பங்கேற்பதால் ஆட்சியாளர்களிடம் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி அருந்ததிய மக்களுக்குச் சில சலுகைகளைப் பெற்றுத் தர முயலுகின்றது.

முன்பு தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவோம் என்று உறுதிமொழி கொடுத்துவிட்டு, இப்போது அன்புமணியை தனது கட்சி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் மருத்துவர் ராமதாசு கூட, அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கிறார். இன்னும் தேவேந்திர குல வேளாளர்கள் ஓட்டு வங்கியையும், ஆதிதிராவிடர் ஓட்டு வங்கியையும் நம்பி அரசியல் கட்சி நடத்தும் தலித் தலைவர்களின் கட்சிகளைத் தவிர, அனைத்துக் கட்சிகளும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன.

பட்டியல் சாதிகளிலேயே அடிமட்டத்தில் உள்ள சாதிகளையும் ஒப்பீட்டு ரீதியில் முன்னேறிய சாதிகளையும் தனித்தனியே வகைப்படுத்தி, உள் ஒதுக்கீடு கோரி அடிமட்ட சாதிகள் இயக்கங்கள் நடத்துவதும், இந்த அடிமட்ட சாதிகளின் ஓட்டுச் சீட்டுகளைப் பெறுவதற்காக ஓட்டுக் கட்சிகள் பெரும்பாலும் ஆதரிப்பதும், குறிப்பாக ஆளுங்கட்சியே அக்கோரிக்கையை ஏற்று உள்ஒதுக்கீட்டுக்கான அரசாணை பிறப்பிப்பதும், பட்டியல் சாதிகளிலேயே முன்னேறிய சாதிகள் தலித் பசையடுக்கினர் அல்லது தலித் கிரீமிலேயர் பகுதியினர் இந்த உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், கிட்டத்தட்ட ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளாக நாம் கண்டுவரும் காட்சியின் மறு அரங்கேற்றமாகத்தான் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது.

ஆந்திராவில், பட்டியல் சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை மிகப் பெரும்பாலும் மாலா சாதியினரே அனுபவித்து வருகிறார்கள், தங்களுக்குரிய பங்கு கிடைக்காமல் தாங்கள் மிகமிகப் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும், பட்டியல் சாதிகளை நான்காக வகைப்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் மாதிகா சாதியினர் பல ஆண்டுகளாகப் போராடினர். மாலா சாதித் தலைவர்கள் தவிர அனைத்துப் பிரிவினரும் மாதிகா சாதியினரின் இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். முன்பு ஆட்சியிலிருந்த சந்திரபாபு நாயுடு மாதிகாக்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்தார். ஆனால் அது செல்லாதென மாலா சாதித் தலைவர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு போட்டு தடுத்து விட்டார்கள். ஆந்திராவின் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆந்திரா சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் கூட, மாதிகா போன்ற அடிமட்ட பட்டியல் சாதிகளுக்கான உள்ஒதுக்கீடு இன்னமும் கிடைக்கவில்லை.

ஆந்திராவில் மாதிகாக்கள் சமூக நீதிக்கான இயக்கம் பற்றி எழுதிய உஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் முத்தையா, “”பார்ப்பனியம் தலித் இயக்கத்தைத் தோற்றுவித்தது. அதைப்போலவே ஒன்று அல்லது இரண்டு அட்டவணை (பட்டியல்) சாதிகளின் தனியாதிக்கத்தை நம்பும் தலித் பார்ப்பனியம் ஆந்திராவில் (மாதிக்காக்களின்) தண்டோரா இயக்கத்தைத் தோற்றுவித்தது” என்று குறிப்பிடுகிறார்.
அதேபோலத்தான் தமிழகத்திலும் தங்களுக்கு உள்ஒதுக்கீடு கோரும் அருந்ததியர் இயக்கங்கள், “”தலித்தியம்”, “”தலித் விடுதலை” என்ற புரட்சி வசனம் பேசும் தலித் பார்ப்பனியத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழக மனித உரிமைக் கழகத்தின் அரங்க. குணசேகரன் மற்றும் சில அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் முன்னணியாளர்கள் அருந்ததிய சாதிகள் போன்ற அடிமட்ட அட்டவணைச் சாதிகளுக்கான உள்ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றனர். ஆனால், ஜெயலலிதாவின் பாதந்தாங்கியான குடியரசுக் கட்சியின் “”தலைவர்” செ.கு. தமிழரசன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி போன்ற தலித் தலைவர்கள் உள்ஒதுக்கீட்டை அப்பட்டமாகவும் கடுமையாகவும் எதிர்க்கின்றனர். முன்பு அருந்ததிய மக்களின் உள் ஒதுக்கீட்டை ஒப்புக்கு ஆதரித்த திருமாவளவன், இப்போது பூசி மெழுகி மறைமுகமாக எதிர்க்கிறார். “”தலித்பிராமண” கூட்டுக்காக பாடுபடும் எம்.எல்.ஏ. ரவிக்குமாரை சித்தாந்த குருவாகக் கொண்டுள்ள திருமாவளவன், உள்ஒதுக்கீடு விவகாரத்தைப் பின்தள்ளும் வகையில் பொதுவில் அட்டவணை சாதிகளுக்கான இடஒதுக்கீட்டை அமலாக்குவதில் உள்ள குறைபாடுகள், பற்றாக்குறை பின்னடைவுக் காலியிடங்களை நிரப்புவது, சாதிவாரி கணக்கெடுப்பு, வெள்ளை அறிக்கை போன்ற கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறார். இதே கோரிக்கைகளை முன்தள்ளியும், உள்ஒதுக்கீட்டு தலித்துகளைப் பிளவுபடுத்திவிடும், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் எதிர்க்கும் தமிழரசன், கிருஷ்ணசாமி போன்றவர்களை எந்த வகையிலும் விமர்சிக்காமல் நழுவிக் கொள்கிறார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்வதை பிற பிற்படுத்தப்பட்ட சாதியினர் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால் இந்த நாட்டின் சமூக விடுதலைப் புரட்சிக்கு தலித்துகள் தாம் தலைமை தாங்குவர் என்று கூறிக் கொள்ளும் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடத் தலித் தலைவர்களுக்கு அருந்ததிய சாதிகளுக்கான உள்ஒதுக்கீட்டை சகித்துக் கொள்ளும் பண்பு கூட இல்லை என்பது வேதனைக்குரியது. அட்டவணை சாதிகளிலேயே அந்தந்தப் பிரிவினரின் ஓட்டு வங்கியை உருவாக்கித் தக்கவைத்துக் கொண்டுள்ள இந்த “”தலித் தலைவர்கள்” கரடிச் சித்தூர் போன்ற இடங்களில் அருந்ததிய மக்களுக்கு எதிராக மேல்மட்ட அட்டவணை சாதியினர் தாக்குதல் தொடுத்தபோது கூட, தத்தம் சாதிகளின் ஆதிக்கத்தையே ஆதரித்தனர். களத்திலேயே இதுதான் அவர்களின் நிலை என்கிறபோது, அட்டவணை சாதிகளிலேயே ஒரு பசையடுக்கு கிரீமிலேயர் பகுதியினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தலித் பார்ப்பனர்கள்; உள்ஒதுக்கீடு விவகாரத்தில் வேறு மாதிரி இருக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

பொதுவாக இடஒதுக்கீடு ஏற்பாட்டை எதிர்க்காத அதேசமயம், அதன் மீது சில கேள்விகளையும் விமர்சனங்களையும் நாம் எழுப்பியிருந்தோம். நமது நிலையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே தற்போதைய போக்குகள் அமைந்துள்ளன. நாட்டின் பல ஆயிரம் சாதிகளைத் தற்போது பிற்படுத்தப்பட்டவை, தாழ்த்தப்பட்டவை மற்றும் பழங்குடியினத்தவை என்று மூன்று வகையாகப் பிரித்து ஒவ்வொரு வகைக்கும் இவ்வளவு என்று இடஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இடஒதுக்கீட்டின் பயன்கள் ஏற்றத்தாழ்வாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதால், ஒவ்வொரு வகையிலும் மேல்மட்டத்தில் ஒரு பசை அடுக்கு கிரீமிலேயர் பகுதியாக சில சாதிகளும், கீழ்மட்டத்தில் பின்தங்கிய பகுதியாக சில சாதிகளும் பிளவுபடும் போக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே போகிறது. இதனால்தான் ஆந்திராவைப் போல, தமிழ்நாட்டில் அருந்ததியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை, வடக்கிலும் மேற்கிலும் உள்ள குஜ்ஜார் பிரிவு மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி கோருவது போன்ற போராட்டங்கள் வெடிக்கின்றன. மேலும் தலித் பார்ப்பனியத்தைப் போலவே சூத்திரப் பார்ப்பனியமும் தங்கள் ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள விழைகின்றது.

பெரியாரும் அம்பேத்கரும் பார்ப்பன எதிர்ப்புப் புரட்சிப் போராளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால், இந்திய சாதிய ஆதிக்கத்துக்கு சமூகநீதி சாதி சமத்துவத் தீர்வாக அவர்கள் முன்வைத்த இடஒதுக்கீடு ஏற்பாடு தலித் பார்ப்பனியம், சூத்திர பார்ப்பனியம் என்ற புதிய அவதாரங்களை உருவாக்கியிருக்கிறது.

இணைய தள சோதிடம்:எதற்கிந்த வலைவிரிப்பு?


உலகில் பிறந்து வாழ்கிற இத்தனை கோடி மனி தர்களுக்கும் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றை சரியாகக் கணிக்க முடியும் என்கிற சோதி டம் அறிவியல் அடிப்படையில் நம்பக்கூடியதுதானா?

இப்படி கிடுக்கிப்பிடி போட்டுக் கேட்டபோது திண றியவர்களுக்குத் துணையாக அன்றைக்கு அர்த்த முள்ள இந்து மதம் புகழ் கண்ணதாசன் சொன்ன விளக்கம் ஒன்று உண்டு. சோதனையின்போது மன துக்கு ஆறுதலாகத் திடம் சொல்வதுதான் சோதிடம், என்றார் அவர். சோதிடத்தை நம்புகிறவர்கள், நம் பாதவர்கள் இரு சாராரையுமே திருப்திப்படுத்த முயல்கிற தந்திரமான விளக்கம் இது.

நகரங்களின் நட்சத்திர விடுதிகளில் குளு குளு அறைகளில் மடியில் கிடத்திய கணினி முதல், பேருந்து நிலைய நடைமேடைகளில் முக்காலியில் நிறுத்தப்பட்ட கணினித் திரை வரையில் இந்த நவீன சோதிட வர்த்தகம் பெரிய அளவிலும், சாலைவியாபார அளவிலும் நடக்கிறது.

இணைய தளம் மூலமாக திருமணத் தகவல் மோசடி, மின்னஞ்சல் வழியாக நம் வங்கிக் கணக்கை யும் கடவுச் சொல்லையும் தெரிந்து கொண்டு பண மோசடி என்றெல்லாம் நடப்பது பற்றி அவ்வப்போது செய்திகள் வருகின்றன. இப்படிப்பட்ட மோசடிகளில் இறங்குகிறவர்களாவது அவ்வப்போது சட்டத்தின் கைகளில் பிடிபடுவதுண்டு. ஆன்மீக வலைவிரிக்கும் ஆனந்தாக்கள் கூட அவ்வப்போது அம்பலமாகிறார் கள். ஆனால் மேற்படி ஜோதிட ஸ்ரீக்கள் மட்டும் சர்வ ஜம்ப கீர்த்தியுடன் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் இணைய தள தகவல் ஒன்றைப் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு அறிவிப்பு எட்டிப்பார்த்தது. எதிர்காலத்தைத் துல்லியமாக கணித் துச் சொல்கிற சேவை என்று அதிலே இருந்தது. நம் பிக்கை வருவதற்காக, குறிப்பிட்ட மின் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு போடப்பட்டிருந்தது. உங் களைப் பற்றிய ஒரு சுருக்கமான கணிப்பை இலவச மாக அனுப்புகிறோம். அதிலே நம்பிக்கை ஏற்பட் டால் தொடர்பை உறுதிப்படுத்துங்கள். உங்கள் பெயர், பிறந்த தேதி மட்டும் குறிப்பிடுங்கள். ஜாதகம் இல்லா மலே நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக உங்களைப் பற்றிய சில உண்மைகளை ஆங்கிலத்தில் உங்கள் மின் முகவரிக்கு அனுப்புகிறோம். இந்த சேவை முற்றிலும் இலவசம். அதிலே உள்ள கணிப்புகள் உண்மைதான் என்று உங்களுக்குத் தோன்றினால் தொடர்ந்து முழு கணிப்பையும் அனுப்புகிறோம், என்று அந்த அஞ் சல் சொன்னது.

சும்மாதான் அந்த சேவை என்பதால், சும்மா அந்த முகவரிக்குள் சென்று என்னதான் சொல்கிறார்கள் பார்க்கலாமே என்று அதன் மேல் சுண்டெலியை முடுக்கி விட்டேன். அப்போது திரையில் தோன்றிய அட்ட வணையில் கேட்டிருந்தபடி எனது பெயரையும் பிறந்த தேதியையும் தட்டிவிட்டேன். சில நொடிகளில் ஒரு தகவல் என் மின்னஞ்சல் முகவரிக்கு வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன், (இப்படி பெயர் குறிப் பிடுவது கூட ஒரு வலைதான்) உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. உண்மைலேயே உங்களுக்கு எமது சேவை வேண்டும் என்பதை இந்த மின்முகவரியில் கிளிக் செய்து உறுதிப்படுத்துங்கள். நீங்கள் உறுதிப்படுத்திய தகவல் வந்த 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு எங்கள் சோதிட வல்லுநரிடமிருந்து உங்களைப் பற் றிய தொடக்கக் கணிப்பு இலவசமாக வரும். அதன் பின் நீங்கள் விரும்பினால் முழுமையான கணிப்பு அனுப்பி வைக்கப்படும், என்று இருந்தது.

இப்படியே இழுத்துக்கொண்டு போவார்கள் என்ற எண்ணம் வந்ததாலும், பணிகள் நிறைய இருந்ததாலும் அந்த உறுதிப்படுத்தும் தகவலை நான் அனுப்ப வில்லை. ஆனால், மறுநாள் ஒரு அஞ்சல் வந்தது. அதிலே, அன்புள்ள குமரேசன் நீங்கள் உறுதிப் படுத்தியதற்கு நன்றி. (நான் எங்கேயப்பா உறுதிப் படுத்தினேன்?) உங்களைப் பற்றிய அடிப்படையான கணிப்பைத் தயாரிக்க இவ்வளவு நேரம் தேவைப் பட்டது. உங்களுடைய ஜாதகம் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. மிக அரிதாகத்தான் இப்படி அமையும். அதைத் தெரிந்துகொள்ள பின்வரும் வலைத் தளத்தைப் பார்க்கவும். இவண், உங்களின் தொழில் முறை சோதிடர் — என்று அடுத்த கொக்கி போடப் பட்டிருந்தது. (சோதிடரின் பெயர் ஒரு பெண்ணின் பெயராக இருந்தது. அதுவும் ஒரு வலைதானோ?)

அதையும் பார்த்துவிடலாம் என்று, குறிப்பிடப் பட்டிருந்த வலைத்தளத்திற்குள் சென்றேன். அதில் எனக்கென ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருந்தது.
… சோதிடரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கை உங்களுக்கு அமையவிருக் கிறது என்பது மட்டுமல்ல, அருமையான வாய்ப்புகள் மிகுந்த ஆசிர்வதிக்கப்பட்டதொரு எதிர்காலம் உங்களுக்கு இருப்பது எனது கணிப்பில் தெரிய வந்துள்ளது. நான் இந்தத் தொழிலில் பல ஆண்டு களாக இருந்துவருகிறேன். ஆனால் மிடர் குமரே சன், உங்களுடையதைப் போன்ற அற்புதமான ஜாத கங்கள் மிக அரிதாகவே அமைகின்றன என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்… இப் போது நான் சொல்லப்போவது மிக முக்கியமானது. ஒரு முறைக்கு இரண்டு முறை நான் என் சோதிடக் கணக்கை சரி பார்த்துவிட்டுத்தான் இதை எழுதுகி றேன்… என்று அது சொல்லிக்கொண்டே போனது.

