“60கோடி அலைபேசி இணைப்புகள் உள்ள இந்தியாவில் எப்படி 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமையில் உள்ளார்கள் என ஏற்றுக்கொள்ளமுடியும்”


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூவாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று பின்னர் தேசிய அளவில் தகிடுதத்தம் செய்த மான!மிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஜவகர்லால் பல்கலைகழகத்தில் காங்கிரசு கட்சியின் உட்பிரிவான இந்திய தேசிய மாணவர் அமைப்பின் கூட்டம் ஒன்றில் பேசுகையில் “60கோடி அலைபேசி இணைப்புகள் உள்ள இந்தியாவில் எப்படி 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமையில் உள்ளார்கள் என ஏற்றுக்கொள்ளமுடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைக்குடி செல்வந்தரும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவருமான ப.சிதம்பரத்திற்கு ஏழ்மை, வறுமைக்கோடு என்றால் இப்படி தான் புரியும். ப.சிதம்ப‌ரத்தின் கூற்று முற்று முழுதான பொய் என்பதை இந்த கட்டுரை மிக தெளிவாக விளக்குகின்றது. இந்த கட்டுரை சங்கதி (sanhati) இணையதள உறுப்பினர்களால் எழுதப்பட்டது. தோழர்களின் வேண்டுகோளிற்கிணங்க இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

___________________________________________________________

60 கோடி அலைபேசி இணைப்புகள் அதன் உண்மை பற்றி விரிவாக‌ செல்லும் முன்னர், 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர் என்ற தரவு எப்படி வந்தது என பார்ப்போம்.2006 ஆம் ஆண்டு தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம். இந்த ஆணையம் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். தேசிய மாதிரி ஆராய்ச்சி நிறுவனம் (இதுவும் இந்திய அரசின் நிறுவனமே) வெளியிட்ட புள்ளிவிரங்களை அடிப்படையாக வைத்தே 77 விழுக்காடு மக்கள் 20 ரூபாய் வருமானம் பெறுகின்றனர் என்ற அறிக்கையை அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் அடிவருடியான ப.சிதம்பரத்திற்க்கு இது தெரியவில்லையா அல்லது தெரியாதது போல நடிக்கின்றாரா?

இந்த ஆய்வறிக்கையும், அதன் புள்ளிவிவரங்களும், அதை ஒட்டி பொருளாதார, அரசியல் வார இதழ்(ச‌வகர்லால் பல்கலைகழகத்தின் அரசியல் துறையினால் வெளியிடப்படும் வார இதழ்) என்ற இதழில் வந்த அறிக்கையும் இந்திய நவகாலனிய ஆதரவாளர்களுக்கு ஒரு பேரிடியாக வந்திறங்கியது. ஏனென்றால் இந்த ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டிருப்பது அரசின் உதவியினால் நடத்தபடுகின்ற‌ ஆணையம், அப்படியானால் இது வரை இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி திட்டங்கள் எல்லாம் படு தோல்வி மற்றும் ஏழ்மையில் வாடும் மக்களின் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.சமூக பிரிவினைகளிலும், பொருளாதார‌ ஏற்றதாழ்வுகளிலும், மிகக் கொடுமையான வறுமையிலுமே மிகப்பெரும்பான்மையான மக்கள்தொகை உழன்று வருவ‌தை இந்த அறிக்கை மிகத் துல்லியமாக காட்டியுள்ளது.

அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைகளுக்கு பக்க பலமாக இந்தியாவில் வறுமையில் வாழும்,அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் உள்ளன. வருமானம் மட்டுமல்ல அடிப்படை மருத்துவ வசதிகள், சுகாதாரமான இடங்களில் வாழ்தல் போன்றவையும் வறுமையை நிர்ணியக்கும் காரணிகள் என்று இந்திய அரசே ஒத்துக் கொள்கின்ற‌து.

இந்தியாவில் 37 கோடிக்கு பேர் அடிப்படை கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்கின்றனர் என்று சமீபத்திய ஐ.நா அறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் 3 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளில் 79 விழுக்காடு குழந்தைகள் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதிற்கும் கீழுள்ள குழந்தைகளில் 40 விழுக்காட்டினர் சத்தான உணவு இல்லாமல் இருப்பதாக கூறுகின்றன சமீபத்தில் எடுக்கப்பட்ட பல மருத்துவ ஆய்வு புள்ளிவிவரங்கள். மேலும் சத்தான உணவு இல்லாமலும், பசியால் மக்கள் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65ஆவது இடத்தில் இருப்பதாக ஐ.நாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ப.சிதம்பரத்தின் மக்கள் வளர்ச்சிக்கான அளவுகோலாக அலைபேசி இணைப்புகளை இந்தியாவில் எடுத்துக்கொள்ள முடியாது என உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் இந்த‌ வாதத்தை மிகவும் பெருமையோடு அந்த கூட்டத்தில் எடுத்துவைத்துள்ளார். மேலும் கேள்வி எழுப்பிய அந்த பல்கலைகழக மாணவனுக்கு சில பொருளாதாரயியலையும் போதித்துள்ளார். “நீங்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணராவதற்கு நான் உதவமுடியும்” என மிகவும் கம்பீரமாக கூறியுள்ளார். ப.சிதம்ரத்தின் இந்த கூற்று எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை விளக்க வேண்டியுள்ள‌து. 60 கோடி அலைபேசி இணைப்புகள் வறுமை குறைந்து விட்டதற்கான ஒரு அடையாளமா என்பதை பற்றிய விரிவான ஆய்வை நாம் இங்கே காணப்போகின்றோம். நாம் இதைச் சொல்லவில்லை என்றால் எதிர்காலத்தில் இவர்கள் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை வைத்து வறுமையை கணக்கிட்டு வறுமையை ஒழித்து விடுவார்கள், இதன் மூலம் உண்மையிலேயே வறுமையில் வாடும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

“ஏழ்மை நிலையிலுள்ள குறிப்பாக நகரப்பகுதிகளில் வாழும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களில் ஒரு பகுதியினர் அலைபேசி இணைப்புகளை கொண்டுள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர் சந்தையில் தங்களது வேலையை தக்கவைத்து கொள்வதற்கான அடிப்படை தேவையாக இந்த அலைபேசிகள் உள்ளதால் அவர்கள் இந்த அலைபேசி இணைப்பை வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.அலைபேசி கட்டணங்கள் அதிக அளவு குறைந்ததன் காரணமாக தான் ஏழ்மையில் வாழும் மக்கள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பது அதிகரித்துள்ளது. இந்த கட்டணம் சிறிய அளவு அதிகரித்தாலும் அவர்கள் அலைபேசி இணைப்பை துண்டித்துவிடுவார்கள்”.

“இதை எல்லாம் விடுத்து அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு வறுமை நிலையை கணக்கெடுத்தால் தில்லியில் வறுமையில் யாருமே இருக்கமாட்டார்கள் ஏனெனில் அவ்வளவு அலைபேசி இணைப்புகள் உள்ளன. தொலைபேசி இணைப்புகள் வேண்டுமென்றால் நடுத்தர வகுப்பினரை காட்டும் ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம்”.
இந்தியாவில் வறுமையில் வாடும் ஒருவருக்கு அலைபேசி ஆடம்பரமா?

இந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் சமீபத்தில் அஃகுயூரோ மற்றும் டீ சில்வாவின் கட்டுரை வெளிவந்துள்ளது (“தேர்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளில் அலைபேசி செலவுகள் தொடர்பான ஆய்வு”). இந்த கட்டுரை ப‌சிபிக் த‌க‌வ‌ல் தொட‌ர்பு குழும‌த்தின் க‌ல‌ந்தாய்வில் ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ க‌ட்டுரையில் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் இந்திய‌ ம‌க்க‌ள் தொகை க‌ண‌க்குக‌ளிலிருந்து நேர‌டியாக‌ பெற‌ப்ப‌ட்ட‌வை (இதே போன்ற‌ ஆய்வை ம‌ற்ற‌ வ‌ள‌ர்ச்சி அடையாத‌ நாடுக‌ளிலும் மேற்கொண்டுள்ள‌ன‌ர்). மாத‌ வ‌ருமான‌த்தையும், அதில் அலைபேசிக்கான‌ செல‌வுக்கும் உள்ள‌ தொட‌ர்பையும் புள்ளியிய‌ல் மூல‌ம் ஆராய்கின்ற‌து இக்க‌ட்டுரை. மேலும் அலைபேசியின் மூலமாக‌ அவ‌ர்க‌ள‌து வ‌ருமான‌த்தில் ஏற்ப‌டும் மாற்ற‌த்தையும் இந்த‌க் க‌ட்டுரை ஆராய்கின்ற‌து.

ஒரு எடுத்துகாட்டுக்கு ஒருவ‌ரின் வ‌ருமான‌ம் ஒரு விழுக்காடு குறைந்தால் அவ‌ரின் அலைபேசி உப‌யோக‌ம் எந்த‌ அள‌வுக்கு குறையும். இது போன்ற‌ ஆய்வுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள் க‌ண்ட‌ உண்மை அலைபேசி என்ப‌து இந்தியாவில் ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, பொருளாதாராயிய‌லின் வார்த்தையில் அது ஒரு அத்தியாவ‌சிய‌ பொருளாக மாறி உள்ள‌து. அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌ம் குறையும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டை நிறுத்திவிடுவார்க‌ள். அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌ம் உய‌ரும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டு விகித‌த்தில் எந்த‌வொரு பெரிய‌ மாற்ற‌மும் இருக்காது என்கிற‌து ஆய்வு முடிவுக‌ள்.
இந்தியாவில் வ‌றுமையில் வாழும் ஒருவ‌ர் கூட‌ அலைபேசி இணைப்பு கொள்ள‌ முடியும் என்ப‌து உண்மைதானா?

இந்த‌ கேள்விக்கு பதில‌ளிக்கும் முன் இந்திய‌ அலைபேசி இணைப்புக‌ளின் அப‌ரிமித‌மான‌ வ‌ள‌ர்ச்சியை நாம் பார்த்து விடுவோம். இந்திய த‌க‌வ‌ல் தொட‌ர்பு ஒழுங்குமுறை ஆணைய‌த்தினால் (TRAI) வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ல‌ அறிக்கைக‌ளிலிருந்து மேலே உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் பெற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

2006 லிருந்து 2007ஆம் ஆண்டில் அலைபேசி இணைப்புக‌ள் க‌ணிச‌மான‌ அள‌வு உய‌ர்ந்துள்ள‌தை அட்ட‌வ‌ணையிலிருந்து நாம் காணலாம். இத‌ற்கு பின்னால் உள்ள‌ கார‌ண‌ங்க‌ளை ஆராய்ந்து ‍‍‍‍‍‍ “Vodafone” நிறுவ‌ன‌ம் ஒரு அறிக்கையை ச‌ம‌ர்ப்பித்துள்ள‌து. ‌ மிக‌ பெரிய‌ அள‌வில் இந்த‌ அலைபேசி இணைப்புக‌ள் அதிக‌மான‌த‌ற்கு “அலைபேசி க‌ட்ட‌ண‌ங்க‌ள் மிக‌ பெரிய‌ அள‌வில் குறைந்த‌தே” கார‌ண‌ம் என்கிற‌து அந்த‌ அறிக்கை.
அறிக்கையிலிருந்து:

அலைபேசியில் ஒருவ‌ரிட‌ம் பேசுவ‌தற்கான‌ ஒரு நிமிட‌ க‌ட்ட‌ண‌ம் ரூபாய் 15.30 (1998) லிருந்து ரூபாய் 0.68(2010) குறைந்துள்ள‌து. இந்த‌ 98 விழுக்காடு க‌ட்ட‌ண‌ குறைவு என்ப‌து உண்மையில் மிக‌ப் பெரிய‌ க‌ட்ட‌ண‌ குறைப்பாகும். மேலும் மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும்(Pre paid) வ‌ச‌திக‌ளும், அலைபேசியின் விலை ரூபாய். 1000ற்க்கும் கீழீருந்த‌தும் ஒருவ‌ர் அலைபேசி இணைப்பை எடுப்ப‌த‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தை மேலும் குறைத்து, இத‌னால் இந்த‌ ச‌ந்தை மேலும் விரிவ‌டைந்த‌து. இது ம‌ட்டும‌ல்லாம‌ல் அலைபேசிக‌ளுக்கு மாத‌ த‌வ‌ணையில் ப‌ண‌ம் செலுத்தும் முறையும் அலைபேசி விற்ப‌னையாள‌ர்க‌ளால் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் அவ‌ர்க‌ள் செலுத்தும் மாத‌ த‌வ‌ணை ஒரு மிக‌ப் பெரிய‌ அள‌வில் இல்லாம‌ல் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌த்திற்குள் வ‌ந்த‌து. ரூபாய் 10 என்ற மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் வ‌ச‌திக‌ளும் பெருகின‌. இந்த‌ முன் கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் திட்ட‌த்தில் “வாழ்நாள் இறுதி வ‌ரை”(Life time) அழைப்புக‌ள் என்ற‌ திட்ட‌ம், ஒரே அலைவ‌ரிசைக்குள் பேசினால் ச‌லுகை விலை போன்ற‌ திட்ட‌ங்க‌ளும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. புதிய அலைபேசி இணைப்புக‌ளில் 95 விழுக்காடு முன் கூட்டி ப‌ண‌ம் செலுத்தும் திட்டத்தில் உள்ள‌வ‌ர்க‌ள் என்ப‌து ஆச்ச‌ரிய‌மான‌ ஒன்ற‌ல்ல‌. இது மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் த‌ன‌து ப‌ங்கை 76 விழுக்காட்டிலிருந்து(2007) 85 விழுக்காடாக‌(2008 இறுதி வ‌ரை) அதிக‌ப்ப‌டுத்தி உள்ள‌து. (அறிக்கை ப‌க்க‌ எண்.9)

இந்த‌ அறிக்கையில் உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை வைத்து நமக்கு அறிய கிடைப்பது என்ன்வெனில் இந்தியாவில் சாதாரண பொதுமக்கள் வெறும் தொட‌ர்புக்கு ம‌ட்டும் ஒரு சாதார‌ண‌ அலைபேசி இணைப்பை பெறுவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு ஆகும் என்ப‌தே.

ஒரு அலைபேசியும், வாழ்நாள் இறுதி வ‌ரை அழைப்புக‌ள் உள்ள‌ இணைப்பிற்க்கு ரூபாய் 1,000ற்க்கும் கீழே தான் தேவை, இதுவும் மாத‌ த‌வ‌ணைக‌ளில் செலுத்தினால் போதும். மேலும் இணைப்பை தொட‌ருவ‌த‌ற்காக‌ மாத‌ம் ரூபாய்.10 ம‌ட்டுமே போதும்( Vodafone அறிக்கையின் ப‌டி சாதார‌ண‌ ம‌க்க‌ளின் ச‌ராச‌ரி மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய். 250) இதில் வ‌ருகின்ற‌ அழைப்புக‌ள் ம‌ட்டுமே போதும் என்றால் மாத‌க‌ட்ட‌ண‌மே தேவை இல்லை. இது போன்ற‌ இணைப்புக‌ளை ஒரு குடும்ப‌த்தில் உள்ள‌ ஒருவ‌ரோ, இருவ‌ரோ வைத்து கொள்ள‌ முடியும், இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு நாளுக்கு ஆகும் செல‌வு ரூபாய்.20. இந்த‌ அறிக்கையை நாம் கிராம‌புற‌ , ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ இணைப்புக‌ள் எவ்வ‌ள‌வு, ஒவ்வொரு அலைவ‌ரிசைக்கும் எவ்வ‌ளவு இணைப்புகள் உள்ள‌து என‌ பிரித்தும் பார்க்க‌லாம்.

