தில்லு துர யாரு? நித்தியா, சன்.டிவி, நக்கீரன், சாரு !!


இந்து மதத்திற்கு பெரிய ‘களங்கம்’ ஏற்பட்டு விட்டது.

புனிதமான இந்து மதத்தைக் களங்கப்படுத்தி விட்ட நித்தியானந்தா, தான் குற்றமற்றவர் என நிரூபித்த பின்னரே வெளியில் நடமாட வேண்டும் என்று இந்துப் பாசிஸ்டுகளும், தமிழ் பெண்களையும் தமிழ் கலாசாரத்தையும் இழிவு படுத்திவிட்டார் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சிலரும் கொதித்துப் போய் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆஸ்ரமங்கள் மீது தாக்குதல், சாமியாரின் படங்களை செருப்பால் அடித்து எரித்தல், உருவபொம்மை எரிப்பு என்று நமது மரபார்ந்த போராட்டங்கள் மீடியாவின் காட்சிப்படுத்தலோடு தடபுடலாக இரண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக இலவசமாகக் கிடைத்த வீடீயோ க்ளிப்பிங்ஸ்சை வைத்து தனது ரேட்டிங்கையும் உயர்த்திக் கோடிகளைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது சன் தொலைக்காட்சி. தி.மு.க தலைவர்களின் மைனர் கால லீலைகளை படம் பிடித்திருந்தால் பல ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் வண்ணம் ஃபுட்டேஜ் கிடைத்திருக்கும். என்ன இருந்தாலும் தன்னையே படம் பிடிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்களில்லை.

நித்தியை கார்ப்பரேட் தீர்க்கதரிசியாக உருவாக்கிய குமுதமோ நித்தியின் ஆபாச வீடியோவை தன் இணையத்தில் கூச்சமில்லாமல் வெளியிட்டு பரபரப்பைக் கூட்டுகிறது. “ஏண்டா நாயே, நீதான்டா அந்த நாய்க்கு ஐந்து வருடமா பூஜை போட்டு கொண்டாடினாய்” என்று வாசகர்கள் செருப்பைக் கொண்டு அடிக்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் குமுதம் கூட்டத்தோடு கூட்டமாக கோவிந்தா போட்டு கல்லாக்கட்டுகிறது

நித்தியின் ஆபாசத்தை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்ட நக்கீரன் இணையமோ அந்த வீடியோவின் சில பகுதிகளை மட்டும் டிரெய்லர் மாதிரி போட்டு வாசகன் நித்தி மோனத்தில் ஆட்படும் வேளையில் எடிட் செய்யப்படாத முழு வீடியோவையும் காண சந்தா கொடுங்கள் என்று சுயமைதுனம் செய்வதோடு நைசாக பாக்கெட்டில் கைவைக்கிறது. ஆபாசப் படத்தை விற்றால் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது சட்டம். நக்கீரன் செய்து கொண்டிருக்கிற இந்த விற்பனைத் தந்திரம் என்பது சட்ட பூர்வ நீலப்பட விற்பனையல்லாமல் வேறென்ன? முன்பு பிராபகரன் படத்தை மாஃபிங் செய்து ஆபாசமாக கல்லாக் கட்டியவர்கள் இன்று நித்தியின் கைங்கரியத்தில் இரண்டாவது பதிப்பு போட்டெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கிறார்கள்.

ஈழப் போரின் போது கொல்லப்பட்ட ஈழ மக்களுக்கு, தாங்கள் இழைத்த துரோகத்தை மறைத்து, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் வெடிக்கிறது என்றெல்லாம் ஈழ மக்களின் துயரத்தை மறைத்தும் கொலைகார இந்தியாவுக்கு காவடி தூக்கியும் எழுதிவந்தார்கள். கடந்த சில வாரங்களாக வித விதமான ஆபாச சாமியார்களின் உல்லாச ஆசிரமங்கள், கருவறைக் களியாட்டங்கள், மோசடிகள், என்று ஜூனியர் விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், நக்கீரன் இதழ்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

கருவறையில் செக்ஸ் லீலை செய்த தேவநாதனுக்கு முன்னரும் பின்னருமாக வண்டி வண்டியாக எழுதிக் குவிக்கின்றன. வாசகர்களும் பழக்கப்பட்டுப் போன தங்களின் வக்கிர ரசனைகளுக்குத் தீனி போடுகிறது என்பதற்காக இவைகளைப் படித்துக் கொண்டே ஊர் ஊராக ஆஸ்ரமங்களுக்கு அலைகிறார்கள். கவர்ச்சி நடிகைகளின் இடத்தை சாமியார்கள் பிடித்துக் கொண்டதால் இனி இவை அடிக்கடி வாசகர்களுக்காக படைக்கப்படும்.