அதன் பின், … இதுதான் என் கண்டுபிடிப்பு: நீங் கள் இப்போது ஒரு முக்கியமான மாறுதல் கால கட்டத் தில் இருக்கிறீர்கள். விண்ணில் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலைகளும் கோணங்களும் உங்க ளுக்கு மிக முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவரு வதற்கு ஏற்ற வகையில் இருக்கின்றன… அடுத்த 44 நாட் களில் உங்கள் தொழிலின் மிக முக்கியமான தருணங் களை சந்திக்கப் போகிறீர்கள். உங்கள் தொழிலைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான வெற்றியை அடைய இருக்கிறீர்கள். அது எப்படிப்பட்ட வெற்றி என்று இப்போது சொல்வது கடினம். ஆனால், யாரோ ஒரு வெளிநாட்டில் உள்ளவரோடு அல்லது ஏதோ வொரு வெளிநாட்டு நிறுவனத்தோடு நீங்கள் நடத்தப் போகிற பேச்சுவார்த்தை தொடர்பானதாக இருக்கலாம் என்று மட்டும் இப்போதைக்கு என்னால் ஊகிக்க முடிகிறது…

… மூன்று முக்கியமான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். முதலாவதாக, இந்த 44 நாட் கள் மிகப்பெரும் பணத்துடன் சம்பந்தப்பட்டிருக் கின்றன; இரண்டாவதாக அந்தப் பெரும் பணம் உங் களுடைய மிகப்பெரிய லட்சியம், முதலீடு அல்லது திட்டத்திற்குப் பயன்படப்போகிறது; மூன்றாவதாக உங்களது இயற்கையான வாய்ப்புகளையும் நல்ல திர்ஷ்டத்தையும் இணைத்து மேலும் முடுக்கிவிடு வதன் மூலம் அந்தப் பணம் வரப்போகிறது… இந்த வாய்ப் பைப் பயன்படுத்த நீங்கள் உங்களைத் தயார் நிலை யில் வைத்திருக்க வேண்டும் என்பதே முக்கியம்…

… இன்னும் சில உண்மைகளை நான் கண்டு பிடித்திருக்கிறேன். உங்களைச் சுற்றி மகத்தான சக்தி யின் அதிர்வுகள் இருப்பதை நான் பார்க்கிறேன். இதன் விளைவாக எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு எளி தாகக் கிடைத்துவிடும்… ஒரு எச்சரிக்கையும் விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். மற்றவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் தானாக நடக்கட்டும் என்று காத்திருப் பார்கள். ஆனால் குமரேசன், ஒரு சரியான சோதிட ரின் உதவியோடு உங்களது நட்சத்திர-கோள் நிலை களை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப உங்களது செயல்பாடுகளை நீங்கள் அமைத்துக்கொள்வது முக்கியம். அப்போதுதான் அந்த சாதகமான பலன் கள் முழுமையாக உங்களை வந்தடையும்…

இப்படியே தன் கணிப்பை ஓட்டிக்கொண்டே போயிருக்கிறார் அந்தப் பெண்மணி. சுமார் மூன்று பக் கங்களுக்கு உள்ள கணிப்பில் ஒரே ஒரு இடத்தி லாவது திட்டவட்டமாக ஏதாவது சொல்லப்பட்டி ருக்கிறதா? நான் யார், எப்படிப்பட்ட தொழிலில் இருக் கிறேன் என்ற நிகழ்காலமோ, எந்தவிதமான வாழ்க் கையை இதுவரை வாழ்ந்துவந்தேன் என்ற கடந்த காலமோ, இனி என்னதான் குறிப்பாக நடக்கப்போ கிறது என்ற எதிர்காலமோ மருந்துக்காவது அடை யாளம் காட்டப்பட்டிருக்கிறதா?

பொத்தாம் பொதுவான ஊகங்களுக்குப் பெயர் துல்லியமான கணிப்பாம்! சாதாரணமாக எவரும் சிக்கி விடக்கூடிய பெரிய வலை இது என்பது மட்டும் உறுதி. இன்றைய இணையவலை நுட்பங்களைப் பயன் படுத்துகிற எவருக்கும், போட்டிகளின் வெக்கையில் வெந்துபோயிருக்கிற யாருக்கும் வெளிநாட்டு வாய்ப்பு கள் பற்றிய ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இருக் கும். பெட்டிக்கடை வைத்திருப்பவர் முதல் ஆகாய விமான உற்பத்தியாளர் வரையில் அவரவர் மட்டத் திற்குப் பெரும் பணம் தேவைப்படவே செய்கிறது. எல்லோருக்குமே எதிர்வரும் காலம் என்பது ஏதாவ தொரு வகையில் மாறுதல் காலகட்டம்தான்.

மக்களின் வாழ்க்கை ஏக்கங்களை முகர்ந்துபார்க் கக்கூடிய எவரும் இந்த கணிப்புகளுக்கு வர முடி யும்! வேறொரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து வேறொரு பெயரில் இதே சோதிடரின் வலைத் தளத்தைத் தட்டியபோது, இதே கணிப்புதான் வந்தது! அன்புள்ள …. என்ற இடத்தில் மட்டும் அந்தப் புதிய பெயர் இருந்தது! இந்த இலவச முதல் சேவைக்குப் பிறகு அடுத்தடுத்த ஆழமான கணிப்புகளுக்கு சிறப்புக் கட்டணங்கள் உண்டு!

இப்படிப்பட்ட பொதுவான, எவருக்கும் பொருந்து கிற சொல்லாடல்களில் மிரண்டுபோய், மின்னஞ்சல் குறிப்புகளின்படி அடுத்தடுத்த தொடர்புகளை மேற் கொண்டு, கேட்கிற கட்டணங்களை (ஆயிரக்கணக் கான ரூபாய்கள்) செலுத்துகிறவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

வாழ்க்கை உண்மைகளை, அரசியல் நிலைமை களை, சமுதாய சூழல்களை, இயற்கை ரகசியங்களைப் புரிந்துகொண்டால் அடுத்த நொடி எப்படி அமை யுமோ என்ற புதிரோடு, ஆக்கப்பூர்வ முயற்சிகளுக் கான முனைப்புகளோடு வாழ்வதன் சுகத்தை முழுமை யாக அனுபவிக்க முடியும். அப்படி அனுபவிக்கக் கற்றுக்கொள்கிற திட மனங்களை சோதனைகள் என்ன செய்யும்? சோதிடம்தான் என்ன செய்யும்?

இஸ்லாமிய அடிப்படைவாதமும், தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டமும்…


மும்பையில் இது வரை பார்த்திராத வண்ணம் மிகவும் கோரமான பயங்கரவாதச் செயல்களை பயங்கரவாதிகள் நிக்ழ்த்தியுள்ளனர். ஒபாமா அமெரிக்க குடியரசு தலைவராக பதவியேற்பதற்கு முன்பாக ஏதாவது பயங்கரவாதச் சம்பவத்தினை அல்கொய்தா நிகழ்த்தும் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ரேலியர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரயில் நிலையங்களில் இருந்த அப்பாவி மக்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதல்கள் மனித நேயம் உள்ள யாரையும் பதறவே செய்யும். இந்த தாக்குதல்களில் பலியாகிய மக்களுக்கு – அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் என்னுடைய அஞ்சலியை செலுத்துகிறேன்.

இந்த நேரத்தில் இந்திய உளவு நிறுவனங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இந்த தாக்குதல்களை 9/11 உடன் ஒப்பிடுகிறார்கள். 9/11க்கு முன்பான காலங்களில் அமெரிக்காவில் பெரிய தாக்குதல்கள் நிகழ வில்லை. அதற்கு பிறகு ஒரு தாக்குதல் கூட நடக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் எத்தனை தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது கவலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பல்வேறு குண்டுவெடிப்புகளில் இந்தியாவில் சுமார் 500க்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈராக்கிற்கு அடுத்ததாக இந்தியாவில் தான் இவ்வளவு அதிகப் பேர் குண்டு வெடிப்புகளில் பலியாகியுள்ளதாக ஒரு பத்திரிக்கை கூறுகிறது. தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்தியாவின் உளவு நிறுவனங்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியாக வேண்டும்.

இன்றைய தினமணி தலையங்கத்தில் எழுப்பபட்டிருக்கும் சில கேள்விகள்நியாயமானவை…

பத்து இடங்களில் கடந்த பத்து மாதங்களாகத் தொடர்ந்து குண்டுகள் வெடித்தும், பல உயிர்கள் பலியாக்கப்பட்டும், அறிக்கை கொடுப்பதைத் தவிர வேறு எதுவுமே செய்யாமல் குண்டுக்கல்லாக ஓர் உள்துறை அமைச்சர் இருக்கிறார் என்பது தான் அவர்களது தைரியம். அவரைப் பார்த்தாலும் சரி, அவருடைய செயல்பாடுகளும் சரி, இந்தியாவில் நாம் எந்தவித பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டாலும் அதைப்பற்றி சற்றும் கவலைப்படாத உள்துறை அமைச்சகம் இருக்கிறது என்பதுதான் அவர்களுக்குத் துணிவைக் கொடுத்திருக்க முடியும். இத்தனைக்குப் பிறகும் உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டும் என்று பிரதமரும் நினைக்கவில்லை, தனது கையாலாகத் தனத்தை ஒத்துக்கொண்டு ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமைச்சரும் நினைக்கவில்லை. என்ன பொறுப்பற்றதனம்?

கடந்த பத்து ஆண்டுகளாக, சூப்பர் உள்துறை அமைச்சராகவும், நிழல் பிரதமராகவும் செயல்படுபவர் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் என்கிற பதவியை வகிப்பவர். அவர் எதுவுமே பேசக்காணோமே, ஏன்? இப்படித்தான் தொடர்ந்து பயங்கரவாதச் செயல்கள் நடக்கும் என்றால், எம்.கே. நாராயணன் ஏன் தேசியப் பாதுகாப்புச் செயலராகத் தொடர வேண்டும்? அப்படி ஒரு பதவியின் அவசியம்தான் என்ன? இத்தனைக்கும் அவர் முன்னாள் உளவுத்துறைத் தலைவர். அந்தப் பதவிக்கு எந்தவிதப் பொறுப்பும் கிடையாதா?

பாவம் எம்.கே.நாராயணன். அவரை எதுவும் சொல்லாதீர்கள். அவர் இலங்கைப் பிரச்சனையின் ஸ்பெஷலிஸ்ட் (specialist on Sri Lankan affairs). அவ்வளவு தான். அவர் கவனம் முழுவதும் சிறீலங்கா இராணுவம் கிளிநொச்சியையும், முல்லைத்தீவினையும் எப்படி பிடிக்கப் போகிறது என்பதில் தான் உள்ளது. ஆனால் தேவைப்படும் விஷயத்தில் கோட்டை விட்டு விடுவார்.

இந்தியாவில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் ஒரு ஆண்டில் சுமார் 500 அப்பாவி மக்கள் இத்தகைய குண்டுவெடிப்புகளில் பலியாகியுள்ளனர். இந்தியாவில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதால் தான் அல்கொய்தா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என இங்குள்ள தொலைக்காட்சிகளில் கூறப்படுகிறது. அல்கொய்தாவோ அல்லது பாக்கிஸ்தானில் உள்ள வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளோ, எதுவாக இருந்தாலும் இந்திய அரசாங்கம் வழக்கம் போல பாக்கிஸ்தானை குற்றம் கூறி தப்பி விட முடியாது. பாக்கிஸ்தானில் இருந்து வந்து இருந்தாலும் மும்பை கடற்கரை வழியாக வரும் அளவுக்கு பாதுகாப்பில் இருந்த பிரச்சனைகள் குறித்த கேள்வி எழுகிறது.

தமிழக கடற்கரையோரங்களில் பலமான கண்காணிப்பு கடற்ப்படையால் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளுக்கு வரும் கப்பல்கள் பற்றிய உளவு செய்திகளை கூட சிறீலங்கா அரசாங்கத்திற்கு இந்தியா கொடுத்து உதவுகிறது. அவ்வளவு அசுரபலம் கொண்ட இந்தியாவால், இந்தியாவின் முக்கிய நகரமான மும்பையில் கடல்வழியாக தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் தொடுத்து இருப்பதை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது ?

இந்தியா தன்னை “உலகின் அடுத்த வல்லரசு” என்பதை முதலில் மறக்க வேண்டும். அமெரிக்கா உலகின் வல்லரசு என்றால் அது தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்கிறது. 9/11க்குப் பிறகு அமெரிக்க சுரங்க ரயில்களில் (Subway) எத்தகைய பாதுகாப்பு உள்ளது என்பது இங்கிருப்பவர்களுக்கு தெரியும். தன்னுடைய நாட்டினை சரியாக பாதுகாக்க முடிந்த அமெரிக்காவிற்கு இணையாக இந்தியா தன்னை வல்லரசாக நினைப்பதால் தான் சோமாலியாவிற்கு சென்று கடற்கொள்ளையர்களை தாக்குகிறது. ஆனால் தன்னுடைய கடல் எல்லைக்கு அருகே இருந்து வரும் பயங்கரவாதிகளின் கப்பலை கண்டுபிடிக்க முடியவில்லை. சோமாலியாவிற்கு சென்று கப்பல் முதலாளிகளை பாதுகாக்க தெரிந்த இந்தியாவால் அப்பாவி தமிழக மீனவர்களை காப்பாற்ற முடிவதில்லை. இப்பொழுது மும்பையையும் காப்பாற்ற முடியவில்லை.

*******

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பயங்கரவாதம் என வரையறை செய்வதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் பயங்கரவாதம் என்று வரும் பொழுது எல்லாவற்றையும் தட்டையாக பயங்கரவாதம் என அடைத்துவிடும் போக்கு நிலவி வருகிறது. இஸ்லாமிய அடைப்படைவாதம் என்ற ஒன்றினை மையப்படுத்தி அனைவரையும் பயங்கரவாதிகள் என்ற நோக்கில் பார்க்கப்படும் ஒரு போக்கு நிலவி வருகிறது. விடுதலைப் போராட்ட அமைப்புகளையும், இஸ்லாமிய அடைப்படைவாதத்தையும் தட்டையாக பயங்கரவாதிகள் என வரையறை செய்வது தந்திரமானது.

இங்கு அரசாங்கங்கள் செய்யும் பயங்கரவாதச் செயல்கள் கவனிக்கப்படுவதில்லை. தன்னுடைய மக்கள் மீதே குண்டு வீசும் அரசாங்கத்தை பயங்கரவாத அரசாக யாரும் பார்ப்பதில்லை. ஆனால் அதனை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தும் அரசாங்கம் அல்லாத அமைப்புகள் மட்டுமே பயங்கரவாதிகளாக பார்க்கப்படுகின்றனர். தமிழ்ச்செல்வன் போன்றோரின் படுகொலைகள் இராணுவ நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன. பொன்சேகா என்ற இராணுவத் தலைமையின் மீது நடத்தப்படும் தாக்குதல் பயங்கரவாதமாக பார்க்கப்படுகிறது. பயங்கரவாதம் என்று சொல்லப்பட்டால் இரண்டையும் ஒரே தராசில் எடைபோட வேண்டும்.

ஈழப்போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அசுர வளர்ச்சி பெற்றதே ஈழப்போராட்டம் அடைந்த முக்கிய பின்னடைவுகளுக்கு காரணமாக நான் கருதுகிறேன். 2002ல் புலிகள் இராணுவத்தைக் காட்டிலும் பலமாக இருந்தனர். ஆனையிறவை கைப்பற்றி யாழ்ப்பாணத்தை நோக்கி செல்லக்கூடிய சூழ்நிலையில் தான் அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தகர்க்கப்பட்டன. உலகில் இருந்த பல அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து அப்பொழுது கேள்விகள் எழுப்பபட்டன. அந்த அமைப்புகளின் விடுதலை நோக்கங்கள் புறந்தள்ளப்பட்டு அனைத்து ஆயுதப் போராட்ட குழுக்களையும் பயங்கரவாத அமைப்புகளாக பார்க்கும் போக்கு தோன்றியது.

இந்த மாற்றத்தை சிறீலங்கா போன்ற நாடுகள் பயன்படுத்துக் கொண்டன. தேசிய விடுதலையை முன்னெடுத்த அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக பிற நாடுகளைப் பார்க்க வைத்தன. அந்த வளையத்தில் இருந்து புலிகள் போன்ற அமைப்புகளால் வெளியேற முடியாத சூழ்நிலை உள்ளது. இன்று அனைத்து உலக நாடுகளும் சிறீலங்காவிற்கு உதவி செய்து வருகின்றன. புலிகளின் தற்போதைய பின்னடைவிற்கு இதுவே காரணம்.

அமெரிக்காவின் அடுத்த வெளியூறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படும் ஹில்லரி க்ளிண்டன் பயங்கரவாதம் குறித்து பின்வருமாறு கடந்த வருடம் கூறினார்.

Well, I believe that terrorism is a tool that has been utilized throughout history to achieve certain objectives. Some have been ideological, others territorial. There are personality- driven terroristic objectives. The bottom line is, you can’t lump all terrorists together. And I think we’ve got to do a much better job of clarifying what are the motivations, the raisons d’être of terrorists. I mean, what the Tamil Tigers are fighting for in Sri Lanka, or the Basque separatists in Spain, or the insurgents in al-Anbar province may only be connected by tactics. They may not share all that much in terms of what is the philosophical or ideological underpinning. And I think one of our mistakes has been painting with such a broad brush, which has not been particularly helpful in understanding what it is we were up against when it comes to those who pursue terrorism for whichever ends they’re seeking.

பயங்கரவாதத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டிய தேவையை ஹில்லரி முன்வைத்தார்.

*******

மும்பையில் நடைபெற்றிருக்கும் தாக்குதலை மையப்படுத்தி தற்பொழுது தமிழகத்தில் ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான உணர்வுகளை அடக்கும் ஒரு முயற்சி நடக்கக்கூடும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முழுமையாக நிராகரிப்பதும், அப்பாவி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாக கண்டிப்பதும் நம்முடைய தார்மீக கடமையாகும். அதே நேரத்தில் சிறீலங்கா அரசாங்கம் தொடுத்து வரும் அரசு பயங்கரவாதத்தை எதிர்ப்பதும், அந்த அரசு பயங்கரவாதத்திற்கு எதிரான ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பதும் அவசியமாகிறது.

பயங்கரவாதத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் இருக்கும் வேறுபாட்டினை நாம் தமிழக/இந்திய மக்களிடம் முன்வைக்க வேண்டும்.

இந்துத்துவம் என்றால் ————என்று பொருள்!


1963ல் விவேகானந்தர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முகமாய், கன்னியாகுமரியில் காலம் காலமாய் மீனவர்கள் பயன்படுத்தி வந்த பாறையை மண்டபமாக்க முயற்சித்தார்கள். உள்ளூர் மீனவர்கள் அதை எதிர்த்ததால் அன்றைய காங்கிரசு அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. உடனே இதை அகில இந்தியப் பிரச்சினையாக ஆக்கினர். 235 எம் பிக்களிடம் இதை தேசியத்தலைவருக்கான மண்டபம் எனும் போர்வையில் கையெழுத்து வாங்கி, பார்லிமெண்டில் பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆர் வெங்கட்டராமன் போன்ற இந்துத்துவ ஆதரவு காங்கிரசு தலைவர்கள் மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, இம்மண்டப வேலைக்கு அனுமதி வாங்கித் தந்தனர்.