உதார‌ண‌த்திற்க்கு ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தியுட‌ன் ஒப்பிட்டால் கிராம‌ப் ப‌குதியிலுள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தி 6 ம‌ட‌ங்கு குறைவு.மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் ந‌க‌ர்புற‌த்தின் ப‌ங்க‌ளிப்பு தோராய‌மாக‌ 80 விழுக்காடு. மேலும் ஒரு நாளைக்கு ரூபாய்.20ற்கும் குறைவாக‌வே பெரும்பான்மையான‌ அலைபேசி உரிமையாள‌ர்க‌ள் செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ர்.

இந்த‌ அறிக்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்வ‌து இந்தியாவில் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு இங்கு வாழும் ம‌க்க‌ளின் வ‌ள‌ர்ச்சியை தீர்மானிப்ப‌து த‌வ‌றாக‌வே முடியும். இதை இவ்வாறு கூற‌லாம் அதாவ‌து ந‌ம‌து ச‌மூக‌த்தில் இந்த‌ அலைபேசி நிறுவ‌ன‌ங்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ எல்லா நிலையில் உள்ள‌ ம‌க்க‌ளிட‌மும் சென்று விட்ட‌ன‌. அலைபேசி க‌ட்ட‌ண‌ விகித‌ம் 10 விழுக்காடு அதிக‌ரித்தால் 23 விழுக்காடு வாடிக்கையாள‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை புற‌க்க‌ணித்து விடுவார்க‌ள்( Vodafone அறிக்கை ப‌க்க‌ எண்.14). தேவையின் அடிப்ப‌டையில் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பினும் ஒரு சிறிய‌ க‌ட்ட‌ண‌ மாற்ற‌ம் கூட‌ அவ‌ர்க‌ளின் அலைபேசி ப‌ய‌ன்பாட்டை வெகுவாக‌ குறைத்து விடும்.

இறுதியாக‌ நாம் இவ்வாறு கூற‌லாம். த‌ன்னுடைய‌ பிற‌ அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளில் ஒன்றை த‌விர்ப்ப‌த‌ன் மூல‌ம் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெற‌ முடியும், ஆனால் அத‌ன் க‌ட்ட‌ண‌ விகித‌த்தில் ஏற்ப‌டும் சிறு அதிக‌ரிப்பு கூட‌ அவ‌ர்க‌ளை அத‌ன் ப‌ய‌ன்பாட்டிலிருந்து முற்றிலுமாக‌ வெளியேற்றி விடும்.
வருடம் அலைபேசி (கோடி பேர்) தொலைபேசி (கோடி பேர்)
2003 1.3 4.148
2004 3.360 4.258
2005 5.221 4.591
2006 9.000 4.975
2007 16.253 4.039
2008 26.109 3.942
2009 39.176 3.796
2010 58.432 3.696

அலைபேசி/தொலைபேசி பயனாளர்கள் 2003 முதல்
ஏன் அலைபேசி இணைப்பு இந்தியாவில் மிக‌ வ‌றுமையில் வாடும் ம‌க்க‌ளுக்கு மிக அத்தியாவ‌ச‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து ?

மேலே கூறிய‌வ‌ற்றிலிருந்து ந‌ம‌க்கு தெளிவாக‌ தெரிவ‌து என்ன‌வென்றால் அலைபேசி இணைப்பு வ‌ள‌ர்ச்சிக்கான‌ ஒரு காரணி இல்லை, த‌ன‌து வேலைக்காக‌வும் ம‌ற்ற‌ தேவைக‌ளுக்காகவும் தேவைப்ப‌டும் ஒரு அடிப்ப‌டை பொருள். இங்கு நாம் முக்கிய‌மாக‌ பார்க்க‌வேண்டிய‌து என்ன‌வெனில் இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளே மிகப் பெரும்பான்மையாக‌ (93%) உள்ள‌ன‌ர். இதிலும் பெரும்பான்மையின‌ர் த‌ங்க‌ள‌து வ‌ருமான‌த்தை எவ்வாறு ச‌ரியாக‌ செல‌வு செய்வ‌து என்ப‌தில் மிக‌வும் க‌வ‌ன‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள். இதில் ஒரு ப‌குதியின‌ர் அலைபேசி இணைப்புக‌ளுக்கான‌ க‌ட்ட‌ண‌ம் மிக‌வும் குறைவாக‌ ஆன‌ பொழுது அதை உப‌யோக‌ப‌டுத்த‌ தொட‌ங்கிவிட்ட‌ன‌ர் அதுவும் கூட‌ த‌னது வேலை சார்ந்த‌ தொட‌ர்புக‌ளுக்கு ம‌ட்டும். இவை பெரும்பான்மையான‌ ஆய்வாளர்க‌ளால் உறுதி செய்ய‌ப்ப‌ட்டும் உள்ள‌து. குர்கானில் உள்ள‌ அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளின் நிலை ப‌ற்றி‌ ச‌மீப‌த்தில் வெளிவ‌ந்த ஆய்வுக் குறிப்பிலும் இது குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. (http://sanhati.com/excerpted/2320/)

அமைப்புசாரா தொழிலாள‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து நிர‌ந்த‌ர‌மில்லா வேலைத் த‌ன்மையின் காரண‌மாக‌வும், தனக்கு கிடைத்துள்ள‌ வேலையை தக்கவைத்து கொள்வதற்கும் அலைபேசியை உப‌யோகிக்க‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இதை ஏதோ அவ‌ர்க‌ளுக்கு அலைபேசியில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பு கொண்டு பேச‌ நிறைய‌ நேர‌ம் உள்ள‌தைப் போல‌ எண்ணிக் கொண்டு இதை வ‌ள‌ர்ச்சியின் ஒரு கார‌ணியாக‌ க‌ருதுவ‌து த‌வ‌று. வ‌ள‌ர்ந்து வ‌ரும் அமைப்புசாரா தொழிற் ச‌ந்தையில் த‌ன‌து வேலையை த‌க்க‌வைத்துக் கொள்ள‌வும், புதிய‌தாக‌ வேலைக்கு சேர‌வும் அலைபேசி செல‌வுக‌ள் த‌விர்க்க‌முடியாத‌ ஒன்றாக‌ மாறிவிட்ட‌ன‌.

இத‌ற்கு நிக‌ரான‌ ஒரு உதார‌ண‌த்தை நாம் வ‌ட‌ அமெரிக்காவில் பார்க்க‌ முடியும், தானிருக்கும் இட‌த்தில் இருந்து வேலைக்கு செல்லும் இட‌த்திற்க்கு அர‌சு போக்குவ‌ர‌த்துக‌ளோ, த‌னியார் போக்குவ‌ர‌த்துக‌ளோ இல்லாத‌ ப‌ட்ச‌த்தில் அங்கு ம‌கிழுந்து வாங்குவ‌தற்கு ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ள் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். இங்கே ம‌கிழுந்து என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, அத்தியாவ‌சிய‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து. இதை போல‌ தான் இந்தியாவில் அலைபேசி இணைப்பு என்ப‌து சித‌ம்ப‌ர‌ம் கூறுவ‌து போல‌ ஆட‌ம்ப‌ரத்திற்காக‌ அல்ல‌, அத்தியாவ‌சிய‌த்திற்காக‌வே. அமைப்புசாரா தொழில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெறுகின்ற‌ன‌ர். இது ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ருத்துவ‌ம், க‌ல்வி போன்ற‌ அடிப்ப‌டை தேவைக‌ள் த‌னியார் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டுவிட்ட‌தால் அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌த்தில் பெரும்பான‌மையை இவை பிடுங்கி விடுகின்ற‌ன‌‌. இவை எல்லாம் இந்திய‌ பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி திட்ட‌ங்க‌ளால் சமீபத்தில் ந‌டைபெற‌ ஆர‌ம்பித்துள்ள‌வைகள் மட்டுமே. (இது தொடர்ந்தால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோச‌மாக இருக்கும்)

உதார‌ண‌த்திற்கு ந‌க‌ர‌ப்ப‌குதியில் வாழுகின்ற‌ ஐந்து பேர் கொண்ட‌ ஒரு குடும்ப‌த்தை எடுத்துக்கொள்வோம் (ஒரு ஆண், ஒரு பெண், இர‌ண்டு குழ‌ந்தைக‌ள், ஒரு முதிய‌வ‌ர்). இங்கே அந்த‌ குடும்ப‌த்தின் மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய்.2000. அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தில் இர‌ண்டு அலைப்பேசி இணைப்புக‌ள்(ஒன்று கண‌வ‌ரிட‌ம், இன்னொன்று ம‌னைவியிட‌ம்). க‌ண‌வ‌ன் அன்றைய தேதியில் காலியாக‌‌ உள்ள‌ வேலைக‌ளைப் ப‌ற்றி தெரிந்துகொள்வ‌த‌ற்கும், ம‌னைவி த‌ன‌க்கு கிடைக்கும் வேலைக‌ள் (ஏதாவ‌தோரு வீட்டில் துணி துவைப்ப‌து, வீட்டை தூய்மைப்ப‌டுத்துவ‌து) ப‌ற்றி தெரிந்து கொள்வ‌த‌ற்கும் உப‌யோக‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு மாத‌ம் ரூபாய் 200 செலவாகின்ற‌து, இதை அவ‌ர்க‌ள் ஏதாவ‌தொரு வேளை உண‌வை குறைப்ப‌த‌ன் மூல‌ம் ச‌ம‌ப்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌ர்.

இந்த‌ ஆய்வுக்க‌ட்டுரை மூல‌ம் நாம் அறிய‌ வ‌ருவ‌து இந்தியாவில் அலைபேசி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல, ஒரு நாளைக்கு ரூபாய்.20 அல்லது அதற்கு கீழ் வருமானம் கொண்ட‌ ஏழை கூட இங்கே அலைபேசி இணைப்பை பெற முடிகின்ற அளவிற்க்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றது. அமைப்பு சாரா தொழில் வேலைவாய்ப்பில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஒரு அத்தியாவ‌ச‌ பொருள் அலைபேசி இணைப்பு.
தொலைபேசி (land lines) இணைப்புக‌ள் ந‌டுத்த‌ர‌ வ‌குப்பை காட்டும் ஒரு கார‌ணி.

த‌க‌வ‌ல் தொட‌ர்புக‌ளின் மூல‌மாக‌ ந‌டுத்த‌ர‌ வகுப்பை ஒருவ‌ர் க‌ண‌க்கிட‌iவேண்டுமானால் தொலைபேசி இணைப்பு ஒரு ச‌ரியான‌ கார‌ணியாக‌ இருக்கும். ஒரே வீட்டிற்க்கு இர‌ண்டு தொலைபேசி இணைப்புக‌ள் இருப்ப‌து அரிதான‌ ஒன்று. இத‌னால் ஒருவ‌ரே அல்ல‌து ஒரு குடும்ப‌மே ப‌ல‌ இணைப்புக‌ள் கொண்டிருப்ப‌து இங்கே அரிது. ந‌ம‌க்கு என்ன‌ எண்ணிக்கை கிடைக்கின்றது?

நாம் தொலைபேசி இணைப்புக‌ள் ப‌க்க‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துபோது ந‌ம் கவனத்தில் படுவது. 50 விழுக்காடு இணைப்புக‌ள் அர‌சு நிறுவ‌ன‌ங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன‌‌. வெறும் 2 கோடி ம‌க்க‌ள் ம‌ட்டுமே தொலைபேசி இணைப்பை கொண்டுள்ள‌ன‌ர். ச‌ராச‌ரியாக‌ ஒரு குடும்ப‌த்திற்கு 5 பேர் வைத்து கொண்டால், 10 கோடி மக்க‌ள் தொலைபேசி இணைப்பு கொண்டுள்ள‌ன‌ர்.

இதே போல‌ மாத‌க் க‌ட்ட‌ண‌ம் செலுத்தும் அலைபேசி இணைப்புக‌ளை (Post paid) க‌ண‌க்கிட்டு பார்த்தால் மொத்த‌ இணைப்பில் 15 விழுக்காடு மட்டுமே த‌னி ந‌ப‌ர்க‌ளிட‌ம்(பொது ம‌க்க‌ளிட‌ம்) இருக்கும். இந்த‌ தோராய‌ க‌ணிப்பும் கூட‌ நாட்டில் உள்ள‌ ப‌ண‌க்கார, ந‌டுத்த‌ர‌ வ‌குப்பில் உள்ள‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையும் ஒன்றாக‌ உள்ள‌து. ( 2006ல் சென் குப்தா அறிக்கையை பார்க்க‌வும்).

வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ள்.
இந்த‌ நேர‌த்தில் நாம் வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ளைப் ப‌ற்றியும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உள்ள‌து.

உதார‌ண‌த்திற்கு 2007ன் இறுதியில் பாகிசுதானில் 100பேருக்கு 50பேர் அலைபேசி இணைப்புக‌ளை கொண்டிருந்த‌ன‌ர். இந்தியாவில் அன்று இருந்த‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கையுட‌ன் ஒப்பிட்டால் இது இரும‌ட‌ங்கு. ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி பாகிசுதான் இந்தியாவை விட‌ வ‌ள‌ர்ந்து விட்ட‌து என்றும், இந்தியா இப்போது தான் வ‌ள‌ர்ந்து கொண்டு வ‌ருகின்ற‌து என்ற‌ முடிவிற்கு தான் வ‌ர‌வேண்டும், ஆப்ரிக்காவைச் சுற்றி உள்ள‌ நாடுகளில் மட்டும் 60 கோடி அலைபேசி இணைப்புக‌ள் உள்ள‌ன‌. ம‌னித வள வ‌ள‌ர்ச்சியில் 134 வ‌து இட‌த்தில் உள்ள‌ இந்தியாவையும், 141வ‌து இட‌த்தில் உள்ள‌ பாகிசுதானை அந்த‌ ம‌ட்டிய‌லில் க‌டைசியில் உள்ள‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌து எப்ப‌டி ச‌ரியாகும்?