________________________________________
யார் இந்தச் சாமியார்கள்?

பெரியவா….. சின்னவா….எல்லோரது போதனைகளையும் போட்டு வெகு மக்களிடம் காசு பார்க்க முடியாத சூழலில் ஆனந்த விகடனால் இறக்குமதி செய்யப்பட்டவர்தான் சுவாமி சுகபோதானந்தா. “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்ற தொடரைத் துவங்கி சுகபோதானந்தாவை பிரபலமாக்கியது ஆ.வி. இதே சுகபோதானந்தா பின்னர் குமுதம் இதழிலும் எழுதினார். பின்னர்தான் ஆ.வி சத்குருவைக் கொண்டு வந்தது. ஆனந்த விகடனின் இந்த போட்டியை எதிர்கொள்ள குமுதம் நித்தியானந்தாவைக் களத்தில் இறக்கியது.

இன்றைய தேதியில் சத்குரு நக்கீரன், ஆனந்த விகடன், விஜய் தொலைக்காட்சி என எல்லா இதழ்களிலும், காட்சி ஊடகங்களிலும் எழுந்தருள்கிறார். கூடவே விஜய் தொலைக்காட்சி பிரபலங்களைக் கொண்டு சத்குருவை வைத்து நேர்காணல் செய்து வெளியிட்டதும் இங்கே நினைவுக்கு வருகிறது. ஆக இந்தச் சாமியார்களை உருவாக்கியது ஊடகங்கள்தான்.

சுவாமி சுகபோதானந்தா, சத்குரு ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா இவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வந்தார்கள்.. திடீரென ஒரு நாளில் வானத்தில் இருந்து குதித்தா வந்தார்கள்? ஒரு நள்ளிரவிலோ ஒரு ஆதிகாலையிலோ இவர்கள் பிரபலமாகிவிடுவதில்லை. எங்கெல்லாம் மதமும் மதவாதிகளும் கடைவிரிக்கிறார்களோ எங்கெல்லாம் மக்களின் பிரச்சனைகள் அதிகரித்துச் செல்கிறதோ அங்கெல்லாம் காலம் தோறும் புதிது புதிதாக இந்த ஆபாச்ச் சாமியார்கள் உருவாகிவருகிறார்கள். இந்த சாமியார்களின் தேவை ஆளும் வர்க்கங்களின் அடிப்படைத் தேவை. எப்படி என்பதில்தான் இந்த காவியுடை காமப் பிசாசுகளின் உண்மை முகம் ஒளிந்திருக்கிறது.

ஒரு காலத்தில் ஆகமவிதி, மனுதர்மம், மதம், வேதம் என்று வருண தர்மத்தின் அடிப்படையின் பார்ப்பன மதம் பரப்பி வந்தார்கள். பழமையை விட்டுக் கொடுக்காமல் ஆகம விதிகளை கறாராகக் கடை பிடித்து பார்ப்பன வெறியை மக்கள் மீது திணித்து வந்த சங்கரமடம் மாதிரியான மடங்கள் ஒரு வகை. இந்த பார்ப்பன சாமியார்களோ கடும் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தார்கள். கட்டுப்பாடு என்றால் செக்ஸில் அல்ல செக்ஸ் விதிமுறைகளில். அதாவது இவர்கள் மனுதர்மப்படி பார்ப்பன பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்வார்கள். சூத்திரப் பெண்களைத் தொட்டால் தீட்டு அல்லவா?

இந்த பார்ப்பன அதிகார பீடங்களின் அடுத்த வடிவம்தான் கார்ப்பரேட் சாமியார்கள். மறுகாலனியாதிக்கம் அறிமுகமான தொண்ணூறுகளை ஒட்டிய காலப்பகுதியில் இவர்கள் அறிமுகமானார்கள். கார்ப்பரேட் சாமியார்கள்தான் நவீனமானவர்கள் அல்லவா? அவர்கள் பார்ப்பனர்களுடனும் உறவு வைப்பார்கள் சூத்திர பெண்களுடனும் உறவு வைப்பார்கள். அந்த விஷயத்தில் அவர்கள் தீண்டாமையைக் கடை பிடிப்பதில்லை.ஆனால் கருவைறையில் செக்ஸ் வைத்தாலும் சரி மடத்துக்குள்ளேயே கொலை செய்தாலும் சரி பார்ப்பனச் சாமியார்களாக இருந்தால் அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட முடியும், அதுவே சூத்திர பிரேமானந்தாவாக இருந்தாலோ ஏனைய சூத்திர மோசடிச் சாமியார்களாகவோ இருந்தால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட்டு இந்து மதம் காப்பாற்றப்படும். இவர்களை தண்டிப்பதன் மூலம் ஜெயேந்திரன் செய்த பாவத்தை கழுவிக் கொள்கிறது, மனுதர்மம், ஆகமவிதியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் சாசனம்.

நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்கு ஏற்ப அடுத்த தலைமுறையை தயார் படுத்த வேண்டிய அவசியம் இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு இருந்தது. ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், ஊடக முதலாளிகள், கருப்புப் பண முதலைகள் என எல்லோருமாகச் சேர்ந்து புதிய கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள். அவர்களே புதிய சாமியார்களையும் உருவாக்கினார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியால் உருவான புதிய தலைமுறையைக் குறிவைத்து சாமியார்களை உருவாக்கியது ஊடகங்களே.

சாமிப்படங்களைக் காட்டுவதை விட இந்துமதத்தின் கருமக் கோட்பாடுகளை கொஞ்சம் மென்மையாக ஆடல் பாடலோடு போதித்து வந்தார்கள். இவர்களில் டான்ஸ் சாமியார் சிவசங்கரபாபாவும், யாகவா முனிவரும் லைம் லைட்டுக்கு வந்தது இப்படித்தான். இன்னொரு பக்கம் பங்காரு அடிகளார் என்னும் பெயரில் செவ்வாடை வழிபாட்டைத் துவங்கி மேல்மருவத்தூரையே தன் வசப்படுத்தினார். இன்று மலைமுழுங்கி மகாதேவன் மாதிரி தோற்றம் அளிக்கும் பங்காருவின் சக்தி பீடம் மிகப்பெரிய நிறுவனம்.

தனது பிறந்த நாளின் போது 100 கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்திருக்கிறார் பங்காரு. அப்படி என்றால் எத்தனையாயிரம் கோடிகள் வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார் இந்த செவ்வாடைச் சாமியார்? பார்ப்பன மடங்களுக்குச் சென்று வழிபாடு செய்ய முடியவில்லையே என்று தயங்கி நின்ற திராவிட இயக்கத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.கவினர் இன்று பங்காரு அடிகாளாரின் பக்தர்களாக உருமாறியிருக்கிறார்கள். ( அமைச்சர் துரைமுருகன் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியதும், காஞ்சி மடங்களுக்குச் சென்று வருவதும் எல்லோருக்கும் தெரிந்த கதை)

சாய்பாபா என்னும் பன்றித்தலையன் பாபாவின் மோசடிகளை சில வருடங்களுக்கு முன்னர் வெளிக் கொண்டு அம்மணமாக்கும் முயற்ச்சியை வெளிக்கொண்டு வந்தது பி.பி.சி மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள். ஆனால் இந்தியாவின் உயரிய ஆளும் வர்க்கங்கள் வரம் வேண்டும் இடமாக இருக்கும் புட்டபர்த்தி ஒரு மர்மமான பிரதேசம் என்று பல ஊடகங்கள் எழுதியும் இந்திய ஆட்சியாளர்கள் அதைப் பாதுகாத்து வருகிறார்கள். சாய்பாபா ஒரு ஓரினச் சேர்க்கைப் ப்ரியன் என்பதையும் கட்டாயமாக பல இளைஞர்களை கரெக்ட் செய்து சிஷ்யப் பிள்ளைகளாக வைத்திருப்பதையும் அமபலப்படுத்திய வெளிநாட்டு ஊடகங்களும் உண்டு.

__________________________________

ரௌடி அரசியலின் காவி முகம்?

வேதாந்தியை உங்களுக்கு நினைவிருக்கும். சேதுக் கால்வாய் தொடர்பாக கருணாநிதி, ராமன் குறித்துத் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த வேதாந்தி கருணாநிதியின் தலையைக் கொண்டு வருவோருக்கு பரிசு என்று அறிவித்தான். அந்த காவி உடை மிருகத்தை நீங்கள் ராமனின் காவலனாக நினைக்கக் கூடும், ஆனால் அதுதான் இல்லை. இந்திய முதலாளிகளின் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றிக் கொடுக்கும் திருட்டு வங்கியாக பணக்காரர்களுக்கு செயல்பட்டான் வேதாந்தி.