ஆர் எஸ் எஸ் தரும் விவேகாநந்தர் மண்டபம் சாட்சியம்:

****

ஓர் உள்ளூர் கமிட்டியே, இந்நினைவு மண்டபத்தைக் கட்ட முயற்சி எடுத்தது என்பது போன்ற தோற்றத்தை, நீல கண்டனின் கட்டுரை ஏற்படுத்த முயல்வதால் அதன் முழு வரலாறையும் சொல்லி விடுவது இப்போதைக்கு நல்லது.

1948ல் காந்தி ஆர் எஸ் எஸ் காரரால் கொல்லப்பட்டார். உடனடியாக அவ்வமைப்பு இந்தியாவெங்கும் தடை செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பிலும் ஆர் எஸ் எஸ் வெறுக்கப்பட்டது. பல இடங்களில் காந்தி கொல்லப்பட்ட அன்று அதன் அலுவலகங்கள் மக்களால் தாக்கப்பட்டன. திருப்பூர் நகரில் அதன் அலுவலகம் நொறுக்கப்பட்டு அதன் உறுப்பினர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள் என்று திருப்பூர் தியாகி ராமசாமி தனது சுய சரிதையில் தெரிவித்துள்ளார். (இவர் 1970 வரை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரசிலும் இருந்த சுதந்திரப் போர் தியாகி ஆவார்). தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் வேர் பிடித்து இருந்ததாலும், காந்தி கொலையாலும் ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தில் 1950களில் நுழையவே முடியவில்லை.இதனை ‘தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து எழுச்சியின் கதை ‘ எனும் ஆர் எஸ் எஸ் வெளியீட்டில் அவர்களே ‘1980 இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது ‘, என ஒப்புக் கொள்கிறார்கள்.

1949ல் ஆர் எஸ் எஸ் சின் மீதான தடை நீக்கப்பட்டது. அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விசயம் என்ன என்றால் ‘சங்கப் பயிற்சிக்குழுக்கள் மீண்டும் பல இடங்களில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை விரிவடைய முடியவில்லை. பயிற்சிக்குழுக்கள் பரவவில்லை என்றாலும் சங்க சுயம் சேவக்குகள் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.அவை தேசிய நடவடிக்கைகளை முன்னேற வைத்தன.அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, நமது தாய் நாட்டின் தெற்கு முனைக்கு அப்பால் உள்ள கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையை நிர்மாணித்ததாகும்.சுவாமி விவேகானந்தர் அலைந்து திரியும் ஒரு சன்னியாசி என்கிற முறையில் கன்னியாகுமரி கோவிலுக்கு வந்தார். பிரார்த்தனை செய்துவிட்டு கடலில் நீந்திப் போய் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு நடுவில் எழுந்து நிற்கும் ஒரு பெரும்பாறையில் அமர்ந்தார். 1892 டிசம்பர் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தப்பாறை விவேகானந்தர் பாறை எனப் பெயரிடப் பட்டது. சுவாமிஜி பிறந்த நூற்றாண்டில் அதாவது 1963ல் அந்தப் பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டுவது என்னும் யோசனை ஆர் எஸ் எஸ் இன் பிராந்திய பிரச்சாரகர் சிறீ தாதாஜி திதோல்கருக்குத் தோன்றியது. சங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டி என்று ஒரு தனி அமைப்பு அந்த ஆண்டு நிறுவப்பட்டது ‘.

ஆக, அந்நினைவுச் சின்னம் அவ்வூர் மக்களின் கோரிக்கையே அல்ல. அது ஆர் எஸ் எஸ் ஆல் தீட்டப்பட்ட திட்டம் என்பதை அவர்கள் வெளியிட்ட நூலே தெளிவாகச் சொல்லி விட்டது. நினைவு மண்டபம் பற்றிய யோசனை சொன்னவரும் கன்னியாகுமரி ஆள் மாதிரி இல்லை. பேரை வைத்துப் பார்க்கையில் மராட்டியர் மாதிரித் தெரிகிறது. பாறைக்கு புதியதாக விவேகானந்தர் பெயரைச் சூட்டியதும் ஆர் எஸ் எஸ் தான்.

ஏற்கெனவே இம்மண்ணில் பார்ப்பனீய எதிர்ப்பு நிலவியதால் (இவ்வெதிர்ப்பையும் அந்நூலே ஒப்புக்கொண்டுள்ளது) அவர்கள் பார்ப்பனர் அல்லாதாரான விவேகாநந்தரை முன்னிறுத்தி நுழைய முயன்றனர். அவர் ஏற்கெனவே, சனாதன தர்மத்துள் பார்ப்பனர் அல்லாதாரையும் உள்ளிழுக்கும் வகையில் தர்மத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தவர்தாம்.

குமரி மாவட்டத்தில் இந்து நாடார்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவ நாடார்கள் சிறுபான்மையாகவும், மீனவர்கள் முழுக்க கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். இந்து நாடாருக்கும், கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை ஊதிப்பெருக்கிக் குளிர்காய நினைத்த சங் பரிவார், அதற்கு உகந்த இடமாய் குமரியைத் தேர்வு செய்தது. சமீப நூற்றாண்டுகளில்தான் குமரியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்துள்ளது. எளிதில் அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராய் இந்து மக்களை அணிதிரட்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தது.

இந்தக்காரணங்களால் விவேகானந்தர் பாறை விசயத்தைக் கையில் எடுத்த ஆர் எஸ் எஸ், அதற்கு முன்பிருந்த பாறையின் நிலைமையை வெளிப்படையாய் பேசுவதைத் தவிர்த்தது. குமரி முனையை அங்குள்ள மீனவர்கள் மீன்பிடித்துறைமுகமாய்ப் பல நூற்றாண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அங்கிருந்து வெகு அருகாமையிலுள்ள பாறையை மீன்பிடி வலைகளைக் காயவைக்கவும், கடலுக்குள் சென்று விட்டு வரும் மீனவர்கள் உணவருந்தி ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர். ஆண்டுக்கொருமுறை நடக்கும் சிலுவை வைத்து வழிபடும் ‘குருந்தட்டி ‘ வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். இருந்தும் அப்பாறையை அராஜகமாகக் கைப்பற்றி விவேகானந்தர் மண்டபம் அமைக்கும் பணியில் ஆர் எஸ் எஸ் இறங்கியது. ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் சொல்கிறது –

‘ஆர் எஸ் எஸ் இன் ஓய்வு பெற்ற பொதுச்செயலாளர் மானனீய ஏக்நாத்ஜி ராணடேயிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெரிதும் சிறிதுமாகப் பல பொதுக்கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இந்தக் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் இந்து தேசியக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. சென்னை கடற்கரையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. சுவாமி சின்மயானந்தாவோடு, குருஜியும் அக்கூட்டத்தில் பேசினார். தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் அந்தப் பாறையில் ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்தார். அதில் 1892 இல் சுவாமிஜி அங்கு தியானம் செய்தார் என்ற அறிவிப்பு இருந்தது.அது, உள்ளூர் கிறித்தவ சபையின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கிறித்தவ மீனவர்களால் உடைத்து அழிக்கப்பட்டது. அதோடு அங்கு ஒரு சிலுவையும் நிறுவப்பட்டது. பல தலையீடுகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுவாமிஜிக்கு ஒரு மாபெரும் நினைவகம் எழுப்புவதற்காக விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டியிடம் அந்தப் பாறையை இறுதியாக அரசாங்கம் ஒப்படைத்தது. நாடு முழுவதிலும் உள்ள முழு சங்கமும் இந்த வேலையில் ஈடுபட்டு, மாபெரும் நினைவகம் எழுப்பப்பட்டது. அது இப்பொழுது ஒரு பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது ‘.

தென் கோடியில் உள்ள அந்தப் பாறை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெவ்வேறு பெயர்களில் முக்கால் வாசி கன்னியாகுமரி ஊரே ஆர் எஸ் எஸ் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலமும், டெல்லியை ஆண்ட லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோர் நேரடியாகவும், காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகவும் உதவி புரிந்தனர். எதிர்த்த மீனவர்களை கேரளாவில் இருந்து இறக்கிய ஆர் எஸ் எஸ் காரர்களும் தமிழ்நாடு போலீசும் கவனித்துக் கொண்டனர்.

ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் ‘இந்த நினைவகம் செப். 2, 1970இல் புண்ணியாசனை செய்து வைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து எழுச்சிக்கான விதைகளாஇத் தூவிய ஒரு முக்கியத் திட்டமாக அமைந்தது. ஏக்நாத் ராணடே தலைமையில் விவேகானந்தா கேந்திரம் பரிணமிப்பதற்கு விவேகானந்தா பாறை நினைவகம் நிறுவப்பட்டது அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக தெற்கில் கிறித்தவ மதத்தின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதற்குக்கூட இந்தக் கேந்திரம் பங்களித்துள்ளது ‘ என்று எல்லா விசயங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. இந்து எழுச்சி என இவர்கள் குறிப்பிடுவது மண்டைக்காட்டில் கலவரம் செய்ததைத்தான்.

கடலும், கடலைச்சார்ந்த இடமும் யாருக்கு சொந்தம் ? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்டு அனுபவித்துக் கொண்டு வாழும் மீனவர்களுக்குத்தானே அவை சொந்தமாகும் ? ஓரிரு நாளில் விவேகானந்தர் சென்று அங்கு தங்கி இருந்து விட்ட ஒரே காரணத்துக்காக அப்பாறையை, அம்மக்களிடம் இருந்து கைப்பற்றி விடுவது என்ன நாகரீகம் எனத் தெரியவில்லை ?

உடல் உழைப்பை உதாசீனம் செய்வது/இழிவுபடுத்துவது என்பது காலம் காலமாய் வைதீக சித்தாந்தத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தன்மையையே இச்செயலிலும் காண முடிகிறது. உடலுழைக்கும் மீனவரின் சொத்தை, அவர்களின் அன்றாட செயல்பாட்டில் இருந்து பறித்து மதவெறிப் பிரச்சார நூல்களை விற்கும் இடமாக்கி இருக்கின்றனர்.

கே என் பணிக்கர், தனது நூலில், விவேகானந்தர் நினைவு மண்டபம் குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.

1963ல் விவேகானந்தர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முகமாய், கன்னியாகுமரியில் காலம் காலமாய் மீனவர்கள் பயன்படுத்தி வந்த பாறையை மண்டபமாக்க முயற்சித்தார்கள். உள்ளூர் மீனவர்கள் அதை எதிர்த்ததால் அன்றைய காங்கிரசு அரசு அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. உடனே இதை அகில இந்தியப் பிரச்சினையாக ஆக்கினர். 235 எம் பிக்களிடம் இதை தேசியத்தலைவருக்கான மண்டபம் எனும் போர்வையில் கையெழுத்து வாங்கி, பார்லிமெண்டில் பிரச்சினை எழுப்பினர். அப்போது ஆர் வெங்கட்டராமன் போன்ற இந்துத்துவ ஆதரவு காங்கிரசு தலைவர்கள் மாநில அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து, இம்மண்டப வேலைக்கு அனுமதி வாங்கித் தந்தனர்.

ஆர் எஸ் எஸ் தரும் விவேகாநந்தர் மண்டபம் சாட்சியம்:

****

ஓர் உள்ளூர் கமிட்டியே, இந்நினைவு மண்டபத்தைக் கட்ட முயற்சி எடுத்தது என்பது போன்ற தோற்றத்தை, நீல கண்டனின் கட்டுரை ஏற்படுத்த முயல்வதால் அதன் முழு வரலாறையும் சொல்லி விடுவது இப்போதைக்கு நல்லது.

1948ல் காந்தி ஆர் எஸ் எஸ் காரரால் கொல்லப்பட்டார். உடனடியாக அவ்வமைப்பு இந்தியாவெங்கும் தடை செய்யப்பட்டது.

அனைத்துத் தரப்பிலும் ஆர் எஸ் எஸ் வெறுக்கப்பட்டது. பல இடங்களில் காந்தி கொல்லப்பட்ட அன்று அதன் அலுவலகங்கள் மக்களால் தாக்கப்பட்டன. திருப்பூர் நகரில் அதன் அலுவலகம் நொறுக்கப்பட்டு அதன் உறுப்பினர்களும் தாக்குதலுக்குள்ளானார்கள் என்று திருப்பூர் தியாகி ராமசாமி தனது சுய சரிதையில் தெரிவித்துள்ளார். (இவர் 1970 வரை கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் காங்கிரசிலும் இருந்த சுதந்திரப் போர் தியாகி ஆவார்). தமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் வேர் பிடித்து இருந்ததாலும், காந்தி கொலையாலும் ஆர் எஸ் எஸ் ஆல் தமிழகத்தில் 1950களில் நுழையவே முடியவில்லை.இதனை ‘தமிழ் நாட்டில் ஆர் எஸ் எஸ் மற்றும் இந்து எழுச்சியின் கதை ‘ எனும் ஆர் எஸ் எஸ் வெளியீட்டில் அவர்களே ‘1980 இன் ஆரம்பம் வரை மிகவும் பலவீனமான மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தது ‘, என ஒப்புக் கொள்கிறார்கள்.

1949ல் ஆர் எஸ் எஸ் சின் மீதான தடை நீக்கப்பட்டது. அதே நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விசயம் என்ன என்றால் ‘சங்கப் பயிற்சிக்குழுக்கள் மீண்டும் பல இடங்களில் தொடங்கப்பட்டன. ஆனால் அவை விரிவடைய முடியவில்லை. பயிற்சிக்குழுக்கள் பரவவில்லை என்றாலும் சங்க சுயம் சேவக்குகள் பிற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.அவை தேசிய நடவடிக்கைகளை முன்னேற வைத்தன.அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று, நமது தாய் நாட்டின் தெற்கு முனைக்கு அப்பால் உள்ள கடலில் விவேகானந்தர் நினைவுப்பாறையை நிர்மாணித்ததாகும்.சுவாமி விவேகானந்தர் அலைந்து திரியும் ஒரு சன்னியாசி என்கிற முறையில் கன்னியாகுமரி கோவிலுக்கு வந்தார். பிரார்த்தனை செய்துவிட்டு கடலில் நீந்திப் போய் கோவிலுக்கு முன்பு, கடலுக்கு நடுவில் எழுந்து நிற்கும் ஒரு பெரும்பாறையில் அமர்ந்தார். 1892 டிசம்பர் 25,26,27 ஆகிய மூன்று நாட்கள் தியானம் செய்தார். இந்தப்பாறை விவேகானந்தர் பாறை எனப் பெயரிடப் பட்டது. சுவாமிஜி பிறந்த நூற்றாண்டில் அதாவது 1963ல் அந்தப் பாறையின் மீது அவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டுவது என்னும் யோசனை ஆர் எஸ் எஸ் இன் பிராந்திய பிரச்சாரகர் சிறீ தாதாஜி திதோல்கருக்குத் தோன்றியது. சங்கம் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டது. விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டி என்று ஒரு தனி அமைப்பு அந்த ஆண்டு நிறுவப்பட்டது ‘.

ஆக, அந்நினைவுச் சின்னம் அவ்வூர் மக்களின் கோரிக்கையே அல்ல. அது ஆர் எஸ் எஸ் ஆல் தீட்டப்பட்ட திட்டம் என்பதை அவர்கள் வெளியிட்ட நூலே தெளிவாகச் சொல்லி விட்டது. நினைவு மண்டபம் பற்றிய யோசனை சொன்னவரும் கன்னியாகுமரி ஆள் மாதிரி இல்லை. பேரை வைத்துப் பார்க்கையில் மராட்டியர் மாதிரித் தெரிகிறது. பாறைக்கு புதியதாக விவேகானந்தர் பெயரைச் சூட்டியதும் ஆர் எஸ் எஸ் தான்.

ஏற்கெனவே இம்மண்ணில் பார்ப்பனீய எதிர்ப்பு நிலவியதால் (இவ்வெதிர்ப்பையும் அந்நூலே ஒப்புக்கொண்டுள்ளது) அவர்கள் பார்ப்பனர் அல்லாதாரான விவேகாநந்தரை முன்னிறுத்தி நுழைய முயன்றனர். அவர் ஏற்கெனவே, சனாதன தர்மத்துள் பார்ப்பனர் அல்லாதாரையும் உள்ளிழுக்கும் வகையில் தர்மத்தை சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தவர்தாம்.

குமரி மாவட்டத்தில் இந்து நாடார்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவ நாடார்கள் சிறுபான்மையாகவும், மீனவர்கள் முழுக்க கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர். இந்து நாடாருக்கும், கிறிஸ்தவ மீனவர்களுக்கும் இடையிலான வேற்றுமைகளை ஊதிப்பெருக்கிக் குளிர்காய நினைத்த சங் பரிவார், அதற்கு உகந்த இடமாய் குமரியைத் தேர்வு செய்தது. சமீப நூற்றாண்டுகளில்தான் குமரியில் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்துள்ளது. எளிதில் அங்கு கிறிஸ்தவர்களுக்கு எதிராய் இந்து மக்களை அணிதிரட்டிவிட முடியும் என்று கணக்குப் போட்டிருந்தது.