தில்லியில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கை தில்லியில் உள்ள‌ ம‌க்க‌ள் தொகையை விட‌ அதிக‌ம். ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி தில்லியில் வ‌றுமை முற்றிலுமாக‌ ஒழிந்திருக்க‌ வேண்டும். அவ்வாறா உள்ள‌து தில்லி?
(இதில் ஒரு நிறுவ‌னமோ, தனி நபரோ ப‌ல‌ இணைப்புக‌ளை கொண்டிருப்ப‌தெல்லாம் எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. எங்க‌ளை பொருத்த‌வ‌ரையில் மிக‌ முக்கிய‌மாக‌ ப‌ட்ட‌ கார‌ணிக‌ளை ம‌ட்டுமே இங்கே ஆராய்ந்துள்ளோம்.)
_______________________________________________________
ந‌ன்றி… ச‌ங்க‌தி (sanhati) இணைய‌த‌ள‌ம். மூலப்பதிவு ‍ …. http://sanhati.com/excerpted/2388/
________________________________________________________

அப்ப‌டின்னா அதெல்லாத்தையும் க‌ண‌க்கில‌ எடுத்தா!!!!!. மான‌! மிகு ப‌.சித‌ம்ப‌ர‌ம் 1984 தில்லி கலவரம் குறித்து தவறாக கூறியதை கண்டித்து அவரை ஒரு சீக்கிய பத்திரிகையாளர் செருப்பாலடித்து போல‌ இங்கு பொதும‌க்க‌ள் சிதம்பரம் கூறியுள்ள‌‌ இந்த‌ பொய்யிற்கு அவ‌ரை செருப்பால் அடித்தால் அது தப்பா???

தமிழாக்கம்: ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.

எவன்டா அவன் சவுண்டு கொடுக்கறது?


வெறி கொண்ட வலதுசாரி சானலான டைம்ஸ் நௌவுக்கே பொறுக்க முடியவில்லையா? அல்லது தனது கோர முகத்தை மறைத்துக் கொள்ள அந்த தொலைக்காட்சிக்கு இப்படி ஒரு அமெரிக்க எதிர்ப்பு சவடால் தேவைப்பட்டதா, தெரியவில்லை. அடேங்கப்பா, அமெரிக்க அரசை அம்பலப்படுத்தி விட்டது டைம்ஸ் நௌ.

விசயத்துக்கு வருவோம். இந்தச் செய்தியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள பறவைப்பார்வையில் சில விவரங்கள்.

போபால் நீதிமன்றம் கேசவ் மகிந்திராவை ஜாமீனில் விட்டதைத் தொடர்ந்து மறுபிறவி எடுத்த போபால் பிரச்சினையைக் கேள்விப்பட்டு, துணுக்குற்றுப்போன நமது பிரதமர் “யாரங்கே, போபால் வழக்கில் என்ன நடந்தது என்ற ரிப்போர்ட் பத்து நாளில் என் டேபிளுக்கு வரவேண்டும்” என்று உத்தரவிட்டு அமைச்சர் குழுவின் தலைவராக ப.சிதம்பரத்தையும் நியமித்தார். எட்டே நாளில் அறிக்கையை பிரதமரின் டேபிளுக்கு கொண்டுவந்தார் சிதம்பரம்.

இப்பேர்ப்பட்ட சுறுசுறுப்புக்கு காரணம் என்ன? இந்தோ அமெரிக்கன் சி.இ.ஓ ஃபோரம் அமெரிக்காவில் கூட இருந்தது. போபால் பிரச்சினை குறித்த இந்திய அரசின் அதிகாரபூர்வமான முடிவை, அந்தக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே அறிவிக்காவிட்டால் அமெரிக்க முதலாளிகள் அப்பிரச்சினையை அந்தக் கூட்டத்தில் கிளப்புவார்கள் என்பது இந்திய முதலாளிகளின் அச்சம்.

2001 இல் யூனியன் கார்பைடு நிறுவனத்தை டௌ கெமிக்கல்ஸ் வாங்கியது. 1984 இல் நடைபெற்ற விபத்து மற்றும் அதற்கான நிவாரணம் போன்றவையெல்லாம் யூனியன் கார்பைடுடன் முடிந்த்து. அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது டௌ கெமிக்கல்சின் முதல் வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள நிலம் அரசுக்கு சொந்தமானது. அது யூனியன் கார்பைடுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. அந்த நிலத்தை யூனியன் கார்பைடு ம.பி அரசிடம் ஒப்படைத்து விட்டதால், அங்கே குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான டன் இரசாயனக் கழிவுகளைச் சுத்தம் செய்வதும் (இதற்கான உத்தேச செலவு 150 கோடி ரூபாய்) அந்தக் கழிவுகளை வேறு எங்காவது கொண்டு சென்று அப்புறப்படுத்துவதும் தன்னுடைய பொறுப்பல்ல, ம.பி அரசின் பொறுப்புதான் என்பது டௌவின் இரண்டாவது வாதம்.

போபாலில் யூனியன் கார்பைடு ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறது. அந்த மருத்துவமனையை நடத்தும் செலவுக்கும் தான் பொறுப்பேற்க இயலாது. அதையும் அரசாங்கம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது டௌ கெமிக்கல்சின் மூன்றாவது வாதம்.

“கூடுதல் நட்ட ஈட்டை அரசே வழங்கும். ஆலையின் கழிவுகளை அரசே சுத்தம் செய்யும். மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும்” இவை மூன்றும் மேற்கூறிய பிரச்சினைகளில் சிதம்பரம் தலைமையிலான குழு அறிவித்த முடிவுகள்.

இந்திய அரசின் தரப்பிலிருந்து டௌ கெமிக்கல்சுக்கு மனவருத்தம் ஏற்படுத்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. டௌ கெமிக்கல்சுக்கு எதிராக இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல தனிநபர்கள் தொடுத்திருக்கும் வழக்குகளில் தன்னை இணைத்துக் கொள்வதற்கும் மன்மோகன் அரசு உறுதியாக மறுத்து வருகிறது. இப்படியெல்லாம் வழக்கு போட்டு தொந்திரவு செய்தால் அமெரிக்க முதலாளிகள் இந்தியாவில் மூலதனம் போடமாட்டார்கள் என்றும், அத்தகைய எல்லா வழக்குகளையும் மூட்டை கட்டிவிட வேண்டும் என்றும் ப.சிதம்பரம், கமல்நாத் ஆகியோர் பிரதமருக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.

ஆக, டௌ வுக்கு எதிராக இந்திய அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பதே உண்மை. தனக்கெதிராக எந்தவித நடவடிக்கையும் இந்தியாவில் எடுக்கப்படாதபோது, டௌ வுக்கு ஏன் கோபம் வருகிறது? நடவடிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் தனக்கு எதிராக இந்தியாவில் பேசுகிறார்களே அவர்கள் வாயையும் அடைக்கவேண்டும். அதுதான் டௌ எழுப்பும் பிரச்சினை.

போபால் பிரச்சினையை மையப்படுத்தி இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமொன்று, போபால் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் 50 பேரை அழைத்து வந்து, சென்ற ஆண்டு சென்னையில் உள்ள டௌ கெமிக்கல்ஸ் அலுவலக வாயிலில் ஒரு போராட்டம் நடத்தியது. தனக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதையும் தனது தொழிலுக்கு இடையூறு விளைவிப்பதையும் தடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டௌ கெமிக்கல்ஸ் ஒரு மனு தாக்கல் செய்ததுடன், போராடியவர்கள் 20 இலட்சம் ரூபாய் நட்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கும் தொடுத்த்து. ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்காக இந்தியக் குடிமகனின் கருத்துரிமையைத் தடை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தார் நீதிபதி சந்துரு. மேல்முறையீடு செய்து அந்த தீர்ப்புக்கும் ஒரு தடையாணை வாங்கி வைத்திருக்கிறது டௌ கெமிக்கல்ஸ். இது போன வருசத்துக் கதை.

தற்போது நாடாளுமன்றத்தில் போபால் பற்றி நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜும், மார்க்சிஸ்டுகளும் கொஞ்சம் சவுண்டு கிளப்பினர். பா.ஜ.க மற்றும் மார்க்சிஸ்டுகளின் சவுண்டு பற்றி அமெரிக்கா கவலைப்படுவதுமில்லை, கவலைப்படத் தேவையுமில்லை.

வேறு யார் “குரல்” எழுப்புவதைப் பற்றி அமெரிக்க அரசு மான்டேக் சிங் அலுவாலியாவிடம் கவலை தெரிவிக்கிறது? டௌ கெமிக்கல்சுக்கு எதிராக குரல் எழுப்புவதைக் கூட அமெரிக்க முதலீட்டாளர்களால் சகித்துக் கொள்ள இயலாது என்கிறார் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் துணைச் செயலர்.

அலுவாலியா பேசிய விசயம் உலகவங்கியிடம் கடன் வாங்குவது குறித்த பிரச்சினை. பேசியதோ பாதுகாப்புத் துறை துணைச்செயலரிடம். அவர் அளித்த பதிலோ அமெரிக்க கார்ப்பரேட் நிறவனங்களின் நலனை மட்டுமின்றி, இந்தியக் குடிமக்களின் ஜனநாயக உரிமையை நசுக்க கோருகிறது. அரசியல் வேறு, பொருளாதாரம் வேறு, இராணுவம் வேறு என்று கூறும் அறிஞர்களின் பார்வைக்கு இதனை சமர்ப்பிக்கிறோம்.

பாதிக்கப்பட்ட மக்களின் குமுறலை, இந்திய மக்களின் குரலை சித்தரிக்க அமெரிக்க அதிகாரி பயன்படுத்தும் வார்த்தையைக் கவனித்தீர்களா? NOISE!

போலி சுதந்திரம், மறுகாலனியாதிக்கம், அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொன்னால் உடனே முகம் சுளிக்கும் இந்திய யுப்பிகள் (yuppies) இதற்கென்ன சொல்வார்கள்? kewl dude…என்பார்களோ? அதை அர்னாப் கோஸ்வாமியிடம் சொல்லட்டும்.

ஆனானப்பட்ட அர்னாபுக்கே ஆத்திரம் வருகிறது என்றால் என்ன சொல்வது?

“டைம்ஸ்…. தே ஆர் சேஞ்சிங்..” என்ற பாப் டைலனின் பாடல் வரிதான் நினைவுக்கு வருகிறது.<a href="”>

ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?


மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி. ஆதி மனித இனம் தோன்றியபோதே மொழியறிவு அவனுக்கு எட்டியிருக்கவில்லை. அவனது பாதுகாப்பற்ற சூழல் இன்னொரு மனிதனிடம் தொடர்பு கொண்டே ஆகவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு அவன் கண்டு, கற்று, வளர்த்துக்கொண்டது தான் மொழி அதாவது பேச்சு.

இப்போது குரானின் ஒரு வசனத்தைப் பார்க்கலாம்.

“ஆதமே அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று சொன்னான். அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது… குரான் 2:33

ஆதம் என்பது அல்லா உருவாக்கிய முதல் மனிதன். தன் படைப்பின் பெருமையை தன் உதவியாளர்களுக்கு (வானவர்களுக்கு – மலக்குகளுக்கு) விளக்கும் வகையில் இந்தக்கதை குரானில் இடம்பெற்றிருக்கிறது. பூமியில் மனிதன் எனும் ஒரு குலத்தை வாழவைப்பதற்காக ஒரு மனிதனை களிமண் கொண்டு அல்லா படைக்கிறான். இதற்கு அவனது உதவியாளர்களில் சிலர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இதை மறுத்து அல்லா நானே எல்லாம் அறிந்தவன் என்பதை உணர்த்தும் பொருட்டு சில பொருட்களைக் காட்டி இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என தன் உதவியாளர்களைக் கேட்கிறான். அதற்கு அவர்கள் அல்லாவாகிய நீ எங்களுக்கு கற்றுத்தராத எதுவும் எங்களுக்கு தெரியாது என்கின்றனர். பின் முதல் மனிதனாகிய ஆதமிடம் இவைகளின் பெயர்களைக் கூறு எனப்பணிக்க அவர் அவைகளின் பெயர்களைக் கூறுகிறார்.

இங்கு கடவுளாகிய அல்லா நடத்தும் உரையாடலைப் புரிந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஆதி மனிதனாகிய ஆதம் பதிலளிக்கிறார், அவரின் பதிலை அல்லாவின் உதவியாளர்கள் கேட்டுப் புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் படி உலகின் முதல் மனிதன் ஆதம். இவ்வுலகில் அவர் பல்கிப் பெருகி அவரின் வழித்தோன்றல்களே இன்று உலகிலிருக்கும் அனைவரும். அந்த முதல் மனிதனாகிய ஆதமுக்கு பேசும் திறன் இருந்திருக்கிறது. அதுவும் பொருட்களை பிரித்தறிந்து தனிப்பட்ட பெயர்களில் அழைக்கும் அளவுக்கு பேச்சு வளமடைந்திருக்கிறது. ஆனால் இது சரியா? வரலாறு இதை ஒப்புகிறதா? இல்லை.

வரலாற்றில் முதன் முதலில் பேசியவர்கள் எனும் பெருமையை பெற்றிருப்பவர்கள் நியாண்டர்தால் மனிதர்கள். இன்றைய மனிதனான குரோ மாக்னன் இனத்திற்கு முந்திய இனம் நியாண்டர்தால் இனம். தோராயமாக இன்றைக்கு மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்து அழிந்த மனித இனம். இவர்கள் தான் வரலாற்றில் முதன் முதலில் பேசிய இனம் என்பதை இரண்டு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது, இஸ்ரேலில் கெபாரா எனும் இடத்திலுள்ள கார்மேல் மலைக் குகையில் யோயல் ராக் எனும் மானுடவியலாளரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில், தற்போதைய மனிதனுக்கு தொண்டையில் நாக்கின் சதையோடு இணைந்திருக்கும் ஹயாய்ட் எனும் சிற்றெலும்பும் காணப்பட்டது. தற்போதைய ஹயாய்ட் எலும்புக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாவது, பிரான்ஸில் லாஹினா எனும் இடத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன, அதில் மயிரடர்ந்த மிகப்பெரிய மாமதம் (உருவில் பெரிய யானை) போன்ற விலங்குகளின் எலும்புகளும் இருந்தன. இதுபோன்ற பெரிய விலங்குகளை திட்டமிட்டு வசிக்கும் இடத்திற்கு அருகில் விரட்டிவந்து வேட்டையாடியிருக்க வேண்டுமென்றால் எண்ணிக்கையில் அதிகமான மனிதர்கள் கூடியே செய்திருக்க முடியும். எனவே அந்த இனம் ஒருவகையில் பேசியிருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள். அவர்களும் கூட நம்மைப் போல் மொழி பேசியிருக்க முடியாது. ஆ, ஊ, ஈ போன்ற வல்லொலிகளையே இனம் பிரித்து மாற்றியோ சேர்த்தோ ஒருவிதமான ஒலிகளை எழுப்பி தமக்குள் எண்ணப் பரிமாற்றங்களை நடத்தியிருக்க வேண்டும்.

ஆதி மனித இனங்களான ஆஸ்டிரேலோபிதஸின், ஹெபிலைன், ஹோமோ எரக்டஸ் போன்ற இனங்களை அடுத்து தான் ஹோமோ செபியன் நியாண்டர்தாலிஸ் எனும் நியாண்டர்தால் மனிதர்கள் வருகிறார்கள், இதன் பிறகுதான் குரோ மாக்னன் எனும் தற்போதைய மனித இனமான ஹோமோ செபியன் செபியன்ஸ் வருகிறது. ஆக ஆதி மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துதான் மனிதன் பேசவே தொடங்கியிருக்கிறான். ஆனால் குரான் கூறுகிறது படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் பேசினார் என்று. குரானில் அந்த வசனத்திற்கு மேல் விளக்கமில்லை, அல்லா வந்து அறிவியல் கூறப்போவதில்லை. எனவே இஸ்லாமியர்கள் தான் இதற்கு விளக்கம் தரவேண்டியவர்கள்.