வேதாந்தி மட்டுமல்ல எவனெல்லாம் ஏழைகளுக்குச் சேவை செய்கிறோம் என்று அறக்கட்டளை நிறுவி சாமியார் போர்வையில் போதுச் சேவைக்கு வருகிறானோ அவன் எல்லாமே இம்மாதிரியான கருப்புப் பண பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறான். சேவை அமைப்புகள், அறக்கட்டளைகள் என்றால் அரசு வரி விலக்கு அளிக்கிறது. கோடி கோடியாக பகதர்களிடம் இருந்து கொள்ளையடிக்கிறார்கள். ஆஸ்ரமம் என்ற பெயரில் பெரிய நவீன பாலியல் விடுதிகளைக் கட்டுகிறார்கள். ஒரு மோசடிச் சாமியார் மோசடி நிறுவனமாக மாறுவது இந்தியப் பணக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கிறது.

நித்தியின் உல்லாச வீடியோ குறித்துப் பேசுகிற ஊடகங்கள் என்றாவது நித்தியின் ஆஸ்ரமங்கள் குறித்தோ கோடிகளை ஈட்டி, மேல் மட்டத் தொடர்புகளை வளர்த்துக் கொண்ட விதம் பற்றியோ எழுதியிருக்குமா? தான் அடிக்கிற கொள்ளையில் கொஞ்சம் பணத்தை பிச்சைக்காசாக மக்களுக்கு இவர்கள் கொட்டி விடுவதால் சமூகச் சாமியார்களாகவும் உருவாகிவிடுகிறார்கள். தொண்ணூறுகளில் ரௌடி அரசியல் கூட்டு பற்றி ஆராய அமைக்கப்பட்ட வோரா கமிட்டி ரௌடி – அரசியல்வாதி – போலீஸ் கூட்டின் ஒரு அங்கமாக சாமியார்களைச் சுட்டிக்காட்டியிருந்தது. ஆமாம் பெரும் பண முதலைகளின் கூட்டு இல்லாமல் எந்த ஆஸ்ரமங்களும் செயல்படவே முடியாது. இப்படி பலப் பல கோடி ரூபாய்களைக் கொண்டு கொட்டி வைக்க சங்கரமடமும் பயன்படுகிறது, நித்தியானந்தா மடமும் பயன்படுகிறது…

__________________________________________

ரஞ்சிதாவுடன் காதலா?

ஒரு நண்பர் சொன்னான். அவர் ரஞ்சிதாவைக் கொண்டாடுகிறார். ரஞ்சிதாவும் அவருக்கு அன்புடன் பணிவிடை செய்கிறார். அதாவது அவர் சொல்ல வருவது ரஞ்சிதாவும் சாமியாரும் ஒருவரை ஒருவர் காதலித்திருக்கிறார்கள் என்பதுதான். ஆமாம் ஏன் காதல் வராது? புகழ் போதையில் மூழ்கி கோடிகளைச் சம்பாதித்து அதில் சில லட்சங்களைக் ரஞ்சிதாவுக்குக் கொட்டி அவரை கொண்டாடவும் செய்கிற நித்தியின் காதல் ரஞ்சிதாவோடு முடிந்து போகிற ஒன்றா என்ன? இது மாதிரி எத்தனை ரஞ்சிதாக்களை பெங்களூர் ஆஸ்ரமத்தில் கொண்டாடியிருப்பார்? நித்தியாவின் ஆசிரமத்தில் முன்னாள் நீலப்பட நாயகிகளைக் கண்டிருப்பதாக நித்தியாவின் சீடர் சாருவே தெரிவித்திருக்கிறார்.

ரஞ்சிதா சினிமா, சீரியல்களில் நடித்து தனியாக சீரியல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட அதற்கு நித்தியா பைனான்சும் செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், முதலாளிகள் சம்பந்தப்படும் மேட்டுக்குடி விபச்சாரத்தில் ரஞ்சிதா போன்றுதான் பணிவிடை செய்யவேண்டும். ஏனெனில் இதற்கு சன்மானமாக பல இலட்சங்கள் தரப்படுகின்றது. அனுபவ் தேக்குமர நடேசனுக்கு இரவுப் பணிவிடை செய்யும் பெண்கள் குடும்பப் பெண் போல நடந்து கொள்ள வேண்டுமென்பது நிபந்தனையாம். இதெல்லாம் மேட்டுக்குடி விபச்சாரத்தில் சகஜம்.