இந்தக்காரணங்களால் விவேகானந்தர் பாறை விசயத்தைக் கையில் எடுத்த ஆர் எஸ் எஸ், அதற்கு முன்பிருந்த பாறையின் நிலைமையை வெளிப்படையாய் பேசுவதைத் தவிர்த்தது. குமரி முனையை அங்குள்ள மீனவர்கள் மீன்பிடித்துறைமுகமாய்ப் பல நூற்றாண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். அங்கிருந்து வெகு அருகாமையிலுள்ள பாறையை மீன்பிடி வலைகளைக் காயவைக்கவும், கடலுக்குள் சென்று விட்டு வரும் மீனவர்கள் உணவருந்தி ஓய்வெடுக்கவும் பயன்படுத்தி வந்தனர். ஆண்டுக்கொருமுறை நடக்கும் சிலுவை வைத்து வழிபடும் ‘குருந்தட்டி ‘ வழிபாட்டை நடத்தி வந்துள்ளனர். இருந்தும் அப்பாறையை அராஜகமாகக் கைப்பற்றி விவேகானந்தர் மண்டபம் அமைக்கும் பணியில் ஆர் எஸ் எஸ் இறங்கியது. ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் சொல்கிறது –

‘ஆர் எஸ் எஸ் இன் ஓய்வு பெற்ற பொதுச்செயலாளர் மானனீய ஏக்நாத்ஜி ராணடேயிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பெரிதும் சிறிதுமாகப் பல பொதுக்கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டன. இந்தக் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் இந்து தேசியக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. சென்னை கடற்கரையில் ஒரு பெரிய பொதுக்கூட்டம் நடந்தது. சுவாமி சின்மயானந்தாவோடு, குருஜியும் அக்கூட்டத்தில் பேசினார். தமிழ்நாடு சட்ட மேலவைத் தலைவர் ம.பொ.சிவஞானம் அந்தப் பாறையில் ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்தார். அதில் 1892 இல் சுவாமிஜி அங்கு தியானம் செய்தார் என்ற அறிவிப்பு இருந்தது.அது, உள்ளூர் கிறித்தவ சபையின் தூண்டுதலின் பேரில் உள்ளூர் கிறித்தவ மீனவர்களால் உடைத்து அழிக்கப்பட்டது. அதோடு அங்கு ஒரு சிலுவையும் நிறுவப்பட்டது. பல தலையீடுகள், பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, சுவாமிஜிக்கு ஒரு மாபெரும் நினைவகம் எழுப்புவதற்காக விவேகானந்தா பாறை நினைவகக் கமிட்டியிடம் அந்தப் பாறையை இறுதியாக அரசாங்கம் ஒப்படைத்தது. நாடு முழுவதிலும் உள்ள முழு சங்கமும் இந்த வேலையில் ஈடுபட்டு, மாபெரும் நினைவகம் எழுப்பப்பட்டது. அது இப்பொழுது ஒரு பெருமைக்குரிய, மதிப்பிற்குரிய சுற்றுலா ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது ‘.

தென் கோடியில் உள்ள அந்தப் பாறை மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெவ்வேறு பெயர்களில் முக்கால் வாசி கன்னியாகுமரி ஊரே ஆர் எஸ் எஸ் ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தை ஆண்ட பக்தவச்சலமும், டெல்லியை ஆண்ட லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி போன்றோர் நேரடியாகவும், காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகவும் உதவி புரிந்தனர். எதிர்த்த மீனவர்களை கேரளாவில் இருந்து இறக்கிய ஆர் எஸ் எஸ் காரர்களும் தமிழ்நாடு போலீசும் கவனித்துக் கொண்டனர்.

ஆர் எஸ் எஸ் இன் அதே நூல் ‘இந்த நினைவகம் செப். 2, 1970இல் புண்ணியாசனை செய்து வைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து எழுச்சிக்கான விதைகளாஇத் தூவிய ஒரு முக்கியத் திட்டமாக அமைந்தது. ஏக்நாத் ராணடே தலைமையில் விவேகானந்தா கேந்திரம் பரிணமிப்பதற்கு விவேகானந்தா பாறை நினைவகம் நிறுவப்பட்டது அடித்தளமாக அமைந்தது. குறிப்பாக தெற்கில் கிறித்தவ மதத்தின் விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்புகளை எதிர்ப்பதற்குக்கூட இந்தக் கேந்திரம் பங்களித்துள்ளது ‘ என்று எல்லா விசயங்களையும் புட்டுப் புட்டு வைத்துவிட்டது. இந்து எழுச்சி என இவர்கள் குறிப்பிடுவது மண்டைக்காட்டில் கலவரம் செய்ததைத்தான்.

கடலும், கடலைச்சார்ந்த இடமும் யாருக்கு சொந்தம் ? நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்டு அனுபவித்துக் கொண்டு வாழும் மீனவர்களுக்குத்தானே அவை சொந்தமாகும் ? ஓரிரு நாளில் விவேகானந்தர் சென்று அங்கு தங்கி இருந்து விட்ட ஒரே காரணத்துக்காக அப்பாறையை, அம்மக்களிடம் இருந்து கைப்பற்றி விடுவது என்ன நாகரீகம் எனத் தெரியவில்லை ?

உடல் உழைப்பை உதாசீனம் செய்வது/இழிவுபடுத்துவது என்பது காலம் காலமாய் வைதீக சித்தாந்தத்தால் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அத்தகைய தன்மையையே இச்செயலிலும் காண முடிகிறது. உடலுழைக்கும் மீனவரின் சொத்தை, அவர்களின் அன்றாட செயல்பாட்டில் இருந்து பறித்து மதவெறிப் பிரச்சார நூல்களை விற்கும் இடமாக்கி இருக்கின்றனர்.

***********************

#2)

உண்மையைத் தேடியலைந்தபோது

புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ,குழந்தைத் திருமணம், தீண்டாமையும் ஆன்மீகமும்

கற்பகவிநாயகம்

புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும்

*****************************************

“புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது” என்றும், “புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது. ஈச்வரன் கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்ட கன்னி மேரி மாதாகோவிலின் படிக்கட்டுகளாக ஹிந்துக்கள் வணங்கிய விக்கிரகங்கள் பயன்படுத்தப்பட்டன!” ( அந்த நான்கு பேருக்கும் நன்றி! – மலர்மன்னன் மார்ச்சு 24,2006) என்றும் மலர் மன்னன் சொல்கிறார்.

இவர் குறிப்பிடுவது போல் வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப்பட்டது அந்நாட்குறிப்பில் உள்ளது. ஆனால் அதை இடித்துத்தான் மாதா கோவில் கட்டப்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை.

மலர் மன்னன் சொல்வதைப் போன்றே இந்து முன்னணியும் தனது துண்டுப் பிரசுரம் ஒன்றில் “பாண்டிச்சேரி புனித ஜென்மாக்கினி மாதா கோவில், வேதபுரீச்சுரர் ஆலயத்தை இடித்து விட்டு அதன் மீது கட்டப்பட்டது” என்றும், “1748ல் பிரெஞ்சு கவர்னராக பாண்டிச்சேரியில் இருந்த டியூப்ளேதான் இவ்வாறு கட்டினான்” என்றும் ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை ஆதாரம் காட்டி நீட்டி முழங்குகிறது.

உண்மையில் புதுவையில் அப்போது நடந்தது என்ன என்பதை ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் மூலமே அறிய முயல்வோம்.

1748 இல் இடிக்கப்பட்ட வேதபுரீசுவரர் கோவில் அருகில் ஏற்கெனவே கிறிஸ்தவ ஆலயம் இருந்துள்ளது என்பதனை, ஆனந்த ரங்கம் பிள்ளை, கோவில் இடிக்கப்படுவதற்கு முந்தைய ஆண்டில், 1747 ஆம் ஆண்டின் புது வருஷ ஆசி சொல்ல, சம்பா கோவிலுக்கு (கிறித்துவ கோவில்) போனதன் மூலம் நிரூபணமாகிறது.

ஆகவே, ஈச்சுவரன் கோவிலை இடித்துத்தான் கிறித்துவ ஆலயம் எழுப்பப்பட்டது என்பது உண்மை அல்ல.

துயூப்ளே, மத வெறியுடன் ஈச்சுவரன் கோவிலை இடித்தான் எனச் சொல்லவும் ஆதாரம் இல்லை. ஆனால் அக்கோவிலை அப்புறப்படுத்த சில பாதிரிகள் முனைந்தனர் 1747 ஆம் ஆண்டில். அப்போது துயூப்ளேயிடம் பெரும் செல்வாக்கோடு இருந்த பிள்ளையின் மூலம் சிபாரிசு பெற்றுக்கொண்டு வேதபுரீசுவரர் கோவிலை இடிக்க, காரைக்காலை சேர்ந்த கிறித்துவ மதகுரு முனைந்திருக்கிறார். அதற்கு தூதுவராய் வந்த ஆளின் பெயர் – அன்னபூரணய்யர்.

1747 அக்டய்பர் 8ஆம் தேதி அன்னபூரணய்யர், காரைக்கால் கிறித்துவ மதக்குருவின் தூதராக வந்து வேதபுரீச்வரர் கோவிலை இடித்துப் போடச் சொல்லி, ஆனந்த ரங்கம் பிள்ளையிடம் சிபாரிசு செய்ததை அன்னாரின் டைரி பதிவு செய்துள்ளது. ஆனால், அச்செயலுக்கு பிள்ளை ஒப்பவில்லை.

மாறாக அதற்கு முந்தைய ஆண்டு 1746 செப்டம்பர் 22 ஆம் தேதி, “மக்கள், வேதபுரீஸ்வரன் கோவில் மதில் கட்டுவதற்கு உத்தாரம் கேட்டார்கள். அந்த மதில் கட்டுகிறதற்கு மாத்திரம் கட்டளையிட்டால், வெகு தூரம் கீர்த்தியாய் இருக்குமென்று பின்னையும் தோத்திரமான உபசாரமான வார்த்தைகளாய்ச் சொல்லிக் கேட்டவிடத்திலே நல்லது அப்படியே உத்தாரங் கொடுக்கிறோம் என்கிறதாய்ச் சொல்லிக் கொண்டே நடந்து கணக்கு எழுதுகிற அறையிலே போய் விட்டார்கள்” துயூப்ளே என்று பிள்ளையின் சொஸ்த லிகிதக் குறிப்பு சொல்கிறது.

ஜென்மராக்கினி மாதா கோவிலை புதுவை மக்கள் சம்பா கோவில் என்று அழைத்தல் வழக்கம். இதற்கும் இந்து முன்னணி “அது ஆதியிலே சம்பாலீசுவரர் கோவில்தான்” எனக் கரடி விட்டது. “சாம்பவுலோ” என போர்த்துகீசிய பாதிரிகளை அழைக்கும் சொல்லே மருவி “சம்பா” ஆனது என்பது உண்மை.

(இதே மாதிரி, சென்னையை அடுத்த பரங்கி மலையை ‘பிருங்கி முனிவர்’ மலை எனக் கயிறு திரித்தனர். பரங்கி என்பது ஐரோப்பியரைக் குறிக்கும் சொல் என்பதும், 18ஆம் நூற்றாண்டு முதல் அம்மலையைச் சார்ந்த இடங்களில் ஐரோப்பிய ராணுவம் பாளையம் அடித்திருந்தது என்பதையும் மத வெறியில் மக்கள் யோசிக்கவா போகின்றனர்? )

சம்பா கோவிலை 1692ஆம் ஆண்டில் பிரான்சு தேசத்தின் மன்னன் உதவியுடன் கட்டியுள்ளனர், புதுவை கிறிஸ்தவர்கள். அடுத்த ஆண்டே டச்சுப் படையெடுப்பில், இக்கோவில் இடிக்கப்பட்டது. அதே இடத்தில் டச்சுக்காரர்களின் சர்ச் கட்டப்பட்டது. 1761 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படையெடுப்பில் மீண்டும் அது இடிக்கப்பட்டது. 1791ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டதே இப்போதுள்ள சர்ச்.

1746 ஆம் ஆண்டு, வேதபுரீசுவரருக்கு மதில் கட்ட உத்தாரம் கொடுத்த துயூப்ளே, ஏன் இரண்டே ஆண்டுகளில் இடிக்கச் சொன்னான்?

நாட்குறிப்புகளை வாசிக்கையில் 1746 க்கும், 1748க்கும் உள்ள வேறுபாடு புலனாகின்றது. ஆம். 1748 ஆகஸ்ட் மாதவாக்கில், பிரிட்டிஷ் படைகள் புதுச்சேரியைத் தாக்குவதும், பதிலுக்கு பிரெஞ்சுப் படையின் தாக்குதலும் விலாவாரியாகப் பதிவாகியுள்ளது.

அப்போரில் பீரங்கித் தாக்குதல் இருபக்கத்திலும் நடந்துள்ளது. பிரிட்டிசாரின் பீரங்கிக் குண்டு, தீக்குடுவை போன்றவை புதுச்சேரியுள் குறி தவறாது வீழ்ந்து பலர் கை கால் சிதறி மாண்ட செய்திகளும், பிராஞ்சுப் படையின் குண்டுகள் குறி தவறிப் போய் வீழ்வதும் பிள்ளையின் டைரியில் சொல்லப்பட்டுள்ளன.

இப்போரில், குறி பார்த்துக் குண்டு போட பிரிட்டிஷாருக்கு வேதபுரீச்வரர் கோவில் கோபுரம் நன்கு உதவியுள்ளது.

தூரத்தில் இருந்தே பிரெஞ்சுக் கோட்டையைக் கண்டுபிடிக்கும் வகையில் கோபுரம் இருந்ததால் அது பிரிட்டிஷ் படைக்கு உதவியாய் இருந்தது.

பிரிட்டிஷ் படைகளின் பீரங்கிக் குண்டுகளில் இருந்து புதுச்சேரிக் கோட்டையைக் காக்கவே, கோவில் இடிக்கப்பட்டுள்ளது.

இடிக்கப்பட்டது, அப்போரின்போது வேதபுரீசுவரர் கோவில் மட்டும் இல்லை. கிறித்துவக் கோவில் ஒன்றின் மதிலும் இடிக்கப்பட்டது என்பதனை 1748 ஆகஸ்ட் 25ஆம் தேதி பிள்ளையின் டைரி குறிப்பிடுகிறது.

“இன்றைய தினம் மண்வெட்டி கோடாலி வெட்டுக்கத்தி முதலானதுகளெல்லாம் கொடுத்தனுப்பி அரியாங்குப்பத்துப் பாதிரி கோவில் சமீபத்திலே இருக்கிற மரங்களை எல்லாம் வெட்டித் தள்ளிப் போடச்சொல்லியும் கோவில் மதிலை இடிக்கச் சொல்லியும் கோவிலிலே நானூறு சிப்பாய்களைக் கொண்டு போய் வைக்க சொல்லி உத்தாரம்” என்கிறது டைரி.

செப்டம்பர் 8, 1748 ல் வேதபுரீசுவரர் கோவில் இடிக்கப்பட்டதை எண்ணி மிகவும் வருந்தி பிள்ளை எழுதி இருக்கிறார். அவ்வாறு அவர் வருத்தப்பட்டு எழுதியதிய செய்திகளும், கோவில் இடிக்கப்பட்டதற்கு எவ்வித மத துவேசக் காரணத்தையும் நமக்கு உணர்த்தவில்லை.

(இங்கிலீஷ் படை) “கோவிலைப் பிடித்தால் நூறு பேர் அன்பது பேர் சாவார்கள் யெல்லாரும் வூரைவிட்டுப் போவார்களென்கிற பயமொன்று நாளது வரைக்கும் இருந்ததுதான். போகாமல் மற்றுப்போய் கொளுத்தும்போது இப்படி செய்கிறோமெ யென்னமோ வென்கிற அனுமானத்தினாலே சொல்தாதையும் (soldiers ??) சிப்பாய்களையும் குதிரைக்காரரையும் யேர்க்கனவே கொண்டு போய் வைத்துக் கொண்டு நடத்தினான்” என்று அக்கோவில் இடிப்பின் சூழலை ஆனந்த ரங்கர் கூறுகிறார்.

போரின்போது கோவிலை இடிக்க யாரெல்லாம் ஆதரவாய் இருந்தார்கள் என்பதையும் அவரின் புலம்பலில் இருந்தே கண்டறிய முடியும்.

“ஆறுமுகத்தா முதலியுங் கொலுத்துக்கார வெங்கடாசலம் தம்பி லச்சிகானும், இரண்டொரு பேரும் அன்னபூரணய்யருக்கு சாவடி துபாசித் தனம் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்து அப்பாலே கட்டுகிறதற்கு நாங்கள் வூராருக்கு சம்மதி பண்ணிப் போடுகிறோமென்று வந்து சொன்னவர்கள் உங்களுடனே கூட இருக்கிறார்கள். இப்போ இரண்டு மாசமாய் துரை பெண்சாதியண்டைக்குப் போய் பெரிய துபாசித்தனம், தம்பிச்சா முதலி மகன் மலையப்ப முதலிக்கும், தனக்கு சாவடி துபாசித்தனமும் கொடுத்தால் வேதபுரீஸ்வரன் கோயிலை இடித்துப் போடுகிறோமென்று பேசவில்லையா?

இதுவுமல்லாமல் சம்பாவுலு கோவிலு பாதிரிகளண்டைக்கு அன்னபூரணய்யன் போய் ஊராரையெல்லாம் சம்மதி பண்ணினேன். நீங்கள் தனக்கும், மலையப்ப முதலிக்கும் உத்தியோகம் கொடுத்தால் அந்தப்படிக்கு ஈஸ்வரன் கோயிலை இடித்துக் கட்டிக் கொள்ள பண்ணிப் போடுகிறோமென்று பேசவில்லையா?” என்று வேதபுரீஸ்வரர் கோவில் இடிபட உறுதுணையாய் நின்ற இந்துக்களை ஆனந்தரங்கம் பிள்ளை எழுதி வைத்த டைரியே சாட்சி சொல்கிறது.

மலர்மன்னன் சொல்வது உண்மைக்கு மாறானது என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

வேலூருக்கு ஒரு ‘ஜலகண்டேஸ்வரர்’ கதை என்றால், புதுச்சேரிக்கு ‘வேதபுரீஸ்வரர்’ புனைகதையா?

இல்லாத ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு எவ்வாறெல்லாம் கலவர விதை ஊன்றுகிறார்கள் இவர்கள்!

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றிப் போகிற போக்கில் ஒரு கதை சொல்லிப் போனார் மலர்மன்னன்.

அது என்னதென்று ஆராய்ந்து பார்த்த பின்னர்தான், மலர்மன்னன் எப்படி எல்லாம் வரலாற்றைத் தன் இஷ்டம் போல் திரிக்கிறார் எனத் தெளிவானது.