இப்போது குரானின் இன்னொரு வசனத்தைப் பார்க்கலாம்,

பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டிற்று, அவர் “அந்தோ! இந்த காகத்தைப் போல் கூட நான் இல்லாதாகிவிட்டேனே! அப்படி இருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே” என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார். குரான் 5:31

பூமியில் நிகழ்ந்த முதல் மரணமே கொலைதான் என்று குரான் இந்த வசனத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறது. ஆதி மனிதனான ஆதமின் மகன்களில் இருவர் தொடர்பான வசனம் இது. இருவரும் அல்லாவுக்கு வணக்கம் செய்கின்றனர் (பலியிடல்?) அதில் ஒருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மற்றொருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ஏற்றுக்கொள்ளப்படாதவர், ஏற்றுக்கொள்ளப்பட்டவரை அடித்துக்கொலை செய்து விடுகிறார். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்த போதுதான் அல்லா ஒரு காகத்தை அனுப்பி அதன் மூலம் பிணத்தை அடக்கம் செய்யும் முறையை கற்றுக்கொடுக்கிறார். இப்படிப் போகிறது அந்தக் கதை.

இந்த வசனத்தின் மூலம் நிறைய வியப்புகள் நமக்கு கிடைக்கின்றன. ஆதி மனிதர்கள் உயிர்பற்றி அறிந்திருக்கிறார்கள். ஒருவனை கொலை செய்துவிடமுடியும் அதாவது செயற்கையாக அவன் உயிரைப் போக்குவதன் மூலம் அவனை முடக்கிவிட முடியும் என்பது தெரிந்திருக்கிறது. தாக்கினால் அவன் உயிர் அவனைவிட்டு நீங்கிவிடும் என்பது தெரிந்திருக்கிறது. வெற்றி தோல்வி பற்றி தெரிந்திருக்கிறது. இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஈமச்சடங்கை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உலகின் முதல் மரணம் அல்லது முதல் கொலையின் பிறகு மனிதன் ஈமச்சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.

ஈமச்சடங்கு என்பது இறந்த மனிதர்கள் மீண்டும் வருவார்கள் அல்லது உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது, ஆன்மா திரும்பி வரும் போது உடல் பத்திரமாக இருக்க வேண்டும் எனும் நினைப்பில் உடலை பாதுகாக்கும் வழிமுறையில் வந்த சடங்குமுறை. இந்த முறையை மனித இனம் தோன்றி வெகு காலத்திற்கு பிந்திய மனிதர்களே கைக் கொண்டிருந்தனர். சீனாவில் சௌகௌடியன் பகுதியில் ஆய்வை மேற்கொண்டிருந்த டேவிட்சன் பிளேக் அவரைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் வெய்டன் ரேய்ஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த (பீகிங் மனிதர்கள் என்று பெயரிடப்பட்ட) மனிதர்கள் குறித்து உலகிற்கு தெரிவித்தனர். இவர்கள் மனித மாமிசத்தை உண்டவர்கள் என்பதையும் தம் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதாவது இவர்கள் இறந்த மனிதனுக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை மாறாக தின்றிருக்கிறார்கள்.

ஈமச்சடங்கு செய்வதையும் முதலில் நியாண்டர்தால் மனிதர்களே செய்திருக்கின்றனர். இஸ்ரேலின் டாபுன், ரஷ்யாவின் டெஷிக்டாஷ் போன்ற பகுதிகளில் நியாண்டர்தால்கள் ஈமச்சடங்கு செய்ததற்க்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆக வரலாற்றில் முதலில் ஈமச்சடங்கு செய்தவர்களும் நியாண்டர்தால்களே.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன. ஆதிமுதல் மனிதனிலிருந்து மனிதர்களுக்கு மொழியறிவு இருந்தது என்பதும், ஆதில் முதல் மனிதர்களிலிருந்தே ஈமச்சடங்கு நடைமுறையிலிருந்தது என்பதும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பொய் என்று தெரியவருகிறது. இறைவன் என இஸ்லாமியர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு உள்ள ஒரு ஆற்றல்தான் முகம்மதுவுக்கு குரானை கொடுத்தது என்றால் இதுபோன்ற பிழையான தகவல்கள் குரானில் இடம்பெற்றிருக்கக் கூடாது. எனவே குரானை முகம்மது தன்னுடைய தேவை கருதி ஆக்கம் செய்துவிட்டு அதன் நம்பகத்தன்மைக்காக அந்நேரத்தில் மக்களால் வணங்கப்பட்டுவந்த அல்லா எனும் கடவுளை சீர்திருத்தி பயன்படுத்திக்கொண்டார் என்பது தெளிவாகிறது. அன்று முகம்மதுவுக்கு தொல்லியல் குறித்த அறிவு இல்லை என்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் இன்று…?

பிறை பார்த்தல் என்னும் பிற்போக்குத்தனம்


இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ அல்லது அடுத்த வாரமோ, இஸ்லாமியர்கள் புனித மாதமாகக் கருதும் ரமலான் தொடங்கி விடும். நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, பூமியில் மோதவிருக்கும் ஒரு விண்கல், மோதும் நேரத்தினை மிகத் துல்லியமாக (வினாடிகள் உட்பட) அறிவிக்கும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது. ஆனால், ஒரு மாதத்தின் தொடக்கத்தைத் தீர்மானிப்பதில் இஸ்லாமியர்களுக்கிடையே பெரும் குழப்பம்.

ஒவ்வொரு ஊரிலும் டவுன் காஜி என்று ஒருவரும், சென்னையில் தமிழகத் தலைமை காஜி என்று ஒருவரும் இருப்பார்கள். அவர்கள்தான், பிறை பார்த்து, மாதத்தின் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இவர்களைத் தவிர ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பின் தலைமையும், அவர்கள் தனியாக பிறை பார்த்து, மாதத் தொடக்கத்தை அறிவிப்பார்கள். இங்கே ஏற்படும் குழப்பம்தான், ஒரே ஊரில் ஒரு பகுதியில் நோன்பு தொடங்கியும், இன்னொரு பகுதியில் நோன்பு தொடங்காமலும் இருக்கும் காரணம்.

தலைப்பிறையை கண்ணால் பார்த்தால் மட்டுமே, அதனை மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளவேண்டும் என்று சில ஹதீஸ்கள் இருப்பதாக சொல்வார்கள். முகம்மது வாழ்ந்த காலத்தில், அறிவியல் வளர்ச்சி இல்லாத நிலையில், இந்த நடைமுறைப் பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால், இன்று அறிவியலின் வளர்ச்சியின் மூலம் தலைப்பிறையை மிக எளிதாகக் கணிக்க முடியும். கணிக்க முடியும், ஆனால் கணிக்கக் கூடாது என்று இவர்கள் சொல்வதைப் பார்க்கும்போது “வரூஊம், ஆனா வராது” காமெடிதான் நினைவுக்கு வருகின்றது.

கணிக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் முக்கியமான காரணம், முகம்மது ‘கண்ணால் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்; அதனை மீறக்கூடாது என்பதாகும். முகம்மது சொன்ன பல விஷயங்களை இன்றைய சூழலுக்கு ஒத்துவராது என்று கூறிவிட்டு, தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு செய்துவருகின்றனர். உதாரணத்திற்கு, தனியாகவோ, இருவர் மட்டுமோ பயணிக்க முகம்மது தடை விதித்துள்ளார்; பயணம் செய்யும்போது மூன்று நபர்கள் பயணிக்க அனுமதி கொடுத்துள்ளார். ஆனால், இன்றைய சூழலில் பயணத்தின் போது, இத்தகைய தடையை யாரும் பொருட்படுத்துவதேயில்லை.

முகம்மதின் வாழ்க்கை நெறிமுறைகளை, அப்படியே பின்பற்ற வேண்டுமானால், இன்றும் வெளியில் செல்லவேண்டுமானால், கூட இருவரை அழைத்துச் செல்லவேண்டும்.அது அன்றைய சூழல், இன்றைய சூழலுக்கு அது பொருந்தாது என்று கூறிவிட்டு செல்ல முடிகின்றது. ஆனால் பிறை விஷயத்தில், அறிவியல் வளர்ச்சியை புறம்தள்ளி, ஹதீஸை முன்னிலைப்படுத்தி தங்களது பிற்போக்குத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர்.

அடுத்தது, உலகம் முழுதும் ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது; உலகின் ஒரு பாதி பகலாக இருக்கும்போது; இன்னொரு பாதி இரவாக இருக்கும். அதனால், ஒரே நேரத்தில் நோன்பு வைப்பதோ, தொழுவதோ சாத்தியமில்லை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் ‘beating around the bush’ என்று சொல்லுவார்கள், அதற்கு மிகச்சரியான உதாரணம், இவர்களது இந்த உதாரணம்தான். அனைவரும் கேட்பது, ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நாட்களில் மாதம் தொடங்குகின்றதே; இவர்கள் சொல்லுவது, ஒரே நேரத்தில் மாதம் தொடங்காது.

கிருத்துவர்கள் உலகம் முழுவதும் டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள். சர்வதேச தேதிக் கோட்டினை (International Date Line), அளவீடாகக் கொண்டு, ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் கிருத்துவர்கள், தங்கள் நாட்டு நேரப்படி (Local Time Zone), கிருஸ்துமஸ் கொண்டாடுவார்கள்.

அதுபோல், இஸ்லாமியர்களும் தங்கள் மாதங்களின் தொடக்கத்தை, சர்வேதச தேதிக் கோட்டின் அடிப்படையில், உள்ளூர் நேரப்படி கணக்கிட்டுக்கொள்ளலாம். ஆனால், சர்வேதச தேதிக் கோடு ஒன்று இருப்பதையே மறைத்துவிட்டு, சவூதியை அளவீடாகக் கொண்டு கணக்கிடும்போது பல குழப்பங்கள் வரும் என்று கூறி குழம்பிக்கொள்வார்கள்.

துருவப் பிரதேசங்களில் அமைந்திருக்கும் நாடுகளான நார்வே, பின்லாந்து முதலியவற்றில், ஆறு மாதங்கள் பகலாகவும், ஆறு மாதங்கள் இரவாகவும் இருக்கும். அத்தகையப் பகுதிகளில், பிறை பார்த்து மாதத் தொடக்கத்தைக் கணக்கிட முடியாது. அப்பொழுது, வேறு நாடுகளில் பிறை தெரிந்தால், நார்வேயில் ரமலான் தொடக்கத்தை கணக்கிடலாம் என்பார்கள்.

வருடத்திற்கு 12 மாதங்கள் என்ற “அதிசயத்தை”, குர் ஆன் மூலம் உரைத்த அல்லாஹ்விற்குத் தெரியாதா, தான் படைத்த பூமியில் நார்வே போன்ற நாடுகளும் இருக்கும், அவற்றிற்கு இத்தகைய விதிகள் எல்லாம் பொருந்தாது என்று? அரேபியா என்னும் சிறு நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு, அவர்கள் வாழ்வியலுக்குப் பொருந்தும் அளவிற்கு கூறப்பட்ட சில விஷயங்கள், உலகம் முழுமைக்கும் என்று கூறுவது இங்கே பல்லைக் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதனை சரி செய்வதற்காகவேணும், அறிவியல் கணிப்புகளை பின்பற்றுகிறார்களா என்று பார்ப்போம்.

காவி ஆடுகளின் காட்டுக்கத்தல்கள்!


கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்ஹிந்து!? என பெயர் வைத்து ஒரு தளத்தை நடத்தி கொண்டிருக்கும் பார்பனீய கூட்டம் அடிக்கும் ஜல்லிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது!, இவர்கள் இந்தியாவின் கலாச்சாரத்தை காப்பாற்றுவது போல் கத்துவதும் கதறுவதும் சில ஆண்டுகளாகவே நாம் பார்த்து கொண்டு வருபவை தான், பெண்கள் சுதந்திரத்தை கெடுக்கும் வகையில் அவர்களது தனிப்பட்ட வாழ்வில் நுழைந்து அது தப்பு இது தப்பு என்று சொல்வதோடு மட்டுமல்லாமல், நாலாந்தர பொறுக்கிகள் ரேஞ்சுக்கு அவர்களை மானபங்கபடுத்துவதும் அவர்களின் வழக்கமாக உள்ளது!,

பின் ஏனடா உங்கள் கோவில்கள் பெண் சிலைகள் பெரிய கொங்கைகளோடு இருக்குன்னு கேட்டால் அதற்கு ஆயிரம் வியாக்கியானம் பேசுவார்கள்! உண்மையில் இவர்களிடம் இருப்பது கலாச்சாரத்தை காப்பற்றும் எண்ணமா? இல்லை நீ மட்டும் எப்படி சந்தோசமாக இருக்கலாம் என்ற வயித்தெறிச்சலா என்பது தெரியவில்லை!

http://www.tamilhindu.com/2010/08/hindus-should-unite/

மேலோட்டமாக பார்த்தால் மேல்கண்ட பதிவு எதோ சமூக அக்கறையில் எழுதப்படுவது போல் தான் தோன்றும், ஆனால் உண்மையில் மக்களிடம் வக்கிரமான மதவெறியை தூண்டிவிடும் செயலை தான் இவர்கள் ஆதிகாலத்திலிருந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தோள் வரைக்கும் தலைமுடியும், நெஞ்சு(நெஞ்சு தான்) வரைக்கும் தாடியும் இருந்தால் அவன் சாமியார்! அவன் அன்பாக பேசுவானாம்! கோவமே வராதாம், வாயை திறந்தால் உண்மை மட்டுமே வருமாம்! அப்படி தான் சமீபத்தில் இலங்கை சென்று வந்த ஒரு சாமியார் அங்கே ஒன்றையும், இங்கே வந்து ஒன்றையும் உளரி கொட்டிகிட்டு இருந்தான்! பெங்களுரில் ஒரு சாமியார் என்னை கொல்ல முயற்சி என்று ஸ்டண்ட் விட்டு பிறகு அது நாயை(ரெண்டும் ஒண்ணு தானே) சுட வந்தவன் என தெரிந்ததும் வழக்கம் போல் பல்டி அடித்தார்கள்!

நித்தியான்ந்தன் மாட்டியவுடன் நேக்காக பீஜேபி ஆட்சி நடக்கும் கர்நாடகத்துக்கு வழக்கை மாற்றி நமது தேசிய வியாதியான ஞாபக மறதிக் கோட்பாட்டின் படி தற்போது ஜாமீனில் விடுவித்து அந்த எச்சக்கலையை மீண்டும் தொழில் செய்ய அனுமதித்து விட்டார்கள்.