இங்கே ரஞ்சிதாவை ஒரு பெண்ணாக மட்டும் பார்த்து பரிதாப்படுபவர்கள் மேற்கண்ட விசயத்தை பார்க்கத் தவறுகிறார்கள். ரஞ்சிதா இடத்தில் ஒரு சாதரணப் பெண் இருந்திருந்தால் இந்தப் பரிதாபம் வந்திருக்காம என்பது ஐயமே. மேன்மக்களின் சோகம்தானே கீழே பரவும் நியதியைக் கொண்டிருக்கிறது.

முன்பு குஷ்பு கற்பு பற்றி கருத்துச் சொன்னார் என்பதற்காக சுஹாசினி, ரேவதி எல்லாம் குஷ்புவுக்காக வரிந்து கட்டி வந்தார்கள். ரஞ்சிதாவோ, குஷ்புவோ, சுஹாசினியோ இவர்களுக்கெல்லாம் என்னதான் பிரச்சனை? காலையில் எழும்பி ஒரு டீயும் ஒரு பன்னும் வாங்கி தின்று விட்டு கிடைக்கிற கூலியில் கத்தரிக்காய் வாங்கி சுண்டக் குழம்பு வைத்தா தினம் தோறும் தின்று கொண்டிருக்கிறார்கள்? அல்லது அண்ணாசாலை சாந்தி தியேட்டர் சப்வேயில் தன் வயிற்றுக்காக தன்னை விற்று அதையே பிழைப்பாக்கிக் கொண்ட பாலியல் தொழிலாளியின் கற்பு பற்றி இவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இது கொழுப்பெடுத்த பணக்கார நாய்களின் அரிப்பு. வீக் எண்ட் பார்டிக்குப் போவது, கற்பு பற்றி தங்களின் வர்க்க சொறிக்குத் தோதாக கருத்துச் சொல்வது என்று போகிறதே தவிர, உழைக்கும் மக்களின் காதல் ஒழுக்கத்தை காதல் மரபை முதலாளித்துவ ஒழுக்கங்களில் மூழ்கித்திழைக்கும் இந்த பிழைப்புவாத கும்பலின் உணர்வுகளோடு ஒப்பிட முடியாது. தனது காதலியை சைக்கிள் வைத்து மிதித்துச் சென்று ஒரு கடலை மிட்டாய் வாங்கிக் கொடுத்து அமர்ந்து பேசுவதற்குக் கூட ஒரு இடமில்லாமல் சந்தடி மிகுந்த பேருந்து ஓரத்தில் நின்ற படி பேசிப் பிரிகிறார்களோ அந்த காதலுணர்வை விட இது எவ்வகையில் சிறந்ததாக இருக்க முடியும்?

______________________________

சாமியார்களின் மோசடி செக்சில் மட்டுமா?

சில சாமியார்கள் அரசியல் புரோக்கர்களாக செயல்படுகிறார்கள். சிலர் கூலிப்படைகளை வைத்து தொழில் செய்கிறார்கள். கருப்புப் பண வங்கிகளாக சிலரும், போதைப் பொருள் கடத்தல், பாலியல் தொழில் என எல்லா கேடு கெட்ட தொழிலையும் காவி உடையில் செய்கிறார்கள். உழைக்காமல் முதலீடே இல்லாமல் வருவாய் ஈட்டும் ஒரு கருவியாக இந்து மதமும் ஏனைய மதங்களும் இவர்களுக்குப் பயன்படுகிறது. அடுத்தவன் நிலத்தை அபரித்து, மக்கள் நம்பும்படி மாஜிக் மாய்மாலங்கள் செய்து, கோடிகளைக் குவித்து, மாமா வேலை பார்க்கிற வரை இவர்கள் யாருக்கும் குற்றவாளிகளாகத் தெரிவதும் இல்லை, இந்தச் சாமியார்களின் ஆஸ்ரம சாம்ராஜ்யங்கள் யார் கண்ணையும் உறுத்துவதும் இல்லை.

ஆஸ்ரமம் வளர வளர புற்றீசல் போல பக்தர்கள் படையெடுக்கிறார்கள். அவன் கொடுக்கிற போதை வஸ்துவை உண்டு மோனத்தில் ஆழ்ந்து அந்த மோனத்தையே முக்தி நிலை என்றும் நம்புகிறார்கள். ஆயிரம் பேரிடம் அவன் நடத்துகிற காமக் களியாட்டங்களுக்குப் பின்னர் ஏதோ ஒரு பெண் அட சாமியார் என்று போனோமே சுத்த கேடிப்பயலா இருக்கானே என்று சொன்ன பிறகு இந்து மதத்துக்கே கேடு, தமிழ் கலாசாரத்திற்கே தீங்கு என்று கதறுகிறார்கள்.