வேலூர் நகரக் கோட்டை கோவிலுக்குள் இருந்து ‘லிங்கம் ‘ அகற்றப்பட்டதற்கு முசுலீம் படையெடுப்புதான் காரணமென்றும், அதை மீண்டும் அங்கு நிறுவுவதற்குத் தடையாகத் தொல்லியல் துறை இருந்ததால் அதையும் மீறி அங்கு லிங்கத்தை நிறுவும் தெய்வீகத் தொண்டை தாம் வீரதீரத்தோடு செய்து முடித்ததாக விஸ்வ ஹிந்து பரிசத் தின் மலர்மன்னன் சரடு விடுகிறார்.

முதலாவதாக, வேலூரில் உள்ள கோட்டைகள் மற்றும் நகரக் கோட்டைக்குள் உள்ள கோவில் எப்போது, யாரால் கட்டப்பட்டது என்ற உண்மையை அவர் மூடி மறைக்கின்றார். வேலூர் கோட்டைகளும், கோவிலும் இந்து ஆட்சியாளர்களால் கட்டப்படவில்லை. அப்படி ஓர் இந்து ஆட்சி அங்கு நிலவியதாக வரலாறும் இல்லை. அவை முசுலீம் ஆட்சியாளர் காலத்தில்தாம் கட்டப்பட்டன.

ஆங்கிலேயக் காலனிவாதிகளிடம் சரணடைந்து, ஆட்சி அதிகாரத்தை ஆற்காடு நவாபு அடகு வைத்தபோது, விடுதலைப்போர் தொடுத்த மைசூரை ஆண்டு வந்த டிப்பு சுல்தான் குடும்பத்தினர் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்தனர். முசுலீம்களால் கோட்டைக்கோ, கோவிலுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆற்காடு நவாப்போடு சேர்ந்து ஆங்கிலேய காலனியவாதிகளுக்கு அடிமை ஊழியம் செய்த புரோகிதர்கள்தாம், ‘மைசூரை ஆளும் முசுலீம் மன்னன் படை எடுத்து வருகிறான்; கோவில்களை இடிப்பான்; இந்துக் கடவுள் சிலைகளைத் தாக்கி உடைப்பார்கள்; இந்துக்களைக் கொன்று போடுவார்கள்;பெண்களைக் கற்பழிப்பார்கள் ‘ என்று புரளி கிளப்பி, கோட்டை கோவில் லிங்கத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டார்கள்.

ஆனால் ஆர் எஸ் எஸ் காரர்கள் வெளியிட்டுள்ள ஒரு நூலிலே அவர்களே ஒப்புக்கொண்டுள்ளபடி ‘அந்தக்கோட்டை கோவில் இன்னமும் சிதிலமடையாமல் அழகாக ‘ இருக்கிறது என்றால் ‘படை எடுத்து வந்த ‘ முசுலீம்கள் அதற்கு எந்தப் பாதிப்பையும் செய்யவில்லை என்றுதானே அர்த்தம் ? மேலும் அவர்களால் இந்துக்களுக்கு எந்தவிதத் தீங்கும் அங்கு நடந்ததாக சிறு வரலாற்று ஆதாரமும் சம்பவமும் கிடையாது.அதற்கு மாறாக, பாழடைந்த பல ‘இந்து ‘க்கோவில்களைப் புதுப்பிக்கவும் பூசை நடத்தவும் டிப்பு சுல்தான் உதவியதாகத்தான் சரித்திரம் கூறுகிறது.

ஜெர்மனியில் மட்டுமல்லாது, தான் ஆக்கிரமித்த பலதேசக் கலைக் களஞ்சியங்களைச் சூறையாடிய ஹிட்லர் உட்பட பாசிஸ்டுகள் அனைவருமே வரலாற்றுச் சின்னங்களை மாற்றி அமைத்து, பாமர மக்களின் ஆதரவைத்தேடிக்கொள்ள எத்தணிக்கின்றனர்.அது போன்றதொரு செய்கைதான் வேலூர் கோட்டை கோவிலுக்குள் லிங்கத்தை நிறுவிய செயல்.

காஞ்சி மடாதிபதி முதல் மாவட்ட ஆட்சியர் வரை ஆர் எஸ் எஸ் காரர்களோடு சேர்ந்து நிறைவேற்றியிருக்கும் இந்தச் செயலை ஏதோ கடும் எதிர்ப்புக்கிடையே புரிந்த சாதனையைப் போல இங்கே சித்தரிக்கிறார் மலர்மன்னன். திட்டமிட்டு சுற்றுப்புறக்கிராமங்களில் இருந்து கூட்டம் திரட்டி வந்தபோதும், ஏதோ மக்கள் தாமே திரண்டு வந்ததைப் போல் பிலிம் காட்டுகிறார் அவர்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்ன என்றால், இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி ஊதிப் பெருக்கி பரபரப்பை ஏற்படுத்தியதுதான்.

இதே மாதிரிதான் மண்டைக்காட்டிலும், கடலில் சென்று நீராடிய பிறகே பகவதி கோவிலுக்கு வர வேண்டும் என ஒருப் புதுப் பழக்கத்தைப் புகுத்தி அமைதியைக்கெடுத்தனர் இவர்கள்.

இதன் உள்நோக்கம் என்னவென்றால், கடற்கரையில் பரவி இருக்கும் கிறிஸ்தவ மீனவர்களின் குடியிருப்பு வழியாக ஊர்வலம் விட்டு பதட்டத்தை உருவாக்குவது.

இதே உள் நோக்கத்தில்தான் 1990 வரை தமிழ் நாட்டில் இல்லாத வழக்கமான ‘விநாயகர் சதுர்த்தி ‘ ஊர்வலமும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

நான் ஒருமுறை சென்னையில் இந்து முன்னணியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைப் பார்த்திருக்கிறேன். போகும் வழியில் முஸ்லிம் ஓட்டல் இருந்தால் கல்லை ஓட்டல் உள்ளே எறிவார்கள் (ஸ்டாரன்சு ரோடு, ஓட்டேரியில் உள்ள தாஸ்மக்கான் ஆகிய இடங்கள்)

‘நாலும் நாலும் எட்டு; துலுக்கன வெட்டு ‘ ‘மூணும் அஞ்சும் எட்டு; துலுக்கன் பொண்டாட்டியக் கட்டு ‘ என்று சில திருக்குறள்களை உரக்கக்கத்தி விநாயகருக்கு பக்தி செலுத்துவார்கள் (இரண்டாவதாய் நான் குறிப்பிட்ட குறள் சரியானதுதானா என்பதை மலர்மன்னன் சமூகம் திருத்திக் கொடுத்தால் தேவலாம்)

இந்துவும், இந்து தேசியமும்!


நம்மை நோக்கி எப்பொழுதுமே வெகு சுலபமானதொரு கேள்வி ஒன்றை கேட்பார்கள் பார்ப்ப்னியத்தின் ஆதரவாளர்கள். அதாவது, ‘ஏன் எப்பொழுதும் இந்துத்துவத்தை மட்டும் விமர்சிக்கிறீர்கள் இதே போன்று மற்ற மதங்களை விமர்சிப்பதில்லையே’.

இதற்க்கு நாம் பொதுவாக, இந்துத்துவம் எனப்படும் பார்ப்ப்னியம் ஒரு மதமல்ல, அது ஒரு அடக்குமுறைத் தத்துவம், மேலும் பார்ப்ப்னியமே இந்தியாவின் அனைத்து அடிப்படைவாத வெறிகளுக்கும் மூல தத்துவம், மேலும் ஏகாதிபத்திய சுரண்டலுக்கு ஏதுவான சமூக சூழலை உருவாக்குவதும் பார்ப்ப்னியமே எனவே அதனை எதிர்ப்பதுதான் எமது முதல் கடமை. மற்றபடி பிற மத அடிப்படைவாதங்களை தேவையான போது மதம் என்ற அடிப்படையில் விமர்சித்தே வந்துள்ளோம். என்பதாக நமது பதில் இருக்கும்.

ஆனால் இந்த இடத்தில் பார்ப்ப்னியத்தின ஆதரவாளர்கள் ஒரு பித்தலாட்ட வேலை செய்கிறார்கள். நாம் இந்துத்துவம் என்று எதிர்ப்பது பார்ப்ப்னியத்தை மட்டுமே, ஆனால் இவர்கள் நம்மை பார்த்து கேள்விக் கேட்க்கும் போது இஸ்லாம், கிறுத்துவர் தவிர்த்து அனைத்து வழிபாட்டு முறைகளையும் இந்துத்துவத்திற்க்குள் அடக்கி கேள்வி கேட்பார்கள்.

ஆக, விசயம் இதுதான். ‘இந்துத்துவத்தை தான் நீ எதிர்ப்பாயா? வேறு எதையும் எதிர்க்க மாட்டாயா?’ என்று நம்மிடம் கேள்விக் கேட்க்கப்பட்டால், நாம் பதிலுக்கு அவர்களிடம் கேட்க்க வேண்டிய கேள்வி:

‘இந்துத்துவம் என்று நீ எதை சொல்கிறாய்?’

‘நான் எதிர்ப்பதைத்தான் இந்துத்துவம் என்று சொல்கிறாய் எனில் அது பார்ப்னியம் மட்டுமே’.

நாம் பார்ப்ப்னியத்தை திட்டுவதையே எல்லா இந்திய வழிபாட்டு முறைகளையும் திட்டுவதாகவும், நாம் பார்ப்ப்னிய தேசியத்தை திட்டினால் ஒட்டு மொத்த இந்திய தேசியத்திற்க்கே விரோதமாக திட்டுவதாகவும் கண்டனம் செய்வதன் மூலம் இவர்கள் இரண்டு உண்மைகளை இவர்கள் வாயாலேயே ஒத்துக் கொள்கிறார்கள்.

#1) இந்துத்துவம் எனப்படுவது பார்ப்ப்னிய வர்ணாஸ்ரம தர்மமே. அதாவது அது ஒரு மதமல்ல. சமூக ஒடுக்குமுறை தத்துவம் என்ற உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள்.

#2) இந்து அல்லது பார்ப்னிய தேசியம் என்பதுதான் இந்திய தேசியம் என்ற உண்மையையும் ஒத்துக் கொள்கிறார்கள்.

நாட்டார் வழிபாட்டு முறைகளை அழிக்கும் பார்ப்பனியம் குறித்து நாம் கேள்விகள் கேட்ட பொழுது இவர்கள் பதில் சொல்லாமல் நழுவிப் போனதில் இந்த உண்மை இன்னும் எடுப்பாக தெரிந்தது.

பார்ப்ப்னியம் குறித்தும், தேசியம் குறித்தும் இந்த புரிதல்தான் இவர்களை ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக கூச்ச நாச்சமின்றி வேலை செய்யச் செய்கிறது. எப்படியெனில் பெரும்பான்மை மக்களின் வாழ்வை நாசமாக்கும் வகையில் ஏகாதிபத்தியங்கள் இந்திய இறையாண்மையை குப்பைத் தொட்டியில் வீசினால் இவர்களுக்கு வலிக்காது. ஏனேனில் அவ்வாறு செய்யும் போது இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தின் இறையாண்மைக்கு எந்த குந்தகமும் ஏற்ப்படுவதில்லை. அத்துடன் தரகு பணமும் கிடைக்கிறது(ஏகாதிபத்திய நிறுவனங்கள் இங்கே சுரண்டுவதற்க்கு மாமா வேலை பார்த்து கிடைக்கும் தரகு பணம்).

இதே அடிப்படையில்தான் இவர்களின் தலைவன் ‘பெரும் பொய்யன்’ கோல்வால்கர் பிரிட்டிஸ் காலனியாதிக்கத்திற்க்கு அடிமை சேவகம் செய்தான். எப்படியெனில், “பிரிட்டிஸ் அரசு மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பதி விரதை பாரத மாதவை கூட்டிக் கொடுக்கலாம். ஆனால் இந்து (ie: பார்ப்ப்னியத்தின்) பெருமைக்கு மட்டும் குந்தகம் வந்து விடக் கூடாது. எமது கருத்தில் பிரிட்டிஷ் அரசு இந்து தர்மத்திற்க்கு (அதாவது பார்ப்ப்னிய தர்மத்திற்க்கு) குந்தகம் விளைவிக்கும் அரசாக இல்லாதவரை அவர்கள் வெளியேற வேண்டிய அவசியமில்லை”(#1, #2) என்றான்.

அப்போ பாரத மாதா? அட போடா அபிஸ்டு, கூட்டிக் கொடுத்தா காசு வருமுன்னாக்க அத்த செய்றதுல என்ன துன்பம் வந்தச்சு? ஒரு யாகம் செஞ்சாக்க எல்லாம் சரியாப் போயிடாது?

பாரதா மாதகி ஜொய்ங்…………

இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடமிருக்கும்?

ஆக, பெரும்பான்மை இந்துக்கள் என இவர்கள் குறிப்பிடும் மக்களின் வாழ்க்கையுடன் எவன் எப்படி விளையாண்டாலும் பரவாயில்லை. பழைய காலத்து நம்பியார் படம் போல பாரத மாதாவை துரத்தி துரத்தி வன்புணர்ச்சி செய்தாலும் இவர்களுக்கு கவலையில்லை. இவர்களுக்கு நோக்கம் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள ‘பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளே நுழைய அனுமதி’ என்ற பலகை மீது ஏகாதிபத்தியமோ அல்லது வெறு வெளிநாட்டு சக்திகளோ(வேற யாரு? கம்யுனிஸ்டுகள், ஜனநாயக சக்திகளைத்தான் வெளிநாட்டு சக்திகள் என்று இவர்கள் சொல்கிறார்கள்) கை வைத்து இந்து தர்மத்திற்க்கு அழிவை உண்டாக்கிவிடாமல் இருந்தால் போதும். இதற்க்காக பல தலைமுறைகள் வெளிநாட்டிலேயே வாழ்ந்த பார்ப்ப்னிய தேசத்து மைந்தர்கள் சதி செய்வதெல்லாம் உள்நாட்டு புனித போராக பார்க்கப்படும்.

நீங்களே பாருங்கள், ஆடம் பிரிட்ஜ் என்று இயற்கையாக உருவான ஒரு பாலம் சிரிலங்காவையும் இந்தியாவையும் இணைக்கிறது. இதனை உடைத்து சேது சமுத்திரம் கட்டுவதில் ஏகாதிபத்தியத்தின் திட்டம் ஒன்று உள்ளது. அது இந்திய கடல் வளத்தை கொள்ளையடிப்பது மற்றும் யுத்த கேந்திர ரீதியாக இந்திய கடல் பரப்பில் இலகுவாக அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவது என்ற அமெரிக்காவின் ராணுவ பொருளாதார நலன்களுக்கான ஒரு திட்டமே. ஆக, இவர்களின் சந்தைப் போட்டிக்காக இந்திய மக்களின் வாழ்வை நிர்மூலமாக்காதே என்ற அடிப்படையில் நாம் அந்த திட்டத்தை எதிர்க்கிறோம்.

இதே திட்டத்தை இதே அமெரிக்க மேலாதிக்கம் என்ற ஆச்சர்யகரமான முழக்கத்துடன் இன்னொரு கும்பலும் எதிர்க்கிறது. என்னாடாதி அதிசயம் ‘கண்ணை மறைக்கும் காவிக் குடுமி’யையும் மீறி அமெரிக்க மேலாதிக்கம் இவர்கள் கண்ணுக்கு தெரிந்ததோ என்று ஆச்சர்யப்படும் வேலையில்தான் இன்னோரு முழக்கம் காதில் விழுகிறது – ‘ராமன் பாலத்தை உடைக்காதே! அங்குதான் ராமன் குந்த வைத்து மேம்படி வேலைகளைச் செய்தான்!’ என்று.

இதோ இங்கு மீண்டும் பார்ப்ப்னிய தேசத்தின் இறையாண்மை என்பது ராமன் மேப்படி வேலைகள் செய்த இடத்தின் புனிதம் காக்கும் அளவில்தான் உள்ளது என்பதையும், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து இந்த கற்பனாவாதி கபோதிகளுக்கு கிஞ்சித்தும் அக்கறை கிடையாது என்பதையும் நிரூபித்துவிட்டார்கள். உண்மையில் இவர்களின் பார்ப்ப்னிய தேசியத்தில் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களுக்கு எந்த இடமும் இல்லை என்பதையும் எடுப்பாக காட்டுகிறார்கள்.

இப்படிப்பட்ட அரசில் இந்துவுக்கு என்ன இடம் இருக்கும்? இவர்கள் வாயிலிருந்தே நமக்கு தெளிவாக புலப்படும் விசயம் இந்து என்று இவர்கள் சொல்வது பார்ப்ப்னியர்களையே(பிறப்பின் அடிப்படையில் அல்ல மாறாக பார்ப்ப்னிய பண்பாட்டை சுவீகரித்த எவரும் பார்ப்ப்னியரே). அப்படியெனில் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இந்துக்கள் கிடையாது என்பதுதான் இவர்களே மறைமுகமாக ஒத்துக் கொள்ளும் உண்மை. ஏனேனில் பார்ப்ப்னியம் என்று இவர்கள் சொல்லும் விசயங்களை ஒருவன் படித்து தத்துவரீதியாக அதனை சுவீகரிக்க வேண்டும் எனில் அவன் குறைந்தது நடுத்தர வர்க்க பின்னணி கொண்டவராக இருக்க வேண்டும். எனவே உழைக்கும் மக்கள் இந்து என்ற பொதுவாக நிலவும் கருத்தின் அடிப்படையில் இவர்களுக்கு அடியாள் வேலை செய்ய திரள்வார்களே அன்றி, இவர்களின் ராஜ்ஜியத்தில் அவர்களின் நலனுக்கென்று ஒன்றும் கிடையாது. ஆக, இந்துக்கள் அல்லாதவருக்கு இந்து தேசத்தில் என்ன இடம் என்று கோல்வால்கன் சொல்கிறானோ அதே இடம் தான் சர்டிபிகேட் படி இந்து எனப்படுபடும் உழைக்கும் மக்களுக்கும் தரப்படும்.