சங்கராச்சாரி என்னும் வாழைஇலையில் கக்கா போகும் கெழட்டுக்காவிப்பய தனது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள, தனது தில்லுமுல்லுகளை மறைக்க செய்த தகிடுதத்தங்கள் உலகறியும், அதற்காக கொலை செய்து பின் பணத்தால் அதை மூடி மறைத்த குரூரத்தை மனசாட்சி உள்ள எவனும் அறிவான், கோர்டில் சாட்சி பிறண்டுவிட்டது என்பதால் இது பொய் குற்றசாட்டு என பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் தமிழ்ஹிந்து தளம் அப்பட்டமாக ஒரு குற்றவாளிக்கு சொம்பு தூக்கிக் கொண்டிருக்கிறது!, அப்சல் குருவுக்கோ, அஜ்மல்கசாப்புக்கோ சாட்சி இல்லையென்று பிறண்டால் சும்மா இருப்பார்களா இந்த மெஜாரிட்டி கூட்டங்கள், நடுரோட்டில் வைத்து எரித்து விடமாட்டார்கள், ஒரிஸாவில் ஒரு பாதரியார் குடும்பத்தை எரித்தாமாதிரி!, மோடி திறம்பட ஆட்சி புரிகிறாராம்! கூட்டம் கூட்டமாக இஸ்லாமியர்களை கொன்று குவித்துவிட்டு, தனக்கு ஒத்துவராதவர்களை போலி என்கவுண்டர் செய்து இடிஅமின் ஆட்சி நடத்தும் மோடி இவர்களுக்கு ஹீரோ. நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம், அடுத்த மனிதனை கொன்று தான் நாம் வாழவேண்டிய கட்டாயத்திலா இருக்கிறோம்! பின் எப்படி மோடி ஹீரோ!? வேறொன்றுமில்லை புரையேறிப் போன மதவெறி தான் காரணம். இஸ்லாத்துக்கு ஒசாமாபின்லேடன் என்றால் இந்த்துவாவுக்கு நரேந்திரமோடி! பெரிய வித்யாசம் எதுவுமில்லை. மெஜாரிட்டி மக்கள் மனதில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கையும் வன்முறையையும் நியாயப்படுத்தும் விதமாக நஞ்சைக் விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடும் மோடி இந்தியாவின் ஹிட்லர்!

சோனியா நாட்டின் இயங்குசக்தியாம், அவர் கிறிஸ்தவராம்! வேறு நாட்டில் ஒரு மாற்று மதத்தவர் ஒரு நாட்டை இயக்க முடியுமா என்ற கேள்வி வேறு!, நீ போய் அந்த நாட்ல குடியுரிமை வாங்கி தேர்தல்ல நிக்க வேண்டியது தானே, அதுக்கு தொடை நடங்குது. புண்ணாக்கு பயல்களுக்கு சீனாவில் மதம் சார்ந்தா ஆட்சி அமைகிறது என்ற கேள்வி ஏன் எழுவதில்லை!, சோனியா கிறிஸ்தவர் என்பதன் மூலம் சொல்ல வருவதென்ன? அடுத்து பா.ஜ.க வர வேண்டும்! நாட்டில் உள்ள மாற்று மதத்தவர் வழிபாட்டு தளங்கள் இடித்து தள்ளப்பட வேண்டும்! குஜராத் சம்பவம் போல் இந்தியா எங்கும் நடக்க வேண்டும்!,

அப்துல் கலாம் அன்னியநாட்டு கைக்கூலி என்று தான் இதுவரை சொல்லவ்ல்லை, அதையும் ஒருநாள் சொல்லிவிடுவார்கள்! இந்துத்வம் என்ற இவர்களின் கோஷம் வருடப் போக்கில் பெரும்பான்மை இந்துக்களிடமே நீர்த்துப் போன நிலையில் இயலாமையின் வடிகாலாக இணையங்களில் உளறிக் கொண்டிருக்கின்றனர்!

மார்க்ஸிஸ்ட் ஆதரவாளர்கள் இந்து மதம் தவிர மற்ற மதங்களை கேள்வி கேட்பதில்லை என்ற குற்றசாட்டு வைக்கிறார்கள்! இந்துத்வம் அளவு சாதிபிரிவினை மாற்று மதங்களிலா இருக்கு! எந்த சர்ச்சிலாவது காசு கொடுத்தால் முன்னாடி உட்கார் என்று சொல்கிறார்களா, எந்த மசூதியிலாவது காசு கொடுத்தால் சிறப்பு வழிபாடு செய்கிரார்களா? பொருளாதாரப்பிரிவினை, சாதிப்பிரிவினை என்று நாட்டின் புற்றுநோயாக இருக்கும் இந்துமதம் மற்ற மதத்தவர் அதிகமாகி கொண்டிருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார்கள்!, உள்ளுக்குள்ள ஆயிரத்தெட்டு நொட்டைய வச்சிகிட்டு அடுத்தவனை குறை சொல்வதில் இந்து மதத்தை அடிச்சிக்க வேற ஆள்கிடையாது!

‘தலைமை ஹிந்து கவுன்சில்” என்ற பெயரில் ஒரு குழு ஆரம்பிக்கணுமாம், அதில் இருக்கும் தலைவர்கள் சொல்றதுக்கு 100 கோடி இந்தியர்களும் செவிசாய்க்கனுமாம்! இவனுங்க காவியக் கட்டிக்கிட்டு மார்கெட் போன நடிகைகள் கூட மஜா பண்ணிக்கிட்டு இருப்பானுக; இந்த வேலைக்கி போர்டு மெம்பர் பதவி ஒண்ணுதான் கேடு! சரி தலைவர்கள் யாருன்னு பார்த்தா மொதப்பேரே பெரிய கேடி பேரா இருக்கு! ”அந்தக் குழுவில் ஸ்ரீ சத்ய சாய்பாபா, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், அமிர்தானந்தமயி, காஞ்சி சங்கராச்சாரி, கணேஷ்புரி குரு, ஸ்ரீ ராம்தேவ், சத்குரு ஜக்கிவாசுதேவ் முதலியோர் இடம் பெற்றிருக்க வேண்டும்” எப்படி? தில்லாலங்கடி வேலை செய்து மக்களை ஏமாற்றும் ஹிப்பி தலையன் முதல் பெயர்!, இதில் கொலை குற்றம்சாட்டபட்ட சங்கராச்சாரி பெயரும் இருக்கு!, நிச்சயம் நித்தியானந்தா பெயரும் வரும்! ஏன்னா இந்த மதத்தை பொறுத்தவரை தலைமையில் இருப்பவர்கள் என்னவேண்டுமாலும் செய்யலாம், ஏமாளி மக்கள் அதையெல்லாம் கண்டுக்கக்கூடாது!

ஞானம் பேராபத்தில் சிக்கியுள்ளதாக வருத்தப்படுகிறார்கள், ஞானத்திற்கும் மதத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தான் தெரியவில்லை! என்னவோ இந்தியாவில் மட்டுமே அறிவாளிகள் இருப்பதாகவும், மற்ற நாட்டுக்காரனெல்லாம் கேனப்பசங்க போலவும், அவர்கள் இங்கே வந்து இவர்கள் அறிவை மழுங்கடிப்பது பேசிக்கொண்டிருக்கிறார்கள், மூடநம்பிக்கையில் மூழ்கி முத்தெடுத்த இந்த மதவாத குரங்குகள் தான் கெட்டதும் இல்லாமல் வனத்தையும் சேர்த்து கெடுக்க நினைப்பது தான் ஏனென்று தெரியவில்லை!

எல்லா வல்ல கடவுளை கும்பிட உனக்கு எதுக்கு மீடியேட்டர்?

உன்னை படைத்த கடவுளுக்கு நீ பேசும் மொழியை ஏன் புரிந்து கொள்ள முடியாது? ஏன் சமஸ்கிருதத்தில் மட்டுமே அர்ச்சனை பண்ணுவோம் என அடம்பிடிக்கிறார்கள்?

கடவுள் பெருமையை பரப்ப நினைப்பவர்கள் தானே கடவுளாக காட்டி கொண்டு, கால் கழுவிய தண்ணிருக்கு கூட பெரிய பில்டப் ஏறுவது ஏன்?

நீ மனிதனாக இருக்க மதம் உனக்கு என்ன வகையிஉல் உதவி செய்திருக்கிறது?

மத குருமார்கள் கழுவும் (எல்லாத்தயும்தான்) நீரை உள்ளங்கையில் நாம்பிப் பிடித்து பக்தி வழிய குடிப்பதால் விளையும் நன்மை என்ன?

நாட்டில் இருக்கும ஆயிரக்கணக்கான கோயில்களால் கண்ட பயன் என்ன? மேற்கொண்டு அயோத்தியில் ராமனுக்கு கோயில் கட்டி எதை சாதிக்கப் போவதாய் உத்தேசம்?

உரிய பதில்களை எதிர்பார்ப்பது முட்டாள் தனம், ரியாக்ஸனை மட்டும் கவனிப்போம்!

காஷ்மீர் பிரச்சனை : மதமா? அரசியலா?


இந்தியா சுதந்திரம் பெற்ற போது, இங்கு 500 குறுநில அரசுகள் இருந்தன. இந்த குறுநில அரசுகளுக்கு மூன்று வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டன: 1. இந்தியாவுடன் இணைவது 2. பாகிஸ்தானுடன் இணைவது 3. தற்சார்புடன் இருப்பது. அந்த அரசுகளின் பரப்பளவு மற்றும் அந்தந்த மக்களின் விருப்பம் சார்ந்து முடிவுகள் எடுக்க, சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. ஏறக்குறைய அனைத்து அரசுகளும் தங்கள் முடிவுகளை விரைவாக எடுத்துவிட்ட போதும், அய்திராபாத் மன்னரும், ஜுனாகர் -காஷ்மீர் மன்னர்களும் தயக்கம் தெரிவித்தனர். அய்தராபாத் மற்றும் ஜுனாகர் அரசுகள் ராணுவ நடவடிக்கையின் மூலம் இணைக்கப்பட்டன.

ஜம்மு -காஷ்மீர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக (80 சதவிகிதம்) வசிக்கும் மாநிலமாகும் எனவே, காஷ்மீரின் மன்னர் அரிசிங் தற்சார்புடன் இருக்கவே முடிவு செய்தார். அவர் காஷ்மீரை ஆசியாவின் சுவிட்சர்லாந்தாக மாற்ற வேண்டும் என்கிற கனவுடன் இருந்தார். அவர், பாகிஸ்தான்-இந்தியா ஆகிய இரு தேசங்களையும் பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டார் (நடவடிக்கைகளை நிலுவையில் வைக்கும்படி). அதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்ட போதும், இந்தியா மறுத்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்த எந்தத் தீர்வையும் எட்டுவதற்கு முன்னரே, பாகிஸ்தான் காஷ்மீரை ஆக்கிரமித்தது.

பழங்குடியினரின் போர்வையில் பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீருக்குள் நுழைந்தது. இந்த நிகழ்வுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஷேக் அப்துல்லா முக்கியப் பங்காற்றினார். காஷ்மீர் மன்னர் தன் தூதுவர்கள் மூலம் ராணுவத்தை அனுப்பி, தன்னுடைய தேசத்தை மீட்டுத்தரும்படி இந்தியாவிடம் கேட்டுக் கொண்டார். இந்திய ராணுவம் வந்து தலையிடுவதை ஷேக் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.

‘காஷ்மீருடன் ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், அங்கு ராணுவத்தை அனுப்ப இயலாது’ என நேரு அறிவித்தார். காஷ்மீருடன் எந்த சட்டத் தொடர்பும் அப்போது இந்தியாவுக்கு இல்லை. அந்த மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் சட்டப்பிரிவு 370 இன் கீழ் இணைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அந்த இணக்க ஒப்பந்தத்தின் படி, இரண்டு தலைவர்கள் -இரண்டு அரசியல் அமைப்புகள். அதன்படி காஷ்மீரின் ராணுவம், பாதுகாப்பு, வெளியுறவு, தொலைத்தொடர்பு, நாணயம் ஆகியவற்றை இந்தியா பார்த்துக் கொள்ளும். மாநில சட்டமன்றம் மற்ற பிரச்சனைகளைப் பார்த்துக் கொள்ளும். இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் காஷ்மீருக்குப் பொருந்தாது. ஏனெனில், காஷ்மீருக்கு சொந்தமான அரசியல் அமைப்புச் சட்டம் இருந்தது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் இந்தியா ராணுவத்தை அனுப்பியது.

ஆனால் இந்த நேரத்தில், காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. பொதுமக்களுக்கு சங்கடங்கள் உயிர் சேதங்கள் ஏற்படாதவாறு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனை அய்க்கிய நாடுகள் அவைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அய்.நா.வின் தீர்மானத்தின்படி, இரு நாட்டு ராணுவங்களும் வெளியேற்றப்பட்டு, அதன் பிறகு அங்குள்ள பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கருத்துக்கணிப்பை இன்றுவரை நடத்த முடியவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை ‘சுதந்திர காஷ்மீர்’ என அறிவித்தது. அந்தப் பகுதிக்கு பிரதமரையும் அமைப்பு விதிகளையும் அறிவித்தது.

ஜன சங்கம் மற்றும் பல தேசிய சக்திகள் காஷ்மீரின் தனித்தன்மையை மட்டுப்படுத்தி, இந்தியாவுடன் இணைந்திடுமாறு இந்திய அரசை வற்புறுத்தின. ஆனால், பிரதமர் ஷேக் அப்துல்லா இந்தியா கொடுத்த அழுத்தங்களுக்குப் பணிய மறுத்தார். எனவே அரசெதிர்ப்பு செயல் -தேசத் துரோகம் ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு, 17 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தக் காலத்தில் தான் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. ‘காஷ்மீர் பிரதமர்’ என்கிற பதவி ‘காஷ்மீர் முதல் அமைச்சர்’ என்றும், ‘சர்தார் -இ -ரியாசத்’ என்கிற பதவி ‘ஆளுநர்’ பதவியாகவும் மாற்றம் பெற்றது. மெல்ல இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் காஷ்மீரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. காஷ்மீரின் விவகாரங்களை மத்திய அரசு கண்காணிக்கத் தொடங்கியது. அங்கு இருந்த ஜனநாயகம் சார்ந்த நடவடிக்கைகள் மெல்ல வலுவிழக்கத் தொடங்கின.

இன்றுவரை மத்திய அரசு மற்றும் அங்குள்ள மாநில ஆட்சியாளர்கள் உள்ளூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்களாக இல்லை. 1984 இல் பரூக் அப்துல்லா பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1987 தேர்தல்கள் நியாயமாக நடைபெறவில்லை. இவை அனைத்தும் காஷ்மீர் வாழ் மக்களிடையே பெரும் வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. இளைஞர்கள் மெல்ல வன்முறையின் பால் ஈர்க்கப்பட்டனர். இது, காஷ்மீர் மக்களைப் பெரிதும் அந்நியப்படுத்தியது. ஜனநாயக நடைமுறைகள் செயலிழக்க, ஜனநாயக நடைமுறைகளுக்குப் பல தடைகள் ஏற்பட்ட பின்னணியில் தான் அங்கு தீவிரவாதம் தலைதூக்கியது.