தேவநாதனின் கருவறை லீலைகள் பல ஆண்டுகாலம் தொடர்ந்த ஒன்று. ஜெயேந்திரனின் காமக் களியாட்டங்களுக்கு இரு தாசாப்த கால வரலாறு உண்டு. இருந்தும் ஏன் இப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்? எப்படி ஜெயேந்திரனால் மீண்டும் லோக குருவாக வலம் வர முடிகிறது என்றால் ஜெ, கருணாநிதி ஆட்சி என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அரசியல் கூட்டு இவர்களுக்கு இருக்கிறது.

ஜெயேந்திரனின் வழக்கில் எல்லா சாட்சிகளும் வரிசையாக பல்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். கருவறை லீலை செய்த தேவநாதனுக்கு 94 நாட்களில் ஜாமீன் கிடைத்தது எப்படி? கேட்டால் பொலீஸ் தரப்பு வாதம் வீக்காக இருந்தது என்கிறார்கள். தேவநாதன் சரணடைந்து 94 நாட்கள் ஆகியும் அவன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வில்லை என்பதால் அவனை ஜாமீனில் விட்டது காஞ்சிபுரம் நீதிமன்றம்.

ஆனால் அவனது ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அவன் மீதான குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய இருந்த நேரத்தில் தேவநாதன் வழக்கை விசாரித்த இரண்டு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. பின்னர் அதைக் காரணம் காட்டியே அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கருணாநிதி தலைமையிலான இன்றைய தமிழக அரசு ஜெயேந்திரன் வழக்கு, தேவநாதன் வழக்கு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வழக்கு என சூத்திர மக்களுக்கான எல்லா நீதி போராட்டங்களிலும் தவறான வாதங்களையும் பார்ப்பனர்களுடன் கரிசனமான போக்கையுமே கொண்டிருக்கிறது.

பாதிக்கப்படும் பெண்களும் தாங்கள் சாமியாரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டோம் என்பதை சொல்ல முன்வருவதில்லை. ஏனென்றால் ஏமாறுகிற பெண்களில் சிலருக்கு கருவறை சாமியாரின் கதகதப்பு தேவையாக இருக்கிறது. அப்பாவி பகதர்களிடமும் சாமியார் தூண்டிலை வைக்கும் போது பிரச்சனையாகிவிடுகிறது. ஆனால் ரஞ்சிதாவின் விஷயத்தில் நடந்ததோ முற்றிலும் வேறு.

நித்தியானந்தா ஆஸ்ரமத்தின் உள்குத்து வேலைகளில் பாதிக்கப்பட்ட ஒருவர் முழு நீள படத்தை எடுத்து அதில் ஒரு பகுதியை மட்டும் இப்போது வெளியிட்டிருக்கிறார். இந்த இலவச திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களை நாம் விரைவில் காணலாம். பெங்களூருவின் சொத்து ஒன்றை வாங்கும் பிரச்சினையில் தோல்வியுற்ற ஒரு அரசியல் புள்ளி சாமியாரின் சீடர்களை ஏற்பாடு செய்து இதை வெளியிட்டிருக்கிறார் என்று வரும் செய்திகளைப் பார்க்கும் போது இந்த இரகசியங்கள் இன்னும் வரும்போலத் தோன்றுகிறது.

___________________________________

எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வனின் கரிசனமும் நமது கேள்வியும்….
” எனக்கு அக்காட்சியைப் பார்த்தபோது நித்யானந்தா என்கிற அந்த 33 வயது இளைஞனின் மீது பச்சாதாப உணர்வு ஏற்பட்டது. பாலுணர்வு என்கிற இயற்கையான ஒன்று சாமியார் வேசம் போட்டதால் அவனுக்கு மறுக்கப்படுவது நியாயமல்ல. அவனும் சாதாரண மனிதன்தானே. சின்னப்பையனான அவன் அவனோடு விரும்பி உறவு கொள்ளும் பெண்ணோடு இருக்கும் கணத்தைப் படம் பிடித்து ஊருக்கே காட்டுவது நாகரிகமாக எனக்குப்படவில்லை.காஞ்சி சாமிகள் ,பிரேமானந்த சாமிகள் போல பெண்களிடமிருந்து அவன் வல்லந்தம் செய்ததாக புகார் வராமல்- அவர்கள் இருவரும் காதலால் ஒருமித்தது போன்ற ஒரு வீடியோ காட்சியைக் காட்டும் போது அய்யோ பாவம் அவன் என்கிற உணர்வுதான் முதலில் எனக்கு ஏற்பட்டது.” என்று எழுதி தனது கரிசனத்தோடு கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்களின் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்.