நாட்டார் வழிபாட்டு தெய்வங்களை நயவஞ்சகமாக அழிப்பதற்க்கும், பிற மதத்தவர் வழிபாட்டு தளங்களை அப்பட்டமாக அழிப்பதற்க்கும் உள்ள வித்தியாசம் போன்ற ஒரு வித்தியாசம் வேண்டுமானால் உழைக்கும் மக்கள் இந்துவுக்கும், பிற மதத்தவருக்கும் இருக்கலாம். அழிவு என்னவோ நிச்சயம். பார்ப்ப்னியத்தில் கறைந்தது போக சில சொற்ப அடையாளம் மட்டும் மிஞ்சலாம். ஆனால் ஒரு விசயம், சர்டிபிகேட்டி இந்து என்று போட்டுக் கொள்ளும் உரிமை விட்டு வைக்கப்படும். ஏனேனில் அடியாள் வேலை செய்ய ஒரு ஐடெண்டிட்டி தேவைப்படுகிறதல்லவா?

இவர்களின் நடவடிக்கைகளும் பார்ப்ப்னியத்தின் நலன் காக்கும் அம்சத்தில் மட்டுமே உள்ளது. தவிர்க்க இயலாமல் ஏகாதிபத்தியத்தின் நாகரிக நடவடிக்கைகள் பார்ப்ப்னியத்தின் பழைய பஞ்சாங்க (ஆடம் பிரிட்ஜை இடிப்பது போன்று) நடவடிக்கைகளுடன் முரன்படும் இடத்தில் மட்டும்தான் இவர்கள் இருவரும் வேறு வேறு வர்க்கங்கள் என்ற விசயம் வெளி வருகிறது. இடஓதுக்கீடு விசயத்தில் கூட சும்மா ஒரு கொள்கை தீர்மானத்தை மட்டும் நிறைவேற்றி விட்டு உண்மையில் இவர்களின் அணிகளை எல்லாம் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளச் செய்தனர். ஏன் இடஓதுக்கீடை ஆதரிக்கும் இவர்கள் அதனை எதிர்த்தவர்களின் மண்டயை உடைத்து வீட்டுக்கு அனுப்பும் ஒரேயொரு போராட்டம், ஒரேயொரு துண்டறிக்கை வெளியிட்டார்களா? ஷில்பா செட்டியின் ஜட்டி வெளியே தெரிந்தால் கூட ஊரே அலற ஒப்பாரி வைக்கும் இந்த மடவெறி கூட்டம் இடஓதுக்கீட்டிற்கு ஆதரவாக வெறும் தீர்மானம் மட்டும் இயற்றினார்கள் எனில் இவர்களின் மொசடி என்னவென்பதை புரிந்து கொள்ளலாம்.

சாதியை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லையே?
ஆம் இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஏனேனில் சாதி என்ற மேல் ஓடு தனது உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது. “பாருங்களேன் கொடுமையை, டோண்டு என்ற ஒரு பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர் பிராமணனுக்குரிய எந்த பண்பும் இன்றி வெறும் அடையாளத்தை மட்டும் தூக்கிக் கொண்டு வலம் வருவதை, பாருங்களேன் பாசமிகு தம்பி நீலகண்டன் ஒரு பிராமணனுக்குரிய எல்லா அம்சங்களுடன் வலம் வருவதை” – இப்படி மறைமுகமாக நமக்கு சொல்கிறார்கள் நீலகண்டன் போன்ற RSS வெறியர்கள்.

ஏன் இது ஏற்பட்டது? எவ்வளவுதான் சாதி ரீதியாக பிறப்பின் அடிப்படையில் பொருளாதார நலன்களை பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வந்தாலும், சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில் சாதி வேறுபாடுகளை மீறி தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் செல்வாக்கு படைத்தவர்களாக மாறி நிற்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பார்ப்ப்னியம் அவ்வப் பொழுது சந்தித்து வரும் ஒரு பிரச்சனைதான். அதுவும் குறிப்பாக பிரிட்டிஸ்க்காரகள் இந்தியாவின் ஆசிய பொருளாதார அமைப்பை சிதைத்தன் மூலம் இந்த போக்கை வீரியமாக்கினார்கள். பட்டா போட்டு நிலத்தை தனியுடமை ஆக்கினார்கள். நிலவுடைமை என்பதை சாதி கடந்த ஒரு விசயமாக வெள்ளையர்கள் மாற்றினார்கள்.

ஆக, இன்று சாதி என்பது எந்த வகையிலும் வர்ண அமைப்பின் விதிமுறைகளை ஏற்றுக் கொள்வதாய் இல்லை. சாதியை ஏற்றுக் கொள்வது எனில் சில அபிஷ்டு சர்டிபிகேட் பார்ப்பனரை பிராமனராக பார்க்க வேண்டும். அந்த முட்டாள்தனத்தை செய்வது நீலகண்டன் போன்ற சுத்தமான RSS பார்ப்பனர்களுக்கு ஏற்புடையதல்ல. ஆள் சேர்த்து ஆங்கீகாரம் பெறுவதற்க்கும் பிற சாதி அறிவுஜீவிகளை ஜீரணிக்க வேண்டியுள்ளது.

இந்த வர்க்க வர்ண முரன்பாட்டை எப்படி சமாளிப்பது? பார்ப்பனியத்தின் உண்மையான இன்றைய வரலாற்று கடமை என்னவாக இருக்க முடியும்? ஏற்கனவே சொன்னது போல பார்ப்ப்னியத்திற்க்கு இது ஒரு புதிய சிக்கலல்ல. வரலாற்றில் இது போல சிக்கல்களை சந்தித்த போதெல்லாம் அது தன்னை சிறிது ஜனநாயகப்படுத்திக் கொண்டு தப்பித்துவிடும்.

வர்க்க பிரிவுக்கும் வர்ண பிரிவுக்குமான முரன்பாடிற்க்கு வரலாறு நெடுகிலும் பல உதாரணங்கள் உள்ளன. குறிப்பாக சத்ரியர், பார்ப்ப்னர் சண்டையும் அதன் விளைவாக தத்துவங்களில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கின் வரலாறாகத்தான் வேத காலம் (மீமாம்சம், வேதாந்தம், சாருவாகம் etc) தொட்டு பகவத் கீதை காலம் வரையிலான வரலாறு உள்ளதாக பல வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். விஸ்வாமித்திரர் எனும் சத்ரிய முனியன், பரசுராமன் எனும் பார்ப்ப்ன வெறியன் – இப்படி இன்னும் பல உதாரணங்கள். இந்த அம்சத்தில் விலாவாரியாக பேசுவது இந்த கட்டுரையில் சாத்தியமில்லை. இதை ஒரு hypothesisஆக எடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்கவும்.

ஆக, சாதி என்பதை இவர்கள் இந்த அம்சத்தில்தான் ஏற்றுக் கொள்வதில்லை. அதாவது இனிமேலும் வர்ண அமைப்பின் புனிதம் காக்கும் வரையறைக்குள் சாதி என்ற வடிவம் இல்லை என்ற அர்த்தத்திலேயே.

அப்படியேனில், வர்ண அமைப்பு சரிதானா? என்று கேள்வி எழுகிறது. வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் உருவாகிறது என்கிறார்கள் இவர்கள். குணம் என்று இவர்கள் சொல்லும் மூன்று குறிப்பான குணங்கள் யாவும் பிறக்கும் போதே எற்படுவதல்ல என்பதை உயிரியலின் இது வரையான கண்டுபிடிப்புகளின் அடிப்படையிலேயே சொல்லலாம். அப்படியானால் வேறு எப்படி ஏற்ப்படுகிறது? உண்மையில் ஒருவனது குணம் அவன் பிறந்து வளரும் சூழலாலேயே பிரதானமாக தீர்மானிக்கப்படுகிறது. அப்படியெனில் இவர்கள் சொல்லும் இந்த குணங்கள் என்பவை இயல்பாகவே ஒருவனுடைய பொருளாதார பிரிவினடிப்படையிலான குணங்களே ஆகும். ஒரு ஏழை வீட்டில் பிறந்தவன், சேரியில் வளருபவன் எந்த காலத்திலும் பிராமனனுக்குரியதாக இவர்கள் சொல்லும் குணங்களுடன் வளரும் வாய்ப்புகளை மிக மிக குறைவாவே பெறுகிறான். அப்படியெனில் அவன் வர்ண படிக்கட்டில் கீழ் நிலைக்கு செல்கிறான். அவனது குழந்தையும் அதே நிலையில் தொடர்கிறது. ஆக மீண்டும் அது பிறப்பனடிப்படையிலான சாதி அமைப்பில்தான் போய் முடியும். ஒரு வேளை அதற்க்கு அப்பொழுது வேறு ஏதாவது பெயர் வைத்து அழைப்பார்கள். ஆனால் விசயம் இதுதான் – “ஒரு வர்க்க சமுதாயத்தில் , வர்ண சமுதாயம் சாதி சமுதாயமாகவே சீரழியும். தனியுடைமை அழிந்த ஒரு நவீன எதிர்கால வர்க்கமற்ற சமுதாயத்தில் வர்ண சமுதாயம் என்பது தேவையின்றி அழிந்து போகும்”.

இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தேசியத்தின் லட்சணம், இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மம். இதுதான் வரணாஸ்ரமத்தின் தன்மை. இவ்வளவுதான் இந்து உழைக்கும் மக்களுக்கு இவர்கள் தரும் இடம். இதனை புரிந்து கொண்டு இந்த மக்கள் விரோத தத்துவத்தை வேரோடு அழிக்க ஜனநாயக சக்திகள் அனைத்தும் புரட்சிகர சக்திகளுடன் அணி திரண்டு போராட வேண்டும். அதுதான் இந்திய தேசியத்தை இந்து தேசம் எனும் பார்ப்பன கொடுங்கோன்மையிலிருந்தும், மறுகாலனியம் எனும் ஏகாதிபத்திய கொடுங்கோன்மையிலிருந்தும் விடுதலை செய்யும் போராக இருக்கும்.

அதற்க்கு முதல் தேவையாக இந்து என்று இவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாக சொல்லும் மக்களின் நலனும் உண்மையில் இவர்களின் சித்தாந்த பொருளாதார சார்பின் கீழ் பிரதிநிதித்துவப் படுத்தும் பார்ப்ப்னியர்களின் நலனும் வெவ்வேறு என்ற புரிதல் வேண்டும்.(அதாவது இந்து என்ற பொதுப் புரிதல் வேறு அவர்களின் அர்த்தத்தில் அது பார்ப்பனியர்களையே குறிக்கிறது).

இரண்டாவது தேவையாக இந்தியாவில் சாதி ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ அணி திரண்டு, அடையாளப்படுத்திக் கொண்டு இவர்களை எதிர்த்து எந்த பலனையும் அடைந்து விட முடியாது என்பது. உண்மையில் இப்படி அணி திரள்வது என்பது அவர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டே அவர்களை எதிர்ப்பது என்பதாகும்.

மூன்றாவது தேவையாக, பார்ப்ப்னிய பயங்கரவாதத்திற்க்கு என்று ஒரு வர்க்க இயல்பு உள்ளது என்பதையும், அந்த அம்சத்தில் அதனது பொருளாதார சுரண்டல் அடிப்படையை எதிர்க்காமல் அவர்களை தத்துவ தளத்தில் மட்டும் வெற்றி கொள்ள முடியாது என்பதாகும்.

இந்த புரிதல் வரும் பொழுது புரட்சிகர-ஜனநாயக சக்திகள் மட்டுமே இந்த மூன்று அம்சங்களையும் உள்ளடக்கி பார்ப்பினியத்திற்க்கு சாவு மணியடிக்கும் சித்தாந்த-அமைப்பு பலம் பெற்றவையாக இருப்பது புரிய வரும்.

மரபணுத் தொழில் நுட்ப ஒழுங்கு முறை ஆணையம் – தொடரும் சட்ட பயங்கரவாதம் !


மரபணு மாற்று கத்தரிக்காய் விவகாரத்தில் நடந்த விவகாரங்கள் அனைவருக்கும் தெரியும். பன்னாட்டு நிறுவனங்களும், அவற்றின் உதவி பெறும் அறிவியலாளர்களும் மரபணுத் தொழில்நுட்பம் இல்லாவிட்டால் இந்தியாவே பட்டினியால் மூழ்கிவிடும் என்ற தவறான கருத்தைப் பரப்பினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் மரபணு மாற்றுத்தொழில்நுட்பம் காரணமாக, சுற்றுச்சூழல் – பொதுச் சுகாதாரம் – அரசியல் – சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாட்டுக்கும் மக்களுக்கும் பலத்த பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தனர். தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள், மரபணு தொழில்நுட்பம் குறித்து உரிய பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் தமது மாநிலத்திற்குள் மரபணுமாற்று உணவுப்பொருட்களை அனுமதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தன. இதைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இந்த விவகாரம் குறித்து நாட்டின் சில நகரங்களில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்டறிந்து மரபணு மாற்று கத்தரிக்கு தற்காலிக தடை விதித்தார்.

இந்தியாவில் மரபணுத் தொழில்நுட்பத்தை ஒழுங்கு படுத்துவதற்காக மரபணுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகார வரம்புக்குள் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பலர் மீதும் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நிதியுதவியுடன் பல்வேறு ஆய்வுகளை செய்த அறிவியலாளர்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக செயல்பட்டு, மரபணு மாற்றுக் கத்தரிக்காய்க்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்தக்குழுவை “மரபணு மாற்றுத் தொழில்நுட்ப நெறிப்படுத்துதல் மற்றும் உயிரிப்பாதுகாப்பு அமைப்பு” என்று சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் ”மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம்” என்ற புதிய அமைப்பை நிறுவுவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

(இந்திய நாடாளுமன்றம் – ஏரியல் வியூ)

இதற்காக The Bio-Technology Regulatory Authority of India Bill, 2009 என்ற சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்துகிறது. வேளாண்மை, சுற்றுச்சூழல், நலவாழ்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மரபணு மாற்றுத்தொழில்நுட்பத்தை நெறிப்படுத்துவதற்கான இந்த அமைப்பு, அறிவியல் – தொழில்நுட்ப அமைச்சரவையின் ஆளுகையின் கீழ் செயல்படும் விதத்தில் உருவாக்கப்படுகிறது.

ஏன் இந்த சட்டம்?

இந்த சட்ட முன்வடிவானது இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இந்தியர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட அலுவல் ரகசியங்கள் சட்ட (Official Secrets Act) த்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய இந்த சட்ட முன்வடிவு குறித்து விவாதங்கள் எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காகவே தகவல் உரிமைச் சட்டம் நடைமுறையில் இருக்கும் இந்தக் காலத்திலும் கருப்புச்சட்டமான அலுவல் ரகசிய சட்ட வரம்புக்குள் இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் பல வட இந்திய ஊடகங்கள் இந்த சர்ச்சைக்குரிய சட்ட முன்வடிவு குறித்து ஏராளமான சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.

சுற்றுச்சூழல் சட்டவியலில் முக்கியமான இரு அம்சங்களாக இருப்பவை: 1. வருமுன் காக்கும் கோட்பாடு, 2. சீரழிப்பவரே இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆனால் இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு”-இல் இந்த முக்கிய அம்சங்கள் இல்லை என்பதோடு, இதற்கு எதிரான அம்சங்களும் ஏராளமாக உள்ளன. இந்தியாவின் குடிமக்களை பாதுகாப்பதைவிட, மரபணு மாற்று உணவுப்பொருட்களை தயாரிக்கும் மான்சான்டோ, சின்ஜென்டா, டோவ் கெமிக்கல்ஸ், பேயர், டூ பான்ட் போன்ற நிறுவனங்களின் நலன்களை பாதுகாப்பதே முக்கியமானது என்று மத்திய ஆட்சியாளர்கள் முடிவெடுத்து செயல்படுவதாக தோன்றுகிறது.

குறிப்பாக மரபணு மாற்றுப்பயிரை அறிமுகப்படுத்தும், சந்தைப்படுத்தும், ஆய்வு செய்யும் நிறுவனங்களுக்கான கடப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த மரபணு மாற்றுப்பயிர்கள் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும், கால்நடை உள்ளிட்ட ஏனைய உயிர்களுக்கும் எந்தவிதமான ஆபத்துகளையும் ஏற்படுத்தாது என்ற உத்தரவாதத்தை வழங்க வழிவகை செய்யவில்லை. மேலும், இந்த பயிர்கள் சூழலியல் ரீதியாகவோ, மருத்துவ ரீதியாகவோ ஏதேனும் ஆபத்துகளை கொண்டுவந்தால் அந்த விவகாரங்களை எதிர்கொள்வது குறித்து ஏதுமில்லை.

மரபணு மாற்றுப்பயிர்களை அறிமுகப்படுத்தும் நிறுவனங்கள், அந்தப் பயிர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கோ, நுகர்வோர்களுக்கோ இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யும் எந்த அம்சங்களும் இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் அரசுத்துறையினரின் கடமை என்ன? தனியார் நிறுவனங்களின் பொறுப்பு என்ன? என்பது போன்ற எந்த சிந்தனைகளும் இல்லை.

இவற்றிற்கு பதிலாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கிலும், பன்னாட்டு நிறுவனங்களை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்களை தண்டிக்கும் அம்சங்களை மட்டுமே இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” கொண்டுள்ளது.

நவீன வாய்ப்பூட்டு சட்டம்!

மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து உறுதி செய்யவேண்டும் என்று வணிக நிறுவனங்களை நிர்பந்தப்படுத்த முடியாத அரசு, மரபணுத் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவோரை சிறையில் அடைக்கவும், அபராதம் விதிக்கவும் துடிக்கிறது.