அங்கு நிலவிய அதிருப்தியான மனநிலை, தீவிரவாதத்திற்கு ஆதரவாக திசைமாறியது. பாகிஸ்தான் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. பாகிஸ்தான் தனது தீவிரவாதப் படைகளை காஷ்மீருக்கு அனுப்பி நிலவரத்தை மேலும் சிக்கலாக்கியது. மீண்டும் பரூக் அப்துல்லா ஏழு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கூட, மத்திய அரசு மதிக்கவில்லை என்பதை இது தெளிவுபடுத்தியது. இந்த நிலைக்கு மற்றொரு காரணம், காஷ்மீரில் அல் கொய்தாவின் நுழைவு. ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சிகள் செய்ய அமெரிக்கா அனுப்பிய அல்கொய்தா படைகளின் ஒரு பகுதி, அங்கு பணியை முடித்துவிட்டு காஷ்மீருக்குள் நுழைந்தது.

1980களில் இந்தியாவில் நிலவிய மதவாத சூழல், காஷ்மீரில் மேலும் வன்முறை வளர காரணமாக அமைந்தது. காஷ்மீர் பண்டிதர்கள் மற்றும் காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் இடையே நிலவிய சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து அங்கும் மதவாத சக்திகள் தங்கள் பணியைத் தொடங்கின. இது, மேலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக அமைந்தது. சில பயங்கரவாதிகள் இந்துக்கள் மீது தாக்குதல் தொடுத்து அவர்களிடையே அச்சத்தை விதைத்தனர்.

காஷ்மீரின் ஆளுநர் ஜக்மோகன், ‘காஷ்மீரில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளே’ என்கிற அடிப்படையில் செயல்பட்டார். பண்டிதர்கள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறினால் தான் தீவிரவாதிகளை ஒடுக்க இயலும் என அவர் கூறினார். அதன்படி பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற பல்வேறு போக்குவரத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். முஸ்லிம்களும் தலைவர்களும், இதனை தடுத்திட முழுவதுமாக முயன்றனர். ஆனால் ஆளுநர் ஜக்மோகனின் தூண்டுதலால் பண்டிதர்கள் அங்கிருந்து வெளியேறி, அகதிகள் முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர்.

அங்கு நிகழ்ந்த தீவிரவாத வன்முறையில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பல முஸ்லிம் குடும்பங்களும் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இரு நாடுகளிடையே நிலவிய பிரச்சனை தான் காஷ்மீர் நிலவரத்துக்கு மதவாத சாயத்தைப் பூசியது. காஷ்மீரின் தலைவர்களுக்கு பாகிஸ்தானுடன் இணைந்திடும் சூழல் ஏற்பட்ட பொழுதும் கூட, அவர்கள் அவ்வாறு முடிவெடுக்கவில்லை. பல்வேறு கருத்துக் கணிப்புகளின் படி, இன்றும் கூட காஷ்மீர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை. இந்திய ஆட்சியாளர்களின் கொள்கைகளால் ஏற்படும் தொடர்ச்சியான அந்நியமாதல், இனக்குழுக்களின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுதல், தொடர்ந்து காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்ப்பு எனப் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்ற பிறகும்-காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பவில்லை.

இன்றும் காஷ்மீர் மக்களின் முக்கியக் கோரிக்கை : இணைப்பு ஒப்பந்தப்படி காஷ்மீரின் தற்சார்பைப் பேணுவது. காஷ்மீரின் பூர்வ இன தன்மையைப் பாதுகாப்பது, வன்முறைகள் நிறுத்தப்பட்டு அமைதியுடன் கூடிய வாழ்வைப் பெறுவது. பாகிஸ்தான் அரசு தனது தலையீட்டை நிறுத்துவது மற்றும் இந்திய அரசு காஷ்மீரிகளை நம்புவது. 2000 இல் “அவுட் லுக்’ நடத்திய கருத்துக்கணிப்பின் படி, 74 சதவிகித மக்கள் தங்களின் காஷ்மீரி அடையாளத்துடனேயே வாழ விரும்புகின்றனர்; 16 சதவிகித மக்கள் காஷ்மீருக்கு கூடுதல் அதிகாரங்களுடன் கூடிய தற்சார்பு வேண்டும் என்றனர்; 2 சதவிகிதத்தினர் பாகிஸ்தானுடன் இணைய விரும்புகின்றனர். 39 சதவிகிதத்தினர் இந்திய அரசியல் அமைப்புக்கு உட்பட்டுத் தீர்வு காணவே விரும்பினர்.

1987இல் நடைபெற்ற முறைகேடான தேர்தலுக்குப் பிறகுதான் 1990இல் பயங்கரவாத நடவடிக்கைகள் நிலைப்படுத்தப்பட்டன. அங்கு நடைபெற்ற கலவரங்களில் இறந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை நாம் பார்க்க வேண்டும்.

காஷ்மீர் பண்டிதர்கள்

காஷ்மீரிலிருந்து பண்டிதர்கள் மொத்தமாக வெளியேறியது, பள்ளத்தாக்கின் மரபுக்கு நேர்ந்த பெரும் தலைக்குனிவு. புள்ளிவிவரங்களின் படி, அங்கு நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களால் இந்துக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதப்படும் கூற்றுகள் பொய்யாகின்றன. 1986இல் தான் பண்டிதர்கள் முதலில் வெளியேறத் தீர்மானித்தனர். ஆனால் நல்லிணக்கக் குழுவின் தலையீட்டால் அது நிறுத்தப்பட்டது. 1990களில் ராணுவம் காஷ்மீரில் குவிக்கப்பட்டது. ஆளுநராகப் பதவியேற்ற ஜக்மோகன் மெல்ல தனது செயல் திட்டத்தை தொடங்கினார். நல்லிணக்கக் குழுவை அவர் செயலிழக்கச் செய்துவிட்டு, அந்த குழுவிலிருந்து ஒருவரை ஜம்முவுக்கு குடிபெயரச் செய்தார் (பூரி, காஷ்மீர், ஓரியண்ட் லாங்மேன், 1974, பக்கம் 65).

பால்ராஜ் பூரி, 1990 மார்ச்சில் இவ்வாறு கூறுகிறார் : “காஷ்மீரில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் பண்டிதர்கள் இடையில் எந்தப் பகைமை உணர்வையும் நான் காணவில்லை. ஆனால், அங்குள்ள பாதுகாப்புப் படைகளின் மனித உரிமை மீறல்கள் தான் இன்று விசாரிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயம்” (பூரி, பக்.66). “அந்த நேரத்தில் பண்டிதர்கள் இடையே வன்முறையையும் அச்ச உணர்வையும் இந்து மதவாத இயக்கங்கள் ஏற்படுத்தின. காஷ்மீரைப் பற்றி ஏராளமான தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. அங்கு ஏராளமான இந்து கோயில்கள் தகர்க்கப்படுவதாக தகவல்கள் மக்கள் மனங்களில் விதைக்கப்படுகின்றன. இதில் ஒரு பகுதி மட்டும் தான் உண்மை” (‘பிரஸ் கவுன்சில்’, 1991).

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!


காஷ்மீரில் ஜூன் 11லிருந்து ஆகஸ்ட் 8க்குள் மட்டும் 51 பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மக்கள் வீதியில் இறங்கி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படையினரை நோக்கிக் கல்லெறிவது என்பது பாகிஸ்தானின் தூண்டுதலால் நடப்பது என்று இந்திய அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மைகளை அறியும் நோக்கத்தோடு ‘காஷ்மீரில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 14 ஆம் நாள் லயோலா கல்லூரியில் பி.எட் அரங்கில் அரங்கக் கூட்டம் ஒன்றினை தகவல் தொழிற்நுட்பத் துறையினர் மற்றும் இளைஞர்கள் இணைந்து செயல்படும் Save Tamils Movement ஏற்பாடு செய்திருந்தது. சிறீநகரிலிருந்து வந்திருந்த “ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமூகங்களின் கூட்டமைப்பு” என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குர்ரம் பர்வேஸ் (Khurram Parvez, Program Coordinator of ‘Jammu and Kashmir Coalition of Civil Society’) அவர்களது உரை இது.

காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!

காஷ்மீரிலிருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றக் கோரி நேற்று (ஆகஸ்ட் 13, 2010) இங்கே (சென்னை) உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கைதாகிய 52 தோழர்களுக்கு காஷ்மீர் மக்களின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் நடக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காஷ்மீர் மக்களாகிய நாங்கள் மிக நுட்பமாகக் கவனித்து வருகின்றோம். எங்களுக்கு எழுச்சியூட்டிய போராட்டங்களுள் தமிழீழ விடுதலைப் போராட்டமும் ஒன்று. கடந்த ஆண்டு தமிழ் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட துயரங்களுக்காக நாங்கள் மிகவும் வருந்துகின்றோம். இலங்கை அரசு ஒரு பிரபாகரனைக் கொன்று விடலாம். ஏன், இன்னும் பல பிரபாகரன்களைகூடக் கொன்று குவிக்கலாம். ஆனால் தமிழர்தம் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது. இது காஷ்மீரிகளுக்கும் பொருந்தும். இந்திய படையினர் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கலாம். ஆனால், காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கையைக் கொல்ல முடியாது.

அடிப்படையில் காஷ்மீர் மக்களின் போராட்டம் என்பது இருத்தலின் வெளிப்பாடு. காஷ்மீரிகளோ, தமிழர்களோ இம்மண்ணில் இருக்கும்வரை அவர்தம் விடுதலை வேட்கையும் உயிர் கொண்டிருக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை தாகத்தை அழிப்பதற்கான வெடிகுண்டையோ துப்பாக்கி ரவையையோ ஒடுக்குமுறையாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. காஷ்மீரிலும், ஈழத்திலும், உலகெங்கிலும் நடக்கும் மக்கள் புரட்சி வெல்க!

ஜம்மு காஷ்மீரில் 1990க‌ளிலிருந்து, 70,000க்கும் அ‌திக‌மான‌ பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர், 8,000 பேர் காணாமல் போயுள்ள‌ன‌ர். காஷ்மீரில் உள்ள‌ 6,71,000 இராணுவ‌, துணை இராணுவ‌, காவ‌ல் துறையின‌ரின் பெரும் ப‌குதி காஷ்மீரின் ப‌ள்ள‌தாக்கு ப‌குதியில் உள்ள‌ பொதும‌க்க‌ளை க‌ட்டுப்ப‌டுத்துவ‌தில் தான் உள்ள‌தே த‌விர‌ எல்லை பாதுகாப்பில் அல்ல‌. மேலும் இராணுவ‌ம் இன்று க‌ல்வி நிலைய‌ங்க‌ள், ம‌ருத்துவ‌ம‌னைக‌ள், வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ள், உண‌வ‌க‌ங்க‌ள், விளையாட்டு மைதான‌ங்க‌ள், க‌டைவீதிக‌ள் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் நீக்க‌ம‌ற‌ நிறைந்துள்ள‌து.

த‌ற்போதைய‌ நிலையில் இராணுவ‌ம் ம‌ற்றும் துணை இராணுவ‌க் குழுக்க‌ள் எல்லாவ‌கையான‌ வ‌ன்முறைக‌ளையும் காஷ்மீர் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, அடித்து துன்புறுத்தி சித்த‌ர‌வ‌தை செய்வது, க‌ண்ணிவெடி வைப்பது, காரணமேயின்றி கைது செய்வது, ம‌னித‌க் கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவது, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது, க‌ட்டாயப்‌ப‌டுத்தி வேலை வாங்குவது, காணாம‌ல் போக‌ச் செய்வது, கொலை செய்வது என அனைத்துவகையான வ‌ன்முறைக‌ளையும் இந்திய இராணுவ‌மும் துணை இராணுவ‌க் குழுக்க‌ளும் ம‌க்க‌ள் மீது ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌து. இது போன்ற‌ கொடுமைக‌ளைச் செய்ப‌வ‌ர்க‌ளின் ப‌ட்டிய‌ல் மிக‌ நீண்ட‌ ஒன்று.

ச‌ன‌வ‌ரி 2004லிருந்து ந‌வ‌ம்ப‌ர் 2008 வ‌ரையிலான‌ கால‌த்தில் ம‌ட்டும் (மும்பை தாக்குத‌லுக்கு முன்ன‌ர் வ‌ரை) 6588 பொதும‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இந்த‌ கால‌க‌ட்ட‌த்தைத்தான் இந்தியாவும், பாகிசுதானும் அமைதிக் காலம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டன. அமைதிக் காலம் தவிர்த்த போர்க் காலங்களில்தான் கொலைகளின் எண்ணிக்கை பெருமளவாக இருக்கும். துரதிஷ்டவசமாக, ஜம்மு காஷ்மீரில் அமைதிப் பேச்சுவார்த்தை என்பது தண்டனை பயமில்லாமல் பொதுமக்களை கொலைசெய்யும் நடைமுறையை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டங்களுக்கு எதிர்வினையாக அவர்களைக் கொலை செய்வது என்பது போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறையாமல் தொடர்கின்றது.

ஜம்மு காஷ்மீரில் வாழும் மக்கள் உலக அரசியல்களையும், தங்களைச் சுற்றி நடக்கும் பிராந்திய புவிசார் அரசியலையும் கருத்தில் கொண்டே தங்களது போராட்ட முறைகளைத் தீர்மானிக்கின்றனர். மாறி வரும் உலகச் சூழலில் பெரும் திரளான பொதுமக்கள் ஒன்று கூடி தங்களை ஒடுக்குகின்ற இந்திய அரசை எதிர்த்து அமைதியான ஆயுதமற்ற போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் அவர்களின் இந்த அமைதிவழிப் போராட்டத்திற்கு இந்திய அரசு ஆயுதப்படைகளைக் கொண்டு பதிலளிப்பதால், பொதுமக்கள் படுகாயங்கள் அடைவதும், உயிரிழப்பதுவும் மக்களின் வலியை தொடர்ந்து அதிகப்படுத்தி வருகின்றன.

kashmir-protest

வன்முறை, அமைதிவழிப் போராட்டம் என்ற எந்த வகையில் மக்கள் போராடினாலும் இந்திய அரசு அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றது. இதனால் மக்கள் தங்களது அதிருப்தியைக் காட்டுவதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்படுகின்றன. ஆயுதம் தாங்கிய போராட்ட வழிகளிலிருந்து பெரும் திரளான மக்கள் ஒன்று கூடி ஆயுதம் இல்லாமல் போராடுவதை அரசு அங்கீகரிக்க மறுப்பதுடன் கொடூரமாக ஒடுக்குவது என்பது இந்திய அரசு இந்தப் பிரச்சனையை எவ்வாறு கையாளுகின்றது என்பதையும் காட்டுகின்றது.

தற்பொழுது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் இன்றைய அரசின் மீதான கோபம் மட்டுமல்ல, 1989லிருந்து காஷ்மீர் மக்களை இராணுவம் மற்றும் துணை இராணுவம் மூலம் சிறைபடுத்தி வைத்திருப்பதையும், அதற்கு துணை செய்யும் தொடர்ச்சியான வன்முறையையும்,1947 ஆம் ஆண்டிலிருந்து காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை நசுக்குவதையும் எதிர்ப்பதும் தான். இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனைக்கு புதுமையான தீர்வைத் தருவதாகக் கூறியுள்ளது. ஆனால் கடந்த கால சம்பவங்களை உற்று நோக்கினால், இந்தியாவின் அணுகுமுறை என்பது மேன்மேலும் இராணுவமயமாக்கல் என்பதாகவே இருந்துள்ளது. அரசியல் ரீதியாக மக்களையோ அல்லது சுதந்திரத்திற்காக போராடும் தலைமையையோ அரசு அணுகியதேயில்லை. காஷ்மீர் மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சுயநிர்ணய உரிமை குறித்து அரசு இது வரை பரிசீலித்தது கூட இல்லை.