மிகப்பெரிய கோடீஸ்வரச்சாமியாரிடம் தமிழ் செல்வன் காட்டும் கரிசனம் ஒரு பக்கம் இருந்தாலும், கட்சிக்காக முழு நேரமும் உழைத்து தொழிற்சங்க தோழர்களின் நன்மதிப்பைப் பெற்று போலி மார்க்ஸ்சிஸ்ட் அரசியலில் நேர்மையாக இருந்த தோழர் வரதராஜன் கொலையில் கட்சித் தலைமையும் பிரகாஷ் காரத்தும் காட்ட மறுத்த கருணையை தமிழ்செல்வன் ஏன் கண்டிக்கவில்லை? வரதராஜன் ஒரு பெண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார் என்று நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டை ஆதரிக்கும் தமிழ்செல்வன் நித்தியானந்தா என்ற பொறுக்கியின் உணர்வுக்கு கண்ணீர் வடிக்கிறார். என்னே மனிதநேயம்?

வரதராஜனின் மரணம் என்பது தற்கொலை அல்ல கொலைதான் என்பதும் ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட தீர்ப்பை ஒரு பொய்யான நீரூபிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் வரதராஜன் மீது சுமத்தி அவரை போரூர் ஏரி நோக்கித் துரத்திய இரக்கமில்லாத தன் தலைமை குறித்தோ, அல்லது மோசடிப் பேர்வழியான பிரணாய் விஜயனை ஆதரித்து நிற்கிற இதே பிரகாஷ்காரத் அந்த பொருளாதார மோசடிகள் எதுவும் செய்யாத அப்பாவியான வரதராஜன் மீது நடவடிக்கை எடுத்ததோ தமிழ்ச் செல்வனுக்கு பிரச்சினை இல்லை.

__________________________________________

சாரு: வாங்குற காசுக்கு மேல கூவுராண்டா கொய்யால……..
எதிர்பார்த்ததைப் போலவே சாரு நித்தியானந்தாவை அலட்டிக் கொள்ளாமல் உதறுவது போல காட்டிக்கொண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நித்யா பல நூறு மேதைகளுக்கு நிகரான ஒரு மேதையாம். பல புற்று நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறாராம். பல இலட்சம் பக்தர்களுக்காக நித்தியா மட்டுமே சிந்தித்தாராம். இவ்வவளவு வல்லமை கொண்டவர் தனது சக்தியை காமத்திற்கு கொடுத்து விட்டார் என்று பேசுகிறார் சாரு. அடுத்து தான் ஏமாற்றப்பட்டதாகவும், தன்னை நம்பி பல ஆயிரம்பேர் ஏமாந்து விட்டதாகவும் இதனால் சுய இரக்கம் தோன்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

அடிக்கடி நடிகையின் பின்புறத்தை நித்யா நக்குவதாக கூறிக்கொண்டு திட்டுவது போல காட்டிக்கொண்டு மேற்கண்ட மகத்துவங்களை பட்டியலிடுகிறார். பல இலட்சம் பக்தர்கள் மத்தியில் நித்யா மட்டும் சிந்திக்கும் சுமையை எடுத்துக் கொண்டால் இத்தகைய ரிலாக்சேஷன்கள் தவறில்லையே. ஒரு படைப்பை படைப்பாளியிடமிருந்து பிரித்து பார்க்க வேண்டும் என்று கூறும் சாரு நித்யாவின் காம லீலைகளை அவரு குண்டலனி யோகத்திலிருந்து பிரித்துத்தானே பார்க்க வேண்டும்?

ஊரே காறித்துப்புவதுதான் சாருவின் பிரச்சினை. புற்று நோயாளிகளை நித்யா குணப்படுத்தினார் என்று கூறும் சாருவை இந்திய மருத்துவச் சட்டப்படி கைதே செய்யலாம். ஊருப்பட்ட வியாதிகளுக்காக மக்கள் மருத்தவமனைகளுக்கு அலைந்து கொண்டிருக்கும் போது இந்த லேகியக்காரனை இப்படிச் சொல்லித்தானே பலரும் கொண்டாடினார்கள்? மற்றவர்கள் கூட இப்போது திருந்திவிட்டாலும் சாரு தனது விசுவாசத்தை விடுவதாக இல்லை.

தன்னை நம்பி பல்லாயிரம்பேர் நித்யாவிடம் ஏமாந்து விட்டதாக சாரு கூறுவது உண்மையானால் அதற்கு என்ன தண்டனை?