இந்த “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு”-இன் பிரிவு 63ன்படி மரபணுத் தொழில்நுட்பம் குறித்து உரிய ஆதாரங்களோ, சான்றுகளோ, அறிவியல்ரீதியான ஆய்வறிக்கைகளோ இல்லாமல், மரபணு மாற்று உணவின் ஆபத்து குறித்து எச்சரித்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் ஒரு வருட சிறைத்தண்டனை, அல்லது இரண்டு லட்ச ரூபாய் வரையிலான அபராதம், அல்லது ஒரு வருட சிறைத்தண்டனையோடு கூடிய இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க இந்த சட்ட முன்வடிவு வழிவகுக்கிறது.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது சுதந்தர வேட்கையை தணிக்க வாய்ப்பூட்டு சட்டங்கள் அமலில் இருந்ததாக நம்மில் பலரும் வரலாற்றுப் பாடங்களில் படித்திருப்போம். ஆனால் அந்த நிலையை நாம் கற்பனையில் கூட சிந்திருக்க மாட்டோம். அந்த கருப்புச் சட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது. இந்த புதிய “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” அமலுக்கு வந்தால், மரபணுத் தொழில்நுட்பத்தை கேள்விகேட்கும் சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், ஊடகத்துறையினர் ஆகிய அனைவரையும் ஒருசேர முடக்கிவிட முடியும்.

சரி! ஆதாரம் இல்லாமல் கேள்வி எழுப்பினால்தானே சிறையில் அடைப்பார்கள்! ஆதாரங்களை சேகரிக்கலாம் என்று யாரும் முயற்சிக்க முடியாது. ஏனெனில் இந்த மரபணுமாற்று தொழில்நுட்ப ஆய்வுகளின் அனைத்து தகவல்களும் அறிவுச் சொத்துரிமை சட்டங்களின் அடிப்படையில் பன்னாட்டு வணிக நிறுவனங்களின் “ரகசிய வணிக தகவல்”களாக வரையறை செய்யப்படும். இந்த தகவல்களை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் யாரும் கோர முடியாது. எனவே மரபணு மாற்று உணவுப் பொருட்கள் குறித்து, அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் கூறும் தகவல்களே இறுதியானவை. இவற்றை யாரும் சரிபார்க்க முடியாது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது!

இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 246வது பிரிவின் ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியல் மாநில அரசின் அதிகார வரம்பின்கீழ் வரும் துறைகளை கூறுகிறது. இந்த பட்டியலின் 14வது அம்சம், வேளாண்மை, வேளாண்மை கல்வி, ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்களை தாக்கும் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு ஆகியவற்றை குறிக்கிறது. அதாவது வேளாண்மை, வேளாண் கல்வி – ஆய்வு, பூச்சிகள் மற்றும் பயிர்நோய்கள் குறித்த அனைத்து பிரசினைகளுக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் மாநில அரசிடம் இருந்தது. இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே மரபணு மாற்றப்பட்ட உணவுப்பயிரை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில அரசுகள் முடிவுகளை மேற்கொண்டன. ஆனால் இந்த புதிய “மரபணுத் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய சட்ட முன்வடிவு” மாநிலங்களுக்கான இந்த அதிகாரத்தை சத்தமின்றி ரத்து செய்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், அதன் இந்திய தொழில்-வணிக-அரசியல் பங்காளிகளுக்கும் லாபத்தையும் – இந்திய விவசாயிகளுக்கும், இந்தியாவின் இறையாண்மைக்கும்கூட கேடு விளைவிக்கக்கூடிய இந்த மரபணுத்தொழில் நுட்பம் இந்தியாவிற்கு ஏன் தேவை என்ற சாதாரண கேள்விக்கு பதில் கூறுவதற்கு யாருமில்லை.

சுதந்திரமான நாட்டின் சட்டம் என்பது மக்களுக்கு தரமான வாழ்க்கையையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும். ஆனால் நவீனகால இந்தியாவின் சட்டங்கள் இந்தியர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் ஒப்படைப்பதாகவே உள்ளது.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த சட்டக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய சென்ன உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்கள், “கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாம் தற்போது வேறு கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடாது!” என்று எச்சரித்தார். ஆனால் நடக்கும் சம்பவங்களும், உருவாகும் புதிய சட்டங்களும் நீதிபதி ராமசுப்ரமணியம் அவர்களின் எச்சரிக்கையை உதாசீனம் செய்வதாகவே உள்ளன.

சட்டம் என்பது சட்டத்தை உருவாக்கும் அரசியல்வாதிகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும், சட்டத்தை விவாதிக்கும் சட்டத் துறையினருக்கும் மட்டுமே உரியது என்ற தவறான கருத்தை உடைத்தெறிய வேண்டியது தற்போது காலத்தின் கட்டாயமாகிறது. ஏனெனில் இந்த சட்டங்கள் இந்தியாவில் உள்ள அனைவரது வாழ்க்கையையும் பாதிக்கிறது.

மேலும், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியே இந்த சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. எனவே தேர்தலில் பங்கெடுத்து வாக்களிக்கும் அனைத்து குடிமக்களும் இந்த சட்டங்களை உருவாக்குவதில் பங்கெடுப்பதாகவே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே இது போன்ற மக்கள் விரோத சட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்போது, உரிய முறையில் எதிர்ப்புகளை பதிவு செய்யவேண்டியது குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

யார் இந்த திரவுபதி?


5 கணவன்கள் போதாது என்று கருதி ஆறா-வது ஆசாமியாகிய கர்ணன் மீதும் காமம் கொண்டவள் தானே? இல்லை என்று மறுக்க முடியுமா? அதற்கு அந்தத் திரவுபதி கூறும் காரணம் என்னவாம்?
தருமன் -_ சதா வேதாந்தம் படிப்-பவன்; பீமன் -_ உடல் பெரியவன், குண்டன், சதா சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்; அர்ச்சுனன் _ ஏகப்பட்ட மனைவி-களுக்குச் சொந்தக்காரன், ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்-சுனன் மனை-வியை எண்ண முடியாதாம்! நான்-காவது கண-வனான நகுலனும், 5ஆவது கணவ-னான சகாதேவனும் எனது பிள்-ளைகள் போன்றவர்கள். அதனால்-தான் கர்ணன் மீது காமம் கொண்-டதாக ஒருத்தி சொல்கிறாள் என்றால், அந்தப் பெண்ணின் யோக்கியதையை தெரிந்து கொள்ள வேண்டாமா?
அய்ந்து பேருக்கும் தேவி அழியாத பத்தினி என்று இந்துமதம் இத்தகைய பெண்ணைப் போற்று-கிறது; கடவுளாகத் தொழுகிறது என்றால் இந்த மதத்தின் யோக்-கியதை எத்தகையது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாமே!
இந்து மதத்தில் அழியாத பத்தினியாக ஒருத்தி இருக்கவேண்டு-மானால் ஒரே நேரத்தில் பல கணவன்மார்கள் இருக்க வேண்டும் என்று தானே பொருள்? உண்மையைச் சொன்னால் உடல் எரிவானேன்? அறிவார்ந்த ஓர் அவையின் மேடையில் ஏறிக் காலித்தனத்தில் இறங்குவானேன்?
மகாபாரதத்தில் விபச்சாரத்தில் பிறக்காத ஒரே ஒரு ஆள் உண்டா? பந்தயம் கட்டிக் கேட்கிறேன் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கேட்டாரே, எந்த பாரதப் பிரசங்கி இதுவரை பதில் சொல்லி-யிருக்கிறார்? மகாபாரதத்தின் யோக்கியதைக்கு வேறு எங்கும் தேடிப் போக வேண்-டாம்.
தொலைக்காட்சியில் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது நேயர் ஒருவர் இந்து ஏட்டில் (18.12.1988) எழுதிய கடிதம் ஒன்று போதுமே! கடிதம் எழுதியவர் சென்னையைச் சேர்ந்த டி.ஆர். சுந்தரம். கடிதம் இதோ: தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயுபுத்ரா (பீமா) ஆசியோடு குந்திக்கு, தருமர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள். அந்த பிறப்புபற்றி சில கேள்விகளைக் கேட்கத் துவங்கி விடுகிறார்கள். பெற்றோர்களால் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்றுதான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்போது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?
நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால், அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா? அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் புருஷலட்சணம் என்று அவர்களிடம் கூற முடியுமா? நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டு-களுக்குமுன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக் கூடியதாகும். எனவே நள்ளிரவு சினிமாக்களை ஒளி-பரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது _ இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.
இந்த யோக்கியதையில் உள்ளது-தான் மகாபாரதம். இதைச் சொன்னால் மானம் போகிறதாம்! அப்படியென்றால் இவர்களின் மான உணர்வின் யோக்-கியதைதான் என்ன?

கற்பெனப்படுவது யாதெனின்..


நடிகையான குஷ்பூ திருமணத்திற்குமுன் கூடி வாழ்வது குறித்துத் தெரிவித்த கருத்தின் அடிப்-படையில் உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தினை மய்யப்படுத்திப் பல்வேறு விமர்சனங்கள் வெடித்துச் சிதறிக் கொண்டு இருக்கின்றன.

இதுதான் சந்தர்ப்பம் என்று திருவாளர் சோ ராமசாமி -_ தந்தை பெரி-யார் அவர்களைக் குறுக்கே கொண்டு வந்து நிறுத்தி குறுக்குச்சால் ஓட்டப் பார்க்கிறார்.

பொதுவாக அவரின் விமர்சனமும், கருத்தும் வலுவான எடுத்துக்காட்டு-களைக் கொண்டதாக அமையவே அமையாது. எடுத்துக் காட்டப்படுபவை-களுக்கான ஆதாரம் என்பது அவரிடம் எதிர்பார்க்கவே முடியாத ஒன்றுதான். எல்லாம் பொத்தாம் பொதுவாகத் தானிருக்கும்.

நகைச் சுவை உணர்வு என்பது மிகச் சிறந்த அம்சம். அதுபொருள் பொதிந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும்.

ஆனால் நகைச்சுவை என்ற பெய-ரால் சிரிப்பை மூட்ட வேண்டும் என்ப-தற்காக உடலில் பல சேட்டைகளைச் செய்து காட்டுவார்கள் -_ அந்த இரண்-டாந்தர வகையைச் சேர்ந்ததுதான் சோவின் பாணி.

குஷ்பு கூறிய கருத்து _ உச்சநீதிமன்ற தீர்ப்பு _ இவற்றைப் பற்றி எழுத வந்த சோ பெரியாருக்கு ஒரு நியாயம், குஷ்புவுக்கு ஒரு நியாயமா? எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை தமது துக்ளக்கில் (7.4.2010) நீட்டி முழங்கி-யிருக்கிறார். நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்-வளவு கேவலமாக ஆக்கி விட்டார்-கள்?….

..எனவே பெண்ணடிமை ஒழிய, திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல, மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்-றாலும் இந்தத் திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்…

பெண்கள் அடிமை நீங்க வேண்டு-மானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும்..

கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்-சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்று-தான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்…

..பெண்கள் விடுதலைக்கும், சுயேச்-சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்கின்றோம்.

இன்னும் சிறிது வெளிப்படையாய், தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதா-னால், இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்-தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்-கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்-கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.

இவைதான் தந்தை பெரியார் சொன்னதாக திருவாளர் சோவால் எடுத்துக்காட்டப்பட்டிருப்பவை.

தொடர்ச்சி ஏதும் இல்லாமல், துண்டு துண்டாக தமது வசதிக்கு ஏற்ப முன்னும் பின்னும் இல்லாமல் தந்தை பெரியார் கூற்றுகளைக் கையாண்டுள்-ளார். இது ஒரு முடக்குவாதமும் அறிவு நாணயமற்ற மோசடியுமாகும்.

கற்பு என்பது பற்றி தந்தை பெரியார் கூறியுள்ள கருத்து ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டதாகும். அது பெண்ணுக்கு மட்டுமே உரித்தானது _ ஆணுக்குத் தேவையற்றது என்றிருக்கும் நிலைப்-பாட்டை நிலைகுலைய வைக்கும் கருத்துக் கணைகளை வீசியிருக்கிறார் தந்தை பெரியார்.

கற்புபற்றி மட்டுமல்ல -_ பெண்களை அடக்கி ஒடுக்கும் சமாச்சாரங்கள் குறித்து நேர்மையான முறையில், அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்துள்ளார் விரிவாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் பெண் ஏன் அடிமையானாள் என்ற தந்தை பெரி-யார் அவர்களின் நூலினை ஆழமாகப் படித்தால் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையாக, பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்-டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்-யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும்.

கற்புக்காக மனத்தில் தோன்றும் உண்மை அன்பை காதலை மறைத்துக் கொண்டு காதலும், அன்பும் இல்லாத-வனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

எனவே இக்கொடுமை நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிரிவில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பை, சுதந்திரக் கற்பைக் காணலாமே ஒழிய, நிர்ப்பந்தங்களாலும், ஒரு பிறப்புக்கொரு நீதியாலும், வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காண முடியாது என்பதுடன், அடிமைக் கற்பையும் நிர்ப்பந்தக் கற்பையும் தான் காணலாம். அன்றியும், இம்மாதிரியான கொடுமையைவிட வெறுக்கத்தக்க காரியம் மனித சமூகத்தில் வேறொன்று இருப்பதாக என்னால் சொல்ல முடியாது (பெண் ஏன் அடிமை-யானாள்? முதல் அத்தியாயம் கற்பு எனும் தலைப்புக்குக்கீழ் தந்தை பெரியார்) இவ்வாறு கூறியுள்ளார்.

கற்புப்பற்றி தந்தை பெரியாரின் கருத்து மிகத் தெளிவாக இதில் கூறப்பட்டுள்ளது.

கற்பு என்பது ஆண் பெண் இருவ-ருக்-கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை; ஆணுக்குத் தேவையில்லை என்பதை ஏற்க முடியாது.

ஆண் _ பெண் இருவருக்கும் சமமான சுயேச்சைக் கற்பு தேவை!

கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று தந்தை பெரி-யார் தெரிவித்துள்ள கருத்தில் எந்த இடத்தில் குற்றம்? எந்த இடத்தில் நொள்ளை? எடுத்துக்காட்டி விவாதிக்க முன் வர வேண்டாமா? மொட்டைத்-தாதன் குட்டையில் விழுந்தான். நெட்டை மனிதன் வேடிக்கை பார்த்-தான் என்பதெல்லாம் கிறுக்குவதற்கு சுவையாக இருக்கலாமே தவிர அறிவுத்-தன்மைக்கு உவப்புடையதாக இருக்க முடியாது.

நாசமாகப் போகிற கற்பு கற்பு என்று சொல்லி நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்-டார்கள். பார்ப்பானோ மிகக் கெட்டிக்-காரன், ஆயிரம் பேரை அவள் பார்த்-திருந்தால்கூட, அவளைப் பத்தினி-யாக்கி விடுவான். சீதை, துரோபதை, தாரை இவர்களே இதற்கு உதாரணம்; கற்பு என்றால் இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியாக அல்லவா இருக்க வேண்-டும்? பைத்தியக்காரத்தனமாக மூட நம்பிக்கைகளை புகுத்திப் பாழாக்கி விட்டார்கள்

கட்டுப்பாட்டிற்காகவும், நிர்ப்பந்தத் திற்காகவும் கற்பு ஒரு காலமும் கூடாது! கூடவே கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத் திற்காகவும், காதல் அன்பிற்காகவும் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி யால் எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் ஒரு பிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு மாத் திரம் அடிமைப்படுத்துவதில் ஆசை, மூர்க்கத்தனமே அல்லாமல், அதில் கடுகளவு யோக்கியமும், நாணயமும் பொறுப்பும் இல்லவே இல்லை

பாவத்திற்குப் பயந்து பதிவிரதை-யாய் இருப்பவளும் காவலுக்குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும், மானத்திற்-குப் பயந்து பதிவிரதையாயிருப்பவளும் ஒரே யோக்கியதை உடையவளே ஆவாள் (நூல்: சுயமரியாதைத் திருமணம் -_ ஏன்?

வாழ்க்கை ஒப்பந்தத்துக்காகவும் காதல் அன்பிற்காகவும் ஆண் பெண் இருவரையும் கற்பு என்னும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இறுக்கிக் கட்டட்டும் என்று தந்தை பெரியார் கூறியதன் மூலம் கற்பின்மீது அவருக்-குள்ள நிலைப்பாடு எத்தகையது என்-பது வெளிப்படை; ஆனால் கற்பு என்-பது ஒரு சார்பானது. பெண்ணுக்கு மட்டுமே உண்டு. ஆண் எப்படி வேண்-டு-மானாலும் நடந்து கொள்ளலாம் என்கிற ஆண் ஒடுக்குத்தன்மையைத்-தான் தந்தை பெரியார் தயவு தாட்-சண்யம் ஏதுமின்றி நொறுக்கித் தள்ளு-கிறார்.

உண்மை இவ்வாறு இருக்க சோ பார்ப்பனர் சகட்டு மேனிக்கு ஒழுக்-கத்தைப் பற்றியே கவலைப்படாதவர் பெரியார் என்ற போக்கில் கிறுக்குவது போக்கிரித்தனம்தானே!

திருமணம் கிரிமினல் குற்றமாக்-கப்பட வேண்டும் என்று தந்தை பெரி-யார் கூறியது உண்மைதான். அதற்குக் காரணம் கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கொடுமை நிலவுவதும் ஆண் பெண் சுயசிந்தனைகளுக்குத் தடையாக இருப்பதும்தான். குடும்ப வாழ்வில் சிக்கிய மனிதன் சுயநலப் பிராணியாக வாழ்ந்து தொலைக்கிறான் என்ப-தால்தான்.

இதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்.

