2009 ம் ஆண்டின் சிறந்த குழப்பவாதி யார்?
சந்தேகமேயில்லாமல் காங்கிரஸ்தான். தெலுங்கானா பிரச்சினையில் அவர்கள் குழப்பியது போல தெளிவாக குழப்ப வேறு யாராலும் முடியாது.
ஒரு குற்றவாளி தேசியவாதியாக மாற என்ன செய்யவேண்டும்?
சிபு சோரனை கேட்டால் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தால் போதும் என்கிறார்.
பணம் பாதாளம் வரை பாயுமா?
இப்போதெல்லாம் வாக்கு பதிவு இயந்திரம் வரை பாய்கிறது.
பாலியல் சர்ச்சையில் சிக்கிய என்.டி. திவாரி உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன சொல்வீர்கள்?
பா.ஜ.க வில் சேர்ந்துவிட சொல்வேன். கர்நாடகாவில் ரேணுகாச்சார்யா அமைச்சரானதை போல அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஈழப் பிரச்சினையில் தி.மு.க வின் நிலைப்பாடுப் பற்றி?
பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்.
இடஓதுக்கீட்டின் காரணமாக தகுதி இரண்டாம்பட்சமாகிறது என்று சிலர் புலம்புகிறார்களே?
2006 ம் ஆண்டு நான் பெங்களூரில் பணியில் இருந்தபோது IIT மற்றும் IIM போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தருவதாக அறிவித்தபோது அதனால் தகுதி அடிப்படுகிறது என்று புலம்பிய கன்னட உயர்சாதியினர், 2 வருடம் கழித்து அரசியல் இடஒதுக்கீட்டினால் கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து (ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட குறைந்தபட்சம் 1500 – 2000 ஆண்டு பழமையான இலக்கியங்கள் அம்மொழியில் இயற்றப் பட்டிருக்க வேண்டும் என பல தகுதிகள் வேண்டும்) வழங்கப் படடபோது வரவேற்றனர். ஆக இடஒதுக்கீட்டினால் அவர்களுக்கு லாபம் எனும் பட்சத்தில் தகுதி பற்றிய கேள்வி எல்லாம் எழாது.
கமலிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி?
அதை சுப.வீ ஏற்கனவே கேட்டுவிட்டார். (நீங்கள் யார்? பெரியாரின் பிள்ளையா? பெரியவாளின் சிஷ்யரா?)
ரயில்வே அமைச்சராக மம்தாவின் செயல்பாடு?
பாட்டெழுதி பேர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். மம்தா இரண்டாம் வகை.
பொதுவிடத்தில் மத உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள் பற்றி?
மதஉணர்வு என்பது மர்ம உறுப்பு போன்றது. என் வீட்டுக்குள் நான் அம்மணமாக இருக்கலாம். பொதுவிடத்தில் அப்படி இருந்தால் அநாகரிகம்.
காங்கிரஸ் – பா.ஜ.க ஒப்பிடுக?
ஒன்று பார்ப்பனியத்தை தேவைப்பட்டால் பயன்படுத்தும், மற்றொன்று பார்ப்பனீயத்தை எல்லாவற்றிற்கும் பயன் படுத்தும்.
0.000000
0.000000