___________________________________
முதலில் வறுமையைப் பரிசளிப்போம்… சலிப்பைப் போக்க சிட்டுக்குருவி லேகியமும் உண்டு…..
நாடெங்கிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்திருக்கிறார்கள். செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகக் கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களை நோக்கி வறுமை காரணமாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணை முட்டும் விலைவாசி, ஏழைகளின் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்க இடியென இறங்கி இருக்கிறது பட்ஜெட் அறிவிப்புகள். இந்திய தொழில் கூட்டமைப்பின் சிந்தனையில் உருவான பட்ஜெட்டில் அத்தியாவசியப் பண்டங்களின் விலை எக்குதப்பாய் எகிறிக் கொண்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை குறையுங்கள் என்றால், நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது. நாடு முன்னேற வேண்டுமென்றால் மக்கள் இதை எல்லாம் சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மன்மோகன்.

கருணாநிதியோ கலகமில்லாமல் பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்கிறார். மக்களை வைத்து கபடியாடிக் கொண்டிருக்கும் இந்த புரோக்கர்களுக்கு மத்தியில் ஒரு முருங்கைக்காயின் விலை ஐந்து ரூபாயாகி விட்டது. ஒரு கிலோ வெங்காயம் 36 ரூபாய். இன்னும் சில நாட்களில் லாரி வாடகை 20% அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்படி அதிகரிக்கிற அடுத்த நிமிடமே அத்தியாவசியப் பொருட்களின் விலை இன்னும் பல மடங்கும் உயரும் சூழல் உருவாக்கியிருக்கிறது. மத்திய அரசு பட்ஜெட் என்னும் பெயரில் மக்கள் மீது வீசியுள்ள இந்த குண்டை அடுத்து மாநில அரசு என்ன குண்டை வீசப் போகிறதோ என்ற கவலை மத்திய தர வர்க்கத்தை உசுப்பி வருகிறது.

மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். போதிய வருவாய் இல்லாமலும் வேலையிழப்பாலும் வறுமையை நோக்கி நகருகிற பெரும் மக்கள் கூட்டத்திற்கு போதை ஏற்றவும் பிரச்சனைகளில் இருந்து அவர்களை விடுவித்து போதையில் ஆழ்த்துவதற்காகவும் ஆளும் வர்க்க ஊடகங்களும், ஆட்சியாளர்களும் உருவாக்கும் சிட்டுக்குருவி லேகியம்தான் இந்த செக்ஸ் விவகாரங்கள்.

உலக மக்களின் எதிர்ப்பை மீறி ஈராக் மீது போர் தொடுத்த அமெரிக்கா அமெரிக்க மக்களின் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பி தடையில்லாமல் ஆயுத விற்பனையைத் தொடர கிளப்பிவிட்டதுதான் கிளிண்டன் மோனிகா லெவின்ஸ்கி விவாகாரம். மக்கள் மோனிகாவின் கனவுகளில் ஆழ்ந்திருக்க கொடூரமான போரை நடத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. இதோ விஷம் போல் ஏறும் விலைவாசி என்னும் கசப்புகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப, எங்கும் உருவாகி வரும் மக்கள் எதிர்ப்புணர்வுகளை மழுங்கடிக்க ஆளும் வர்க்கங்களாலும் அவர்களின் ஊடகங்களாலும் பயன்படுத்தப்படும் செக்ஸ் ஸ்கேண்டல் யுத்திதான் இந்த போலிச்சாமியார்களின் காம லீலைகள்.

__________________________________

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

யதார்த்த வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சினைகளை நாம் சந்தித்து வருகிறோம். போர், நிலங்கள் பறிப்பு, கனிமவளக் கொள்ளை, அடிப்படை சுகாதார வசதியின்மை, உணவு, உடை, உறைவிடத்தேவைகள் மறுக்கப்பட்ட நிலையை நாம் காண்கிறோம். நமது நாடு, நமது நகரம், நமது அரசு என்கிறார்கள். ஆனால் இது டாட்டா, பிர்லாக்களின், அம்பானிகளின் நாடாகவும் அவர்களின் அரசாகவுமே இருக்கிறது. நமக்கான அரசமைக்க நாம் போராட வேண்டும். உழைக்கும் மக்களுக்கான உண்மையான லேகியம் என்பது போராட்டமே………. ஆமாம் போராடுவது ஒன்றுதான் மகிழ்ச்சி……விடுதலை…….ஆமாம் அதுவே முழுமையான மனித விடுதலை…….