சொத்துரிமை இல்லாத ருசியா போன்ற நாடுகளில் ஆண்களும், பெண்களும் கணவன் -_ மனைவி என்று இல்லாமல் நண்பர்கள், காதலர்களாக இருந்துவருகின்றனர்; திருமணம் என்ற அமைப்பு முறையில் அமைப்பும் ஏற்பாடும் இல்லாமலே வாழ்கிறார்கள். இதற்குக் கட்டுப்பாடற்ற காதல் என்று பெயர். சுதந்திரமான ஆண் -_ பெண் உறவு வாழ்க்கை அங்கே இருக்கிறது. சொத்து, வாரிசு உரிமை இருக்கிற காரணத்தால்தான் நம்முடைய நாட்டில் கட்டுப்பாடுள்ள குடும்ப முறை ஏற்படுத்த வேண்டியதாயிற்று.

ருசியா போன்ற சொத்துரிமையற்ற நாடுகளில் இது போன்ற கட்டுப்பாடு-கள் தேவை இல்லாமல் போய் விட்டது. ஏதோ இயற்கை உணர்ச்சிக்காக ஓய்வு நேரங்களில் சாந்தி ஏற்படுவதற்காக ஒரு வாழ்க்கைத் துணை இருக்க வேண்டும்; அவர்கள் சினேகிதர்கள் மாதிரி என்-றைக்கும் இருப்பார்களே தவிர, அங்குக் கல்யாண முறையே கிடையாது. இது-தான் அங்குள்ள ஆண் பெண் உறவுத்-தன்மை

(நூல்: சுயமரியாதைத் திருமணம் ஏன்?) என்று தந்தை பெரியார் கூறியுள்ளார்.

திருமணம் குடும்ப அமைப்பு முறை என்பது சுயநல அமைப்புத் தன்மை கொண்டது என்பதும், தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்ற கடுகு உள்ளம் அவர்களை ஆட்டிப் படைத்-திருக்கிறது என்பதும்தான் தந்தை பெரியார் அவர்களின் கருத்தியலாக இருக்கிறது.

பிறருக்குத் தொண்டாற்ற வேண்டும் என்று விரிந்த இதயத்தை இந்தத் திருமண வழிப்பட்ட குடும்ப அமைப்பு முறை அளிப்பதில்லை.

அன்னை நாகம்மையார் மறைவுற்ற-போது தந்தை பெரியார் எழுதிய இரங்கல் இலக்கியத்தில்கூட தனக்-கிருந்த ஒரே கட்டும்கூட இப்பொழுது இல்லை. முழுமையாகப் பொதுத் தொண்டில் மூழ்குவேன் என்றாரே!

தந்தை பெரியார் ஒரு தொலை-நோக்காளர்; பற்றற்ற முறையில் சிந்திக்கக் கூடியவர்; அந்தக் கண்-ணோட்-டத்தில் அவர் எடுத்து வைக்-கும் கருத்து ஒரு கட்டத்தில் கடும் விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் ஆளானாலும், காலத்தைக் கடந்து அவை வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆசா பாசச் சூழலில் சிக்கிக் கொள்ளாமல், ஒரு பிரச்சினையின் தன்மையை நிர்வாணமாய் பார்க்கும் துணிவு எத்தனைப் பேருக்கு உண்டு?

திருமணம் என்ற அமைப்பு முறை இல்லாமல் நண்பர்களாகக் குடும்பம் நடத்துவோர் எண்ணிக்கை உலகில் பெருகிக் கொண்டே வருகிறது.

ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு நண்பர்களாக வாழ்வதைக் கொச்சைப்-படுத்துபவர்கள் யார்? அவர்களின் யோக்கியதை என்ன? ஒரு சந்தர்ப்ப-வாதத்-துக்காக எதையோ தூக்கிப் பிடிக்கும் சோ கூட்டத்தின் கற்பு நிலைப்-பாடு என்ன? ஒழுக்கத்தின் சீர்மைதான் என்ன?

அய்வருக்கும் தேவியான துரோபதை-தானே அழியாத பத்தினி! அந்தப் பெண் அய்ந்து பேர் போதாது என்று ஆறாவதாக கர்ணனையும் காதலித்-தாள் என்பதைப் பயபக்தியோடு ஏற்றுக் கொள்ளும் சோ கூட்டம் ஒழுக்கக் கேடுபற்றி வாய் திறக்கலாமா?

திருமணத்தில் பார்ப்பான் சொல்-லும் மந்திரம் குறித்து பாபா சாகேப் அம்பேத்கர் கூறுவது என்ன?

ஆரியர்கள், தங்கள் மனைவியரைத் தேவர்கள் வைத்துக் கொள்வதையும், தேவர்களால் கர்ப்பமாக்கப்படுவதையும் தங்களுக்குக் கிடைத்த கவுரவமாகக் கருதினார்கள். இந்திரன், யமன், நசத்யா அக்னி, வாயு முதலிய தேவர்கள் மூலம் ஆரியப் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றனர் என்ற குறிப்பை மகாபாரதத்-திலும் ஹரிவம்சத்திலும் காணலாம்.

தேவர்களுக்கும் ஆரியப் பெண்-களுக்குமிடையே முறைகேடான உட-லுறவு அடிக்கடி நிகழ்ந்தது. நாளடை-வில் தேவர்களுக்கும், ஆரியர்களுக்கும் இடையே உறவு வலுப்பட்டது. அது நிலப்பிரபுத்துவமாக வடிவம் பெற்றது. தேவர்கள் ஆரியர்களிடமிருந்து இரண்டு வரங்களைப் பெற்றார்கள்.

ராட்சசர்களுக்கு எதிராகத் தேவர்கள் போர்செய்து, ஆரியர்களைப் பாதுகாத்ததற்காக, ஆரியர்கள் தேவர்களுக்கு அவ்வப்போது யக்ஞம் நடத்தி விருந்து படைக்க வேண்டும் என்பது முதல் வரம்.

ஆரியப் பெண்களை அனுபவிக்கும் முதல் உரிமை தங்களுக்கு வேண்டும் என்று தேவர்கள் ஆரியர்களைக் கேட்டார்கள். இது இரண்டாவது வரம். மிகப் பழங்காலத்திலேயே இது நடைமுறைக்கு வந்துவிட்டது. ரிக்வேதத்தில் (ஙீ_-85_40) இதுபற்றிய குறிப்பு காணப்படுகிறது.

அதன்படி ஓர் ஆரியப் பெண்ணை அனுபவிக்கும் முதல் உரிமை சோமனுக்கு; இரண்டாவது உரிமை கந்தர்வனுக்கு; மூன்றாவது அக்கினிக்கு; கடைசி உரிமை ஆரியனுக்கு. ஒவ்வொரு ஆரியப் பெண்ணும் பூப்படைந்தவுடன் யாராவது ஒரு தேவனிடம் அவன் அனுபவிப்பதற்காக ஒப்படைக்கப்-படுவாள். (நூல்: டாக்டர் அம்பேத்கர் எழுத்துக்-களும் பேச்சுக்களும் – தொகுதி -_ 4 பக்கம் 302)

மேற்கண்டவாறு அம்பேத்கர் அவர்கள் குறித்துள்ளமைக்கு ஏற்ப, ஆரியப் பெண்களுக்கு வழமையாக இருந்ததை மந்திரங்களாக்கி, இதரர்-களுக்கு குறிப்பாக, சூத்திரர்களுக்கும் திருமண காலத்தில் புரோகிதர் கூறுகிறார்.

சோம ப்ரதமோ

விவிதே கந்தர்வோ

விவித உத்தர:

த்ருத்யோ அக்நிஷ்டேபதி

துரியஸ்தே மனுஷ்யஜா

ஆரியப் பண்பாடும் ஒழுக்கமும் இவ்வளவு மோசமாக இருப்பதைத் தமிழர்களோ தன்மானமுள்ள எவ-ருமோ ஏற்க முடியுமா? அதை ஒழிப்ப-தற்கே சுயமரியாதைத் திருமணத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தோற்று-வித்தார்!

(கி. வீரமணி அவர்கள் எழுதிய சுயமரியாதைத் திருமணம் -_ தத்துவமும், வரலாறும் _ எனும் நூலிலிருந்து)

கற்பு என்பதும், ஒழுக்கம் என்பதும் ஆண் -_ பெண் இருவருக்கும் பொதுவானது என்பது தந்தை பெரியார் அவர்களின் ஒழுக்கவியலாகும்.

அதனைக் கொச்சைப்படுத்தும் சோ வகையறாக்களின் பண்பாடு என்பது -_ அம்பேத்கர் எடுத்துக்காட்டிய மேற்-கண்ட தன்மை கொண்டதாகும்.

எது நெறி? எது வெறி? என்பதைத் தெரிந்து கொள்வீர்!

[விடுதலை ஞாயிறு மலர்-17.04.2010]

மேதினம் என்பது…


இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தால் உற்சாகத்துடன், உவகை பொங்க கொண்டாடப்படும் ஒரு நாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு என தனித்தனி பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டு ஆனால் அனைத்து மத உழைப்பாளி மக்களும் கொண்டாடும் ஒரே தினம் மேதினம் மட்டுமே. அடையாளபூர்வ கொண்டாட்ட தினமல்ல இது. உரிமைகளை பெற்ற தினம். மனிதன் மிருகமாக வேலைவாங்கப்பட்ட நாட்களில் அவர்களது மனித உணர்வுகளை மீட்டெடுக்க புரட்சிகர சக்திகள் ஏற்படுத்திய போராட்டத்தின் விளைவு மேதினம். சிக்காகோ நகர் வீதிகளில் சிந்திய போராளிகளின் உதிரம் பெற்றுக்கொடுத்த வரலாற்று பரிசு இந்த தினம்.

ஆனால் 80 ஆண்டுகால உழைபாளிகளின் உதிரத்தால் பெறப்பட்ட உரிமைகள் மீண்டும் அடகு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் உலக நாடுகளை சூரையாட ஏகாதிபத்திய நாடுகள் போட்டியிடுகின்றன. ஆயுதத்தால் அல்ல சந்தையால் லாபத்தை கொழித்திட நமது நாட்டில் கடைவிரித்துள்ளன. அவர்களுக்கு குறைந்த கூலியில் தொழிலாளிகளை கொடுக்கும் சந்தையாக இந்தியா இருப்பதால்தான் பலநாட்டு கம்பெனிகள் இங்கு வருகின்றன. அவர்களுக்கு உரிமைகளை கேட்டு போராடும் மனிதர்கள் இருக்ககூடாது, அவர்களை ஒன்றினைக்கும் சங்கங்கள் இருக்கக்கூடாது எனவே தாங்கள் விரும்பும் அரசாங்கங்களை அவர்கள் நிறுவுகின்றனர். அமெரிக்க வங்கியில் வேலைசெய்த மூவரும், அதாவது சிவகங்கை சீமான் ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராகவும், அலுவாலியா திட்டகமிஷன் தலைவராகவும் இதுவரை தேர்தலிலேயே நிற்காத மன்மோகன்சிங் பிரதமராகவும் இருக்கிறார்கள்.

கண்ணிதுறை ஊழியர்களுக்கு 8 மணிநேரம் என்றால் என்னவென்று தெரியாது. ஒப்பந்த கூலி தொழிலாளிகளுக்கு இந்த நேரம் கிடையாது, திருப்பூர் பனியன் கம்பெனிகளில் சட்டபூர்வ வேலை என்பது கிடையாது. இந்தியாவில் குறிபாக தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள அந்நிய பண்ணாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கம் வைக்கவே உரிமை கிடையாது. அங்குள்ள உள்நாட்டு தொழிலாளிகளை அடித்து நொறுக்க நமது காவல்துறை விசுவாசத்துடன் பண்ணாட்டு கம்பெனிகளுக்கு வேலை செய்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஏலமிடப்படுகின்றன. சமூக பாதுகாப்பான வேலை என்பது கானல் நீராக மாறி வருகிறது. அனைத்தையும் தனியாரிடம் கொடுக்க நமது அரசாங்கங்கள் அலைபாய்கின்றன.

மேதினத்தில் சபதம் எடுப்போம். உரிமைகளை பாதுகாக்க! மக்களை திரட்டுவோம், மக்கள் போடராட்டத்தை தவிர மிகப்பெரிய ஆயுதம் எதுவுமில்லை.

வரலாறு…
(தோழர் முத்துக்கண்ணன் வலைதளத்திலிருந்து)
1806 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா நகரத்தில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். போராட்டத்திற்கு தலைமையேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்ற போது நாளன்றுக்கு 19 முதல் 20 மணி நேரம் வேலை வாங்கப்பட்ட தகவல்கள் வெளியானது.

1820 முதல் 1830 களில் பில்டெல்பியா நகர இயந்திர தொழிலாளர் சங்கம் தான் முதன் முதலில் 10 மணி நேர வேலை என்ற கோஷத்தை முன் வைத்தது, அதே நகரில் 1827ல் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் இந்த கோரிக்கைக்காக வேலைநிறுத்தத்தை நடத்தியது. இதன்பின்பு தான் 10 மணி நேர வேலை என்ற கோரிக்கை அனைத்து தரப்பினராலும் பிரதானமாக பார்க்கப்பட்டது.

நியூயார்க் நகரில் ரொட்டி தொழிலாளர்கள் இதே காலத்தில் சுமார் 20 மணி நேரம் எகிப்திய அடிமைகளை விட கேவலமான முறையில் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டனர். 1837ல் வேன்பியுரன் தலைமையிலான அரசாங்கம் பத்து மணி நேர வேலைநாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இது போராடிய தொழிலாளர்களின் மத்தியில் புதிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்தது. பல தொழிற்சாலைகளில் இக்கோரிக்கை வெற்றியடைய தொழிலாளர்கள் உடனே 8 மணி நேர வேலை கோஷத்தை முன் வைத்தனர்.

8 மணி நேர வேலைக்கான கோஷத்தை முன் வைத்து வளரும் நாடுகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆஸ்திரேலியாவில் கட்டிட தொழிலாளர்கள் 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்ற கோரிக்கையை முன் வைத்து 1858ல் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். 1884 களில் அமெரிக்காவில் உருவான 8 மணி நேர இயக்கம் தான் மேதினம் உருவாக காரணமாக அமைந்தது. இதற்கு ஒரு தலைமுறை முன்பே இக்கோரிக்கைக்காக அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடைபெற்ற 1861-62 காலத்தில் தேசிய தொழிற்சங்கம் தொழிலாளி வர்க்கத்தின் போர்குணமிக்க ஸ்தாபனமாக போராடியது.

1866ல் தேசிய தொழிற்சங்கத்தின் முதல் மகாநாடு அமெரிக்கா முழுமைக்கும் 8 மணி நேர வேலைநாள் என்பதை சட்டமாக அறிவிக்க வேண்டும். அப்போது தான் முதலாளித்துவ அடிமைத்தனத்தில் இருந்து நாட்டின் உழைப்பு சக்தியை விடுவிக்க முடியும். இந்த மாபெரும் பலனை அடைய நாம் நம்முடைய சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி போராட தீர்மானிக்கிறோம் என தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதனால் தான் இரண்டாவது இன்டர் நேஷனல் 1889ல் பாரிஸில் நடைபெற்ற போது மே முதல் நாள் என்பது தொழிலாளர்கள் தங்கள் அரசியல் மற்றும் தொழிற்சங்கத்தின் மூலம் கொடுக்க வேண்டிய முக்கிய அரசியல் கோரிக்கை 8 மணி நேர வேலைக்கான போர் குரலாக ஒலிக்க வேண்டிய தினம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு 1884 சிக்காகோ நகரில் நடைபெற்ற தொழிலாளர் மகாநாட்டில் 1886 மே முதல் நாளை 8 மணி நேர வேலைக்கான தினமாக அறிவிக்க தயாரிப்பு பணிகளை துவக்கிடுவது என்ற அறைகூவலுக்கு இணங்க அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. அந்த மூன்றாண்டுகளும் போராட்ட களமாக காட்சி அளித்தது. சாலை, ரயில்வே, நகராட்சி, இயந்திரத் தொழிலாளர்கள், பென்சில்வேனியா சுரங்க தொழிலாளர்கள் என பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்தது.

1873 களில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவும், வேலை இல்லா திண்டாட்டமும், மக்களின் துன்பமும் குறைவான வேலைநாளுக்கான போராட்டத்திற்கு உந்து சக்தியாக அமைந்தது. 1881ல் 500 வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது 1886ல் 11562 ஆக உயர்ந்தது. வேலைநிறுத்தத்தின் மையமாக சிக்காகோ நகரமும், இதர பகுதிகளில் குறிப்பாக நியூயார்க், பால்டிமோர், வாஷிங்டன், மில்வாக்கி, சின்சிநாட்டி, செயிண்ட் லூயிஸ், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களில் அதிக அளவில் பங்கேற்றது.

1886 மே 1ம் தேதியன்று சிக்காகோ நகரம் தனது வரலாற்றில் ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் கருவிகளை கீழே வைத்துவிட்டு தெருவுக்கு இறங்கி தங்களது மாபெரும் வர்க்க ஒற்றுமையை காட்டிய காட்சியை கண்டது. சிக்காகோ நகரம் மட்டுமல்ல உலகமே கண்டது. தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகள் மற்றும் அரசு எந்திரம் இணைந்து தொழிலாளர்களை கைது செய்தது. போர்குணமிக்க தலைவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் இறங்கியது. அமைதியான முறையில் போராட்ட களத்தில் நின்ற தொழிலாளர்களை காவல்துறை சுற்றி வளைத்து தாக்கியது. அதில் ஏற்பட்ட கலவரத்தையட்டி பல தொழிலாளர்கள் காவல்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு தங்களது உயிரையும், குருதியையும் தந்தனர். தொழிற்சங்க தலைவர்கள் பலர் தூக்கு கயிற்றை முத்தமிட்டனர். அவர்களின் அந்த மகத்தான தியாகமே மேதினத்தை தொழிலாளர்களின் உரிமை தினமாக உலகம் முழுவதும் அனுஷ்டித்து வருகிறது.