இந்திய அரசு எல்லா பிரச்சனைகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனக் கூறுகின்றது. ஆனால் மக்களின் விருப்பமான சுய நிர்ணய உரிமையைப் பற்றி மட்டும் பேசுவதே இல்லை. இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீர் ஒரு பிரச்சனை (problem) அல்ல, இது ஒரு சச்சரவான(conflict zone) பகுதி. இந்தியா காஷ்மீரை இராணுவமயப்படுத்துவதன் மூலம் காஷ்மீர் நிலத்தையும், காஷ்மீரில் உள்ள முக்கியப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளங்களைத் தனது கட்டுக்குள் வைத்துள்ளது; நீதித் துறை, கல்வி நிலையங்கள், ஊடகம் போன்ற ஜனநாயகத் தூண்கள் செயலிழக்க வைத்துள்ளது. இதில் இந்தியாவின் ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே சிறப்பாக பணியாற்றுவதைக் கண்டு இந்தியா பெருமை கொள்ளலாம். அது தான் இந்திய இராணுவம்.

உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல் தலைவர்களின் கட்டுப்பாட்டின்படி செயல்படும் இந்திய இராணுவத்தால்தான் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக நீடிக்கின்றது. இந்தியப் படையினர் இந்துத்துவ தேசியவாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, கடந்த மே மாதத்தில் 100 கிராமப் பாதுகாப்பு குழுக்களை உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்துக்களின் தற்காப்புக்காக ஆயுதக் குழுக்கள் அமைக்கிறோம் என்ற பிரச்சாரங்களின் முலம் இந்தப் பிரச்சினைக்கு மதச்சாயம் பூசுகிறது இந்திய இராணுவம்.

குடிமை மற்றும் அரசியல் உரிமைகளைச் சகித்துக்கொள்ளாமை:

காஷ்மீரில் இராணுவ நிர்வாகத்தை உறுதிப்படுத்த ஒரு வழியாகவே மனித உரிமை மீறல்கள் நடத்தப்படுகின்றன. மனித உரிமை மீறல்களைக் கிஞ்சித்தும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்று இந்திய அரசு திரும்பத் திரும்ப உறுதியளித்துள்ளது. ஆனால், ‘இந்தியாவே வெளியேறு, திரும்பிப் போ’ என்றும் ’இந்தியாவே, காஷ்மீரைவிட்டு வெளியேறு’ என்று வீதிகளில் முழங்கும் மக்களை இந்தியப் படைகள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவதன் மூலம் அவர்கள் வன்முறையின்றி அமைதிவழியில் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவதைக் கிஞ்சித்தும் தாங்க முடியாதவர்களாக இருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகின்றது.

காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் இளைஞர்களிடம் வன்முறையைத் தூண்டுகிறார்கள் என்று உமர் அப்துல்லா ஜூன் 24, 2010 அன்று சொன்னார். அதைத் தொடர்ந்து, அமைதியான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்த தலைவர்கள் மீது இந்தியப் படைகள் அடக்குமுறையை ஏவினார்கள். துணை இராணுவப் படையால் கொல்லப்பட்டவர்களுக்காக அழுது கொண்டு, கோபத்தோடு வீதிகளில் பேரணியாகச் செல்லும் மக்கள் எப்போதும் ஆயுதமேந்தியப் படைகளைக் கொண்டே ஒடுக்கப்படுகின்றார்கள். ஊரடங்கு உத்தரவை மீறியதற்காகவும், காவல்துறையின் சோதனைச் சாவடிகளைத் தாக்கியதற்காகவும் தண்டிக்கப்பட வேண்டியவர்களைத்தான் பாதுகாப்பு படையினர் சுட்டனர் என்று சொல்கிறார் இந்தியாவின் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை. இதன்மூலம் சி.ஆர்.பி.எப் மற்றும் காவல்துறையின் கொடூரமான செயல்களை நியாயப்படுத்துகிறார். இது, இந்தியப் படைகள் இந்திய அரசின் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்றிருப்பதையே காட்டுகின்றது. மேலும், இராணுவ ஆட்சியை மக்கள் எதிர்ப்பதைக் குற்ற நடவடிக்கையாகப் பார்க்கும் இந்திய அரசின் போக்கைச் சுட்டிக்காட்டுகின்றது.

kashmir_police_harassment

ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் இந்தியப் படையினரின் சொல்லும், செயலும் மக்களின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயங்கரவாதத்திற்கு இணையான தேசத்துரோகமாக சித்தரிக்க முயல்வதாகத் தோன்றுகின்றது. அமைதியான போரட்டங்களில் பங்குபெறும் ஆண்களையும், பெண்களையும் துப்பாக்கியால் சுடுவதன் மூலம் பாதுகாப்புப் படையினர் அடக்குமுறையை மேற்கொள்கின்றனர். காஷ்மீரில் கல்லெறிவதென்பது கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு செயல். அதை வன்முறையென்று சொல்கின்றார்கள். அரசியல் ரீதியாகக் கோரிக்கைகளை எழுப்புவதற்கான வழிகள் திட்டமிட்ட முறையில் அடைக்கப்பட்டதால், ஒடுக்கப்பட்ட மக்களின் ஆத்திரத்தின் வெளிப்பாடே கல்லெறிதல். ஆதிக்கம் செலுத்துவதற்காக அரசு பயன்படுத்தும் கொடூரமான வழிமுறைகளை கல்லெறிவதோடு ஒப்பிட முடியாது.

விடுதலையைக் கோரும் எண்ணற்ற தலைவர்கள் வீட்டுக் காவலிலும், தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்கூட போராட்டங்கள் எதுவும் நடத்தமுடியாதவாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறீநகர் வந்து, மனித உரிமை மீறல்களைக் கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மீண்டும் உறுதி அளித்துக் கொண்டிருந்தபோது சுமார் நூறு தோழர்களுடன் போராட்டம் நடத்த முனைந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதே இந்தியப் பிரதமர்தான் 2008ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஒரு கருத்தை சொன்னார், ‘தேர்தலுக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகப் பேசுவார்கள்; அதன் பிறகு, பிரிவினைவாதத் தலைவர்களெல்லாம் தேவையற்றவர்களாகிவிடுவார்கள்’ என்று.

இராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் செயல்கள் குறித்து கவனிப்பதும், அதற்கு பொறுப்பேற்கவும் அரசுக்கு அக்கறை இருப்பது போல் தோன்றவில்லை. போராட்டங்களில் பங்கேற்கும் சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்களையும், அரசியல் தலைவர்களையும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் (Public Safety Act – PSA) கைது செய்கின்றார்கள். அறிவிக்கப்படாத ஊரடங்குநிலை நிலவுகின்ற காஷ்மீரில், முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் எதுவும் கொடுக்காமல், பின்விளைவுகள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் பாதுகாப்புப் படையினர் செயல்படுகின்றனர். அரசியல் தலைவர்களின் அழைப்பை ஏற்று மக்கள் மேற்கொண்ட ஒத்துழையாமை இயக்கத்தை பயங்கரவாதிகளால் தூண்டிவிடப்பட்ட பயங்கரவாத எழுச்சி என்று நவம்பர் 2009 இல் சித்தரித்துப் பேசினார் லெப். ஜெனரல் பி.எஸ். அகர்வால். 2008 மற்றும் 2009 இல் நடந்த அமைதியான போராட்டங்களின்போது பாதுகாப்புப் படையினர் மக்கள்திரளை நோக்கிச் சுட்டதால் போராட்டங்கள் மரணத்தை ஏற்படுத்துவதாக மாறிப் போயின. வலைத்தளங்களில் பதிவு செய்யப்படுகிற எதிர்ப்புகளை ’வலைதளப் பயங்கரவாதம்’ என்று முத்திரைக் குத்தி கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

தடுப்புக் காவலிலும், கைது செய்யப்பட்டும் இருக்கும் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், அறிவுஜீவிகள், காஷ்மீர் விடுதலையைக் கோரும் தலைவர்கள் மற்றும் சிறுவர்களின் முழு எண்ணிக்கை யாரிடமும் இல்லை. காவல்துறையினர் சிறைக்காவலில் இருப்பவர்களிடமும், கைது செய்யப்பட்டிருப்பவர்களின் விடுதலையை வேண்டுபவர்களிடமும் லஞ்சம் கேட்பது மற்றும் பலவந்தமாகப் பணம் பறிப்பது முதலிய செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அரசுடைய இராணுவம், துணை இராணுவம் மற்றும் காவல் துறையின் அடக்குமுறையை எதிர்க்கும் குடிமைச் சமூகத்தின் ஒரு சாராரை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் உறுதி செய்யப்படாத சந்தேகத்தின் அடிப்படையில் தடுப்புக் காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிக எண்ணிக்கையில் மேற்கொள்ளப்படுகின்றன.

சூலை 7, 2010 அன்று ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், மனித உரிமைப் பாதுகாவலருமான வழக்கறிஞர் மியான் குயோம் (Mian Qayoom) பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பொதுப் பாதுகாப்புச் சட்டம் என்பதன்மூலம் எந்தவித ஆதாரமும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து இரண்டு வருடம் வரை தடுப்பு காவலில் வைக்கமுடியும். ஒருநபரால் அமைதி மற்றும் ஒழுங்கு குறையும் என்று அரசு கருதினால், இந்த சட்டத்தின் மூலம் அவரைக் கைது செய்து இரண்டு வருடம் தடுப்புக்காவலில் வைக்க முடியும். தனது மனித உரிமை செயல்களுக்காகவும், அதிலும் குறிப்பாகத் தடுப்புக் காவலிலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் சட்டரீதியான ஆலோசனைகள் வழங்கியதாலும், இந்திய அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்காக வாதிடுவதாலும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்துவதை எதிர்த்து வாதிடுவதாலும், இந்திய இராணுவ, துணை இராணுவத்தின் குற்றங்களை விசாரிப்பதனாலும், சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவு தெரிவித்ததாலும், காஷ்மீர் ஒரு “சச்சரவான நிலப்பகுதி”(disputed territory) என அறிவித்ததாலுமே குயோமை கைது செய்துள்ளார்கள். சூலை 18, 2010 அன்று ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், மனித உரிமை பாதுகாவலருமான வழக்கறிஞர் குலாம் நபி சகாகீனும் (Ghulam Nabi Shaheen) பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறைவில்லாமல் கொல்லப்படும் பொதுமக்கள்:

2010 ச‌ன‌வ‌ரியிலிருந்து ஆக‌ஸ்ட் வ‌ரையிலான‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌ட்டும் 89 பொது ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இதில் 71 பேர் இந்திய‌ ஆயுத‌ப்ப‌டையினால் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆனால் இன்ன‌மும் எங்க‌ளை (பொது ம‌க்க‌ளை) வ‌ன்முறை செய்வ‌தாக‌வும், இந்திய‌ இராணுவ‌ம் அமைதியின் வ‌டிவ‌ம் என்றும் கூறி வ‌ருகின்ற‌ன‌ர்.

இராணுவ‌ ஆட்சி?

இந்திய‌ அர‌சு த‌ற்பொழுது ந‌டைபெற்று வ‌ரும் போராட்ட‌ங்க‌ளை காஷ்மீருக்குள் காஷ்மீரிகள் நடத்தும் போராட்டம் என்பதனை மறைக்க முயல்கின்றனர். அதே ச‌ம‌ய‌த்தில் இந்தியாவால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் இராணுவ‌ம் த‌ன‌து ப‌டைக‌ளை அதிக‌ரித்தும், ப‌ல‌மாக‌ வேரூன்றியும் வ‌ருகின்ற‌து. இந்திய அரசு, இராணுவம் மற்றும் துணை இராணுவத்தின் அடக்குமுறை செயல்களைக் கண்டு கொள்ளாமலும் அல்லது கட்டுப்படுத்த முடியாமாலும் உள்ளது. ஒருபுறம் “காஷ்மீர் மக்களைப் பாதுகாப்பதற்கே இந்திய இராணுவப்படை” என்று கூறிக் கொண்டே மறுபுறம் இந்திய அரசின் பாதுகாப்பு நலன்களுக்காகப் பொதுமக்கள் இராணுவத்தால் சுட்டு கொல்லப்படுவதை நியாயப்படுத்துகிறது. எமது “பாதுகாவலர்கள்” விநோதமானவர்கள். அவர்கள் எப்பொழுதும் எங்களை துப்பாக்கி இல்லாத பயங்கரவாதிகளாகவும் எதிர்கால விரோதிகளாகவுமே பார்க்கின்றனர். மொத்தத்தில் இந்தியாவைப் பாதுகாப்பதற்கு காஷ்மீரில் இராணுவ அடக்குமுறை தேவை என்பதாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது.

காஷ்மீரில் நிலவும் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (PSA) , சச்சரவுப் பகுதி சட்டம் (Disturbed Areas Act), ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (Armed Forces Special Powers Act – AFSPA) போன்றவை எல்லாம் சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணானவை. இந்த சட்டங்களெல்லாம் இந்திய இராணுவத்தையும், துணை இராணுவக் குழுக்களையும் சர்வதேச மனித உரிமை சட்டங்களிடமிருந்து பாதுகாக்கின்றன. 2009 பிப்ரவரி 26 அன்று முதலமைச்சராகப் பதவியேற்ற பின் ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ நீக்கப்படும் என அறிவித்தார் உமர் அப்துல்லா. இதை ஆயுதப்படைத் தரப்பு கடுமையாக எதிர்த்தது. இந்த சட்டத்தை நீக்குவது ‘பிற்போக்குத்தனமானது’ எனவும், ‘காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களின் பாதுகாப்பு இதனால் பாதிக்கப்படும்’ எனவும், இது பயங்கரவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் எனவும் கூறியது.

விடுதலையை விரும்பும் தலைவர்களுடன் சுயாட்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்’ நீக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார் உமர் அப்துல்லா. ‘ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை’ நீக்குவது சட்டரீதியாக மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாகவும் மக்களுக்கு சுதந்திரமாக செயல்பட அவசியமாகும். ஆனால் இப்போது, அந்த சட்டத்தை நீக்குவதைவிட, அதில் சில மாற்றங்களை மட்டும் கொண்டுவருவது மக்களுக்குப் பாதுகாப்பானது என்று காஷ்மீரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இறுதியாக…

இந்திய அரசு நிர்வாகத்தாலும், இராணுவத்தினாலும் வன்முறைச் சோதனைகளை மேற்கொள்ளும் பரிசோதனைக் கூடமாக காஷ்மீர் உள்ளது. காஷ்மீரில் இராணுவ ஆட்சி நடக்கின்றது என்பதனை இந்திய அரசும், சர்வதேச சமூகமும் எங்கும் சொல்வதேயில்லை. ஜம்மு காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் இராணுவமயமாக்கல் ‘உள்நாட்டுப் பிரச்சனை’ என்று கூறப்படுகின்றது. ஆனால், இந்தப் பகுதி சர்வதேச சச்சரவு மற்றும் போர் பகுதியின் விதிகளுக்குள் வரவேண்டிய பகுதி. இந்திய அரசின் திட்டமிட்ட மனித உரிமை மீறல்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் சர்வதேச சமூகமும் கண்டிக்காமல் மௌனியாக இருந்து வருகின்ற‌து. காஷ்மீர் பிரச்சனையும் மற்ற சர்வதேசப் பிரச்சனைகளைப் போன்றதே. இதில் சர்வதேச சமூகத்தின் அவசரமான கவனமும், ஒரு முடிவும் தேவை. தற்பொழுது இங்கு ஒரு சர்வதேச மேற்பார்வையாளர்களும் இல்லை. சமூக நீதியின்படி ஒரு சரியான முடிவுக்கு வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை.

சர்வதேச சமூகத்தின் கவனத்திலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் பேச்சுவார்த்தையிலும், காஷ்மீர் குறித்த எந்த உடன்படிக்கையிலும் காஷ்மீரி மக்கள் ஒரு தரப்பாக சேர்த்துக்கொள்ளப்படுவதேயில்லை. தற்பொழுது உள்ள நிலை தொடர்ந்து இந்திய அரசு அமைதி வழியில் போராடி வருபவர்களைத் திட்டமிட்டு கடுமையாக அடக்குமானால், அதே பொதுமக்களை மீண்டும் ஆயுதங்களை கையிலெடுக்க நிர்ப்பந்திக்கின்றது என்றே பொருள். இதனால் மீண்டும் வன்முறை சக்கரம் சுழலும்.

ஆரியர்கள் பூர்வகுடிகளா?


ஆரிய இனம் ஒன்று இல்லை. என்று சொல்லி அதற்கான ஆராச்சியில் ஈடுபட்டு புதிய குழப்பங்களை ஆதாரமாக காட்டப்படுகிறது.

இது போன்ற பொய் செய்திகளை எழுதிவிட்டு பின்னர் இதை வேறு ஒருவர் ஆதாரமாக காட்டி நிறுபணம் செய்யும் வேலையை இவர்கள் செய்வது இன்று நேற்றல்ல.

இவர்கள் நீண்ட நெடுங்காலமாக செய்து வருவதுதான்.

இங்கே பார்ப்பன இனத்தை சேர்ந்த சிலரும் மற்றவர்களும் என்ன சொன்னார்கள் என்பதைப் பார்ப்போம்.

“உலகில் தென் இந்தியா மிக உயர்ந்த இடத்தை( ஸ்தானத்தை) ஒரு காலத்தில் வகித்து வந்தது – அது திராவிடர்களால் ஆளப்பட்டு வந்தது. பின்னர் அது நாடோடிகளான ஆரியர்கள் வசமானது.”
(பண்டிதர் நேரு – உலக சரித்திரம். – முதல் பாகம்- பக்கம் 2002-2003)
“இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர்கள் பரவியதைக் குறிப்பதாகும். ” (பண்டிதர் நேரு – டிஸ்கவரி ஆப் இந்தியா – பக்கம் – 82)
“இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ- ஆரியர் காலத்தையும் இவர்களுடைய வெற்றிகளையும் உள்நாட்டு சண்டைகளையும் பற்றிக்கூறுவதாகும். இவைகளை நான் உண்மை என்று நான் நம்பவேயில்லை. பஞ்ச த்ந்திரம் அராபியன் இரவுகள் போன்று இது ஒரு கற்பனைக்கதை தான் என்பதே என்கருத்து” (பண்டிதர் நேரு – டிஸ்கவரி ஆப் இந்தியா – பக்கம் – 76-77)
ஆரியர் என்ற ஒரு இனம் இல்லை என்றால் நேரு எதைக் குறிப்பிட்டார்.
“ஆரியர் ஆதிக்கத்தினால் திராவிடர்கள் அடிமை சாதி மக்களாக ஆக்கப்பட்டார்கள்: ஆரியர்கள், தங்கள் நாட்டில் புல்தரை இல்லாததினாலும், மங்கோலியர்கள் அவர்களை விரட்டி அடித்ததினாலும் பிழைப்புக்காக இடம் கண்டுபிடிப்பதற்காகவே வந்தார்கள்”. – ஏ. எல். சாண்ட்ர்ஸ்.

“ஆரியர்கள் சமசுகிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்கு கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கே தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.” -எச். ஜி. வெல்ஸ்
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராகவே இருக்க வேண்டும். அப்படி அவர்களை திராவிடர்கள் தாம் என்றால் ஆரியர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர்கள் நிறத்தாலும், மொழியாலும், பழக்க வழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும். (பெருஞ்சித்திரனார்- ஆரியப் பார்ப்பனர்களின் அளவிறந்த கொட்டங்கள் பக்கம் -15)
இவர்மட்டுமா?
கீழே கெளுங்கள்………..
ஆடுமாடு ஓட்டிகிட்டு பொழைக்க வந்த!- அப்படியே
ஆத்தங்கரை ஓரத்தில டெண்டடிச்ச!
வேத இதிகாசமின்னு சரடு விட்ட!
எங்கள வேசிப்பய புள்ளங்கன்னு எழுதிபுட்ட!
போரதெல்லாம் போகட்டுன்னு பொருத்துகிட்டா!………
நீதான் பூர்வ குடி இங்கிரியேடா- புளுகு மூட்ட!
போதும் நிறுத்து, போதும் நிறுத்து போதும் நிறுத்தடா!………
உன் வேசம் இப்போ கலஞ்சிபோச்சி பேச்சை நிறுத்தடா!………….
தொடப்பம் எடு எடு……….,
செறுப்ப எடு எடு………..
ஓடடா ஓடு, ……………..ஓடடா ஓடு………………..

மேலே குறிப்பிட்டுள்ளவற்றை பார்த்தால் ஆரிய இனம் என்று இருந்தது என்பதை ஆரியர் நேருவே குறிப்பிட்டுள்ளார் என்பதை நாம் அறியலாம்.
இவர்கள் எப்போதும் வரலாற்றை திருத்தி எழுதுபவர்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.
” தமிழரிடமிருந்த பல அரிய விசயங்களையும் மொழி பெயர்த்து தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்ததைப் போலவும் வட மொழியிலிருந்து தமிழுக்கு வந்தது போலவும் காட்டி தமிழ் ஓலைச்சுவடிகளை அழித்தனர்.பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி (தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-33)
” இவர்கள் இமயமலைக்கு வடக்கேயுள்ள மத்திய ஆசியாவில் வசித்திருந்தவர்கள் தங்கள் ஆடுமாடுகளுக்கு புல்லைத்தேடிக் கொண்டு ஊர் ஊராய் திரிந்தவர்கள்”. பரிதிமாற் கலைஞர்- வி.கே. சூரிய நாராயண சாஸ்திரி
(தமிழ் மொழியின் வரலாறு : பக்கம்-29).
உ.வே. சாமிநாத அய்யர் தமிழுக்கு தொண்டு செய்தார். ஆனால், அவர் தன் பெயருக்கு அருகிலேயே அய்யர் என்ற சொல்லை, தன் உயர்நிலை என்று கருதும் ஒன்றை எப்போதும் தன்பெயர் அருகில் வைத்துக்கொண்டிருந்தார்.
அந்த பார்ப்பனர் எப்படியெல்லாம் திருத்தல் வேலைகளை செய்தார் என்பதை பார்ப்போம்.
புறநானூற்றில் ” ஆண்முலையறுத்த” என்று தொடங்கும் பாடலின் ஒரு சொல் “அறவோர்” என்று வந்துள்ளது . இதனை யாழ்ப்பணத்து பழைய வெளியீடு ஒன்றில் சொல்லப்படுகிறது. ஆனால், உ.வே.சா அவர் பதிப்பில் அந்த சொல் “பார்ப்பனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை.
“அறவோக்குக் கொடுமை செய்தல் கூடா” – தெனும் அறம் பற்றிச் சொல்லும் அப்பாடலை
“பார்பார்க்குக் கொடுமை செய்தல் கூடா” -தென்பதாக இவர் பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு ”
கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக்கொலை”
என்ற காஞ்சி புராண அடியை மேற்கோள் காட்டியுள்ளார்.
இப்படி வரலாற்றை இவர்கள் திருத்துவது இன்று நேற்றல்ல.
காலம் காலமாக செய்து வருவதுதான்.
அன்று
மன்னன் அதிகாரத்தை வைத்து இவர்கள் அதிகாரம் செய்தார்கள்.
மனுநீதி எழுதி உலக நீதியை கெடுத்தார்கள்.
தமக்கு மட்டும் தனிநீதி எழுதிக் கொண்டார்கள்.
பின்னர் செய்தி ஏடுகளில் எழுதி ஊரைக் கெடுத்தார்கள்.
இன்று இணையம் உள்ளிட்ட வற்றில் எழுதி நம்மைக் கெடுக்கிறார்கள்.
நிகழ்ச்சி ஒன்றுதான் காலம் இடம் தான் வேறு படுகிறது.

பாரத் மாத்தாக்கி ஜே…


* காந்தியை சுட்டுக் கொன்றான் ஒரு பார்ப்பன இந்து மதவெறியன். இப்படியாக துவங்கியது சுதந்திர இந்தியாவின் சாதனை.

* ஜகத்குரு ஜெயேந்திரர் என்கிற துறவி, சங்கரராமன் என்பவரை கூலி படை வைத்து கொலை செய்தார்.

* குஜராத்தில் கர்ப்பிணி பெண் வயிற்றில் குத்தி கருவில் இருந்த குழந்தையையும் கொன்றார்கள் மோடி தாசர்கள்.

* செத்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக, மூன்று தாழ்த்தப்பட்டவர்களை கொன்று, அவர்களின் தோலை உரித்தார்கள் ஜாதி இந்துக்கள்.

* கடன் தொல்லையால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

* வறுமையின் காரணத்தினால் நெசவாளர்கள் தங்கள் சிறுநீரகத்தை விற்றார்கள்.

* அதே காரணத்திற்காக பெண்கள், வாடகை தாய்களாக மாற்றப்பட்டு உடல் மற்றும் உளவியல் சித்ரவதைக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

* காவல் துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்து விபச்சார விடுதியில் விற்றனர்.

* தாய்நாட்டுக்காக தன் உயிரையே தியாகம் செய்வதாக சொல்லப்படுகிற, நம்பப்படுகிற ராணுவத்தினர் – தொடர்ந்து பெண்களை தூக்கி வந்து வன்புணர்ச்சி செய்து கொலை செய்வதை கண்டித்து, அஸ்ஸாம் மாநிலத்தில் ராணுவ அலுவலகம் முன்பு நிர்வாணமாக நின்று தங்கள் எதிரிப்பை தெரிவித்தனர் அந்த வீரமிக்க பெண்கள். அந்த அவமானம் கொஞ்சமும் உரைக்காமல் மிடுக்கோடு தேசத்திற்காக ‘பாடுபடுட்டு’க் கொண்டுதான் இருக்கிறார்கள், தாய்நாட்டின் மானம் காப்பாவர்கள்.

* கட்டடம் மற்றும் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு, தங்குவதற்கு வீடு இல்லாததால், சாலையோரத்தில் தங்கி ஒவ்வொரு ஆண்டும் கணிசமான அளவில் லாறி ஏறி சாகிறார்கள்.

* தனது பதவி காலம் முடிந்த பிறகும் அரசு வீடுகளை காலி செய்ய மறுத்தனர் முக்கியஸ்தர்கள். செய்வதறியாது விழிப்பது போல் நடிக்கிறது – அரசும், நீதி மன்றமும்.

* சாலை விரிவாக்கத்திற்காக குடிசைகள் பிய்த்தெரியப்பட்டதால், திக்கு தெரியாமால் விழிக்கிறார்கள் வீடு அற்றவர்கள்.

* “சுதந்திர இந்தியா பெருமளவில் உயர்ந்திருக்கிறது.” குடியரசுத் தலைவரும் – பிரதமரும் பெருமை பொங்க உரையாற்றுகிறார்கள்.

* ரிலைன்ஸ் அம்பானியின் தவப்புதல்வர்கள் குட்டி முதலாளிகளாக இருந்து பெரும் முதலாளிகளாக உயர்ந்திருக்கிறார்கள்.

* வறுமையிருந்தாலும், நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகி இருக்கிறது என்கிறார் நிதியமைச்சர்.

* நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் கட்டு கட்டாக பணம் கை மாறியது.

* அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருந்த இந்திய ஆளும் கும்பலின் தேசப்பற்று மிக்க சுதந்திர தின உரையைப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டிருப்பார் ஜார்ஜ் புஷ்.

60 ஆண்டுகாலமாக சுதந்திர இந்தியாவின் சாதனை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க அதன் தொண்டு.

மகாத்மா காந்தியின் சொந்த ஊரான குஜராத்தை தனக்கும் சொந்த ஊராக கொண்ட, காந்தியவாதியைப் போல் எளிமையாக உடை உடுத்தும் நடிகை நமீதா எதோ ஒரு தொலைக்காட்சியில் சுதந்திரதின வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தார்….

பாரத் மாத்தாக்கி ஜே… ஜெய்ஹிந்த்.

இந்து என்றால் ஜாதி வெறியனா?


ஒருவன் இந்து மதத்தில் பிறப்பதினால் ஜாதி வெறியனாக இருக்க முடியாது. ஆனால் ‘இந்துக் குடும்பத்தில் பிறக்கிற ஒருவனுக்கு பிறக்கும்போதே ஜாதி இருக்கிறது’ எனறு தான் இந்து மதம் சொல்கிறது. ‘பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தால், அவன் உயர்ந்த ஜாதி. தாழ்த்தப்பட்டவர் குடும்பத்தில் பிறந்தால் அவர் தாழ்ந்த ஜாதி’ என்று இந்து மதம் பிறப்பில் ஜாதி பார்க்கிறது.

அதுபோல் ஒருவர் விருப்பப்பட்ட ஜாதிக்கு மாறிக் கொள்ள முடியாது என்றும் அது சொல்கிறது.
ஆக ஒருவர் பிறக்கும் போது ஜாதி வெறியராக பிறக்க முடியாது. இந்த அமைப்பை ஒத்துக் கொண்டு வளர்வதினால்தான் ஒருவர் ஜாதி வெறியராக உருவாகிறார்.

யார் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, கடைப்பிடிக்கிறார்களோ அவர்களை எதிர்த்து இயங்குவதும், கண்டிப்பதும்தான் நாம் ஜாதி வெறியர்களாக இல்லை என்பதை நீருபிக்க முடியும். அது நம் குடும்பம் சார்ந்திருக்கிற ஜாதியாக இருந்தாலும் தயங்காமல் அம்பலப்படுத்தவேண்டும்.

மற்றபடி, பிறப்பால் நான் சங்கராச்சரியார்களுக்குக் கூட ஜாதி பார்ப்பதில்லை. ஆனால், சங்கராச்சாரியார் ஆக வேண்டும் என்றால் பிறப்பால் பார்ப்பானாக இருக்க வேண்டும் என்று ஜாதி வெறியர்கள் சொல்கிறார்கள்.
அப்படி பார்ப்பதுதான் பார்ப்பனியம், இந்து மதம்.